search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmer"

    • ஜெயபெருமாளுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
    • மனமுடைந்த ஜெயபெருமாள் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள முனைஞ்சிபட்டியை அடுத்த காரியாண்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபெருமாள் (வயது 50). விவசாயி.

    இவருக்கு குருவம் மாள்(45) என்ற மனைவியும், சுடலை மணி (18) என்ற மகனும், முத்தரசி (16) என்ற மகளும் உள்ளனர். ஜெயபெருமாளுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்துள்ளார்.

    மேலும் அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை சரியாக பரா மரிக்காமலும் இருந்துள்ளார். இதனை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

    இதில் மனமுடைந்த ஜெயபெருமாள் நேற்று மாலை தோட்டத்திற்கு சென்று அங்கிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

    இதனிடையே இரவு வெகு நேரமாகியும் தந்தையை காணாததால் அவரது மகன் சுடலைமணி தோட்டத்திற்கு தேடிச்சென்றுள்ளார். அப்போது அருகில் விஷப்பாட்டிலுடன் ஜெயபெருமாள் மயங்கி கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    உடனடியாக அங்கு வந்த உறவினர்கள் அவரை மீட்டு முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும் வழியி லேயே ஜெய பெருமாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரும்பாலும் வாழைத்தார்கள் 13 டசன் மட்டுமே இருக்கும். இந்த வாழைத்தாரில் 23 டசன் வாழைப்பழங்கள் இருந்தன.
    • வளமான மண்ணுடன் இயற்கை உயரத்தை பயன்படுத்தினால் இதுபோன்ற விளைச்சலை காண முடியும் என விவசாயி தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், ஆத்ரேயபுரம் மண்டலம், உச்சிலியை சேர்ந்தவர் ரித்து சாந்திராஜ். விவசாயி.

    இவரது நிலத்தில் பக்கிஸ் வகையை சேர்ந்த வாழை பயிரிட்டு இருந்தார். இவர் பயிரிட்டு இருந்த வாழை மரத்தில் 6.5 அடி உயரம் உள்ள வாழைத்தார் விளைந்தது.

    பெரும்பாலும் வாழைத்தார்கள் 13 டசன் மட்டுமே இருக்கும். இந்த வாழைத்தாரில் 23 டசன் வாழைப்பழங்கள் இருந்தன.

    இதனை நேற்று ராவுல பாலத்தில் உள்ள சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வந்தார். வாழைத்தாரை தொழிலதிபர் சீனிவாசரெட்டி என்பவர் அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்றார்.

    வளமான மண்ணுடன் இயற்கை உயரத்தை பயன்படுத்தினால் இதுபோன்ற விளைச்சலை காண முடியும் என விவசாயி தெரிவித்தார்.

    • இளைஞர்களுக்கு படிப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்குமாறு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.
    • பொய் பிரசாரம் செய்து காமராஜரையே 67-ம் ஆண்டில் தோற்கடித்த நல்லவர்கள் தான் இந்த தி.மு.க. காரர்கள்.

    முசிறி:

    என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை நடத்தி மக்களை சந்தித்து வருகிறார். அவரது 61-வது நாள் நடைபயண யாத்திரை நிகழ்ச்சி திருச்சி மாவட்டம் முசிறியில் நடைபெற்றது. முசிறி புதிய பேருந்து நிலையத்தில் நடைபயணம் தொடங்கப்பட்டு முசிறி-துறையூர் பிரிவு சாலை வழியாக முசிறி கைகாட்டியில் முடிவடைந்தது.

    வழியில் அண்ணாமலை முசிறி பகுதி விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் கோரைப்பாய் உற்பத்தியாளர்கள் சங்கத்தினரை சந்தித்து குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார். பின்னர் பட்டியல் அணி சார்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் 6 பெண்களுக்கு தையல் எந்திரத்தை வழங்கினார்.

    தமிழகத்தில் நியாய விலை கடையில் வழங்கும் அரிசிக்கு மத்திய அரசு கிலோ விற்கும் 32 ரூபாய் வழங்குகிறது. தமிழக அரசு 2 ரூபாய் வழங்குகிறது. தமிழகத்தில் 18 லட்சம் விவசாயிகள் கிசான் அட்டை பெற்று விவசாய கடன் பெற்று வருகின்றனர்.

    இயற்கை விவசாயத்திற்கு மத்திய அரசு உறுதுணையாக உள்ளது. ஆவின் பாலில் நடக்கும் ஊழலை பா.ஜ.க. கண்டிக்கிறது. ஆவினிலிருந்து வரும் பால் தரக் குறைவாக உள்ளது. 2022-ம் ஆண்டு ஒரு நாளுக்கு 43 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்த ஆவின், தற்போது 38 லட்சமாக உள்ளது, 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைந்துள்ளது.

    தமிழகத்தில் அரசே காவிரி மணலை திருடுகிறது. இந்திய துணை கண்டத்தில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் 467 கோடி ரூபாய்க்கு 2 நாட்களில் மதுபானம் விற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சாராயத்திற்கு சிறப்பிடம் பெற்றது தமிழகம்.

    விஞ்ஞான முறையில் ஊழல் செய்து கொண்டிருப்பவர்கள் தி.மு.க.வினர். பாரதிய ஜனதா கட்சியின் கனவு பெரிது, பெரிய ஊர்கள் வளர்கிறது, சின்ன ஊர்கள் தேய்கிறது, கிராமங்கள் முன்னேற வேண்டும். விவசாயிகள், பெண்கள், இளைஞர்களை, மையமாகக் கொண்டு அரசியல் நடத்துவோம், இளைஞர்களுக்கு படிப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்குமாறு புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

    பொய் பிரசாரம் செய்து காமராஜரையே 67-ம் ஆண்டில் தோற்கடித்த நல்லவர்கள் தான் இந்த தி.மு.க. காரர்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். நல்லாட்சி அமைவதற்கு ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 9 ஆண்டு கால முயற்சியில் தற்பொழுது வெற்றியும் கண்டுள்ளார்.
    • தற்பொழுது கொடைக்கானலில் விளையக்கூடிய குங்குமப்பூ காஷ்மீரை காட்டிலும் தரம் உயர்ந்ததாக உள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானல் மலைக்காய்கறிகள் விளைச்சலுக்கு அதிக பெயர் பெற்றது. இங்கு முக்கிய காய்கறிகளான உருளைக்கிழங்கு, பீட்ரூட், காலிபிளவர், பீன்ஸ், காரட், புரோக்கோலி போன்ற பல்வேறு வகையான காய்கள் பயிரிடப்பட்டு வருகிறது. உலக அளவில் கர்ப்பிணி பெண்கள் தங்கள் குழந்தைகள் சிவப்பாக பிறக்க குங்குமப்பூவை பாலில் கலந்து குடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

    இந்த குங்குமப்பூ உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடுகள் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான். அடுத்து இந்தியாவில் நமது காஷ்மீர் மாநிலம் ஆகும். ஆனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் குங்குமப்பூ குறைந்த அளவில் உள்ளதால் ஆண்டுக்கு பல ஆயிரம் கிலோ வெளிநாட்டில் இருந்து வாங்கும் நிலை உள்ளது. தற்பொழுது இந்தியாவில் காஷ்மீருக்கு அடுத்தபடியாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் மேல் மலை கிராமமான கவுஞ்சி மற்றும் பூண்டி மலை கிராமங்களில் மூர்த்தி என்ற விவசாயி கடந்த 2014ம் ஆண்டு முதல் தொடர்ந்து முயற்சி செய்து காஷ்மீரிலிருந்து குங்குமப்பூ விதை கிழங்கு வாங்கி பசுமை குடில் அமைத்து விவசாயம் செய்தார். 9 ஆண்டு கால முயற்சியில் தற்பொழுது வெற்றியும் கண்டுள்ளார். தனது ஒரு ஏக்கர் நிலத்தில் குங்குமப்பூ பயிரிட்டு சாகுபடி செய்தார்.

    இது குறித்து அவர் கூறும்போது, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் இதற்கான பயிற்சி மற்றும் அறிவுரைகளின்படி தனது முயற்சியை தொடர்ந்ததாக தெரிவித்தார். மேலும் காஷ்மீருக்கு அடுத்தபடியாக குங்குமப்பூ பயிரிட கொடைக்கானலில் சீதோஷ்ண நிலை மற்றும் குளிர் முக்கிய காரணமாக உள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் ரூ.4 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும். ஒரு ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் பயிரிட்டால் சில ஆயிரங்கள் மட்டுமே கிடைக்கும். ஆனால் குங்குமப்பூ சாகுபடிக்கு 55 நாட்கள் முதல் 60 நாட்கள் போதுமானது. 15 கிலோ குங்குமப்பூ விதை கிழங்கு வாங்கி தற்பொழுது அதனை 40 கிலோவாக உருவாக்கி உள்ளேன். தற்பொழுது கொடைக்கானலில் விளையக்கூடிய குங்குமப்பூ காஷ்மீரை காட்டிலும் தரம் உயர்ந்ததாக உள்ளது. மேலும் கொடைக்கானலில் விளையும் குங்குமப்பூவுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. இந்த புது முயற்சியை மற்ற விவசாயிகளும் மேற்கொள்ள வேண்டும் என்றார். 

    • வரும் 29-ம் தேதி சென்னையில் அனைத்து விவசாயிகளும் ஒன்று திரண்டு மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
    • ஆர்ப்பாட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    தஞ்சாவூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மேல்மா சிப்காட் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் உள்பட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்,

    மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் -2023 கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு தஞ்சாவூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் போராட்டக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்காக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் மணி தலைமையில் மாநில தலைவர் பழனியப்பன், விவசாய சங்க நிர்வாகிகள் சுந்தர விமல்நாதன் உள்பட ஏராளமான விவசாயிகள் பேரணியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழக அரசு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 29-ம் தேதி சென்னையில் அனைத்து விவசாயிகளும் ஒன்று திரண்டு மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • புதிய கட்டிடத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டாலும் அதனை சுற்றி உள்ள சுமார் 3 ஏக்கர் அரசு நிலம் முட்புதர்களாக கிடந்தன.
    • விவசாயிகள் போன்று தினந்தோறும் தோட்டத்தை பார்வையிட்டு கீரைகள், செடிகளுக்கு தேவையான தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழகம்-ஆந்திரா எல்லையில் ஆர்.கே.பேட்டை அருகே உள்ளது பொதட்டூர்பேட்டை. மாவட்ட எல்லையின் கடைசி போலீஸ்நிலையம் இங்கு அமைந்து உள்ளது. ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசார் பணியாற்றி வருகிறார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதட்டூர் போலீஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த புதிய கட்டிடத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டாலும் அதனை சுற்றி உள்ள சுமார் 3 ஏக்கர் அரசு நிலம் முட்புதர்களாக கிடந்தன.

    இதனை பயன் உள்ளதாக மாற்ற திட்டமிட்ட போலீசார் அந்த நிலத்தை சீரமைத்து முள்வேலி அமைத்து உள்ளனர். மேலும் மூலிகை மற்றும் காய்கறி தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார்கள்.

    இந்த தோட்டத்தில் துளசி, கற்பூரவள்ளி, சிறியாநங்கை, பாகற்காய் , அருகம்புல், ஓமவல்லி, ஆடாதொடை, தூதுவளை, எலுமிச்சை, கருந்துளசி, வாழை, முருங்கை, வள்ளிக்கிழங்கு, கொய்யா, மாமரம், தென்னை மரம், முசுமுசுக்கை, கீழாநெல்லி, வெண்டைக்காய், கத்தரி போன்ற பல்வேறு வகையான மூலிகை, காய்கறி செடிகளையும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொன்னாங்கண்ணி, பசலை, முளைக்கீரை, மணத்தக்காளி, வல்லாரை போன்ற பலவகைக் கீரைகளையும் வளர்த்து வருகின்றனர். இதனால் தற்போது பொதட்டூர் பேட்டை போலீஸ்நிலையத்தை சுற்றிலும் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவின் மேற்பார்வையில் போலீசார் தங்களது அன்றாட கடமைகளுடன் இந்த காய்கறி, மூலிகை தோட்டத்தையும் சிறப்பாக கவனித்து வருகிறார்கள். விவசாயிகள் போன்று தினந்தோறும் தோட்டத்தை பார்வையிட்டு கீரைகள், செடிகளுக்கு தேவையான தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.

    போலீசாரின் இந்த முயற்சிக்கு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண், திருத்தணி போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் ஆகியோர் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசாரை பாராட்டி உள்ளனர்.

    இதனால் இந்த போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்கவும், விசாரணைக்கு வருபவர்களும் தங்கள் பிரச்சினைகளை மறந்து, அந்தத் தோட்டத்தை ஆர்வத்துடன் சுற்றிப்பார்த்து செல்கின்றனர். மேலும், தங்களுக்குத் தேவையான மூலிகைகளை அனுமதிபெற்று பறித்துச்செல்கின்றனர்.

    • அய்யப்பன் பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
    • பெருக வாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா புத்தகரம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 49) விவசாயி.

    சம்பவத்தன்று அய்யப்பன் அதே பகுதியில் டிராக்டர் ஓட்டி வந்த பட்டியலினத்தை சேர்ந்த ஒருவரை வழிமறித்து நிறுத்தி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இது குறித்து பெருக வாழ்ந்தான் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் அய்யப்பன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த வழக்கு தஞ்சாவூர் மாவட்ட 2-வது கூடுதல் கோர்ட்டில் நடந்து வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி மலர்விழி, வன்கொ டுமை சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டபட்ட அய்யப்னுக்கு 1 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    மேலும் அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை எனவும் தீர்ப்பளித்தார்.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு குற்றத்துறை வக்கீல் அர்ச்சுனன் வாதாடினார்.

    • விவசாயி தனது வீட்டில் துப்பாக்கி வைத் திருப்பதாக தாண்டிக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சோதனை நடத்தி துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 5 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.

    பெரும்பாறை:

    பண்ணைக்காடு அருகே உள்ள ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் முத் துமணி (43). விவசாயி. இவர், தனது வீட்டில் துப்பாக்கி வைத் திருப்பதாக தாண்டிக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பே ரில் போலீசார், அவரது வீட்டில் சோதனை செய்த னர். அப்போது வீட்டில் நாட்டுத்துப்பாக்கி இருந்தது.

    ஆனால் துப்பாக்கிக்கான உரிமம் அவரிடம் இல்லை. இது தொடர்பாக முத்து மணியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், தனது தந்தை காலத்தில் இருந்து துப்பாக்கி வைத்திருப்பதாகவும், விளை நிலங்களுக்குள் புகும் வனவிலங்குகளை விரட்டுவதற்காக அந்த துப்பாக்கியை பயன்படுத்தி வந்ததாகவும் தெரிவித்தார்.

    இதனையடுத்து அந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 தோட்டாக்கள் கைப்பற்ற ப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆண்டுக்கு விவசாயத்தின் மூலம் ரூ.1.44 கோடி வருமானம் உள்ளது.
    • தனது மனைவி ஷோபா பெயரில் ரூ.7 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளன.

    தெலுங்கானாவில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற 30-ந் தேதி நடைபெற உள்ளது. தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் நேற்று போட்டியிட மனு தாக்கல் செய்தார்.

    மனு தாக்கலின் போது அவர் அளித்துள்ள பிரமாண பத்திரத்தில் தான் பி.ஏ. பட்டதாரி, நான் ஒரு விவசாயி. ஆண்டுக்கு விவசாயத்தின் மூலம் ரூ.1.44 கோடி வருமானம் உள்ளது. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை.

    தனது பெயரில் அசையா சொத்துக்கள் ரூ.17.83 கோடியும், தனது மனைவி ஷோபா பெயரில் ரூ.7 கோடி அசையும் சொத்துக்கள் உள்ளன.

    பிரிக்கப்படாத தனது குடும்பத்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.9 கோடி உள்ளதாக கூறியுள்ளார்.

    ரூ.17 கோடிக்கு மேல் கடன் உள்ளதாகவும் கடந்த மார்ச் 31-ந் தேதி வரை ஆண்டு வருமானம் 1.60 கோடி எனவும் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

    • மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார்.
    • சாலையோர மரத்தில் மோதி மாணவர் பலியானார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மேலவாசல் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் குமார் (50) விவசாயி.

    இவர் நேற்று தனது உறவினருடைய வயலில் வேலை பார்த்து ள்ளார்.

    பின்னர் அருகில் உள்ள விஜயராஜன் என்பவருக்கு சொந்தமான வயலில் இருந்த பம்புசெட்டில் குளித்து விட்டு அங்கிருந்த கம்பி கொடிக் கம்பத்தில் துண்டை காய வைத்து விட்டு வீடு திரும்பினார்.

    இந்நிலையில் காலையில் குளிக்க அங்கு சென்றுள்ளார்.

    பின்னர் பம்புசெட்டு அருகே உள்ள கொடிகம்பத்தில் கிடந்த துண்டை எடுத்தார். அப்போது திடீரென மின்சாரம் அவரை தாக்கியது.

    இதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்நிலையில் வயலுக்கு சென்ற குமார் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாதால் அவரது உறவினர்கள் தேடி வந்தனர்.

    அப்போது தான் அவர் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பது தெரிய வந்தது.

    பின்னர் இது குறித்து மன்னார்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் இன்ஸ் பெக்டர் ராஜேஷ் கன்னா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டைகீழத் தெருகிராமத்தைச் சேர்ந்தவர் பாலு.

    இவரது மகன் ரிஷால் ( வயது 20).

    இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வருவது வழக்கம்.

    அதே போல் இன்றும் கல்லூரிக்கு ரிஷால் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது மன்னார்குடி குருவை மொழி கிராமத்தின் அருகே சென்ற போது எதிர்பாரத விதமாக சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த ரிஷால் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மன்னார்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரிஷால் உடலை கைப்பற்றி பிரேதபரி சோதனைக்காக அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • விவசாய நிலத்திலிருந்த மின்மோட்டாரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி தாலுகா நெகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (55) விவசாயி. சம்பவத்தன்று ரங்கநாதனுக்கு சொந்தமான விவசாய நிலத்திலிருந்த மின்மோட்டாரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதன் மதிப்பு 3 ஆயிரம் ரூபாய் எனக் கூறப்படுகிறது.இது குறித்த புகாரின்பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரி எதிர்பாராத விதமாக அண்ணாதுரை மீது மோதியது.
    • பிேரத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 63) விவசாயி.

    சம்பவத்தன்று இவர் தான் வளர்த்து வரும் மாட்டை மேய்ச்சலுக்கு விடுவதற்காக வீட்டிலிருந்து ஓட்டி சென்றார்.

    சிறிய தூரம் சென்றபோது மாடு திடீரென மிரண்டு ஓட தொடங்கியது.

    இதையடுத்து மாட்டை பிடிப்பதற்காக அண்ணா துரை பின் தொடர்ந்து ஓடினார்.

    அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக அண்ணாதுரை மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அண்ணாதுரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×