search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mysterious"

    • விவசாய நிலத்திலிருந்த மின்மோட்டாரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி தாலுகா நெகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் (55) விவசாயி. சம்பவத்தன்று ரங்கநாதனுக்கு சொந்தமான விவசாய நிலத்திலிருந்த மின்மோட்டாரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதன் மதிப்பு 3 ஆயிரம் ரூபாய் எனக் கூறப்படுகிறது.இது குறித்த புகாரின்பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆன்லைன் செயலியான டெலிகிராம் மூலம் ஒரு மர்ம நபர் அறிமுகமானார்.
    • அந்த மர்மநபரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த இளம்பெண்ணிடம் ஆன்லைன் செயலியான டெலிகிராம் மூலம் ஒரு மர்ம நபர் அறிமுகமானார். அப்போது அந்த நபர் ஆன்லைன் வேலையில் உங்களுக்கு ஒரு டாஸ்க் கொடுப்போம்.

    அதனை நீங்கள் சரியாக செய்து முடிக்க வேண்டும். அப்படி செய்தால் உங்களது வங்கிக் கணக்கில் நாங்கள் இரண்டு மடங்காக பணம் செலுத்திக் கொண்டே இருப்போம். இதற்காக குறிப்பிடும் வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என ஆசைவார்த்தை கூறினார்.

    இதனை உண்மை என்று நம்பிய அந்த பெண் பல தவணைகளாக அந்த குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் ரூ.7 லட்சத்து 6 ஆயிரத்து 74 செலுத்தி யுள்ளார். ஆனால் கூறியபடி வங்கி கணக்கில் பணம் வந்து சேரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அப்பெண் டெலிகிராம் ஆன்லைன் செயலியில் அந்த மர்மநபரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.

    அப்போது தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை அவர் உணர்ந்தார்.

    இது குறித்து அப்பெண் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திர் புகார் செய்தார். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின்பேரில் ஏ.டி.எஸ்.பி.ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் (பொ) செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • சரவணன் விழுப்புரம் ரெங்கநாதன் சாலையில் கிளினிக் நடத்தி வருகிறார்.
    • பணத்தை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் ரூ. 65 ஆயிரம் திருட்டு போனது.  விழுப்புரம் பெரியார் நகரை சேர்ந்தவர் சரவணன் (50). டாக்டர். இவர் விழுப்புரம் ரெங்கநாதன் சாலையில் கிளினிக் நடத்தி வருகிறார். மேலும் அங்கு மருந்தகமும் நடத்தி வருகிறார். நேற்று இரவு சரவணன் கிளிக்கை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை அதனை திறக்க வந்த போது மெயின் கதவு உடைக்கப்பட்டு இருந்தனர்.

    இதனால் சரவணன் அதிர்ச்சி அடைந்தார் உள்ளி சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ. 65 ஆயிரத்தை யாரோ மர்ம ஆசாமி திருடி சென்று இருப்பதை கண்டு திடுக்கிட்டார். இது குறித்து விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் விசாரணை செய்து பணத்தை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். 

    • திருமங்கலம் அருகே 2 பெண்களை தாக்கி 8 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள புங்கங்குளத்தை சேர்ந்தவர் மார்கண்டன். இவரது மனைவி சுந்தரவள்ளி(வயது 49). இவர்கள் கிராமத்தில் சித்தாலை செல்லும் ரோட் டில் ஒத்தவீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று மதியம் 1 மணியளவில் சுந்தரவள்ளி வீட்டின் முன்பு அமர்ந்து காய்கறி நறுக்கி கொண்டிருந்தார்.

    அப்போதுஅந்த வழியாக திருமங்கலம் சோ்ந்த ஈஸ்வரன் மனைவி தெய்வகனி (25), டூவிலரில் சென்றார். ஆள்நடமாட்டம் அற்ற அந்த ரோட்டில் அவரை பின் தொடர்ந்து வேகமாக மற்றொரு டூவிலரில் வந்த வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் தெய்வகனி கழுத்திலிருந்த 5 பவுன் நகையை பறித்துள்ளான்.

    அவர் சப்தம் போடவே வீட்டிலிருந்த சுந்தரவள்ளி வெளியேஓடி வந்த நகைபறித்தவனை தடுக்க முயலவே ஆத்திரமடைந்த அந்த நபர் சுந்தரவள்ளி அணிந்திருந்த 3 பவுன் நகையையும் பறித்து கொண்டு மொத்தம் 8 பவு னுடன் தப்பியோடிவிட்டார்.

    நகை பறித்துச் சென்றவன் ஹெல்மெட் அணிந்து வந்தால் அடையாளம் தெரிய வில்லை. இதுகுறித்து சுந்தரவள்ளி கொடுத்த புகாரில் திருமங்கலம் தாலுகா போலீ சார் வழக்குபதிவு செய்து இரண்டு பெண்களிடம் நகை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    • திருடச்சென்ற வீட்டில் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் விட்டு சென்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் சூலக்கரை மேடு வ.உ.சி. நகரை சேர்ந்தவர் முருகன்(வயது57). இவரது மனைவி புஷ்பம். இவர்கள் ஊருக்கு வரும் மகனை அழைத்து வருவதற்காக ரெயில் நிலையத்திற்கு சென்றிருந்தனர். அப்போது மர்மநபர்கள் வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே புகுந்து திருடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    முருகன் குடும்பத்துடன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். இவர்கள் வருவதை கண்ட மர்மநபர்கள் பின்கதவு வழியாக தப்பி சென்றனர்.

    அப்போது அவர்கள் பை ஒன்றை விட்டு சென்றனர். அதில் வெள்ளியிலான விநாயகர் சிலை, கரண்டிகள், கிண்ணங்கள், காமாட்சி விளக்கு, தட்டுகள், உடைந்த தங்க நகை உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. அவைகளை சூலக்கரை போலீஸ் நிலையத்தில் முருகன் ஒப்படைத்தார். மேலும் தனது வீட்டில் மர்மநபர்கள் திருட முயற்சி செய்தது குறித்து புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சமையல் மாஸ்டர் ராஜேந்திரனை காணவில்லை என தேடிய நிலையில் மரத்தில் பிணமாக தொங்கினார்
    • அமர்ந்தநிலையில் இறந்ததால் கொலையா? தற்கொலையா? என போலீசார் சந்தேகிக்கிறார்கள்

    சூலூர்,

    சிவகங்கை மாவட்டம் சூரானம் ஏரிவயல் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 37). இவர் காங்கேயம்பாளையத்தில் உள்ள டாஸ்மார்க் மது பாரில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் பாரில் ரகளை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை சமையல் மாஸ்டர் ராஜேந்திரனை காணவில்லை என தேடி உள்ளனர். அப்போது டாஸ்மாக்கில் இருந்து சுமார் 100 அடி தூரத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் ராஜேந்திரன் பிணமாக தொங்கினார். அவரது உடல் மண்டியிட்ட நிலையில் நைலான் கயிற்றில் தொங்கிக் கொண்டு இருந்தது.

    சூலூர் போலீசாருக்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். சூலூர் போலீசார் ராஜேந்திரன் உடலை விசாரணை நடத்தி வருகிறார்கள். ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜேந்திரன் உடல் பிரேத பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ராஜேந்திரன் உடல் தரையில் முட்டி போட்டு அமர்ந்தநிலையில் இருப்பதால் அது தற்கொலையாக இருக்க முடியாது எனவும், கொலையாக இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது.

    • மாயமான முதியவர் பிணமாக மீட்கப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மலையரசன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி(63). சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் கருப்பசாமி வீட்டிற்கு போன் செய்து திருவண்ணாமலை ரோட்டில் உள்ள செங்கல் சூளை அருகே முதியவர் ஒருவர் இறந்து கிடந்ததாகவும், அவருடைய உடல் சவக்கிடங்கில் உள்ளதாகவும், அது கருப்பசாமியா? என்பதை உறுதிப்படுத்துமாறும் தகவல் அளித்தனர்.

    உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது அது கருப்பசாமி என்பது தெரியவந்தது. இதுகுறித்து கருப்பசாமியின் மனைவி கலா ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழிலாளி ஒருவரை ரூ.30 ஆயிரம் பணத்திற்காக மர்ம நபர் கடத்தினார்.
    • போலீசார் தனிப்படை அமைத்து கடத்தலில் ஈடுபட்ட மர்மநபரை கைது செய்தனர்.

    பட்டீஸ்வரம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநல்லூரை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 43) தொழிலாளி. இவரை ரூ.30 ஆயிரம் பணத்திற்காக மர்ம நபர் கடத்தினார்.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவுப்படி கும்பகோணம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மேற்பார்வையில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் சிவசெந்தில், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கீர்த்தி வாசன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம் செந்தில், ஜனார்த்தனன், நாடிமுத்து, பார்த்திபநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் ஆள் கடத்தலில் ஈடுபட்ட நபர் பாபநாசம் அருகே உத்தமதானியை சேர்ந்த உத்திராபதி (25) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பதுங்கி இருந்த உத்திராபதியை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

    அவரிடமிருந்து ரமேஷ்பாபுவை பத்திரமாக மீட்டனர்.

    இவ்வழக்கை விரைவாக விசாரித்து 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    • மத்திய அரசுக்கு சொந்தமான வங்கியில் இருந்து ரூ.8 லட்சத்தையும், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.12 லட்சத்தையும் மொத்தம் ரூ.20 லட்சத்தை எடுத்துக் கொண்டு காரில் வீட்டிற்கு சென்றார்.
    • காரில் வைத்திருந்த ரூ.20 லட்சத்தை காணாமல் அதிர்ச்சி அடைந்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், பேட்டை பகுதியில் உள்ள மருதன் காலனியைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் பாலசுப்பிரமணி(வயது 49).ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் மோகனூரில் நிலம் வாங்கியது சம்பந்தப்பட்ட ஒருவருக்கு கொடுப்பதற்காக நேற்று மதியம் பரமத்தி வேலூர் பழைய பை-பாஸ் சாலையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான வங்கியில் இருந்து ரூ.8 லட்சத்தையும், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.12 லட்சத்தையும் மொத்தம் ரூ.20 லட்சத்தை எடுத்துக் கொண்டு காரில் வீட்டிற்கு சென்றார்.

    பணம் ரூ.20 லட்சத்தை காரிலேயே வைத்து விட்டு வீட்டிற்குள் சென்று உடையை மாற்றிக் கொண்டு மோகனூர் செல்வதற்காக மீண்டும் காரை எடுக்க வந்தார். அப்போது காரில் வைத்திருந்த ரூ.20 லட்சத்தை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து பாலசுப்பிரமணி பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூர் டி.எஸ்.பி. கலையரசன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பாலசுப்பிரமணி வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் பணத்தை வாங்கிக் கொண்டு காரில் ஏறி வீட்டுக்கு வந்து காரை நிறுத்தி விட்டு வீட்டிற்குள் செல்லும் வரை அவரை மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

    ஸ்கூட்டரில் ஒரு நபரும், மோட்டார் பைக்கில் 2 நபரும் பின் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. பாலசுப்பிரமணி உடைமாற்ற வீட்டிற்குள் சென்ற உடன் கண் இமைக்கும் நேரத்தில் பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள் கார் கண்ணாடியை உடைத்து உடைத்து காருக்குள் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர்.

    பட்டபகலில்ரூ.20 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வரு கிறார்கள். மர்ம நபர்கள் கார் கண்ணா டியை உடைக்கும் காட்சி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உங்கள் நகைகளை கழற்றி தாருங்கள், நாங்கள் பாதுகாப்பாக பையில் வைத்து தருகிறோம்.
    • சரஸ்வதி தான் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகைகளை கழற்றி அந்த மர்மநபர்களிடம் கொடுத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சரஸ்வதி (வயது 60). சம்பவத்தன்று இவர் மயிலாடுதுறை சென்று விட்டு தஞ்சைக்கு பஸ்சில் வந்தார்.‌

    பின்னர் தற்காலிக மார்க்கெட் அருகே உள்ள ஏ.ஓய். நகரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள், சரஸ்வதியின் அருகில் மோட்டார் சைக்கிளில் நிறுத்தினர்.

    இங்கு திருட்டு சம்பவம் அதிகமாக நடக்கிறது. இவ்வளவு நகைகளை அணிந்து கொண்டு செல்லாதீர்கள். உங்கள் நகைகளை கழற்றி தாருங்கள், நாங்கள் பாதுகாப்பாக பையில் வைத்து தருகிறோம் என சரஸ்வதியிடம் கூறினர். இதனை உண்மை என்று நம்பிய சரஸ்வதி தான் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகைகளை கழற்றி அந்த மர்ம நபர்களிடம் கொடுத்தார்.

    இதனை சாதகமாக பயன்படுத்திய அந்த மர்ம நபர்கள் நகைகளுக்கு பதிலாக ஒரு கல்லை அந்தப் பையில் மறைத்து வைத்து கொடுத்தனர். அந்தப் பையுடன் வீட்டுக்கு சென்ற சரஸ்வதி அவிழ்த்து பார்த்த போது நகைகளுக்கு பதிலாக கல்லை ஏமாற்றி வைத்து தன்னை மர்மநபர்கள் மோசடி செய்தது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சேலம் பனமரத்துப்பட்டியை சேர்ந்த தே.மு.தி.க. நிர்வாகி மர்மச்சாவால் குற்றவாளியை கைது செய்ய உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இந்த நிலையில் கடந்த மே மாதம் 30-ந் தேதி 2 சக்கர வாகனத்தில் சென்ற கலையரசன் வீடு திரும்பவில்லை.

    சேலம்:

    சேலம் பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் கலையரசன். தே.மு.தி.கவில் உறுப்பினராக உள்ளார். மேலும் மாவட்ட கவுன்சிலர் கமலா கருப்பண்ணனிடம் உதவியாளராகவும் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த மே மாதம் 30-ந் தேதி 2 சக்கர வாகனத்தில் சென்ற கலையரசன் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் 31-ந்தேதி பூலாவரி ஏரியில் கலையரசன் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து கொண்டலாம்பட்டி காவல்துறையினர் பிணத்தை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் கலையரசன் உடலில் காயங்கள் இருப்பதை அறிந்த பெற்றோர் இது குறித்து கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில், தங்கள் மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

    இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில்சேலம் கிழக்கு மாவட்ட தே.மு.தி.க செயலாளர் ஏ.ஆர். இளங்கோவன், மாவட்ட கவுன்சிலர் கமலா கருப்பண்ணன், கலையரசனின் தந்தை சீனிவாசன் , தாய் புஷ்பா உள்ளிட்ட 50- க்கும் மேற்பட்டோர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    45 நாட்கள் ஆகியும் கலையரசன் மர்மமான இறப்பு குறித்து காவல்துறையினர் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. பணத்திற்காக சிலர் கொலை செய்திருப்பதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம். எனவே காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருத்தாசலம் அருகே முன் விரோதத்தில் மர்ம நபர்களால் முயல் கழுத்தை அறுக்கப்பட்டது.
    • காலையில் கண்விழித்த பிறகு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த செல்லபிராணிகளை பார்த்த மணிமாறன் அதிர்ச்சி அடைந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ராமச்சந்திரன் பேட்டை ராமன் தெருவை சேர்ந்த மணிமாறன் . இவர் வீட்டில் முயல், கோழி என இருபதிற்கும் மேற்பட்ட செல்ல பிராணிகள் வளர்த்து வந்தார். நேற்று இரவு மணிமாறன் மற்றும் அவரது மனைவி குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவர் வீட்டில் வளர்க்கப்பட்ட முயல் மற்றும் கோழிகளின் கழுத்து அறுத்து போட்டுள்ளனர். காலையில் கண்விழித்த பிறகு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த செல்லபிராணிகளை பார்த்த மணிமாறன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து மணிமாறன் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    ×