search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குங்குமப்பூ"

    • 9 ஆண்டு கால முயற்சியில் தற்பொழுது வெற்றியும் கண்டுள்ளார்.
    • தற்பொழுது கொடைக்கானலில் விளையக்கூடிய குங்குமப்பூ காஷ்மீரை காட்டிலும் தரம் உயர்ந்ததாக உள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கானல் மலைக்காய்கறிகள் விளைச்சலுக்கு அதிக பெயர் பெற்றது. இங்கு முக்கிய காய்கறிகளான உருளைக்கிழங்கு, பீட்ரூட், காலிபிளவர், பீன்ஸ், காரட், புரோக்கோலி போன்ற பல்வேறு வகையான காய்கள் பயிரிடப்பட்டு வருகிறது. உலக அளவில் கர்ப்பிணி பெண்கள் தங்கள் குழந்தைகள் சிவப்பாக பிறக்க குங்குமப்பூவை பாலில் கலந்து குடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

    இந்த குங்குமப்பூ உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடுகள் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான். அடுத்து இந்தியாவில் நமது காஷ்மீர் மாநிலம் ஆகும். ஆனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் குங்குமப்பூ குறைந்த அளவில் உள்ளதால் ஆண்டுக்கு பல ஆயிரம் கிலோ வெளிநாட்டில் இருந்து வாங்கும் நிலை உள்ளது. தற்பொழுது இந்தியாவில் காஷ்மீருக்கு அடுத்தபடியாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானல் மேல் மலை கிராமமான கவுஞ்சி மற்றும் பூண்டி மலை கிராமங்களில் மூர்த்தி என்ற விவசாயி கடந்த 2014ம் ஆண்டு முதல் தொடர்ந்து முயற்சி செய்து காஷ்மீரிலிருந்து குங்குமப்பூ விதை கிழங்கு வாங்கி பசுமை குடில் அமைத்து விவசாயம் செய்தார். 9 ஆண்டு கால முயற்சியில் தற்பொழுது வெற்றியும் கண்டுள்ளார். தனது ஒரு ஏக்கர் நிலத்தில் குங்குமப்பூ பயிரிட்டு சாகுபடி செய்தார்.

    இது குறித்து அவர் கூறும்போது, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் இதற்கான பயிற்சி மற்றும் அறிவுரைகளின்படி தனது முயற்சியை தொடர்ந்ததாக தெரிவித்தார். மேலும் காஷ்மீருக்கு அடுத்தபடியாக குங்குமப்பூ பயிரிட கொடைக்கானலில் சீதோஷ்ண நிலை மற்றும் குளிர் முக்கிய காரணமாக உள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தில் சுமார் ரூ.4 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும். ஒரு ஏக்கர் நிலத்தில் காய்கறிகள் பயிரிட்டால் சில ஆயிரங்கள் மட்டுமே கிடைக்கும். ஆனால் குங்குமப்பூ சாகுபடிக்கு 55 நாட்கள் முதல் 60 நாட்கள் போதுமானது. 15 கிலோ குங்குமப்பூ விதை கிழங்கு வாங்கி தற்பொழுது அதனை 40 கிலோவாக உருவாக்கி உள்ளேன். தற்பொழுது கொடைக்கானலில் விளையக்கூடிய குங்குமப்பூ காஷ்மீரை காட்டிலும் தரம் உயர்ந்ததாக உள்ளது. மேலும் கொடைக்கானலில் விளையும் குங்குமப்பூவுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கிறது. இந்த புது முயற்சியை மற்ற விவசாயிகளும் மேற்கொள்ள வேண்டும் என்றார். 

    • நடப்பாண்டு வெற்றிகரமாக குங்குமப்பூ விளைந்து, அறுவடை செய்யப்பட்டுள்ளது.
    • குங்குமப்பூ கிழங்கு நடவு செய்து 52 முதல் 60 நாட்களில் அறுவடை செய்ய முடியும்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கேரள மாநிலம் மறையூர், காந்தலூர் மலைப்பகுதியாகவும், குளிர் சீதோஷ்ண நிலை காணப்படும் பகுதியாகவும் உள்ளது. இங்கு ஆப்பிள், ஸ்ட்ராபெரி, பிளாக்பெரி என குளிர் பிரதேஷங்களில் மட்டும் விளையும் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் காஷ்மீரில் மட்டும் விளையும் குங்குமப்பூ கேரள அரசு நிறுவனமான, கிருஷி விகாஸ் கேந்திரா சார்பில், காந்தலூர் பெருமலையை சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி நிலத்தில் பரிசோதனை முறையில் நடவு செய்யப்பட்டது.

    காஷ்மீர், பாம்போரா கிராமத்தில் இருந்து குங்குமப்பூ கிழங்கு கொண்டு வரப்பட்டு இயற்கை உரங்கள் இட்டு நடவு செய்யப்பட்டது. தற்போது, காஷ்மீரில் விளைவது போலவே நன்கு வளர்ந்து, அதே நிறம், குணம் ஆகியவற்றுடன் முதல் முறையாக குங்குமப்பூ அறுவடை செய்யப்பட்டுள்ளது.

    வேளாண் விஞ்ஞானிகள் சுதாகர், சவுந்தரராஜ், மாரியப்பன், வெங்கட்சுப்ரமணியம் குழுவினர், சாகுபடி முதல் அறுவடை வரை கண்காணித்து வருகின்றனர்.

    இதுகுறித்து வேளாண் விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    நடப்பாண்டு வெற்றிகரமாக குங்குமப்பூ விளைந்து, அறுவடை செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை சாகுபடி காலமாக கொண்டு இரு ஆண்டுகளாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குங்குமப்பூ கிழங்கு நடவு செய்து 52 முதல் 60 நாட்களில் அறுவடை செய்ய முடியும். ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சம் கிழங்கு நடவு செய்தால் 2.5 லட்சம் பூக்கள் பூக்கின்றன.

    ஒரு ஏக்கருக்கு 1.5 கிலோ குங்குமப்பூ உற்பத்தி செய்ய முடியும். ஒரு கிலோ ரூ. 3 லட்சம் வரை விற்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 2 மாதங்களில் சராசரியாக ரூ.4.5 லட்சம் லாபம் கிடைக்கிறது. சாகுபடி செலவு மிகவும் குறைவாகவே உள்ளது. அவை வளர்வதற்கு மழை குறைவாகவும், குளிர் சீதோஷ்ண நிலை நிரந்தரமாகவும் இருக்க வேண்டும். மாநில அரசுக்கு இது குறித்த அறிக்கை அளித்து இப்பகுதிகளில் சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும் என்றனர்.

    ×