search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "condemned"

    மேட்டூர் அணையை ஜூன் 12-ந்தேதி திறக்க முடியாது என்று கூறியதுடன் அரசின் தோல்வியை மறைப்பதற்கு தி.மு.க. மீது குறை கூறுவதாக முதலமைச்சருக்கு துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். #DMK #DuraiMurugan #ADMK
    சென்னை:

    தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ந்தேதியன்று தண்ணீர் திறந்து விட இயலாது என்று கூறியதோடு மட்டுமல்லாமல், ஏதோ அதிமுக ஆட்சியில் மட்டுமே ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை நேற்றைய தினம் சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் பேசினார்.

    தி.மு.க. ஆட்சி இருந்த காலங்களில் எல்லாம் சட்டப் போராட்டத்தையும் நடத்தியிருக்கிறோம். கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் தண்ணீரை பெற்றிருக்கிறோம்.

    இது போன்ற தெளிவான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் இல்லாத காலத்திலும் கூட தலைவர் கலைஞர் முதல்-அமைச்சராக இருந்த போது கர்நாடகத்தில் யார் முதல்-அமைச்சராக இருந்தாலும் அவர்களுடன் நல்லுறவு பேணி, பேச்சுவார்த்தை நடத்தி தமிழக விவசாயிகளின் நலனை காப்பதில் மிகுந்த அக்கறை காட்டியிருக்கிறார். மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டுள்ளார்.

    ஆனால் இப்போது நீண்ட விளக்கத்தைக் கொடுத்துள்ள முதல்-அமைச்சர் அ.தி.மு.க. ஆட்சியில் இரு வருடங்கள் ஜூன் 6 மற்றும் 12-ந்தேதிகளில் மேட்டூர் அணை திறந்து விடப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார். அதற்கு முன்பு இருந்த கழக ஆட்சி காவிரி நீரை உரிய முறையில் பெற்று மேட்டூர் அணையில் தேக்கி வைத்ததால் மட்டுமே 12.6.2001 மற்றும் 6.6.2011 ஆகிய காலங்களில் குறித்த காலத்தில் அணை திறந்து விட முடிந்தது என்பதை ஏதோ முதல்-அமைச்சர் வசதியாக மறந்து விட்டார்.

    காவிரி ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது என்று வாதிட்டுக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு, உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வெளிவந்ததிலிருந்து கடந்த 113 நாட்களில் ஆக்கபூர்வமான, அழுத்தம் தரக்கூடிய செயல்களில் ஈடுபட்டிருந்தால் இந்நேரம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கும். ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையை திறப்பதில் எந்த தடையும் இருந்திருக்காது.


    அதை கோட்டை விட்ட முதல்-அமைச்சர் தி.மு.க.வை குறை கூறுவதில் காட்டும் அக்கறையை, மத்திய பா.ஜ.க. அரசுக்கு அழுத்தம் கொடுப்பதிலோ, உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீரை திறக்க வைப்பதிலோ எவ்வித முயற்சியும் எடுக்க இயலவில்லை.

    மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்துப் பேச முடியாத தன் இயலாமையை “மேட்டூர் அணையை ஜூன் 12-ந்தேதி திறக்க இயலாது” என்ற வடிவத்தில் நேற்றைய தினம் அவையில் அறிவித்திருக்கிறார்.

    ஆகவே உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அமைக்கப்படும் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் 113 நாட்களாக காவிரி நீரைப் பெறாமல் வேடிக்கை பார்த்து விட்டு இன்றைக்கு மேட்டூர் அணையை ஜூன் 12-ந்தேதி திறக்க முடியாது என்று முதல்-அமைச்சர் கூறுவது உள்ளபடியே மனவேதனையளிக்கிறது.

    தன் தோல்வியை மறைக்க தி.மு.க. மீது குறை கூறி திசை திருப்ப முனைவது அதை விட வேதனை தருகிறது. ஆகவே விவசாயிகளின் நலனில் அரசியல் செய்வதை நிறுத்தி விட்டு, காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் உடனடியாக காவிரி நீரைப் பெற முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மத்திய அரசுக்கு அதற்கு தேவையான அழுத்தத்தை கொடுக்க முன் வர வேண்டும்.

    இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார். #DMK #DuraiMurugan #ADMK
    அடுத்த ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற அதிகாரியின் அறிவிப்பு தூத்துக்குடி மக்கள் மத்தியில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. #SterlitePlant #ThoothukudiFiring
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்ட பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இதனால் தூத்துக்குடியில் பதட்டமும், பரபரப்பும் உண்டானது.

    துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு உலக அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. இது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்டு விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. துப்பாக்கி சூடு தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம், தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவை நேரடியாக தூத்துக்குடி வந்து விசாரணை மேற்கொண்டன.

    இதே போல நீதிபதிகள் அடங்கிய உண்மை கண்டறியும் குழுவும் தூத்துக்குடியில் முகாமிட்டு விசாரணை நடத்தின. இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை மூடுவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. முதல் கட்டமாக ஆலைக்கு மின்சாரம் வழங்குவது மற்றும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டன.

    இதன் பிறகு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘அடுத்த ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என தெரிவித்தார்.

    இது தூத்துக்குடி மக்கள் மத்தியில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக தூத்துக்குடி அ.குமரெட்டியாபுரத்தை சேர்ந்த மகேஷ் என்பவர் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம் என்று அந்த நிறுவன அதிகாரி கூறியிருப்பது எங்களுக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த பிரச்சனையில் 13 பேரை இழந்து விட்டோம். நல்ல காற்று, குடிநீர் கிடைக்கவில்லை.

    ஸ்டெர்லைட் ஆலையால் படும் துன்பம் சொல்லி மாளாத நிலையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து ஆலையை மூடியுள்ளது. எனினும் இதுபற்றி சட்டமன்றத்தை கூட்டி ஸ்டெர்லைட்டை மூடுவதற்கான அரசாணை குறித்த தீர்மானம் நிறைவேற்றி ஆலையை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அப்போது தான் இதற்கு நிரந்தர தீர்வு காண முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அ.குமரெட்டியாபுரத்தை சேர்ந்த மகாலட்சுமி கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையினால் புற்றுநோய் ஏற்பட்டு பலர் இறந்து விட்டார்கள். குடிநீர் மாசுபட்டு உள்ளது. ஏற்கனவே இந்த ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் இறந்து விட்டார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து கை, கால்கள் முடமாகி உள்ளனர். தூத்துக்குடி நகர் முழுவதுமே பதட்டமான நிலையில் காணப்படுகிறது.

    தமிழ் மாந்தன், மகேஷ்

    இந்த சூழ்நிலையில் மீண்டும் ஆலையை திறப்போம் என ஆலை நிர்வாகம் கூறியிருப்பது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதற்கு முழுமையான தீர்வை காணவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் தூத்துக்குடி மக்கள் மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்தும் சூழ்நிலை ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ் மாந்தன் கூறியதாவது:-

    துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்த வேதனை இன்னும் தீரவில்லை. கொந்தளிப்பு அடங்கவில்லை. மக்கள் மனதில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. இந்த சூழ்நிலையில் ஆலை மீண்டும் திறக்கப்படும் என அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது சாத்தியமல்ல என கூறியிருந்தார். அனில் அகர்வால் கோர்ட்டு உத்தரவு பெற்று திறப்போம் என தெரிவித்தார்.

    இதைவைத்து பார்க்கும் போது ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளிடையே உடன்பாடு இருப்பது போல் தெரிகிறது. தற்போது ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது பூட்டு போடும் விழா போல நடந்துள்ளது.

    எனவே சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #SterlitePlant #ThoothukudiFiring
    காவிரி சிக்கல் குறித்து கர்நாடக முதல்-அமைச்சர் குமாரசாமியுடன் கமல்ஹாசன் சந்திப்பு குறித்து ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்புக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    காவிரி பாசன விவசாயிகள் கவனத்திற்கு, காவிரி சிக்கல் குறித்து கர்நாடக முதல்- அமைச்சருடன் கமல்ஹாசன் இன்று பேச்சு நடத்துகிறாராம். அநேகமாக நாளை அல்லது அதற்கு மறுநாள் காவிரியில் தண்ணீர் வந்துவிடும் என்பதால் குறுவைப் பாசனத்திற்கு தயாராக இருக்கவும்.

    காவிரி சிக்கலில் பேச்சு கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆர்வக்கோளாறில் செய்யப்படும் சில நடவடிக்கைகள் ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PMK #Ramadoss #KamalHaasan
    காலா பட டிக்கெட் விலை உயர்வு பற்றி டுவிட்டரில் பா.ம.க. தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். #Kaala #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் ‘காலா’ பட டிக்கெட் விலை உயர்வு பற்றி டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்து வருமாறு:-

    ஜோரா கைத்தட்டுங்க. காலா திரைப்படத்திற்கு முன்பதிவு தொடங்கியது. வழக்கமான அதிகபட்சக் கட்டணம் ரூ.165.78-க்கு பதிலாக ரூ.207.24-க்கு விற்கப்படுகிறதாம்.

    இதில் கொடுமை என்னவென்றால் காலா திரைப்படத்தில் ஏழைப் பங்காளனாக நடிக்கிறாராம் ரஜினிகாந்த். ஏழைப் பங்காளன்.... ஏழைப் பங்காளன்.

    இவ்வாறு அவர் கூறினார். #Kaala #Ramadoss
    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் பெட்ரோல் 81.28 ரூபாய்க்கும், டீசல் 73.06 ரூபாய்க்கும், மானியத்துடன் கூடிய வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.2.12 காசுகள் உயர்த்தி, 481.84 ரூபாயாகவும், மானியம் இல்லாத வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.49.50 காசுகள் உயர்த்தப்பட்டு, 712 ரூபாயாகவும் உள்ளது. எனவே இந்த விலை ஏற்றம் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. நடுத்தர மற்றும் சாமானிய பொதுமக்கள் இந்த விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பால், காய்கறிகள், மளிகைப்பொருட்கள் என வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் விலை உயர்ந்துள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இதை மிக முக்கிய பிரச்சினையாக எடுத்துக்கொண்டு, விலை உயர்வை கட்டுப்படுத்தவேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 
    விவசாயி அய்யாக்கண்ணு மீது அரக்கோணத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார். #AttackOnAyyakannu #TTVDhinakaran
    சென்னை:

    மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிராக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார். இன்று அவர் சக விவசாய சங்கத்தினருடன் வேலூர் மாவட்டம் அரக்கோணம் வழியாக சென்றபோது பா.ஜ.க.வினர் தாக்கி உள்ளனர். இதற்கு டிடிவி தினகரன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர்  அய்யாக்கண்ணுவும், அவருடன் பயணித்த இயக்கத்தினரும், அரக்கோணம் வழியாக திருத்தணி செல்லும் வழியில் பாஜகவினரால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

    தமிழக விவசாயிகளின் உரிமைக்காகவும், காவிரியின் உரிமைக்காகவும், எதிர்கால சந்ததியினரின் வாழ்வை நாசமாக்கும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கெதிராகவும் மிகக் கடுமையாக போராடிவரும் ஜனநாயக போராளி அய்யாக்கண்ணு.



    அவர் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல் என்பது கடும் கண்டனத்திற்கு உரியது. அய்யாக்கண்ணு தனிநபர் அல்ல, அவர் ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலாகத்தான் போராடி வருகிறார்.

    பாஜகவினர் சட்ட மீறல்களில் ஈடுபடும்போது தமிழக அரசு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தொடர்ந்து தயக்கம் காட்டுவது தமிழகத்தை அபாயச் சூழலுக்குத்தான் கொண்டு செல்லும் என்பதை பழனிசாமியின் அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார். #AttackOnAyyakannu #TTVDhinakaran
    அரசியல் ஆதாயத்துக்காக சராசரி நபர்போல மு.க.ஸ்டாலின் பேசி வருவதாக கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். #KPMunusamy #MKStalin
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் கே.பி.முனுசாமி நிருபரிடம் கூறியதாவது:-

    நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் அதை சந்திக்க தயார் என்று கூறி தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை புரிந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுத்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காவல்துறை மற்றும் தமிழக முதல்வர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என கூறி வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்பை உணர்ந்து அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அதை விடுத்து அரசியல் ஆதாயத்திற்கு சராசரி நபர் போல் தொடர்ந்து இது போன்ற கருத்துக்களை முன் வைத்து வருகிறார். குறிப்பாக இவரது தந்தை கருணாநிதி முதல்வராக இருந்த போது தமிழகத்தில் 13முறை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அப்படி என்றால் அந்த சமயத்தில் அவரது தந்தை மீது கொலை வழக்கு பதிவு செய்து இருக்க வேண்டும்.


    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தமிழக முதல்வரை கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கிறார். இவருக்கு அரசியல் செய்ய எந்த பிரச்சனையும் தற்போது கிடைக்கவில்லை. ஆகவே இது போன்ற பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து கடுமையான வார்த்தைகளை உபயோகித்து அவதூறு பரப்பி வருகிறார். அவர் நாக்கை அடக்கி பேச வேண்டும். தொடர்ந்து அப்படி பேசினால் அடுத்த முறை நானே நேரடியாக சென்று வைக்கோவிற்கு பதில் அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #KPMunusamy #MKStalin
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரத்தில் பிரதமர் மோடி, வாய் மூடி இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார். #ThoothukudiFiring
    நாகர்கோவில்:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குமரி மாவட்டத்தில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நாகர்கோவிலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்வுகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. அங்கே சகஜ நிலை இன்னும் வரவில்லை. துப்பாக்கி சூட்டால் இறந்தவர்களின் உடலை மருத்துவமனையில் பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதால் இறந்த அப்பாவி மக்களின் சடலத்தை இன்னும் வீட்டுக்கு அனுப்ப முடியாத சூழல் நிலவுகிறது. இறந்தவர்களின் உடல்களை விரைந்து பிரேத பரிசோதனை செய்து ஒப்படைக்க வேண்டும்.

    தமிழக அரசு மற்றும் காவல்துறையின் தவறான செயல்பாடுகளால் தூத்துக்குடி மக்களுக்கு அரசின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். முழுமையான விசாரணைக்கு பிறகே எப்படி இறந்தார்கள், எதனால் இறந்தார்கள்? என்ற ஏராளமான உண்மைகள் வெளிப்படும்.

    தமிழக அரசின் அலட்சியத்தால் மக்கள் இறந்துள்ளனர். துப்பாக்கிசூடு சம்பவத்துக்கு பிறகு தமிழக முதல்-அமைச்சர் நேரடியாக தூத்துக்குடி செல்லவில்லை. பின்னர் மக்களுக்கு எப்படி அரசின் மீது நம்பிக்கை ஏற்படும். 13 பேரின் உயிரிழப்புக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி, வாய் மூடி இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பிரதமர் மாற்றாந்தாய் மனப்பான்மையில் செயல்படக் கூடாது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு அனைத்து தரப்பினரையும் பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது. மத்திய அரசு இந்த விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசுல் விலையை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும்.

    ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மக்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத்தை முறையாக கொடுக்க வேண்டும். குமரியில் துறைமுகத்தின் அவசியம் குறித்து மக்களிடம் கருத்து கேட்பது மிக அவசியமான ஒன்று. ஸ்டெர்லைட், மீத்தேன் திட்டம், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் போல மக்கள் விரும்பாத திட்டத்தை திணிக்க கூடாது. மக்களின் எதிர்ப்பை மீறி எதுவும் வர முடியாது. பாரதிய ஜனதா அரசு 4 ஆண்டுகளில் தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கவில்லை.

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்தன்மையோடு செயல்பட்டு வருகிறது. கட்சியை பலப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. த.மா.கா. தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiFiring #GKVasan #TamilMaanilaCongress
    தூத்துக்குடியில் 13 பேரை கொலை செய்த போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய துப்பில்லாத அரசு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை கைது செய்தது கண்டனத்திற்குரியது என முக ஸ்டாலின் கூறியுள்ளார்.#MKStalin #DMK
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடியில் 13 பேரை கொலை செய்த போலீஸ் அதிகாரிகள் மீது ஒரு வழக்குக்கூட பதிவு செய்ய துப்பில்லாத அ.தி.மு.க. அரசு, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. காவல் துறையை காவி மயமாக்கும் முதலமைச்சர் பதவி விலகுவதே மக்களுக்கு பாதுகாப்பு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MKStalin #DMK
    தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலைக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தொடர் பெட்ரோல், டீசல் விலையேற்றம் மூலம் அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிக்கின்றது. நாட்டு பொருளாதார சுமையை விலையேற்றத்தின் மூலம் மக்கள் மீது திணிப்பது ஏற்புடையதல்ல. கர்நாடகத் தேர்தலின்போது 19 நாட்களாக பெட்ரோல், டீசலின் விலையை ஏற்றாமலும் தேர்தல் முடிவுக்கு பிறகு தொடர் விலையேற்றம் செய்வதும் மக்களை ஏமாற்றும் செயல்.

    மக்கள் நலன், தொழில்கள், வணிகம் உள்ளிட்ட அனைத்தையும் பாதிக்கக்கூடிய பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கு மத்திய அரசு அறிக்கை மட்டுமே விடாமல், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பலமுறை வலியுறுத்தியிருந்தது போல பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு இவற்றை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும் எனவும், மாநில அரசின் வருவாய் பாதிக்கும் என்ற போதிலும் தமிழக அரசு பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்குள் கொண்டுவருவதற்கு முழு ஆதரவு நல்கி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. #SterliteProtest #ThoothukudiFiring #NCHRO
    புதுடெல்லி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி முற்றுகைப் போராட்டத்திற்கு வந்த மக்களைத் தமிழகக் காவல்துறை மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் எதிர்கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதனை தேசிய மனித உரிமைக் கூட்டமைப்பு (என்.சி.ஹெச்.ஆர்.ஓ) வன்மையாகக் கண்டிக்கின்றது.

    இம்மாதிரித் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்படும்போது கடைபிடிக்க வேண்டிய எச்சரிக்கை விதிகள் மற்றும் நடைமுறைகள் எதுவும் கடைபிடிக்கப்படாமல் இது நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக வந்தவர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு தீ வைத்த பின்னரே தாங்கள் சுடத் தொடங்கியதாக இப்போது காவல்துறை சொல்கிறது. ஆனால் மூன்றடுக்குப் பாதுகாப்பில் இருந்த ஆட்சியர் அலுவலகத்துக்குள் எப்படி ஊர்வலத்தில் வந்த சிலர் கையில் எரிபொருள்களுடன் நுழைந்திருக்க முடியும் என்கிற கேள்விக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை.

    மே 22 அன்று நடந்த அனைத்து நடவடிக்கைகளும் காவல்துறை அந்தச் சூழலைத் தவறாகக் கையாண்டதன் விளைவு மட்டுமே என நாங்கள் கருதவில்லை. இது முன்னதாகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை என்றே நாங்கள் உறுதியாக நம்புகிறோம். மத்திய அரசு, மாநில அரசு இரண்டுமே இவ்வாறான கார்ப்பரேட் முயற்சிகளை எதிர்க்கும் மக்களுக்கு, அவர்களின் போராட்டங்கள் இனி இப்படித்தான் எதிர்கொள்ளப்படும் என ஒரு பாடம் கற்பிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்தான் இது.

    இந்தத் தாக்குதல் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்கப் பணியிலுள்ள உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு நீதி விசாரணை ஆணையம் ஒன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ஆணையத்தை நாங்கள் நம்பவில்லை.

    உரிய விதிகளைக் கடை பிடிக்காமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தால் அந்தக் காவல்துறையினர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது கொலை வழக்கு தொடரப்பட வேண்டும்.

    மாவட்ட காவல்துறைத் தலைவர் மற்றும் ஆட்சியரை இப்போது அரசு இடம் மாற்றியுள்ளது. அவர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்கள் மீது துறைசார் விசாரணை தொடங்க வேண்டும். அப்பாவி மக்கள் பலர் வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்ட அனைவரும் உடனடியாக நிபந்தனை இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்.

    துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு, அவர்களின் கல்வித் தகுதிக்குப் பொருத்தமான, நிரந்தரமான அரசுப் பணி அளிக்க வேண்டும். குண்டடிபட்டு மருத்துவமனையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பத்து இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். மருத்துவமனையில் அவர்களுக்காகும் மொத்தச் செலவையும் அரசே ஏற்க வேண்டும். தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்தை உடனடியாகவும் நிரந்தரமாகவும் மூட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #SterliteProtest #ThoothukudiFiring #NCHRO
    ஸ்டெர்லைட் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணாமல் துப்பாக்கி சூடு நடத்தியது தவறு என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். #GKVasan #ThoothukudiFiring #SterliteProtest
    தஞ்சாவூர்:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கூடிய கட்டாய சூழல் மத்திய-மாநில அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

    நியாயமாக போராடிய இந்த பிரச்சனைக்கு அணுகுமுறை சரியானதாக பின்பற்றபடவில்லை. ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்தியவர்களிடம் கலந்து பேசி தீர்வு காணாமல் துப்பாக்கி சூடு நடத்தியது ஜனநாயகத்திற்கு எதிரானது.

    100-வது நாள் போராட்டத்தை அதனுடைய அவசரம், அவசியம், தாக்கம், முக்கியத்துவம் ஆகியவை புரிந்து செயல்படாமல் தமிழக அரசும், காவல்துறையும் மிக சுலபமாக கையாளுவதாக நினைத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இது காவல்துறையின் பொறுப்பற்ற செயல்.

    முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறி விட்டனர். இதன் காரணமாகதான் உயிர்பலி ஏற்பட்டுள்ளது. காவல்துறையின் அவசர போக்கு, பொறுமை இழந்த செயல் இனிமேல் மக்கள் மத்தியில் எடுபடாது. உயிர் இழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சமும், அரசு வேலையும் வழங்க வேண்டும்.

    தங்களது கோட்பாட்டை மதிக்காமல் மீறி செயல்பட்ட காவல்துறையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் உண்மையை மக்கள் தெரிந்து கொள்வதற்காக நீதி விசாரணை நடத்த வேண்டும்.


    அமைச்சர் ஜெயக்குமார் துப்பாக்கி சூடு தவறில்லை என்று கூறியது நியாயமற்ற, மனிதாபிமானமற்ற செயல். மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்க அரசு தவறி விட்டது. துப்பாக்கி சூடு அவசியமற்றது.

    கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பொதுமக்களை தடுத்து நிறுத்தி இருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilMaanilaCongress #GKVasan #ThoothukudiFiring  #SterliteProtest
    ×