search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர்வு"

    • கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்றுமதி ரூ.11 ஆயிரத்து 628 கோடியாக இருந்தது.
    • திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திருப்பூர்:

    பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் உலக நாடுகளை சார்ந்து உள்ளது. ரஷியா-உக்ரைன் போர் சூழல் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கான இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் குறைந்தது. பணவீக்கம் காரணமாக அமெரிக்க ஏற்றுமதியும் பின்னடைவை சந்தித்தது. புதிய வர்த்தக வாய்ப்புகளும் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை.

    இந்திய தொழில் முனைவோரின் விடாமுயற்சி காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதிகரித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏற்றுமதி ரூ.11 ஆயிரத்து 628 கோடியாக இருந்தது. 2024 பிப்ரவரி மாதம் ரூ.12 ஆயிரத்து 248 கோடியாக உயர்ந்துள்ளது.

    இதுபோல் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.11 ஆயிரத்து 917 கோடிக்கு பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் நடந்துள்ளது. 2024 மார்ச் மாதம் ரூ.12 ஆயிரத்து 224 கோடியாக வர்த்தகம் உயர்ந்துள்ளது. இதனால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இனிவரும் நாட்களில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பும் என்றும் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்திய பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரம் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ளன.
    • இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் கூறினர்.

    சென்னை:

    'தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்கிறது' என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் கூறினர்.

    நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரம் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

    அதில் சுமார் 30 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதியிலும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்தும் சுங்கக்கட்டணம் உயர்த்தும் நடைமுறை உள்ளது. அதன்படி வருகிற 1-ந்தேதியில் இருந்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் உயரும் எனக் கூறப்படுகிறது.

    இதன்படி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, அரியலூர் மாவட்டம் மணகெதி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம் கரியந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய 5 சுங்கச்சாவடிகளில் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    வாகனங்களின் வகைக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை மத்திய நெடுஞ்சாலைத் துறை இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அறிவிக்கும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் கூறினர்.

    இந்த கட்டண உயர்வால் காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது என்று வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • மற்ற மாநிலங்களில் மின் கட்டணம் குறைவாக உள்ளதால், ஜவுளி உற்பத்தியாளர்களால் விலை குறைவாக தர முடிகிறது.
    • கடந்த வாரத்தில் பஞ்சு விலை உயர்வு காரணத்தால், நூல் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 25 வரை விலையேற்றம் ஆனது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது:-

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் முக்கிய தொழிலாக உள்ள விசைத்தறி ஜவுளித் தொழில் ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த ஜவுளித்துணிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் ஜவுளித்தொழில் நெருக்கடியில் உள்ளது.

    இந்நிலையில் கடந்த வாரத்தில் பஞ்சு விலை உயர்வு காரணத்தால், நூல் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 25 வரை விலையேற்றம் ஆனது. ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் ஜவுளிக்கு இன்னும் உரிய விலை கிடைக்க வில்லை. பஞ்சு மற்றும் நூல் விலை உயர்கிறது .ஆனால் அதில் உற்பத்தி செய்யப்படும் துணி விலை உயரவில்லை.

    மேலும் மற்ற மாநிலங்களில் மின் கட்டணம் குறைவாக உள்ளதால், ஜவுளி உற்பத்தியாளர்களால் விலை குறைவாக தர முடிகிறது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் அவர்களுடன் போட்டியிட முடியாத சூழ்நிலை ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு தனி பேரிப்பு அமைத்து மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

    மேலும் சிறு, குறு, நிறுவனங்களுக்கான தொழில் ஒப்பந்தம் வரவேற்கத்தக்கது. ஆனால் அதை உடனடியாக அமலுக்கு கொண்டு வந்ததால் வியாபாரிகள் ஜவுளி வாங்கு வதை நிறுத்திவிட்டனர். எனவே சிறுகுறு தொழில் ஒப்பந்தத்தை ஒரு வருட காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும். மேலும் தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் ஜவுளி உற்பத்தியை குறைப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே இன்று முதல் ஜவுளி உற்பத்தியை 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சேமித்து வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் கிலோ உப்பு வெள்ளத்தால் நாசமானது.
    • தூத்துக்குடியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் உப்பு அளவு வெகுவாக குறைந்துவிட்டது.

    வேலூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்தியா மட்டுமின்றி இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    தூத்துக்குடி, ஆறுமுகநேரி, முத்தையாபுரம், முள்ளக்காடு, வெள்ளப்பட்டி, தருவைகுளம், வேம்பார், பழையகாயல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

    கடந்த மாதம் பெய்த புயல் மழையால் தாமிரபரணியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல், ஆறுமுகநேரி மற்றும் உப்பளங்களில் வெள்ளம் புகுந்தது.

    அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் கிலோ உப்பு வெள்ளத்தால் நாசமானது.

    இதனால் தூத்துக்குடியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் உப்பு அளவு வெகுவாக குறைந்துவிட்டது. வரத்து குறைவாக உள்ளதால் தூத்துக்குடியில் இருந்து விற்பனைக்கு வரும் உப்பு விலை உயர்ந்துள்ளது.

    50 சிறிய பாக்கெட்டுகள் கொண்ட ஒரு மூட்டை கடந்த மாதம் வரை ரூ.230-க்கு விற்பனையானது. ஆனால் தற்போது ரூ. 290 வரை விலை உயர்ந்துள்ளது.

    சில்லரை விலையில் கல் உப்பு ஒரு பாக்கெட் ரூ.7 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த கல் உப்பு ஒரு பாக்கெட் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தூத்துக்குடியில் இருந்து தமிழகம் முழுவதும் உப்பு விற்பனைக்கு வருகிறது. மழை வெள்ளத்தால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு தயார் செய்யப்பட்டிருந்த உப்பு வெள்ளத்தால் நாசமாகிவிட்டது. இதன் காரணமாக உப்பு விலை உயர்ந்துள்ளது.

    ஓட்டல்கள் மற்றும் தோசை, இட்லி மாவு தயாரிப்பவர்கள் உணவு தின்பண்டங்கள் தயாரிப்பவர்கள் மொத்தமாக கல் உப்பு வாங்கி செல்கிறார்கள்.

    மூட்டை மூட்டையாக உப்பு வாங்கிச் செல்லும் அவர்களுக்கு இந்த விலை உயர்வு கடினமாக அமைந்துள்ளது. இதன்மூலம் தின்பண்டங்கள் விலை உயரவும் வாய்ப்புள்ளது.

    தூத்துக்குடி பகுதியில் தற்போது உப்பளங்கள் செயல்பட தொடங்கி உள்ளன. ஆனால் மாவட்டத்தில் மற்ற இடங்களில் வெள்ள பாதிப்பால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு உப்பு விலை குறைய வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர்.

    • தமிழ்நாட்டு மக்கள் மீது கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிகக் கடுமையான தாக்குதல் மின்சாரக் கட்டண உயர்வு தான்.
    • மிகக்குறைந்த அளவை மட்டும் குறைப்பதாக அறிவித்த தமிழக அரசு, அதையும் நடை முறைப்படுத்தாதது ஏன்?

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் 10 வீடுகளுக்கும், 3 மாடிகளுக்கும் குறைவாக உள்ள, மின்தூக்கி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொதுப்பயன்பாட்டு மின்கட்டணம் ஓர் அலகுக்கு 8.15ரூபாயில் இருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த அக்டோபர் 18-ந் தேதி அறிவித்து 3 மாதங்களாகிவிட்ட நிலையில், இன்று வரை அக்கட்டணக் குறைப்பு நடைமுறைப் படுத்தப்படவில்லை. பல அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கடந்த இரு மாத சுழற்சிக்கான மின்கட்டணம், பொதுப்பயன்பாட்டுக்கான மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு ரூ.8.15 என்ற அளவில் தான் கணக்கிடப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மின்கட்டணக் குறைப்பை செயல்படுத்தாமல் வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

    2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மின்கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன் வீடுகளுக்கான மின்கட்டணம் தான், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொதுப்பயன்பாட்டு இணைப்புகளுக்கும் வசூலிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, மாதத்திற்கு 100 அலகுகள் மின்சாரம் இலவசமாக வழங்கப் பட்டது. ஆனால், பொதுப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை, வணிகப் பயன்பாட்டுக்கான கட்டணத்தை விட அதிகமாக சுமார் 10 மடங்கு அளவுக்கு உயர்த்திய தமிழ்நாடு அரசு, இலவச மின்சாரத்தையும் ரத்து செய்துவிட்டது. அதனால் பொதுப்பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணம் 13 மடங்கு அளவுக்கு அதிகரித்தது.

    இப்போது முதலமைச்சர் அறிவித்துள்ள கட்டணக் குறைப்பின்படி, இனி 150 அலகு பயன்பாட்டிற்கு ரூ. 1029 கட்டணம் செலுத்த வேண்டும். இது பழைய கட்டணத்தை விட 9 மடங்கு அதிகம் ஆகும்.

    பொதுப்பயன்பாட்டுக்கான மின்கட்டணத்தை 13 மடங்கு உயர்த்திவிட்டு, அதில் மிகக்குறைந்த அளவை மட்டும் குறைப்பதாக அறிவித்த தமிழக அரசு, அதையும் நடை முறைப்படுத்தாதது ஏன்?

    தமிழ்நாட்டு மக்கள் மீது கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிகக் கடுமையான தாக்குதல் மின்சாரக் கட்டண உயர்வு தான். அதனால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து தமிழ்நாட்டு மக்களால் இன்னும் மீள முடியவில்லை. எனவே, அறிவிக்கப்பட்ட அளவில் இல்லாமல், அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டு மின்கட்டணத்தை ஏற்கனவே இருந்த அளவுக்கு குறைக்க வேண்டும்.

    முன்பு வழங்கப்பட்டதைப்போல பொதுப்பயன் பாட்டுக்கும் 100 அலகு மின்சாரம் இலவசமாக வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மலையாற்றூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரின் மகன் பிரவீன்(வயது26) என்பவர் குண்டு வெடிப்பில் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தார்.
    • குண்டு வெடிப்பில் ஏற்கனவே பலியான லிபினா மற்றும் ரீனா ஆகியோர் பிரவீனின் சகோதரி மற்றும் தாய் ஆவர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் கடந்த மாதம் 29-ந்தேதி கிறிஸ்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டுவெடித்தது. இதில் 3 பேர் பலியான நிலையில், படுகாயம் அடைந்தவர்களில் 12 வயது சிறுமி உள்பட மேலும் இருவர் அடுத்தடுத்து இறந்தனர்.

    கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அறங்கேற்றிய கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டினை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் மற்றும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    சிறையில் அடைக்கப்பட்ட டொமினிக் மார்ட்டினை போலீசார் காவலிலும் எடுத்து விசாரித்தார்கள். அதில் குண்டுவெடிப்பு சதியை நிறைவேற்றியது எப்படி? என்பது குறித்த பல்வேறு தகவல்களை போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.

    போலீஸ் காவல் முடிந்ததால் கடந்த 15-ந்தேதி மீண்டும் கோர்ட்டில் டொமினிக் மார்ட்டின் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர் மீண்டும் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் களமச்சேரி குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களில் மேலும் ஒருவர் இறந்துள்ளார். மலையாற்றூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவரின் மகன் பிரவீன்(வயது26) என்பவர் குண்டு வெடிப்பில் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் களமச்சேரி குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. குண்டு வெடிப்பில் ஏற்கனவே பலியான லிபினா மற்றும் ரீனா ஆகியோர் பிரவீனின் சகோதரி மற்றும் தாய் ஆவர்.

    களமச்சேரி குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்களில் 11 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளி கிழங்குகளை பயிரிட்டுள்ளனர்.
    • சிப்ஸ் தயாரிப்பவர்கள் ரூ.14 ஆயிரத்துக்கு வாங்கிச்சென்றனர்.

       வேலாயுதம் பாளையம், 

    கரூர் மாவட்டம் குளத்துப்பாளையம், வேட்டமங்கலம் ,குந்தாணி பாளையம், நல்லி க்கோவில்,ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், புன்னம் சத்திரம், பேச்சிப்பாறை, நடையனூர், கொங்கு நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளி கிழங்குகளை பயிரிட்டுள்ளனர்.

    10 மாதங்களில் மரவள்ளிக்கிழங்கு விளை ந்தவுடன் உள்ளூர் பகுதிக்கு வரும் புரோக்கர்கள் மூலம் மரவள்ளிக்கிழங்குகளை டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர் .மர வள்ளிக்கிழங்குகளை வாங்கிய புரோக்கர்கள் புது ச்சத்திரம், நா மகி ரிப்பேட்டை, புதன்சந்தை, மல்லூர், கீரனூர் ,சின்ன சேலம் ,ஆத்தூர் , மல வேப்பங்கொட்டை உள்ளி ட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் சவ்வரிசி தயாரிக்கும் மில்களுக்கு அனுப்பி வைக்கின்றனர் . வாங்கிய மரவள்ளி கிழங்கு களை சவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் பல ரக சவ்வரிசி களாகவும், கிழங்கு மாவு போன்றவைகளை தயார் செய்கின்றனர் .

    மரவள்ளிக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் சத்து அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    அதே போல் சவ்வரிசி விலை உயரும் போதும், விலை வீழ்ச்சி அடையும் போதும் சேகோசர்வ் மூலம் மரவள்ளி கிழங்கு களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த வாரங்களில் மரவள்ளிக்கிழங்கு சவ்வரிசி தயாரிக்கும் மில் அதிபர்கள் ஒரு டன் ரூ 12 ஆயிரத்துக்கு வாங்கிச் சென்றனர்.

    சிப்ஸ் தயாரிப்பவர்கள் ஒருடன்மரவள்ளிக்கிழங்கை ரூ13000 க்கு வாங்கிச் சென்றனர் .நேற்று சவ்வரிசி தயாரிக்கும் அதிபர்கள் ஒரு டன் மரவள்ளி கிழங்கு ரூ 12 எழுநூறுக்கு வாங்கிச் சென்றனர். சிப்ஸ் தயாரிப்பவர்கள் ரூ.14 ஆயிரத்துக்கு வாங்கிச்சென்றனர். மரவள்ளி கிழங்கு உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக மரவள்ளி கிழங்கு விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வர்
    • செவ்வந்திப்பூ ரூ.220- க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும் விற்பனையானது

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம், நொய்யல், மரவாபாளையம், சேமங்கி,முத்தனூர், பேச்சிப்பாறை ,நடையனூர், வேட்டமங்கலம் ,குந்தாணி பாளையம், ஓலப்பாளையம், மூலியமங்கலம், புதுகுறுக்குபாளையம், பழமாபுரம், நல்லிக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூக்கும், குண்டு மல்லி, முல்லை, சம்பங்கி ,ரோஜா, அரளி, செவ்வந்தி வகை பூக்களை, அருகாமையில் செயல்பட்டு வரும் பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வர்.

    கடந்த வாரம் குண்டுமல்லி ரூ.500- க்கும், சம்பங்கி கிலோ ரூ.50- க்கும், அரளி கிலோ ரூ.60- க்கும், ரோஜா கிலோ ரூ.140- க்கும், முல்லைப் பூ ரூ.400- க்கும், செவ்வந்திப்பூ ரூ.80- க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும் விற்பனையானது. நேற்று குண்டு மல்லி கிலோ ரூ.800-க்கும், சம்பங்கி கிலோ ரூ.100- க்கும், அரளி கிலோ ரூ.100- க்கும், ரோஜா கிலோ ரூ.200- முல்லைப் பூ கிலோ ரூ.700-க்கும், செவ்வந்திப்பூ ரூ.220- க்கும், கனகாம்பரம் ரூ.600-க்கும் விற்பனையானது. கோவில் விசேஷங்கள் அதிகமாக இருப்பதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்வு
    • மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.10-க்கு விற்பனையானது

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், புங்கோடை சேமங்கி, முத்தனூர், நடையனூர், பேச்சிப்பாறை, கோம்பு ப்பாளையம், நத்தமேடு பாளையம், திருக்காடு துறை, தவுட்டுப்பாளையம், நன்செய் புகளூர், பாலத்துறை, தளவாபாளையம், தோட்டக்குறிச்சி, கடம்பங்குறிச்சி, நன்னியூர் புதூர், வாங்கல்உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், ரஸ்தாலி, பச்சநாடன், கற்பூரவல்லி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வாழைகள் பயிர் செய்யப்பட்டுள்ளது. சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கும் ஏலம் போனது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.450-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.10-க்கு விற்பனையானது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வாழைத்தார்கள் விலை உயர்வடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • அமாவாசையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு
    • பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

     வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, பேச்சிப்பாறை, வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லைப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    இங்கு கடந்த சில வாரங்களாக பூக்களின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. மேலும் சுப முகூர்த்த நாட்கள், கோவில் மற்றும் திருவிழா விசேஷங்கள் போன்ற காரணங்களால் பூ தேவை அதிகரித்து விலை உயர்ந்துள்ளது.கடந்த வாரம் ஒரு கிலோ குண்டு மல்லி ரூ300-க்கு விற்பனையானது நேற்று 700 ரூபாய்க்கும், கடந்த வாரம் 70 ரூபாய்க்கு விற்பனையான சம்பங்கி 180 ரூபாய்க்கும், 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி நேற்று 170 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. இதே போல் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சாம்பந்தி பூ 170 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லைப்பூ கிலோ 800 ரூபாய்க்கும் விற்பனையானது.சுப முகூர்த்த நாட்களை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • வரத்துக்குறைவால் வெற்றிலை விலை உயர்ந்துள்ளது.
    • விவசாயிகள் மகிழ்ச்சியாக தெரிவித்தனர்.

    கரூர்

    நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை உள்ளிட்ட பல்வேறு வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர். வெற்றிலை நன்கு விளைந்தவுடன் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், வெற்றிலை மண்டிகளுக்கும், தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.9 ஆயிரத்துக்கு விற்றது நேற்று ரூ.10 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.4 ஆயிரத்திற்கு விற்றது ரூ.5 ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம்பயிர் சுமை ஒன்று ரூ.4,500-க்கு விற்றது ரூ.ரூ.5 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ரூ.2500-க்கு விற்றது ரூ.2,500-க்கும் விற்பனையானது. வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியாக தெரிவித்தனர்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு 250 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ ஒரு கிலோ நேற்று ரூ. 360-க்கு விற்கப்பட்டது.
    • இன்று விலை மேலும் உயர்ந்து ஒரு கிலோ மல்லிகை பூ 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முகூர்த்த நாளைெயாட்டி அதிக அளவில் மல்லிகை பூக் களை வாங்கி செல்கின்றனர்.

    சேலம்:

    சேலம் பூ மார்க்கெட்டுக்கு சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூர், நாமக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. இந்த பூக்களை சேலம் மற்றும் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள். இந்த நிலையில் பூக்களின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 250 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ ஒரு கிலோ நேற்று ரூ. 360-க்கு விற்கப்பட்டது. இன்று விலை மேலும் உயர்ந்து ஒரு கிலோ மல்லிகை பூ 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முகூர்த்த நாளைெயாட்டி அதிக அளவில் மல்லிகை பூக் களை வாங்கி செல்கின்றனர். மற்ற பூக்களின் விலை விவரம் ஒரு கிலோவுக்கு வருமாறு:- முல்லை ரூ.360 ஜாதிமல்லிகை ரூ. 260, காக்கட்டான் ரூ.320, கலர் காக்கட்டான் ரூ.280 ,மலைக்காக்கட்டான் ரூ.320, அரளி ரூ.160, வெள்ளைஅரளி ரூ.260, மஞ்சள் அரளி ரூ.260, செவ்வரளி ரூ.260, ஐ.செவ்வரளி ரூ.180, நந்தியாவட்டம் ரூ.140, சி.நந்திவட்டம் ரூ.200, சம்பங்கி ரூ.200, சாதா சம்பங்கி ரூ.200.

    ×