search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரமத்தி வேலூர் பகுதிகளில்  தேங்காய் சிரட்டை விலை உயர்வு
    X

    பரமத்தி வேலூர் பகுதிகளில் தேங்காய் சிரட்டை விலை உயர்வு

    • தேங்காய் பருப்பு எடுத்த பின் தேங்காய் சிரட்டைகளை குவித்து வைத்து அப்பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்கின்றனர்.
    • கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.10-க்கு விலைபோனது. இந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.12-க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பெருங்குறிச்சி, குப்பரிக்காபாளையம், மணியனூர், கந்தம்பாளையம், சுள்ளிப்பாளையம், மாரப்பம்பாளையம், சோழசிராமணி, ஜமீன் இளம் பள்ளி, குரும்பல மகாதேவி, கொத்தமங்கலம், சிறுநல்லிக்கோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், வடகரையாத்தூர், ஆனங்கூர், அய்யம்பாளையம், பிலிக்கல்பாளையம், சேளூர், அண்ணா நகர், கபிலக்குறிச்சி, பெரியசோளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர்.

    தேங்காய் பருப்பு எடுத்த பின் தேங்காய் சிரட்டைகளை குவித்து வைத்து அப்பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்கின்றனர். கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.10-க்கு விலைபோனது. இந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ.12-க்கு விற்பனையானது. தேங்காய் சிரட்டை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×