search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandrababu Naidu"

    • ஆந்திர மாநிலத்தில் அனைத்து பொருட்கள் விலை ஏற்றம் கண்டுள்ளது.
    • தரமான மதுபானங்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு விற்பனை செய்யவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் மதுப்பிரியர்களின் வாக்குகளை பெற தேர்தல் பிரசாரத்தில் மது விருந்துகளை கட்டுகிறது.

    தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தால் தரமான மது வழங்குவேன் என அறிவித்தார். இது மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது ஆந்திர மாநிலத்தில் அனைத்து பொருட்கள் விலை ஏற்றம் கண்டுள்ளது. அதுபோல மதுபானங்களின் விலையும் உயர்ந்துள்ளது.

    விலையை இருமடங்காக உயர்த்தினாலும் தரமான மதுபானங்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு விற்பனை செய்யவில்லை.

    ஆந்திர மாநிலத்தில் தெலுங்குதேசம் ஆட்சி அமைத்தால் தரமான மதுபானங்கள் மட்டுமின்றி குறைந்த விலையில் மதுபானங்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என உறுதி அளிக்கிறேன் என்றார்.

    சந்திரபாபு நாயுடுவின் இந்த அறிவிப்பு மதுப்பிரியர்களை மேலும் உற்சாகமடைய செய்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெயிலில் நடக்க முடியாமல் உதவித்தொகை பெற சென்ற 31 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.
    • 31 பேரின் மரணத்திற்கு காரணமான சந்திரபாபு நாயுடு தான் கொலையாளி.

    திருப்பதி:

    ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாநிலம் முழுவதும் பஸ் யாத்திரை சென்று பிரசாரம் செய்து வருகிறார்.

    காளஹஸ்தி அருகே உள்ள நாயுடு பேட்டையில் அவர் பேசியதாவது:-

    ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதி விடிந்தவுடன் தன்னார்வலர்கள் நேரடியாக வீடு வீடாக வந்து முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை வழங்கி வந்தனர். ஆனால் சந்திரபாபு நாயுடு தனது உறவினரான நிம்ம கட்டா ரமேஷ் மூலம் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து உதவித்தொகை வழங்குவதை தடுத்து நிறுத்தினார்.

    இதனால் வெயிலில் நடக்க முடியாமல் உதவித்தொகை பெற சென்ற 31 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர்.

    31 பேரின் மரணத்திற்கு காரணமான சந்திரபாபு நாயுடு தான் கொலையாளி. கொஞ்சம் ஏமாந்தால் சந்திரபாபு என்கிற சந்திரமுகி உங்கள் ரத்தம் குடிக்க வந்துவிடும் என்பதை நினைவு கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஜெகன்மோகன் ரெட்டியை சந்திரபாபு நாயுடு அரக்கன் என கொடூரமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதால் அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியது.

    இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை ரத்தம் குடிக்கும் சந்திரமுகி என பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்.
    • அவர் கூறிய கருத்துக்கள் தேர்தல் விதிகளை மீறியதாக இருந்ததாக தீர்மானிக்கப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது. இதனால் அங்கு தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது.

    ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் மற்றும் பாபட்லா தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில்:-

    ஜெகன் மோகன் ரெட்டி ஒரு அரக்கன் திருடன், விலங்கு, மக்களை காட்டிக் கொடுப்பவன் மற்றும் பொல்லாதவன் போன்ற சொற்களால் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். இது ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய செய்தது.

    இது குறித்து ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் லெல்லாஅப்பிரெட்டி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அப்போது சந்திரபாபு நாயுடு பேசிய ஆடியோவையும் வழங்கினார்.

    சந்திரபாபு நாயுடுவின் பேச்சு ஆய்வு செய்யப்பட்டது. அதில் அவர் கூறிய கருத்துக்கள் தேர்தல் விதிகளை மீறியதாக இருந்ததாக தீர்மானிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. 48 மணி நேரத்தில் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராயலசீமா அல்லது கொனசீமா இடங்களில் நாங்கள் எந்த பகுதிக்கு சென்றாலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது.
    • நாங்கள் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ஆந்திர மாநிலம் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று கோத்தபெட்டா கிராமத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ராயலசீமா அல்லது கொனசீமாவில் நாங்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது. நாங்கள் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    பசியுடன் உள்ள சிங்கம் வேட்டைக்கு காத்திருப்பது போல், இந்த தேர்தலில் அனைத்து துறையை சேர்ந்த மக்களும் இரண்டு பட்டன்களை அழுத்தி ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை தோற்கடிக்க மிகவும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    கொனசீமான என்பது அமைதியானது என்று அறியப்பட்டது. இதற்கு முன்னதாக இங்கு வன்முறை நிகழ்ந்தது கிடையாது. ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் தாக்குதல், நில அபகரிப்பு, பொய் வழக்கு, அட்டூழியங்கள் கமிஷன், ஜாதி அரசியல், மாபியா ராஜ்ஜியங்கள், கஞ்சா, அனைத்து வகையான ஊழல்கள் ஆகியவை அதிகரித்துள்ளது.

    ஜகன்மோகன் ரெட்டி அரசின் அட்டூழியங்களை நிறுத்துவதற்கு தெலுங்கு தேசம், ஜனசீனா மற்றும் பாரதிய ஜனதா இணைந்து மக்கள் முன் வந்துள்ளன.

    மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளது. அது மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும். ஏமாற்றப்பட்ட மாநிலத்தை காப்பாற்றி சரியான பாதையில் கொண்டு செல்வதே எங்களின் நோக்கம். அதே நோக்கத்தில் மூன்று அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன.

    இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • என்னை அரசியல் ரீதியாக துன்புறுத்தினார்கள். அரசியலுக்கு தொடர்பு இல்லாத என் மனைவியை சட்டசபையில் அவமானப்படுத்தினார்கள்.
    • மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரமும், ஆண்டிற்கு 3 கியாஸ் சிலிண்டர்களும் இலவசமாக வழங்கப்படும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு தனது சொந்த தொகுதியான குப்பத்தில் 2 நாட்கள் நேற்று தேர்தல் பிரசாரம் தொடங்கினார். குப்பம் தொகுதியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மகளிர் பிரிவு நிர்வாகிகளை சந்தித்தார்.

    ஜெகன்மோகன் ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. என்னை சட்ட விரோதமாக கைது செய்து துன்புறுத்தினர். இருப்பினும் நான் பயந்து ஓடவில்லை. எனக்கு பதவி முக்கியமில்லை. மாநில நலன் தான் முக்கியம்.

    தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும். மாநிலத்தின் நலனை பாதுகாப்பதற்காக தெலுங்கு தேசம், பா.ஜ.க. மற்றும் ஜனசேனா செயல் திட்டம் தீட்டி வருகிறது.

    மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினேன் வக்பு வாரிய சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டன உருது மொழியை 2-வது மொழியாக அறிவித்தேன்.

    ஆந்திராவில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் போதையில் இருப்பவர்கள் தாய் யார்? சகோதரி யார்? என தெரியாமல் நடந்து கொள்கின்றனர்.

    அந்திரி நிவா திட்டத்தின் மூலம் குப்பம் பகுதியில் உள்ள கிளை கால்வாய்கள் தூர்வாரப்படும். ஒவ்வொரு ஏக்கர் விவசாய நிலத்திற்கும் பாலாற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல வேண்டியது எனது பொறுப்பு.

    என்னை அரசியல் ரீதியாக துன்புறுத்தினார்கள். அரசியலுக்கு தொடர்பு இல்லாத என் மனைவியை சட்டசபையில் அவமானப்படுத்தினார்கள்.

    பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும். இதனால் ஆண்கள் நாற்காலிகளை தேட வேண்டும். எனது ஆட்சியில் பெண்களுக்கு சைக்கிள் வழங்கினேன். 30 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பு வழங்கினேன்.

    மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரமும், ஆண்டிற்கு 3 கியாஸ் சிலிண்டர்களும் இலவசமாக வழங்கப்படும்.

    ஜெகன்மோகன் ஆட்சியில் தரமற்ற மதுபானங்கள் விற்பனை செய்வதால் அதைக் குடித்துவிட்டு கணவன்கள் இறந்து விடுவதால் பெண்கள் தாலி கொடியை இழந்து வருகின்றனர்.

    எனது ஆட்சியில் ரூ.75-க்கு விற்கப்பட்ட மதுபானங்கள் ஜெகன்மோகன் ஆட்சியில் 2 மடங்காக விலை உயர்த்தப்பட்டது. தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்த பின்னர் குறைந்த விலையில் தரமான மதுபானங்கள், பீர்கள் விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    • டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.
    • நாட்டிற்கும், மாநிலத்திற்கும் வெற்றிகர சூழ்நிலையை உருவாக்கும் என்று தெரிவித்தார்.

    ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆந்திராவில் மொத்தம் 175 சட்டமன்ற தொகுதிகளும், 25 மக்களவை தொகுதிகளும் உள்ளன.

    வரும் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சி மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.

    கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, ஆந்திர பிரதேச மாநிலம் மோசமாக அழிக்கப்பட்டு இருப்பதாகவும், பா.ஜ.க. மற்றும் தெலுங்கு தேசம் கட்சி ஒன்றிணைந்து நாட்டிற்கும், மாநிலத்திற்கும் வெற்றிகர சூழ்நிலையை உருவாக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், ஆந்திர பிரதேச மாநிலத்தின் பாப்டாலா மாவட்டத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சந்திர பாபு நாயுடுவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தெலுங்கு தேசம் கட்சியின் சைக்கிள் துருப்பிடித்து விட்டதாக தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "தெலுங்கு தேசம் கட்சியின் துருப்பிடித்த சைக்கிள் செயின் சரியாக ஓடவில்லை. இதன் காரணமாக அவர் மத்திய கட்சிகளின் ஆதரவை நாடியுள்ளார். தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டணியை எதிர்த்து போட்டியிட நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பலவீன சமூகத்திற்கு ஆதரவாக நிற்கும்," என்று தெரிவித்தார்.

    • கடந்த மாதம் சந்திரபாபு நாயுடு டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
    • கூட்டணி அமைந்தால் 3 கட்சிகளும் பொதுவான தேர்தல் அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது.

    கடந்த மாதம் சந்திரபாபு நாயுடு டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா, பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

    ஆனால் தொகுதி உடன்பாட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் 175 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத் தேர்தலில் 99 வேட்பாளர்களின் பட்டியலை தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சிகள் அறிவித்தது.

    தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததால் பா.ஜ.க மாநிலத்தில் தனித்து போட்டியிடும் சூழ்நிலை உருவானது. அந்த கட்சியில் 2000 பேர் போட்டியிட விருப்ப மனு அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து நேற்று சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் டெல்லி சென்றனர். மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினர். அப்போது ஜே .பி. நட்டா உடனிருந்தார்.


    ஆந்திர மாநிலத்தில் திருப்பதி உள்பட 6 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பா.ஜ.க. தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால் 4 இடங்களை மட்டுமே தர முடியும் என சந்திரபாபு நாயுடு உறுதியாக இருந்தார்.

    இறுதியாக பா.ஜ.க.வுக்கு 5 பாராளுமன்ற தொகுதி ஒதுக்க சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார். ஆனால் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு மேல் வழங்க முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டார்.

    இதனால் நேற்று இரவு நடந்த பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. இன்று மீண்டும் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

    இதனால் ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் பா.ஜ.க. கூட்டணி இணைவது உறுதியாகி உள்ளது.

    கூட்டணி அமைந்தால் 3 கட்சிகளும் பொதுவான தேர்தல் அறிக்கையை வெளியிட திட்டமிட்டுள்ளது. திருப்பதி அல்லது அமராவதியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி அதில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்தனர்.

    • அரசியல்வாதியாக மாறிய நடிகர் புரிந்து கொள்ள வேண்டும்.
    • ஜெகன் மோகன் ரெட்டி மக்களின் அன்பையும் புகழையும் பெற்று முதல் மந்திரியாக ஆகிவிட்டார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா விசாகப்பட்டினத்தில் பேட்டி அளித்தார்.

    ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண் வருகிற தேர்தலில் வெற்றி பெற போவதில்லை என்பதை உணர்ந்து விரக்தியில் இருக்கிறார். சத்தம் போட்டு கத்தி கூச்சிலிடுவதால் ஓட்டு கிடைக்காது.

    இதனை அரசியல்வாதியாக மாறிய நடிகர் புரிந்து கொள்ள வேண்டும். பவன் கல்யாணின் விரக்தி அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் கூச்சல் போடும் அளவிற்கு சென்று விட்டது.

    அவரது தோல்விகளுக்கு தொண்டர்களை குறை கூறுவது வெட்கக்கேடானது.

    தற்போது பூத்துக் கமிட்டி இல்லாதது குறித்து அவர் பேசி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தார் என்று தெரியவில்லை. தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்காக பவன் கல்யாண் வேலை செய்து வருகிறார். முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பவன் கல்யாண் ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தங்கள் கட்சிகளை தோற்றுவித்தனர்.

    ஜெகன் மோகன் ரெட்டி மக்களின் அன்பையும் புகழையும் பெற்று முதல் மந்திரியாக ஆகிவிட்டார். ஆனால் பவன் கல்யாண் 2 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியவில்லை.

    ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியை மீண்டும் முதல் மந்திரியாக தேர்வு செய்ய மக்கள் தயாராக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜ.க.வுடன் தொகுதி ஒதுக்கீடு சமரசமாகவில்லை.
    • ஜனசேனா கட்சிக்கு 24 சட்டப் பேரவை தொகுதிகளும், 3 பாராளுமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.

    பா ஜனதா, தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா ஆகியவை கூட்டணி ஏற்படும் சூழ்நிலை உருவானது. தெலுங்கு தேசம் கூட்டணியில் 10 பாராளுமன்ற தொகுதிகள் 40 சட்டமன்ற தொகுதிகளை பா.ஜ.க. கேட்டு வருகிறது. ஆனால் பா.ஜ.க. மற்றும் பவன் கல்யாண் ஆகிய 2 கட்சிகளுக்கும் சேர்த்து 5 பாராளுமன்ற தொகுதிகள் 40 சட்டமன்ற தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என சந்திரபாபு நாயுடு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் கேட்ட தொகுதிகளை தர வேண்டும் என பா.ஜ.க அழுத்தம் கொடுத்தது.

    இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியும், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் 118 சட்டப்பேரவை தொகுதிகளில் கூட்டணியாக போட்டியிடுவதற்காக தொகுதி உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான அறிவிப்பை ஜனசேனா கட்சி தலைவர் பவன்கல்யாண், சந்திரபாபு நாயுடுவின் வீட்டில், இணைந்து வெளியிட்டனர். ஜனசேனா கட்சிக்கு 24 சட்டப் பேரவை தொகுதிகளும், 3 பாராளுமன்ற தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.


    பா.ஜ.க.வுடன் தொகுதி ஒதுக்கீடு சமரசமாகவில்லை. கேட்ட தொகுதிகளையும் பா.ஜ.க.வுக்கு சந்திரபாபு நாயுடு ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் மூலம் ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க.வை சந்திரபாபு நாயுடு திணற விட்டுள்ளார்.

    பா.ஜ.க கூட்டணிக்கு வராவிட்டால் மீதமுள்ள தொகுதிகளிலும் தெலுங்கு தேசம்-ஜனசேனா கூட்டணி கட்சியினரே வேட்பாளர்களை அறிவித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல் கட்டமாக தெலுங்கு தேசம் கட்சி 94 வேட்பாளர்ளையும், ஜனசேனா வேட்பாளர்களையும் 5 வேட்பாளர்களையும் அறிவித்து உள்ளது.

    குப்பம் தொகுதியில் மீண்டும் சந்திரபாபுநாயுடு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வெளியிட்ட பட்டியலின்படி சந்திரபாபுநாயுடு குப்பம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். நகரியில் அமைச்சர் ரோஜாவை எதிர்த்து முன்னாள் எம்.எல்.சி காளி முத்துகிருஷ்ணம்மா மகன் பானுபிரகாஷ், பலமனேரில் முன்னாள் அமைச்சர் அமர்நாத்தும், சித்தூரில் குருஜால ஜெகன்மோகன், கங்காதர நெல்லூரில் வி.என்.தாமஸ் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    • 175 இடங்களில் 151 இடங்களில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி போட்டி.
    • 24 இடங்களில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டியிடுகிறது.

    ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் சேர்த்து நடத்தப்பட இருக்கிறது. ஆந்திர மாநில முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இருந்து வருகிறார்.

    அவரை வீழ்த்துவதற்கு சந்திரபாபு நாயுடு முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்காக பவன் கல்யாண் கட்சியான ஜனசேனா உடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தார். இது தொடர்பாக தெலுங்குதேசம்- ஜனசேனா கட்சிகள் இடையே பேச்சவார்த்தை நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 175 சட்டமன்ற இடங்களில் 151 இடங்களில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடவும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 24 இடங்களிலும் போட்டியிடவும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

    அத்துடன் சந்திரபாபு நாயுடு- பவன் கல்யாண் கட்சிகள் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.

    சந்திரபாபு நாயுடு 94 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதேவேளையில் பவன் கல்யாண் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார்.

    மக்களவை தேர்தலில் பவன் கல்யாண் கட்சி சந்திரபாபு நாயுடு கூட்டணியல் 3 இடங்களில் போட்டியிடுகிறது.

    • ஜெகன்மோகன் ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் தெலுங்கு தேசம் பா.ஜ.க., ஜனசேனா கட்சி கூட்டணி கட்டாயம் தேவைபடுவதாகவும் தெரிவித்தார்.
    • சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள 10 தொகுதிகள் பட்டியலை வழங்கியுள்ளார்.

    ஆந்திரா முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

    மத்திய மந்திரி அமித்ஷா அழைப்பின் பேரில் சென்ற சந்திரபாபு நாயுடு நேற்று இரவு அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இவர்களின் சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் நடந்தது.

    அப்போது நாடு மற்றும் மாநிலத்தின் நலனை கருதி சந்திரபாபு நாயுடுவை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர அமித்ஷா அழைப்பு விடுத்தார்.

    ஆந்திராவில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் தெலுங்கு தேசம் பா.ஜ.க., ஜனசேனா கட்சி கூட்டணி கட்டாயம் தேவைபடுவதாகவும் தெரிவித்தார்.

    அப்போது ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் திருப்பதி, ராஜ மகேந்திரபுரம் உள்ளிட்ட 7 தொகுதிகளை பா.ஜ.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள 10 தொகுதிகள் பட்டியலை வழங்கியுள்ளார்.

    ஆந்திராவில் வரும் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என நிலை உள்ளதால் பா.ஜ.க. கூட்டணிக்கு சந்திரபாபு நாயுடு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவையும் அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

    ஆந்திராவில் ஒய்.எஸ். ஆர். காங்கிரஸுக்கு எதிராக தெலுங்கு தேசம் பா.ஜ.க.-பவன்கல்யானின் ஜனசேனா என வலுவான கூட்டணி அமைய உள்ளதால் ஆந்திர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திராவில் தலைநகர் இதுவரை முடிவாகவில்லை.
    • ஆந்திர மாநில மக்களின் தலைநகர கனவு நினைவாக தவறிவிட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் தெலுங்கானா, ஆந்திரா என இரண்டாக பிரிக்கப்பட்டது. அப்போது ஆட்சியில் இருந்த சந்திரபாபு நாயுடு அமராவதியை ஆந்திராவின் தலைநகராக அறிவித்தார்.

    அடுத்து ஆட்சிக்கு வந்த முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவிற்கு 3 தலை நகரங்கள் என அறிவித்தார். கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திராவில் தலைநகர் இதுவரை முடிவாகவில்லை.


    இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி சிந்தா மோகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அமராவதி தலைநகராக அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் ஆட்சிக்கு வந்த முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி 3 தலை நகரங்களை அறிவித்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்தினார். இதனால் ஆந்திர மாநில மக்களின் தலைநகர கனவு நினைவாக தவறிவிட்டது.

    காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பொதுமக்கள் இடையே வாக்கெடுப்பு நடத்தி திருப்பதியை தலைநகராக மாற்றுவோம் என்றார்.

    ×