search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

    • தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்.
    • அவர் கூறிய கருத்துக்கள் தேர்தல் விதிகளை மீறியதாக இருந்ததாக தீர்மானிக்கப்பட்டது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடக்கிறது. இதனால் அங்கு தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது.

    ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் மற்றும் பாபட்லா தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில்:-

    ஜெகன் மோகன் ரெட்டி ஒரு அரக்கன் திருடன், விலங்கு, மக்களை காட்டிக் கொடுப்பவன் மற்றும் பொல்லாதவன் போன்ற சொற்களால் இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி பேசினார். இது ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய செய்தது.

    இது குறித்து ஒய். எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் லெல்லாஅப்பிரெட்டி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார். அப்போது சந்திரபாபு நாயுடு பேசிய ஆடியோவையும் வழங்கினார்.

    சந்திரபாபு நாயுடுவின் பேச்சு ஆய்வு செய்யப்பட்டது. அதில் அவர் கூறிய கருத்துக்கள் தேர்தல் விதிகளை மீறியதாக இருந்ததாக தீர்மானிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடுவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. 48 மணி நேரத்தில் அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×