என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மது விலை"
- ஆந்திர மாநிலத்தில் அனைத்து பொருட்கள் விலை ஏற்றம் கண்டுள்ளது.
- தரமான மதுபானங்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு விற்பனை செய்யவில்லை.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் மதுப்பிரியர்களின் வாக்குகளை பெற தேர்தல் பிரசாரத்தில் மது விருந்துகளை கட்டுகிறது.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தால் தரமான மது வழங்குவேன் என அறிவித்தார். இது மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது ஆந்திர மாநிலத்தில் அனைத்து பொருட்கள் விலை ஏற்றம் கண்டுள்ளது. அதுபோல மதுபானங்களின் விலையும் உயர்ந்துள்ளது.
விலையை இருமடங்காக உயர்த்தினாலும் தரமான மதுபானங்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு விற்பனை செய்யவில்லை.
ஆந்திர மாநிலத்தில் தெலுங்குதேசம் ஆட்சி அமைத்தால் தரமான மதுபானங்கள் மட்டுமின்றி குறைந்த விலையில் மதுபானங்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என உறுதி அளிக்கிறேன் என்றார்.
சந்திரபாபு நாயுடுவின் இந்த அறிவிப்பு மதுப்பிரியர்களை மேலும் உற்சாகமடைய செய்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்