என் மலர்
நீங்கள் தேடியது "Liquor price"
- ஆந்திர மாநிலத்தில் அனைத்து பொருட்கள் விலை ஏற்றம் கண்டுள்ளது.
- தரமான மதுபானங்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு விற்பனை செய்யவில்லை.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் மதுப்பிரியர்களின் வாக்குகளை பெற தேர்தல் பிரசாரத்தில் மது விருந்துகளை கட்டுகிறது.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தால் தரமான மது வழங்குவேன் என அறிவித்தார். இது மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது ஆந்திர மாநிலத்தில் அனைத்து பொருட்கள் விலை ஏற்றம் கண்டுள்ளது. அதுபோல மதுபானங்களின் விலையும் உயர்ந்துள்ளது.
விலையை இருமடங்காக உயர்த்தினாலும் தரமான மதுபானங்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு விற்பனை செய்யவில்லை.
ஆந்திர மாநிலத்தில் தெலுங்குதேசம் ஆட்சி அமைத்தால் தரமான மதுபானங்கள் மட்டுமின்றி குறைந்த விலையில் மதுபானங்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என உறுதி அளிக்கிறேன் என்றார்.
சந்திரபாபு நாயுடுவின் இந்த அறிவிப்பு மதுப்பிரியர்களை மேலும் உற்சாகமடைய செய்துள்ளது.
- அரசின் வருமானத்தை உயர்த்தி, செலவினை சமாளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
- அடுத்த நிதி ஆண்டிற்கான பட்ஜெட் முன் தயாரிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் கூடியது.
கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ. ஜெயக்குமார், திருமுருகன், சாய் ஜெ சரவணன்குமார், தலைமைச் செயலர் சரத் சவுகான், அரசு செயலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதுச்சேரியில் நலத்திட்டங்களுக்கு அதிகரித்து வரும் நிதி சுமை, அதனை சமாளிப்பதற்கான வழிமுறைகள் குறித்து நீண்ட நேரமாக விவாதிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து அரசின் வருமானத்தை உயர்த்தி, செலவினை சமாளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
குறிப்பாக புதிதாக மதுபானக்கடைகள் உரிமம் தருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மதுபான உரிம கட்டணத்தையும், கலால் வரியையும் உயர்த்துவது குறித்தும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் 10 ஆண்டுகளுக்கு மேலாக உய்ர்த்தப்படாத நில வழிகாட்டி மதிப்பையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. அதேபோல் கூட்டுறவு சர்க்கரை ஆலை பள்ளியை கல்வித்துறையுடன் இணைத்தல் உள்ளிட்ட விஷயங்களும் விவாதித்து முடிவு எடுக்கப்பட்டது.
அடுத்த நிதி ஆண்டிற்கான பட்ஜெட் முன் தயாரிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரூ.13 ஆயிரம் கோடிக்கு மேல் புதுச்சேரி அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. இருப்பினும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த கூடுதல் நிதி தேவைப்படுகிறது.
எனவே சொந்த வருவாயை அதிகரிக்க முடிவு செய்து, அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 3-வது வாரத்தில் மாநில திட்ட குழு கூட்டம் கூட உள்ள சூழ்நிலையில் மாநில வருவாயை பொறுத்து, பட்ஜெட்டிற்கு இறுதி வடிவம் கொடுத்து, மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.
- மதுபான விலை குறைக்கப்பட்டதற்கான லேபில்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
- விலையை குறைக்க நிறுவனங்கள் போட்டி போட்டு வரிந்து கட்டிக்கொண்டு வருகின்றன.
திருப்பதி:
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்த பிறகு மதுபான விலையை குறைத்து மதுபாட்டில்கள் மீதான வரியை ரத்து செய்தார். இதனால் மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்கள் ஏற்கனவே 10 பிராண்டுகளின் விலையை குறைத்தது. ரூ.99-க்கு மது கிடைக்கிறது.
கடந்த 2 மாதங்களில் 16 நிறுவனங்கள் தங்களது மதுபானங்களின் விலையை குறைக்க அரசிடம் விண்ணப்பித்து உள்ளன. மதுபான விலையை குறைக்கப்பட்ட 10 நிறுவனங்களின் மதுபானங்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. இதனால் மதுபான நிறுவனங்களின் இடையே வியாபாரப் போட்டி அதிகரித்து வருகிறது. விலையை குறைக்க நிறுவனங்கள் போட்டி போட்டு வரிந்து கட்டிக்கொண்டு வருகின்றன.
இதுகுறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. மேலும் மதுபான விலை குறைக்கப்பட்டதற்கான லேபில்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தங்களது நிறுவனங்களின் மதுபாட்டில் விலையை குறைக்க நிறுவனங்கள் போட்டி போட்டு அரசிடம் மனு செய்வது இந்தியாவில் இதுவே முதல் முறை என அதிகாரிகள் தெரிவித்தனர். பல மாநிலங்களில் ஆண்டுதோறும் மதுபான விலையை கணிசமாக உயர்த்தி வரும் நிலையில் ஆந்திராவில் மதுபானங்கள் விலை படிப்படியாக குறைக்கப்படுவது மது பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






