search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Liquor price"

    • ஆந்திர மாநிலத்தில் அனைத்து பொருட்கள் விலை ஏற்றம் கண்டுள்ளது.
    • தரமான மதுபானங்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு விற்பனை செய்யவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் மதுப்பிரியர்களின் வாக்குகளை பெற தேர்தல் பிரசாரத்தில் மது விருந்துகளை கட்டுகிறது.

    தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தால் தரமான மது வழங்குவேன் என அறிவித்தார். இது மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் சந்திரபாபு நாயுடு குப்பம் தொகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது ஆந்திர மாநிலத்தில் அனைத்து பொருட்கள் விலை ஏற்றம் கண்டுள்ளது. அதுபோல மதுபானங்களின் விலையும் உயர்ந்துள்ளது.

    விலையை இருமடங்காக உயர்த்தினாலும் தரமான மதுபானங்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு விற்பனை செய்யவில்லை.

    ஆந்திர மாநிலத்தில் தெலுங்குதேசம் ஆட்சி அமைத்தால் தரமான மதுபானங்கள் மட்டுமின்றி குறைந்த விலையில் மதுபானங்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என உறுதி அளிக்கிறேன் என்றார்.

    சந்திரபாபு நாயுடுவின் இந்த அறிவிப்பு மதுப்பிரியர்களை மேலும் உற்சாகமடைய செய்துள்ளது.

    ×