search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பசியுடன் உள்ள சிங்கம் வேட்டைக்கு காத்திருப்பது போல் காத்திருக்கும் மக்கள்: சந்திரபாபு நாயுடு
    X

    பசியுடன் உள்ள சிங்கம் வேட்டைக்கு காத்திருப்பது போல் காத்திருக்கும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

    • ராயலசீமா அல்லது கொனசீமா இடங்களில் நாங்கள் எந்த பகுதிக்கு சென்றாலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது.
    • நாங்கள் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ஆந்திர மாநிலம் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று கோத்தபெட்டா கிராமத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ராயலசீமா அல்லது கொனசீமாவில் நாங்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது. நாங்கள் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    பசியுடன் உள்ள சிங்கம் வேட்டைக்கு காத்திருப்பது போல், இந்த தேர்தலில் அனைத்து துறையை சேர்ந்த மக்களும் இரண்டு பட்டன்களை அழுத்தி ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை தோற்கடிக்க மிகவும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    கொனசீமான என்பது அமைதியானது என்று அறியப்பட்டது. இதற்கு முன்னதாக இங்கு வன்முறை நிகழ்ந்தது கிடையாது. ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் தாக்குதல், நில அபகரிப்பு, பொய் வழக்கு, அட்டூழியங்கள் கமிஷன், ஜாதி அரசியல், மாபியா ராஜ்ஜியங்கள், கஞ்சா, அனைத்து வகையான ஊழல்கள் ஆகியவை அதிகரித்துள்ளது.

    ஜகன்மோகன் ரெட்டி அரசின் அட்டூழியங்களை நிறுத்துவதற்கு தெலுங்கு தேசம், ஜனசீனா மற்றும் பாரதிய ஜனதா இணைந்து மக்கள் முன் வந்துள்ளன.

    மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளது. அது மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும். ஏமாற்றப்பட்ட மாநிலத்தை காப்பாற்றி சரியான பாதையில் கொண்டு செல்வதே எங்களின் நோக்கம். அதே நோக்கத்தில் மூன்று அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன.

    இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

    Next Story
    ×