search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bus"

    • கூட்ட நெரிசலில் சிக்கும் சிறுவர்களை பாதுகாப்பு படையினரும், தன்னார்வ தொண்டர்களும் மீட்டு எளிதாக சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கின்றனர்.
    • மகரவிளக்கு பூஜை நெருங்குவதால் மலை ஏறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த படியே இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 30-ந்தேதி திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளில் இருந்தே, சபரிமலைக்கு தினமும் ஆயிரக்கணக்காக பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

    மண்டல பூஜை காலத்தில் இருந்ததைப்போன்றே, தற்போதும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருக்கிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக கேரள ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு செய்திருக்கிறது.

    இருந்தபோதிலும் பக்தர்கள் அதிகளவில் வருவதால் சாமி தரிசனத்துக்கு 10மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருக்கிறது. பம்பை, மரக்கூட்டம், பதினெட்டாம்படி, நடைப்பந்தல், சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

    இதனால் வயதான பக்தர்களும், சிறுவர்-சிறுமிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கூட்ட நெரிசலில் சிக்கும் சிறுவர்களை பாதுகாப்பு படையினரும், தன்னார்வ தொண்டர்களும் மீட்டு எளிதாக சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கின்றனர்.

    பூஜைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதாலும், 10-ந்தேதிக்கு பிறகு உடனடி முன்பதிவு நிறுத்தம் மற்றும் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர இருப்பதால் சபரிமலைக்கு தற்போது அதிகளவில் பக்தர்கள் வருகிறார்கள்.


    இதனால் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பக்தர்கள் பல இடங்களில் வெகுநேரம் காத்து நிற்க வேண்டியிருக்கிறது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் பிஸ்கெட்டுகளை தேவசம்போர்டு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வழங்குகின்றனர்.

    மகரவிளக்கு பூஜை நெருங்குவதால் மலை ஏறுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த படியே இருக்கிறது. பம்பையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு நடைபயணத்தை மேற்கொள்ளும் நிலையில், பெருவழிப்பாதை வழியாகவும் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர்.

    இதன் காரணமாக பம்பையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.சாமி தரிசனம் முடிந்து பக்தர்கள் அதிகளவில் மலையிறங்கிய போதிலும், சன்னிதான பகுதியில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையிலேயே இருக்கிறது.

    சன்னிதான பகுதியில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது. அரவணை உள்ளிட்ட பிரசாதம் வழங்கும் கவுண்டர்களில் எப்போது பார்த்தாலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று வாங்கிச் செல்கிறார்கள். எங்கும் கூட்ட நெரிசல ஏற்படாமல் இருக்க அனைத்து இடங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மண்டல பூஜை காலத்தின் போது நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்பட்டதுகூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு ஒரு காரணமாக கூறப்பட்டது. இதனால் சபரிமலைக்கு பக்தர்கள் சிரமமின்றி வருவதற்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    மகரவிளக்கு பூஜைக்காக மாநிலம் முழுவதும் 800 பஸ்கள் இயக்கப்படும் என்று கேரள மாநில போக்குவரத்து துறை மந்திரி கணேஷ்குமார் தெரிவித்துள்ளார். அவர் நிலக்கல் மற்றும் பம்பை உள்ளிட்ட இடங்களுககு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    பக்தர்கள் வருகைக்கு தகுந்தாற்போல் பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    • படிக்கட்டு பயணத்தின் போது மாணவர்கள் கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.
    • பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட போக்குவரத்து பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் படிக் கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிப் போய்விட்டது.

    சென்னை போன்ற பெரு நகரங்களில் மாணவர்களின் படிக்கட்டு பயணம் அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகவே மாறிப்போய் இருக்கிறது. இதுபோன்ற ஆபத்தான பயணங்களை தடுப்ப தற்கு போலீசாரும் போக்கு வரத்து அதிகாரிகளும் எவ்வளவோ முயற்சி செய் தும் படிக்கட்டு பயணத்தை மாணவர்கள் கை விடுவதாக இல்லை.

    இதனால் படிக்கட்டு பயணத்தின் போது மாணவர்கள் கீழே விழுந்து உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் மாணவர்களின் படிக்கட்டு பயணத்துக்கு கடிவாளம் போடும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

    பஸ்சின் பின்பக்க வாசலில் உள்ள படிக்கட்டில் தொங்கிய படியேதான் மாணவர்கள் பயணம் மேற்கொள்வார்கள். அருகிலுள்ள ஜன்னல் கம்பிகளை கையால் பிடித்துக் கொண்டு உயிரை பனையம் வைத்து அவர்கள் பயணம் மேற் கொள்வது வழக்கம். இதனை தடுக்கும் வகையில் படிக்கட்டு அருகில் ஜன்னல் கம்பிகள் வெளியில் தெரியாத அளவுக்கு மூடுவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன்படி மாணவர்கள் பிடித்து தொங்கும் படிக்கட்டு அருகில் உள்ள 2 ஜன்னல் களையும் இரும்பு தகரம் கொண்டு மூடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதற்கான பணி களை காஞ்சிபுரம் மாவட்ட போக்குவரத்து பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மண்டலத்துக்குட்பட்ட ஒரிக்கை, மதுராந்தகம், செங்கல்பட்டு, உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் ஓடுகின்றன. இதில் 140 பஸ்கள் மாநகர பேருந்துகளாகும். உள்ளூர்களில் இயக்கப்படும் இந்த பஸ்கள் அனைத்திலும் இரும்பு தகடுகள் பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    தற்போது வரையில் 47 பஸ்களில் முழுமையாக இரும்பு தகடுகள் அமைக்கப்பட்டு மாணவர்களின் படிக்கட்டு பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    மற்ற போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கும் முன்மாதிரியாக காஞ்சிபுரம் மாவட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மேற்கொண்டுள்ள இந்த நடவ டிக்கை பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது.

    தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இதனை செயல்படுத்தி மாணவர்களின் படிக்கட்டு பயணத்துக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

    • ஆத்திரமடைந்த அசிம்கான் கண்டக்டரிடம் தகராறு செய்தார். பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம், அடி சுந்தரவாடா பஸ் நிலையத்தில் இருந்து உட்னூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சில் கான் என்ற கண்டக்டர் பணியில் இருந்தார்.

    அப்போது அன்ஸ்னாபூரை சேர்ந்த அசிம் கான் என்பவர் பஸ்சில் ஏறினார். அவர் கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கினார். பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அசிம்கானுக்கு சீட் கிடைக்கவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த அசிம்கான் கண்டக்டரிடம் தகராறு செய்தார். பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார்.

    இதையடுத்து கண்டக்டர் பணத்தை திருப்பி கொடுத்து அசின் கானை பஸ்சிலிருந்து கீழே இறக்கினார்.

    அப்போது அசிம் கான் கண்டக்டரை தாக்கினார். அவரை கீழே தள்ளி கன்னத்தைக் கடித்து துப்பினார்.

    இதில் கண்டக்டரின் கன்னத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. இதனைக் கண்டு பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    அசிம் கானை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் பஸ்சின் கண்ணாடியையும் உடைத்துவிட்டு அந்த கும்பல் தப்பிச்சென்றது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து சங்கரன்கோவிலுக்கு வீ.கே.புதூர் வழியாகவும், அகரம் வழியாகவும் 2 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    நேற்று மதியம் ஆலங்குளத்தில் இருந்து வீ.கே.புதூர் வழியாக செல்லும் பஸ்சில் ஒரு பெண்ணை ஏற்றி விட்டு அகரம் வழியாக செல்ல வேண்டும் என்று ஒரு நபர் கூறியுள்ளார். ஆனால் அந்த பஸ் அந்த வழியாக செல்லாது என கண்டக்டர் தெரிவித்தவுடன் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே பஸ் பயணிகள் சமாதானம் செய்து 2 பேரையும் அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் மாலையில் அந்த பஸ் சங்கரன்கோவிலுக்கு சென்றபோது வீராணம் பஸ் நிறுத்தத்தில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கும்பல் சேர்ந்து அதனை மறித்து பஸ் கண்ணாடியை அரிவாளால் உடைத்து பயணிகளை மிரட்டி தப்பி சென்றனர்.

    அப்போது எதிரே ஆலங்குளம் நோக்கி வந்த மற்றொரு தனியார் பஸ்சின் கண்ணாடியையும் உடைத்துவிட்டு அந்த கும்பல் தப்பிச்சென்றது. இதில் கண்டக்டர் மகேஷ்குமாருக்கு(வயது 37) தலையில் காயம் ஏற்பட்டது. அவர் வீ.கே.புதூர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    பகலில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர் தனது கூட்டாளிகளுடன் வந்து பஸ் கண்ணாடியை உடைத்து இருக்கலாமா என்ற கோணத்தில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2700 பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
    • 450 பேருந்துகள் மட்டுமே ஒரு சில வழித்தடங்களில் இயக்கப்பட்டன.

    சென்னை:

    கனமழை வெளுத்து வாங்கி வருவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பஸ் சேவை முற்றிலும் பாதித்தன. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 620 வழித் தடங்களில் பஸ்கள் இயக்கப்படும்.

    ஆனால் இடைவிடாது பெய்த கனமழையால் சுரங்கப் பாதை, முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் பஸ்களை இயக்க முடியவில்லை.

    450 பேருந்துகள் மட்டுமே ஒரு சில வழித்தடங்களில் இயக்கப்பட்டன. 2700 பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அனைத்து டெப்போகளிலும் பஸ்களை எடுக்க முடியவில்லை.

    மேலும் டிரைவர்கள், கண்டக்டர்கள் பணிக்கு வர முடியவில்லை. இரு சக்கர வாகனத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பெரும்பாலான போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டது.

    பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்தது. மக்கள் வீடுகளில் முடங்கியதால் பஸ் போக்குவரத்தும் குறைக்கப்பட்டது.

    பஸ் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டதால் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடக்கூடிய ஊழியர்கள் பணிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. குறைவான அளவில் இயக்கப்பட்ட பஸ்களிலும் மிக குறைந்த அளவிலேயே பயணிகள் பயணம் செய்தனர்.

    • பேருந்தில் இருந்து இறங்கிய சிறுமி லயா பேருந்தின் பின்புறமாக நடந்து சென்றுள்ளார்.
    • தப்பியோடிய ஓட்டுனர் தியாகராஜனை போலீசார் தேடி வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தனியார் பள்ளி பேருந்தில் சிக்கி எல்கேஜி படிக்கும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    நீலகிரி மாவட்டம் கூக்கல்தொரை பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கிய சிறுமி லயா பேருந்தின் பின்புறமாக நடந்து சென்றுள்ளார்.

    அதனை அறியாத ஓட்டுநர் பேருந்தை பின்புறமாக இயக்கிபோது டயரில் சிக்கி சிறுமி உயிரிழந்தார்.

    சிறுமியின் உடலை மீட்ட கோத்தகிரி போலீசார், தப்பியோடிய ஓட்டுனர் தியாகராஜனை தேடி வருகின்றனர்.

    • வேலை காரணமாக தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார்.
    • பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடசேரி கிராமத்தை சேர்ந்தவர் கபில்தேவ் (வயது 36).

    இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று வேலை விஷயமாக தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார்.

    அப்போது அவர் டவுன் பஸ் நிற்கும் மார்க்கத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அந்த நேரத்தில் பஸ் நிலையத்திற்குள் தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    அந்த பஸ் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக கபில்தேவ் மீது மோதியது.

    இதில் பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசங்கி கபில்தேவ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கபில்தேவ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயணிகள் வசதிக்காக திருச்சி மண்டலத்தில் 250 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது
    • போக்குவரத்து பணியாளர் விடுமுறை இன்றி பணியாற்றி வருகிறார்கள்

    திருச்சி,

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக தமிழக அரசு கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிடெட் சார்பில் பொதுமக்கள் சிரமின்றி செல்வதற்காக கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களில்13, 14, 15 ஆகிய தேதிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேற்கண்ட முக்கிய இடங்களில் இருந்து சென்னைக்கும், பிற இடங்களுக்கும 250 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக போக்குவரத்து பணியாளர் விடுமுறை இன்றி பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • லாரியின் டீசல் டேங்க் உடைந்து சாலையில் டீசல் ஓடியது.
    • இதில் பஸ்ஸின் முன் பகுதி சேதமடைந்தது.

    வல்லம்:

    புதுக்கோட்டையில் இருந்து தஞ்சை நோக்கி இன்று காலை அரசு பஸ் புறப்பட்டது. பஸ்ஸில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அந்த பஸ் திருக்கானூர்பட்டி அருகே வல்லம் - ஒரத்தநாடு 4 வழி சாலையில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது திருச்சி நோக்கி பார்சல் லாரி ஒன்று வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ்சும் லாரியும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இதில் லாரி ரோட்டில் கவிழ்ந்தது.

    லாரியில் இருந்த பார்சல்கள் சாலையில் சிதறியது. மேலும் லாரியின் டீசல் டேங்க் உடைந்து சாலையில் டீசல் ஓடியது.

    அதே போல் லாரி மீது மோதிய அரசு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் பக்கவாட்டில் இருந்த சுவற்றில் மோதி நின்றது. இதில் பஸ்ஸின் முன் பகுதி சேதமடைந்தது.

    இதில் அரசு பஸ் டிரைவர் வினோதன், கண்டக்டர் கார்த்திகேயன் மற்றும் 5 பயணிகள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ப்பட்டது. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகி ன்றனர். இந்த விப த்தால் அந்த பகுதியில் போக்கு வ ரத்து பாதிக்க ப்பட்டது.

    • இசக்கிபாண்டி பாளையில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • பஸ் டிரைவர்களின் அலட்சி யத்தினால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட்டு விடுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்கு நேரி அருகே உள்ள அ.சாத்தான்குளம் கிராமம் பிள்ளை யார்கோவில் தெருவை சேர்ந்த வர் ராமச்சந்திரன். இவரது மகன் இசக்கிபாண்டி(வயது 13).

    8-ம் வகுப்பு மாணவன்

    இவர் பாளையில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் அவர் ஊரில் இருந்து நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு பஸ்சில் வந்து, அங்கிருந்து மாநகர பஸ்சில் ஏறி பள்ளிக்கு செல்வது வழக்கம். நேற்றும் பள்ளிக்கு வந்த இசக்கிபாண்டி, மாலையில் வீட்டுக்கு புறப்பட்டான்.

    புதிய பஸ் நிலையத்தில் இருந்து அவரது ஊருக்கு செல்லும் பஸ்சை பிடிக்க வேண்டும் என்பதற்காக இசக்கி பாண்டி அவசரமாக பள்ளிக்கு வெளியே வந்துள்ளான். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சில் மாணவர்கள் கூட்டம் இருந்த நிலையில், வேறு வழியின்றி மாணவன் அந்த பஸ்சில் ஏறி படிக்கட்டில் நின்றபடி பயணித்துள்ளார்.

    படுகாயம்

    அப்போது பாளை பஸ் நிலையத்திற்கு முன்பாக நூலகம் நிறுத்தம் பகுதியில் பஸ் வந்தபோது எதிர்பாராத விதமாக இசக்கிபாண்டி பஸ்சில் இருந்து கீழே விழுந்தான். இதில் இசக்கி பாண்டியின் ஆசனவாய் பகுதி 2 ஆக கிழிந்து படுகாயம் அடைந்தார். உடனே பஸ் பயணிகள் பஸ்சை நிறுத்துமாறு கூச்சலிட்டனர்.

    பின்னர் படுகாயம் அடைந்த இசக்கிபாண்டியை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ்சை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சமீப காலமாக மாநகர பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு பள்ளி முடிந்து செல்லும் மாணவர்கள் பஸ் இல்லாததால் கூட்டம் மிகுந்த பஸ்களில் பயணிக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. ஆனால் பஸ் டிரைவர்களின் அலட்சி யத்தினால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட்டு விடுகிறது என சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.

    நெல்லை டவுன் சாப்டர் பள்ளியில் இருந்து சேரன்மகா தேவி சுற்றுவட்டாரங்களுக்கு செல்லும் மாணவர்கள் மாலையில் வீடு திரும்பும்போது இதே நிலைக்கு தான் தள்ளப்படு கிறார்கள். நேற்று கூட அந்த பள்ளி மாணவர்களை முறையாக நிறுத்தி பஸ்சில் ஏற்றி செல்லாமல் டிரைவர் அவசரமாக பஸ்சை எடுத்து சென்றதால் மாணவர்கள் தவறி விழுந்த வீடியோ காட்சி கள் வைரலாகி வருகிறது.

    இந்த நிலையில் மற்றொரு பள்ளி மாணவர் படுகாயம் அடைந்துள்ளார்.

    எனவே பள்ளி விடும் நேரங்களில் கிராமப்புறங்க ளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி யிலும் பணியாற்றும் ஆசிரிய ர்கள், பஸ்சில் மாணவர்களை பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டும். டிரைவர்கள் முறையாக நின்று மாணவர்களை ஏற்றி செல்ல அறிவுறுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வ லர்கள் வலியுறுத்துகின்றனர்.

    நேரம் தொடர்பான பிரச்சினை: துறையூரில் நடுரோட்டில் பஸ்சை நிறுத்திய மினி பஸ் டிரைவரால் பரபரப்பு

    துறையூர்,  

    திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் இருந்து கீரம்பூர் மார்க்கத்தில் 2 தனியார் மினி பஸ்கள் 10 நிமிட இடைவெளியில் புறப்பட்டு செல்கிறது. இந்த 2 பஸ்களுக்கிடையே நேரம் தொடர்பாக அடிக்கடி சண்டை ஏற்படுவதும், பின்னர் இரு தரப்பினரும் மாறி,மாறி காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, சமரசமாக செல்வதும் வழக்கம்.

    இந்த நிலையில் நேற்றும் வழக்கம் போல் இந்த இரு பஸ்களுக்கு இடையே நேரம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு மினி பஸ் டிரைவர் பஸ்சினை துறையூர் - திருச்சி பிரதான சாலையில் எதிர் திசையில் நிறுத்தினார். பின்னர் 2 டிரைவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த வழியாக போக்குவரத்து கடுமையாக பாதித்தடு. பள்ளி, கல்லூரி வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளிட்டவை சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு நீண்ட வரிசையில் நின்றன. சம்பவ இடத்திற்கு போக்குவரத்து போலீசார் வந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்ய எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துறையூரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் வகையில்,புதிதாக போக்குவரத்து காவல் நிலையம் அமைக்கப்பட்டு காவலர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் போக்குவரத்து போலீசார் காலை, மாலை ஆகிய இரு நேரங்களில் நகரப் பகுதிகளில் சரக்குகளை இறக்க வரும் வாகனங்களை கண்டுகொள்ளாததாலும், கடும் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது.

    மேலும் துறையூர் பகுதியில் இயங்கும் ஒரு சில தனியார் மினி பஸ்கள் உரிய வழித்தடங்களில் இயங்காமல், அவர்களுடைய இஷ்டத்திற்கு தகுந்தற்போல் பல்வேறு வழித்தடங்களில் இயக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு,விபத்தும் ஏற்படுகிறது. இதனை போக்குவரத்து ஆணையரகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார போக்குவரத்து அலுவலர்களும் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    ஆகவே இனி வரும் காலங்களில் துறையூர் நகர பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீசார் உரிய முறையில் ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் துறையூர் பகுதியில் அனுமதி பெறாமலும் மற்றும் அனுமதி பெற்று உரிய வழித்தடங்களில் இயங்காத மினி பஸ்களின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் துறையூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி வரை தினமும் காலை, மாலையில் இயக்கப்படும் என அறிவிப்பு
    • புலிகள் காப்பக துணை களஇயக்குநா் வித்யா போக்குவரத்தை தொடங்கி வைத்தாா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள பழங்குடி கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள் பள்ளிக்கு சென்றுவர தெப்பக்காடு சூழல் மேம்பாட்டுக்குழு சாா்பில் புதிய பஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதனை புலிகள் காப்பக துணை கள இயக்குநா் வித்யா தொடங்கி வைத்தாா்.

    நிகழ்ச்சியில் வனச்சரக ஊழியர்கள், பழங்குடி மக்கள், கூடலூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கீா்த்தனா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

    பழங்குடி மாணவா்கள் பள்ளிக்கு சென்று வீடு திரும்ப வசதியாக,தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி வரை மேற்கண்ட பஸ் தினமும் காலை, மாலையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×