search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    250 கூடுதல் பேருந்துகள்  இயக்கம்
    X

    250 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

    • பயணிகள் வசதிக்காக திருச்சி மண்டலத்தில் 250 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது
    • போக்குவரத்து பணியாளர் விடுமுறை இன்றி பணியாற்றி வருகிறார்கள்

    திருச்சி,

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக தமிழக அரசு கூடுதல் பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிமிடெட் சார்பில் பொதுமக்கள் சிரமின்றி செல்வதற்காக கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களில்13, 14, 15 ஆகிய தேதிகளில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேற்கண்ட முக்கிய இடங்களில் இருந்து சென்னைக்கும், பிற இடங்களுக்கும 250 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக போக்குவரத்து பணியாளர் விடுமுறை இன்றி பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×