search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பஸ்- லாரி மோதி 7 பேர் படுகாயம்
    X

    விபத்தில் சிக்கிய லாரி கவிழ்ந்து கிடக்கிறது.

    பஸ்- லாரி மோதி 7 பேர் படுகாயம்

    • லாரியின் டீசல் டேங்க் உடைந்து சாலையில் டீசல் ஓடியது.
    • இதில் பஸ்ஸின் முன் பகுதி சேதமடைந்தது.

    வல்லம்:

    புதுக்கோட்டையில் இருந்து தஞ்சை நோக்கி இன்று காலை அரசு பஸ் புறப்பட்டது. பஸ்ஸில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அந்த பஸ் திருக்கானூர்பட்டி அருகே வல்லம் - ஒரத்தநாடு 4 வழி சாலையில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது திருச்சி நோக்கி பார்சல் லாரி ஒன்று வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ்சும் லாரியும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இதில் லாரி ரோட்டில் கவிழ்ந்தது.

    லாரியில் இருந்த பார்சல்கள் சாலையில் சிதறியது. மேலும் லாரியின் டீசல் டேங்க் உடைந்து சாலையில் டீசல் ஓடியது.

    அதே போல் லாரி மீது மோதிய அரசு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் பக்கவாட்டில் இருந்த சுவற்றில் மோதி நின்றது. இதில் பஸ்ஸின் முன் பகுதி சேதமடைந்தது.

    இதில் அரசு பஸ் டிரைவர் வினோதன், கண்டக்டர் கார்த்திகேயன் மற்றும் 5 பயணிகள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ப்பட்டது. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகி ன்றனர். இந்த விப த்தால் அந்த பகுதியில் போக்கு வ ரத்து பாதிக்க ப்பட்டது.

    Next Story
    ×