search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "painter"

    • வேலை காரணமாக தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார்.
    • பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடசேரி கிராமத்தை சேர்ந்தவர் கபில்தேவ் (வயது 36).

    இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று வேலை விஷயமாக தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார்.

    அப்போது அவர் டவுன் பஸ் நிற்கும் மார்க்கத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அந்த நேரத்தில் பஸ் நிலையத்திற்குள் தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    அந்த பஸ் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக கபில்தேவ் மீது மோதியது.

    இதில் பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசங்கி கபில்தேவ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கபில்தேவ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முத்துராஜ் அதே ஊரை சேர்ந்த பேச்சிமுத்து என்பவருக்கு 2 மாதத்திற்கு முன்பு கடனாக ரூ. 5 ஆயிரம் கொடுத்துள்ளார்.
    • கடந்த 4-ந்தேதி கணேசன் வேலை செய்யும் ஏரலில் உள்ள கடையில் வைத்து பணத்தை கேட்டுள்ளார். அதனால் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

    ஆத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தெற்கு ஆத்தூர் நரசன்விளையை சேர்ந்த ராமசாமி மகன் முத்துராஜ் (வயது28). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகள் உள்ளனர்.

    ரூ. 5 ஆயிரம் கடன்

    இவர் அதே ஊரை சேர்ந்த கணேசன் மகன் பேச்சிமுத்து (25) என்பவருக்கு 2 மாதத்திற்கு முன்பு கடனாக ரூ. 5 ஆயிரம் கொடுத்துள்ளார். அதனை பலமுறை திருப்பி கேட்டும் அவர் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் கடந்த 4-ந்தேதி கணேசன் வேலை செய்யும் ஏரலில் உள்ள கடையில் வைத்து பணத்தை கேட்டுள்ளார். அதனால் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

    இந்நிலையில் இரவு முத்துராஜ் நரசன்விளை அம்மன் கோவில் அருகே வந்த போது அங்கு வந்த பேச்சிமுத்து, அவரது தம்பி இசக்கி ராஜா ஆகியோர் பணம் கேட்டு வேலை செய்யும் கடைக்கு எப்படி வரலாம் என தகராறு செய்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    அரிவாள் வெட்டு

    இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பேச்சிமுத்து அரிவாளை எடுத்து முத்துராஜை வெட்டிவிட்டு சென்றுவிட்டார். காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயில் கருகி 2 சகோதரிகள் இறந்தது குறித்து சோரனூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • இருவரை பெயிண்டர் தீவைத்து எரித்துக்கொன்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சோரனூர் அருகே உள்ள நீலமலைக்குன்னு பகுதியை சேர்ந்த சகோதரிகள் பத்மினி (வயது74), தங்கம்(71). இவர்கள் இருவருக்கும் திருமணமாகவில்லை. அவர்கள் இருவரும் ஒரே காம்பவுண்டில் உள்ள இரு வீடுகளில் தனித்தனியாக தனியாக வசித்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று பகலில் பத்மினி தங்கியிருந்த வீட்டில் இருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டது. மேலும் வீட்டுக்குள் இருந்து குபுகுபுவென புகை வந்தது. அதனை கவனித்த அக்கம் பக்கத்தினர், அங்கு வந்தனர். அப்போது பத்மினியின் வீட்டுக்குள் தீப்பிடித்து எரிந்தது.

    பத்மினி மற்றும் தங்கம் ஆகிய இருவரும் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர். அப்போது அவர்களது வீட்டுக்குள் இருந்து ஒருவர் தப்பியோட முயன்றார். அந்த நபருக்கு கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில் தீக்காயம் ஏற்பட்டிருந்தது.

    அவரிடம் அக்கம்பக்கத்து வீட்டினர், அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதற்கு அந்த நபர், வீட்டுக்குள் தீப்பிடித்தததை பார்த்து அதில் சிக்கியவர்களை காப்பாற்ற வந்ததாக தெரிவித்தார். ஆனால் அந்த நபர் மீது அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு சந்தேகம் எழுந்தது.

    இதையடுத்து தீயில் கருகி 2 சகோதரிகள் இறந்தது குறித்து சோரனூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களிடம் சகோதரிகளின் வீட்டில் சிக்கிய நபரை ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரித்தபோது, அவர் பட்டாம்பி பகுதியை சேர்ந்த மணிகண்டன்(48) என்பது தெரியவந்தது.

    சகோதரிகளின் வீட்டுக்குள் சென்றதற்கான காரணம் குறித்து போலீசார் கேட்டபோது, தீயில் சிக்கியவர்களை மீட்பதற்காகவே சகோதரிகளின் வீட்டுக்குள் வந்ததாகவும், அப்போது தனக்கு காயம் ஏற்பட்டுவிட்டதாக கூறியிருக்கிறார். இதையடுத்து அவரை, சிகிச்சைக்காக திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர்.

    மணிகண்டனுக்கு எங்கெல்லாம் காயம் ஏற்பட்டிருக்கிறது? என்று பார்த்தனர். அப்போது அவரது உள்ளாடைக்குள் தங்க நெக்லஸ் மற்றும் தங்க வளையல்கள் இருந்தன. அதுபற்றி போலீசாரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    அந்த நகைகள் தீயில் கருகி இறந்த சகோதரிகளின் நகைகள் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. அதனடிப்படையில் மருத்துவமனையில் இருந்த மணிகண்டனிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தங்க நகைகளுக்காக வயது முதிர்ந்த சகோதரிகள் 2 பேரையும் எரித்துக்கொன்ற அதிர்ச்சி தகவலை மணிகண்டன் தெரிவித்தார்.

    மணிகண்டன் பெயிண்டராக வேலை பார்த்து வந்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சகோதரிகளின் வீட்டில் மணிகண்டன் பெயிண்டிங் வேலை பார்த்திருக்கிறார். அப்போது சகோரிகள இருவரும் தனியாக வசித்து வருவதை நோட்டமிட்ட அவர், அவர்களது வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருகிறார்.

    ஏற்கனவே வீட்டில் பெயிண்டிங் வேலை பார்த்த பழக்கத்தின் அடிப்படையில், நேற்று மூதாட்டி பத்மினியின் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது பட்டப்பகலில் பத்மினி வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடிக்க முயன்றிருக்கிறார். இதனால் பத்மினி சத்தம் போட்டிருக்கிறார்.

    தனது அக்காளின் சத்தம் கேட்டு, பக்கத்து வீட்டில் இருந்த தங்கம் வந்திருக்கிறார். அவர் மணிகண்டனுடன் தனது அக்காள் போராடுவதை பார்த்திருக்கிறார். இருவரும் சேர்ந்து மணிகண்டனின் கொள்ளை திட்டத்தை முறியடிக்க முயன்றிருக்கிறார்.

    அப்போது மணிகண்டன், சகோதரிகள் இருவரையும் கட்டையால் சரமாரியாக அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த சகோதரிகள் இருவரும் நிலைகுலைந்து கீழே விழுந்தனர். இதையடுத்து அவர்கள் அணிந்திருந்த மற்றும் வீட்டில் இருந்த நகைகளை மணிகண்டன் எடுத்துக் கொண்டார்.

    சகோதரிகள் தப்பிவிட்டால் தன்னை காட்டிக் கொடுத்து விடுவார்கள் என்று கருதிய அவர், அவர்கள் இருவரையும் கொலைசெய்ய முடிவு செய்தார். அதன்படி வீட்டின் சமையலறையில் இருந்த கியாஸ் சிலிண்டரை திறந்துவிட்டு தீவைத்தார். இதில் வீட்டுக்குள் குபீரென தீப்பிடித்தது.

    சகோதரிகள் இருவரின் மீதும் தீப்பிடித்தது. உடலில் தீப்பிடித்து எரிந்ததால் வலி தாங்க முடியாமல் சகோதரிகள் இருவரும் பயங்கரமாக அலறியுள்ளனர். வீட்டுக்குள் குபீரென தீப்பிடித்ததால், தீ வைத்த மணிகண்டனுக்கு முகம் மற்றும் கழுத்தில் தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது.

    இந்நிலையில் சகோதரிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததால், அவர்களிடம் இருந்து மணிகண்டனால் அங்கிருந்து தப்பிச்செல்ல முடியவில்லை. அதன்பிறகும் காப்பாற்ற வந்ததாக கூறி தப்பித்துவிடலாம் என்று மணிகண்டன் கருதி, அதனையே தெரிவித்தார்.

    ஆனால் திருடிய நகைகளை உள்ளாடைக்குள் வைத்திருந்ததை டாக்டர்கள் கண்டுபிடித்துவிட்டதால் வசமாக சிக்கினார். இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவருக்கு தீக்காயம் இருப்பதால் போலீசாரின் கண்காணிப்பில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார்.

    நகைகளுக்காக வயது முதிர்ந்த சகோதரிகள் இருவரை, பெயிண்டர் தீவைத்து எரித்துக்கொன்ற சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நண்பருடன் மோட்டார் சைக்கிளில் புவனகிரிக்கு வேலைக்கு சென்றார்.
    • சிகிச்சை பலனின்றி மதியழகன் பரிதாபமாக இறந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடக்கு வடகுதெரு புளியந்தோப்பு கோவில் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் மதியழகன் (வயது 24) பெயிண்டர்.இவர் நேற்று காலை வழக்கம்போல் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் புவனகிரிக்கு வேலைக்கு சென்றார். மாலையில் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் சிதம்பரம் புறவழிச்சாலையில் வந்தபோது எதிரே வந்த மினி லாரி இவர்கள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டு பலத்த படுகாயம் அடைந்தனர். இதை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதியழகன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாரித்துரை, அந்த பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • கொலையா? என போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கவுண்டம்பாளையம்,

    தென்காசி மாவட்டம் சிவராமபேட்டை கிருஷ்ணன் கோவில் வீதியை சேர்ந்தவர் மாரித்துரை(வயது50).

    இவர் கோவை வந்து, பெரியநாயக்கன் பாளையம் வீரபாண்டி பிரிவு பகுதியில் தங்கி பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார்.

    இவர் தினமும் வேலை முடிந்ததும் குடித்து விட்டு வந்து, அந்த பகுதிகளில் தகராறில் ஈடுபடுவதும், பின்னர் அங்குள்ள கடைகள் முன்பு தூங்குவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

    இன்று காலை மாரித்துரை, அந்த பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பு ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து, பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பார்வையிட்டனர். அப்போது மாரித்துரையின் முக்கில் இருந்து ரத்தம் வழிந்திருந்தது. மேலும் உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்தது.

    இதையடுத்து போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மாரித்துரை எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரிக்கின்றனர். அவர் கொலை செய்யப்பட்டரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்வகுமார், தங்கபாண்டி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் முத்து வீட்டின் வழியாக சென்றனர்.
    • அப்போது முத்து வீட்டு முன் படுத்திருந்த நாய் மீது மோட்டார் சைக்கிள் ஏறியது.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து வடக்கு தெருவை சேர்ந்தவர் நம்பி மகன் முத்து (வயது 27). பெயிண்டராக உள்ளார்.

    சம்பவத்தன்று மறுகால்குறிச்சியை சேர்ந்த ஜீவா மகன் செல்வகுமார் என்ற சைனா செல்வகுமார் (26), பெரும்பத்தை சேர்ந்த சித்திரைவேல் மகன் தங்கபாண்டி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் முத்து வீட்டின் வழியாக சென்றனர். அப்போது முத்து வீட்டு முன் படுத்திருந்த நாய் மீது மோட்டார் சைக்கிள் ஏறியது.

    அப்போது செல்வகுமார், தங்கபாண்டியை பார்த்து நாய் குரைத்தது.

    இதில் முத்துவிற்கும், செல்வகுமார், தங்கபாண்டிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த செல்வகுமார், தங்கபாண்டி ஆகியோர் சேர்ந்து முத்துவை அவதூறாக பேசி அரிவாளால் வெட்டினர்.

    இதனால் காயமடைந்த முத்து நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி செல்வ குமார், தங்கபாண்டியை தேடி வருகின்றனர்.

    • சென்னையை சேர்ந்த சோலைராஜ் மயிலாடுதுறையில் வேைல பார்த்து வந்தார்.
    • மின் விளக்கை அருகில் வைத்துக்கொண்டு பெயிண்டிங் வேலை செய்தார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை சென்னை அயனாவரம் சோலை நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன்.

    இவரது மகன் சோலைராஜ் (வயது 32). பெயிண்டர்.

    இவர் தற்போது மயிலாடுதுறை காந்திஜி சாலையில் கட்டப்பட்டு வரும் வணிக வளாக கட்டிடத்தில் பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் வெளிச்சத்திற்காக ஒரு மரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின் விளக்கை அருகில் வைத்துக்கொண்டு பெயிண்டிங் வேலை செய்தார்.

    அப்போது மின்விளக்கை சற்று நகர்த்தியதில் எதிர்பாராத விதமாக சோலைராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சோலைராஜ் மயங்கி விழுந்தார்.

    இதனை பார்த்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சோலைராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கோமதிசங்கரிடம் இருந்த ரூ. 400 பணத்தை பறித்து தப்பி செல்ல முயன்றார்.
    • போலீசார் சூர்யாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்தவர் கோமதிசங்கர்(வயது24). பெயிண்டர். சம்பவத்தன்று இவர் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கோமதி சங்கரிடம் பணம் கேட்டு மிரட்டினார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர் மறைத்து வைத்திருந்த வாளை கோமதி சங்கரின் கழுத்தில் வைத்து மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 400 பணத்தை பறித்து தப்பி செல்ல முயன்றார்.

    இதனால் அதிர்ச்சியில் கோமதி சங்கர் சத்தம்போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வாலிபரை மடக்கி பிடித்து சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் வாளை கழுத்தில் வைத்து மிரட்டி பணம் பறித்தது கணபதி மோர்மார்க்கெட்டை சேர்ந்த எலக்ட்ரீசியன் சூர்யா(25) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மாணவியின் பெற்றோர் பெயிண்டருடனான காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினர்.
    • போலீசார் பெயிண்டர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த 26 வயது பெயிண்டருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெவித்தனர்.

    மேலும் பெயிண்டருடனான காதலை கைவிடுமாறு தங்களது மகளுக்கு அறிவுரை கூறினர். இது குறித்து மாணவி தனது காதலனிடம் கூறினார். இதனையடுத்து பெயிண்டர் கடந்த மாதம் 20-ந் தேதி மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ராமேசுவரத்துக்கு கடத்தி சென்றார். அங்குள்ள நண்பர் ஒருவர் வீட்டில் மாணவியுடன் அவர் இருந்தார். கடந்த 23-ந் தேதி பெயிண்டர் மாணவியை அந்த பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தார். பின்னர் 2 பேரும் அங்குள்ள முல்லை நகரில் தனியாக வீடு எடுத்து தங்கினர். அப்போது பெயிண்டர் மாணவியை 16 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

    கடந்த 8-ந் தேதி 2 பேரும் அங்கு இருந்து புறப்பட்டு ஈரோடு மாவட்டம் அந்தியூர் கிட்டாம்பாடி பிரிவில் உள்ள சந்துகாடு என்ற இடத்தில் உள்ள பெயிண்டரின் உறவினர் வீட்டில் தங்கி இருந்தனர்.

    மாணவி மாயமானது குறித்து அவரது பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். அப்போது அவர் பெயிண்டருடன் சந்து காட்டில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டனர். பெயிண்டரை கைது செய்து மேட்டுப்பாளையத்துக்கு அழைத்து வந்தனர்.

    அப்போது மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பெயிண்டர் மாணவியை திருமணம் செய்து 16 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் நர்சிங் மாணவியை கடத்தி சென்று 16 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகேஷ் குமார் நேற்று இரவு இந்திராநகர் பகுதியில் உள்ள மதுக்கடை அருகே வரும்போது, அவரை வழிமறித்த 6 பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
    • படுகாயமடைந்த மகேஷ் குமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்தவர் மகேஷ் குமார்(வயது 37). பெயிண்டர். இவர் நேற்று இரவு இந்திராநகர் பகுதியில் உள்ள மதுக்கடை அருகே வரும்போது, அவரை வழிமறித்த தூத்துக்குடி புதுக்கோட்டை ராஜூவ்நகரை சேர்ந்த பாலா என்ற பாலமுருகன், மாரி உள்ளிட்ட 6 பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் உடலில் 20 இடங்களில் வெட்டு விழுந்தது. இதனால் படுகாயமடைந்த மகேஷ் குமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் இதில் மகேஷ் குமாருக்கும் பாலா( என்ற) பாலமுருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது, இந்நிலையில் மகேஷ் குமாரை வெட்டி கொல்ல முயன்ற பாலா( என்ற) பாலமுருகன் உள்ளிட்ட 6 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • நேற்று முன்தினம் இரவு கணேசன் டி.எம்.பி. காலனியில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார்.
    • இதில் ஆத்திரமடைந்த சுடலைமணி, கணேசனை சரமாரியாக வெட்டிக்கொன்றார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அண்ணாநகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ஆவுடையப்பன் என்ற வன்னியராஜ். இவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுப்புலட்சுமி (வயது 39). இவர்களுக்கு கணேசன் (18) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    வாலிபர் கொலை

    சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுப்புலட்சுமி, கணவரை பிரிந்து மகளுடன் கே.டி.சி நகரில் உள்ள உறவினர் பெயிண்டர் சுடலைமணி என்பவருடன் வசித்து வருகிறார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணேசன் டி.எம்.பி. காலனியில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சுடலைமணிக்கும், கணேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திர மடைந்த சுடலைமணி, கணேசனை சரமாரியாக வெட்டிக்கொன்றார்.

    பெயிண்டர் கைது

    இதைத்தொடர்ந்து டி.எஸ்.பி. சத்தியராஜ், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், கங்கைநாத பாண்டியன், சேகர் மற்றும் போலீசார் சுடலைமணியை தேடி வந்தனர்.

    இந்நிலையில் அவரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறும்போது, கணேசன் தொடர்ந்து என் வீட்டுக்கு வந்து அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எனவே கொலை செய்ய திட்டமிட்டடேன்.

    சம்பவத்தன்று சாலையில் நின்று கணேசன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற எனக்கும், அவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டேன். ஆனால் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரி ழந்துவிட்டார் என்றார்.

    இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
    • சப்- இன்ஸ்பெக்டர் சத்யா வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் ஆஸ்பத்திரி 1-வது தெருவைச் சேர்ந்தவர் சிவபாலன் (வயது 43) பெயிண்டர் வேலை செய்து வந்தார்.

    இவருக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லாத விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இவரது தந்தை நடராஜன் கொடுத்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    சப்- இன்ஸ்பெக்டர் சத்யா வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்.

    ×