search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையத்தில் நர்சிங் மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த பெயிண்டர்
    X

    மேட்டுப்பாளையத்தில் நர்சிங் மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த பெயிண்டர்

    • மாணவியின் பெற்றோர் பெயிண்டருடனான காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினர்.
    • போலீசார் பெயிண்டர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த 26 வயது பெயிண்டருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெவித்தனர்.

    மேலும் பெயிண்டருடனான காதலை கைவிடுமாறு தங்களது மகளுக்கு அறிவுரை கூறினர். இது குறித்து மாணவி தனது காதலனிடம் கூறினார். இதனையடுத்து பெயிண்டர் கடந்த மாதம் 20-ந் தேதி மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ராமேசுவரத்துக்கு கடத்தி சென்றார். அங்குள்ள நண்பர் ஒருவர் வீட்டில் மாணவியுடன் அவர் இருந்தார். கடந்த 23-ந் தேதி பெயிண்டர் மாணவியை அந்த பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தார். பின்னர் 2 பேரும் அங்குள்ள முல்லை நகரில் தனியாக வீடு எடுத்து தங்கினர். அப்போது பெயிண்டர் மாணவியை 16 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.

    கடந்த 8-ந் தேதி 2 பேரும் அங்கு இருந்து புறப்பட்டு ஈரோடு மாவட்டம் அந்தியூர் கிட்டாம்பாடி பிரிவில் உள்ள சந்துகாடு என்ற இடத்தில் உள்ள பெயிண்டரின் உறவினர் வீட்டில் தங்கி இருந்தனர்.

    மாணவி மாயமானது குறித்து அவரது பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். அப்போது அவர் பெயிண்டருடன் சந்து காட்டில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் மாணவியை மீட்டனர். பெயிண்டரை கைது செய்து மேட்டுப்பாளையத்துக்கு அழைத்து வந்தனர்.

    அப்போது மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பெயிண்டர் மாணவியை திருமணம் செய்து 16 நாட்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் நர்சிங் மாணவியை கடத்தி சென்று 16 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்த பெயிண்டர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×