search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெயிண்டர் பலி
    X

    களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெயிண்டர் பலி

    • கணேசமூர்த்தி நாங்குநேரியான் கால்வாய் பாலத்தில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறு, பாலத்தில் உள்ள சிறிய தூணில் மோதியது.
    • இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம், பாண்டியாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கணேசமூர்த்தி (வயது32). பெயிண்டர். இவர் கடந்த 8-ந்தேதி மாலை வேலைக்கு சென்று விட்டு தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அவர் களக்காடு-சிதம்பரபுரம் சாலையில் உள்ள நாங்குநேரியான் கால்வாய் பாலத்தில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறு, பாலத்தில் உள்ள சிறிய தூணில் மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×