search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் பெயிண்டரிடம் பணம் பறிப்பு
    X

    கோவையில் பெயிண்டரிடம் பணம் பறிப்பு

    • கோமதிசங்கரிடம் இருந்த ரூ. 400 பணத்தை பறித்து தப்பி செல்ல முயன்றார்.
    • போலீசார் சூர்யாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை நீலிகோணாம்பாளையத்தை சேர்ந்தவர் கோமதிசங்கர்(வயது24). பெயிண்டர். சம்பவத்தன்று இவர் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கோமதி சங்கரிடம் பணம் கேட்டு மிரட்டினார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர் மறைத்து வைத்திருந்த வாளை கோமதி சங்கரின் கழுத்தில் வைத்து மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 400 பணத்தை பறித்து தப்பி செல்ல முயன்றார்.

    இதனால் அதிர்ச்சியில் கோமதி சங்கர் சத்தம்போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வாலிபரை மடக்கி பிடித்து சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் வாளை கழுத்தில் வைத்து மிரட்டி பணம் பறித்தது கணபதி மோர்மார்க்கெட்டை சேர்ந்த எலக்ட்ரீசியன் சூர்யா(25) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×