என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் பழங்குடி மாணவா்களுக்கு புதிய பஸ் வசதி தொடக்கம்
- தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி வரை தினமும் காலை, மாலையில் இயக்கப்படும் என அறிவிப்பு
- புலிகள் காப்பக துணை களஇயக்குநா் வித்யா போக்குவரத்தை தொடங்கி வைத்தாா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள பழங்குடி கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள் பள்ளிக்கு சென்றுவர தெப்பக்காடு சூழல் மேம்பாட்டுக்குழு சாா்பில் புதிய பஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதனை புலிகள் காப்பக துணை கள இயக்குநா் வித்யா தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் வனச்சரக ஊழியர்கள், பழங்குடி மக்கள், கூடலூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கீா்த்தனா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
பழங்குடி மாணவா்கள் பள்ளிக்கு சென்று வீடு திரும்ப வசதியாக,தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி வரை மேற்கண்ட பஸ் தினமும் காலை, மாலையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story






