search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Yuvan shankar raja"

    • டாடா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவின் அடுத்ததாக இளன் இயக்கத்தில் "ஸ்டார்" படத்தில் நடித்துள்ளார்
    • அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது

    டாடா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவின் அடுத்ததாக இளன் இயக்கத்தில் "ஸ்டார்" படத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

    இதுபோக நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் அனிருத் இசையில் ஒரு படத்தில் நடித்து வரும் கவின், நெல்சன் தயாரிப்பில் அவர்து உதவி இயக்குநர் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

    இந்நிலையில் கவின் நடிக்கும் 7-வது படம் குறித்த அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

    இப்படத்தை இயக்குநர் வெற்றி மாறன் தயாரிக்க உள்ளாராம். வெற்றிமாறனின் உதவி இயக்குநர் விக்ரனன் அசோகன் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் பிரபல நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பிரசாத் ஸ்டூடியூவில் படப்பிடிப்புகளை முடித்து விட்டு அடுத்த கட்டமாக சென்னை மெட்ரோ நிலையத்தில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.
    • தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டம் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது.

    நடிகர் விஜய்யின் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத், மாஸ்கோ உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள சூழலில் தற்போது சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் திரிஷா மற்றும் விஜய்யின் காம்பினேஷன் பாடல் மிகப்பெரிய அளவில் செட் போடப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை மெட்ரோ ஸ்டேஷனில் அடுத்த கட்ட ஷூட்டிங்கை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

    தொடர்ந்து இரு வாரங்கள் இந்த படத்தின் சூட்டிங் நடைபெறும் எனவும். இப்படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, மீனாட்சி சவுத்ரி, சினேகா என நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர். கில்லி படத்திற்கு பிறகு விஜய்யும் திரிஷாவும் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படத்தில் நடித்தனர்.

    அதைத்தொடர்ந்து கோட் திரைப்படத்திலும் விஜய்யுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார். பிரசாத் ஸ்டூடியூவில் படப்பிடிப்புகளை முடித்து விட்டு அடுத்த கட்டமாக சென்னை மெட்ரோ நிலையத்தில் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டம் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது.

    சமீபத்தில் படத்தில் நடித்துள்ள அஜ்மல் தனியார் தொலைக்காட்சிக்கு நேர்காணலில் படத்தின் அப்டேட்டை குறித்து பேசினார். சிஎஸ்கே ஐ.பி.எல் அணி வீரர்கள் இதில் நடித்துள்ளதாக வந்த தகவல்கள் உண்மையெனவும் , ஆனால் அது யார் என்று என்னால் சொல்ல முடியாது. படத்தின் தயாரிப்பாளர்கள் தான் அதை கூற வேண்டும் என கூறியுள்ளார். படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த பாடல் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த பாடல் ஒரு காதல் பாடலாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • வைரமுத்து கவிதைகளை படித்து வியந்த பாரதிராஜா இளையராஜாவிடம் வைரமுத்துவை அறிமுகம் செய்து வைத்தார்.
    • இருவரது கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

    பாரதிராஜா, இளையராஜா, வைரமுத்து கூட்டணி ஒரு காலத்தில் வெற்றிக் கூட்டணி. ஒரு கட்டத்தில் வைரமுத்துவும், இளையராஜாவும் ஏராளமான பாடல்களை ரசிகர்களுக்காக அர்ப்பணித்துள்ளனர்.

    இருவரும் ஒரு அதிசயமான ராக பந்தம் என்று கூட கூறலாம். தமிழின் உச்சத்தை தொட வைரமுத்து ஓயாது இயக்கி கொண்டிருந்தார். ஏற்கனவே கவிதை எழுதுவதில் திறுமை வாய்ந்த வைரமுத்து சினிமாவின் மூலம் அதை வலுப்படுத்த முடிவு செய்தார். அப்போது தான் எழுதிய 'திருத்தி எழுதிய தீர்ப்புகள்' என்ற கவிதை புத்தகத்தை பாராதிராஜாவிடம் கொடுத்து முடிந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.


    வைரமுத்து கவிதைகளை படித்து வியந்த பாரதிராஜா இளையராஜாவிடம் வைரமுத்துவை அறிமுகம் செய்து வைத்தார். மெட்டுக்கு எழுதுவீர்களா? என்று கவிஞரிடம் இளையராஜா கேட்க, மெட்டை சொல்லுங்க முயற்சி செய்கிறேன் என்றார் வைரமுத்து. உடனே மெட்டை வாசிக்கப்பட்டது... வைரமுத்துவோ பல்லவியை சொல்லவா... படவா என்று கேட்டார். பாடுங்கள் என்றார் இளையராஜா அப்போது உருவானது தான் 'பொன்மாலை பொழுது'... இதை கேட்ட இளையராஜா வைரமுத்துவை கட்டியணைத்த இவர் சினிமாவில் பல யானைகளை சாய்ப்பார் என்று நம்பிக்கையோடு கூறியதாக பாரதிராஜா சொல்லியிருக்கிறார்.

    அப்போது தொடங்கிய இவர்கள் இருவரின் சினிமா பயணம் தொட்ட படங்கள் மற்றும் பாடல்கள் எல்லா வெற்றி. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பட்டி தொட்டி எங்கும் இவர்கள் பாடல்கள் தான் ஒலித்துக் கொண்டிருந்தது.

    1980களில் தொடங்கி தொடர்ந்து 7 ஆண்டுகள் இவர்கள் பயணம் எந்தவித மனக்கசப்பு இல்லாமல் சென்று கொண்டிருந்தது.


    இதையடுத்து பாடல் வரிகள் மூலம் அனைவரையும் கவர்ந்த வைரமுத்துவிற்கு சினிமாவில் பல்வேறு வாய்ப்புகள் வர தொடங்கியது. எப்போது ஒளிப்பதிவின் போது சரியான நேரத்திற்கு வரும் வைரமுத்துவால் உரித்த நேரத்தில் சில பணிகளை செய்ய முடியாமல் போனது. இதுவே இளையராஜா, வைரமுத்துவின் மன கசப்பிற்கு முதல் காரணமாக அமைந்தது.

    சில பாடல் வரிகளில் இளைராஜா தலையிட்டு மாற்றம் செய்ய சொல்வது அந்த விரிசலிற்கு மேலும் வலு சேர்த்தது. பொது இடங்களில் நண்பர்களை சந்திக்கும் போதும் ஒர் மீது ஒரு குறைகூறி பேசியதாகவும் கூறப்படுகிறது. இப்படி சென்ற இடத்தில் எல்லாம் பிரச்சனை முற்றியுள்ளது. எப்போதும் வைரமுத்து ஒரு படத்தில் இருக்கும் அனைத்து பாடல்களையும் தானே எழுந்த வேண்டும் என்று ஆசைப்படுவார்.

    இந்த சூழ்நிலையில் தான் 'தாய்கொரு தாலாட்டு' என்ற படத்தில் வைரமுத்து எல்லா பாடல்களையும் எழுதியிருந்தார். அப்போது இளையராஜா கோர்ப்பின் போது மேலும் ஒரு பாடலை வாலியை வைத்து எழுதி வாங்கி இருந்தார். இதனால் இருவருக்கும் மனக்கசப்பு இன்னும் அதிகரித்தது. கடைசியா இவை அனைத்து ஒன்று சேர்ந்து இசைப்பாடும் தென்றல் என்ற படத்தின் பாடல் உருவாக்கத்தின் போது மோதலாக உருவாகிறது. 'எந்த கைக்குட்டையை யார் எடுத்தது' என்ற பாடல் வரி எழுதி வைரமுத்து இளையராஜாவிடம் காட்ட, அந்த பாடல் எனக்கு பிடிக்கவில்லை நானே எழுதிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் இளையராஜா. இதன் காரணமாக வைரமுத்து அங்கிருந்து கோபத்துடன் வெளியேறியதாக கூறப்படுகிறது.

    பாலசந்தரின் புன்னகை மன்னன் படத்திற்கு பிறகு வைரமுத்துவும் இளையராஜாவும் நிரந்தரமாக பிரிந்தனர்.


    தொடர்ந்து இன்னும் சில மனக்கசப்புகள் ஏற்பட்டு, சினிமா துறை சார்ந்த பிரபலங்கள் சில பேர் சமாதானம் செய்தும் எந்த பயனும் இல்லாமல் போனது. இளையராஜாவை பிரிந்த நேரத்தில் வைரமுத்துவிற்கு பாடல் வாய்ப்பு குறைய தொடங்கியது.

    தான் தொடர்ந்து சினிமாவில் தொடர்ந்து பயணம் செய்ய இசையமைப்பாளர்கள் துணை தேவை என்பதை உணர்ந்த வைரமுத்து ஏராளமான இசையமைப்பாளர்களை தமிழில் திரைப்பட இயக்குனர்களிடம் அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

    அப்படியாக வைரமுத்து அறிமுகம் செய்தவர் தான் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.

    ஏ.ஆர். ரஹ்மானும், வைரமுத்து இணைந்து பல்வேறு பாடல்களை உருவாக்கினர். இவர்கள் இருவரது கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

    1992ல் ஏஆர் ரஹ்மான் அறிமுகமானபோதும் இளையராஜா அவரது வளர்ச்சியை விரும்பவில்லை என்றே சொல்லப்படுகிறது. ஒருமுறை ஏஆர் ரஹ்மான் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ஒரு இசைக்கருவியை இளையராஜா தனது செல்வாக்கை பயன்படுத்தி கஸ்டம்ஸில் சிக்க வைத்ததாகவும் செய்திகள் வெளியாகின.

    வைரமுத்து, ஏஆர் ரஹ்மான் இவர்களின் தொடர் வெற்றியால் இளையராஜாவிற்கு பாடல் வாய்ப்புகள் குறைய தொடங்கியதாக அப்போது கூறப்பட்டது. இதன் காரணமாக பிரபலங்கள் சிலர் இவர்களை இணைக்க முடிவு செய்தனர். ஆனால் அந்த முயற்சியும் தோல்வி அடைந்தது.


    இந்நிலையில் இளையராஜாவுக்கும், வைரமுத்துவும் இருந்த இடைவெளி யுவன் சங்கர் ராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் இடையே இல்லை. யுவனுடன் இணைந்து பணியாற்றி அதற்கு தேசிய விருது பெற்று விட்டார் வைரமுத்து. பின்னர் யுவனுடன் இணைந்து மாமனிதன் படத்திற்கு பாடல் வரிகள் எழுத முடிவுசெய்த நிலையில் அதை இளையராஜா மறுத்திருக்கிறார். பின்னர் மாமனிதன் படத்திற்கு பா. விஜய் பாடல் எழுதினார்.

    இளையராஜாவை பிரிந்தது குறித்து வைரமுத்து ஒரு பாடல் வரியில் கூறியிருப்பதாவது:

    "மனைவியின் பிரிவுக்கு பிறகு அவள் புடவையை தலைக்கு வைத்து படுத்திருக்கும் காதல் உள்ள கணவனை போல, நினைவுகளோடு நான் மித்திரை கொள்கிறேன். திரையுலகில் நான் அதிகம் செலவிட்டது உன்னிடம் தான். மனதில் மிச்சமில்லாமல் பேசி சிரித்தது உன்னோடுதான். பெண்கள் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்." என்று அழகாக கூறியிருந்தார் வைரமுத்து.

    இந்நிலையில் சென்னையில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஒரு பாடலில் இசை பெரியதா, மொழி பெரியதா என்பது ஒரு பெரிய சிக்கலாகப் பேசப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். இசையும், மொழியும் பரஸ்பரம் செய்துகொள்ளும் போதுதான் கலை வெற்றி பெறுகிறது எனவும் வைரமுத்து கூறினார்.


    இதற்கு பதிலளித்துள்ள இளையராஜாவின் சகோதரரும், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளருமான கங்கை அமரன்:

    எங்களால் மேலே வந்தவர், வந்த இடத்தையே காலில் போட்டு மிதிப்பது போன்று பேட்டி கொடுத்துள்ளார் வைரமுத்து என தெரிவித்துள்ளார். மனிதனுக்கு நன்றி வேண்டும். அவரது பாடலுக்கு அதிகமான புகழ் வந்ததால் வைரமுத்துவுக்கு கர்வம் தலைக்கேறிவிட்டது. அடக்கி வைக்க ஆள் இல்லாததால் துள்ளிக் கொண்டிருக்கிறார் வைரமுத்து. இளையராஜாவும், வைரமுத்துவும் நண்பர்களாக இருந்தவர்கள்., அப்படியே இருந்த நட்பை கொச்சைப்படுத்துகிறார் வைரமுத்து. வைரமுத்துவை வாழவைத்த இளையராஜாவின் போட்டோ வைத்து தினம் வணங்க வேண்டும். அவர் இல்லை என்றால் வைரமுத்துவின் பெயரே இருந்திருக்காது. நான் அவருக்குச் சவால் விடுகிறேன், இளையராஜா இசையில் நீங்கள் எழுதிய பாடல்களை வேறு ஒரு இசையமைப்பாளரிடம் கொடுத்துப் பாருங்கள், அது முடியாது. இசையில்லாமல் பாடல்கள் இல்லை. தன்னைத் தானே புகழ்ந்து பேசிக்கொண்டு இருக்கக்கூடிய கவிஞர்கள் யார் இருக்கிறார்கள்? இளையராஜா குறித்து குற்றமோ, குறைகளோ சொல்வதாக இருந்தால் அதற்குரிய விளைவுகளை வைரமுத்து சந்தித்தே ஆக வேண்டும். வைரமுத்து இனிமேல் வாயை மூடிக் கொண்டு வேலையை பார்த்தால் அவருக்கு நல்லது எனவும் எச்சரித்துள்ளார் கங்கை அமரன்.

    வைரமுத்து - கங்கை அமரன் வார்த்தைப் போரால், இனி வரும் காலங்களில் இளையராஜாவும், வைரமுத்துவும் இணைய வாய்ப்பே இல்லை எனலாம்.

    • சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்
    • இந்நிலையில் இன்று யுவன் ஷங்கர் ராஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது.

    யுவன் இதுவரை 170 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். படங்களுக்கு மாஸ் பி.ஜி.எம் வடிவமைப்பதில் யுவன் திறம் பெற்றவர். மெலடி மற்றும் காதல் பாடல்களுக்கு இசையமைப்பதில் வல்லவர்.

    சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜயின் குரலில் படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    எந்தளவு வரவேற்பு வந்ததோ அதே அளவு பாடலுக்கு எதிரான கமெண்ட்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் பரவியது. யுவன் ஷங்கர் ராஜாவையும் இசையமைப்பாளர் அனிருத்துடன் ஒப்பிட்டு பேசி பல மீம்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன.

    இந்நிலையில் இன்று யுவன் ஷங்கர் ராஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது.

    இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் யுவனிடம் மன்னிப்புக் கேட்டு பதிவுகளை பகிர்ந்தனர். அவர் ஏன் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகினார் என்ற தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கும் நிலையில் யுவன் தற்பொழுது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் 'ஹலோ மக்களே உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி, நான் இன்ஸ்டாகிராமில் இருந்து விலகவில்லை அது வெறும் டெக்னிக்கல் எரர், என்னுடைய குழு அதை சரி செய்ய முயற்சித்துக் கொண்டு இருக்கிறது. நான் மீண்டும் இன்ஸ்டாகிராமிற்கு விரைவில் வருவேன். நன்றி " என பதிவிட்டுள்ளார்.

    • இதுவரை 170 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.
    • சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    25 ஆண்டுகளாக இசைத்துறையில் சிறப்பான பணியை செய்து வருகிறார் யுவன். இதுவரை 170 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். படங்களுக்கு மாஸ் பி.ஜி.எம் வடிவமைப்பதில் யுவன் திறம் பெற்றவர். மெலடி மற்றும் காதல் பாடல்களுக்கு இசையமைப்பதில் வல்லவர்.

    சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜயின் குரலில் படத்தின் முதல் பாடலான விசில் போடு பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    எந்தளவு வரவேற்பு வந்ததோ அதே அளவு பாடலுக்கு எதிரான கமெண்ட்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் பரவியது. யுவன் ஷங்கர் ராஜாவையும் இசையமைப்பாளர் அனிருத்துடன் ஒப்பிட்டு பேசி பல மீம்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன.

    யுவன் இசையமைத்த இந்த பாடல் நன்றாக இல்லை என்றும் அவர் ஏன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்ரு பல கமெண்டுஸ்கள் வந்தது.

    இந்நிலையில் யுவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விலகியுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. இதற்கு எதிர்மறை கமெண்டுகள் காரணமா என குழம்பியுள்ள ரசிகர்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, வசந்த் ரவி ஆகியோர் நடிப்பில் பொன் ஒன்று கண்டேன் என்ற திரைப்படம் உருவாகி வந்தது
    • இப்படத்தை கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட படங்களை இயக்கிய ப்ரியா இயக்கியுள்ளார்

    அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, வசந்த் ரவி ஆகியோர் நடிப்பில் பொன் ஒன்று கண்டேன் என்ற திரைப்படம் உருவாகி வந்தது. இப்படத்தை கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட படங்களை இயக்கிய ப்ரியா இயக்கியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    திரையரங்குகளில் இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படம் நேரடியாக கலர்ஸ் தமிழில் வெளியாக இருக்கிறது. வருகின்ற மார்ச் 24ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வசந்த் ரவி, இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "அதிர்ச்சியளிக்கிறது. இது உண்மையா? குறிப்பாக புகழ்பெற்ற முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஜியோ ஸ்டூடியோஸிலிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ப்ரியா, யுவன் ஷங்கர் ராஜா, மற்றும் படக்குழுவினருடன் எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளாமல் பொன் ஒன்று கண்டேன் பட ப்ரோமோவையும் சின்னத்திரையில் வெளியாகவுள்ள அறிவிப்பையும், பார்ப்பது மிகவும் வேதனையாகவும் வருத்தமாகவும் உள்ளது. இந்தப் படத்துக்காக நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் தெரிவிக்கப்படாமல் நடந்துள்ளது. படக்குழுவிற்கு இது பற்றி சுத்தமாக தெரியவில்லை" என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

    தரமணி, ராக்கி, அஸ்வின்ஸ் ஆகிய படங்களில் வசந்த் ரவி நாயகனாக நடித்துள்ளார். பின்னர் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விஜய் இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார்.
    • இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

    நடிகர் விஜய் நடிக்கும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" (GOAT) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். சை ஃபை ஃபிக்ஷன் கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாக்ஷி சவுத்ரி, பார்வதி நாயர் என்று நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.

    விஜய் இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

    விஜய் இப்படத்தின் ஒரு பாடலை பாடியுள்ளார். இப்பாடல் வரும் மே மாதம் வெளியிடுவதாகவும், படத்தில் இன்னொரு பாடலை இசைஞானி இளையராஜா பாடியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    • நடிகர் அஜித் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று பின்னர் சாதாரண வார்டுக்கு மாற்றம்.
    • அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை.

    மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைந்து அஜித் சென்னை திரும்பினார்.

    இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அஜித் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் முன்பு முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது முழு உடலையும் பரிசோதனை செய்தபோது அவரது காதுக்கு கீழ் பகுதியில் காதுக்கும் மூளைக்கும் இடையேயான நரம்பில் சிறிய கட்டி இருந்தது. அதனை கண்டறிந்த மருத்துவர்கள் நவீன சிகிச்சையின் மூலம் அந்த வீக்கத்தை அரை மணி நேரத்தில் சரிசெய்து அகற்றினார்கள்.

    பின்னர், நடிகர் அஜித் ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், சிகிச்சை முடிந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் அஜித்குமார் விரைவில் குணம் பெற வேண்டி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில், நடிகர் அஜித்குமார் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    • புதுச்சேரி சிறுமியை கொலை செய்தவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனர்
    • இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை தீராப் பிரச்சனையாக உள்ளது

    புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக யுவன் சங்கர் ராஜா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை தீராப் பிரச்சனையாக உள்ளது. 28.9% குழந்தைகள் ஏதோ ஒரு வகையான பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர்.

    குழந்தைகளுக்கு GOOD TOUCH, BAD TOUCH கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியமானது. நம்மைச் சுற்றியுள்ளவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு நற்குணங்களை போதித்து வளர்ப்பதும் அவசியம்.

    புதுச்சேரி சிறுமியை கொலை செய்தவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனர். இதனால் பல தீமைகளை நாம் எதிர்கொள்கிறோம் என்பது புரிகிறது. பாதுகாப்பான நாடாகவும், ஒன்றுபட்ட சமூகமாகவும் வளர்வோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • ஆர்.கே.சுரேஷ் இயக்கி நடிக்க உள்ள 'தென்மாவட்டம்' படத்திற்கு நான் இசை அமைக்கவில்லை
    • “யுவன் சார் நீங்கள் படத்திற்கும், லைவ் கான்சர்ட்டிற்கும் ஒப்பந்தமாகி இருக்கிங்க

    பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் தர்மதுரை, சலீம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார். மேலும் விநியோகஸ்தராக  நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பரதேசி, தங்கமீன்கள் உள்ளிட்ட படங்களிலும், பாலாவின் தாரைதப்பட்டை, மருது, ஹர ஹர மஹாதேவகி, இப்படை வெல்லும், காளி, நம்ம வீட்டு பிள்ளை, விருமன், பட்டத்து அரசன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். 

    இந்நிலையில் 'தென்மாவட்டம்' என்ற புதிய படத்தை இயக்கி அதில் நடிக்க உள்ளார்.இந்த படத்தின் முதல் 'லுக் போஸ்டர்'  வெளியாகி உள்ளது. இப்படத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த 'போஸ்டர்' சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில் இப்படத்திற்கு தான் இசையமைக்கவில்லை என்று யுவன் சங்கர் ராஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து யுவன்சங்கர் ராஜா கூறியதாவது:-

    ஆர்.கே.சுரேஷ் இயக்கி நடிக்க உள்ள 'தென்மாவட்டம்' என்ற புதிய படத்திற்கு நான் இசை அமைக்கவில்லை. இப்படத்திற்காக யாரும் என்னை அணுகவில்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்நிலையில் 'எக்ஸ்' தளத்தில் ஆர்.கே. சுரேஷ் பதிலளித்துள்ளார். அதில் "யுவன் சார் நீங்கள் படத்திற்கும், லைவ் கான்சர்ட்டிற்கும் ஒப்பந்தமாகி இருக்கிங்க. ஒப்பந்தத்தை தெளிவாக சரிபார்க்கவும்"என்று குறிப்பிட்டுள்ளார். யுவன் சங்கர் ராஜா பதிவை பார்த்து ஆர்.கே.சுரேஷை ரசிகர்கள் விமர்சித்தனர். தற்போது ஆர்.கே.சுரேஷ் வெளியிட்ட பதிவால் மீண்டும் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா தற்போது விஜயின் 'GOAT' படத்திற்கு இசையமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாடகி பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார்.
    • பவதாரிணி மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

    இசைஞானி இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார்.

    பவதாரிணி மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடல் சொந்த ஊரான தேனியில் அடக்கம் செய்யப்பட்டது.

    பவதாரிணி மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டதால் அவரால் உடனடியாக சென்னைக்கு வரமுடியவில்லை.

    இந்தநிலையில் சென்னை வந்த கனிமொழி எம்.பி. தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டிற்கு இன்று நேரில் சென்றார். அங்கு இளையராஜா மற்றும் அவரது மகன் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.

    • வெங்கட் பிரபு ‘தி கோட்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
    • இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

    இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'தி கோட்' (The Greatest Of All Time). இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.


    கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த திரைப்படத்தின் பாடல் காட்சிகள் புதுவையில் உள்ள பழமை வாய்ந்த ஏ.எப்.டி. மில்லில் படமாக்கப்பட்டது. இந்த படப்பிடிப்பில் நடிகர் விஜய் பங்கேற்றார்.


    இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா 'தி கோட்' திரைப்படத்தின் அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது, பத்திரிகையாளர்களை சந்தித்த இவர் 'தி கோட்' திரைப்படத்தின் அப்டேட் கேட்டதற்கு முதலில் சொல்ல முடியாது என்று சிரித்தபடி சொன்னவர், பிறகு "இந்த முறை தெளிவாக இருக்கேன், இனிமேல் பேச்சு இல்லை வீச்சுதான், நானும் ஆர்வமாகவுள்ளேன், 'தி கோட்' திரைப்படத்தின் அனைத்து வேலைகளும் நன்றாக நடைபெற்று வருகிறது" என்றார்.

    ×