என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வைரமுத்து"
- காலத்துக்கு ஏற்ப தன்னை புதுப்பித்து கொள்ளும் கவிஞன் ஆகவும் ஜொலிக்கிறார்.
- ரசிகர்கள் திரைப்பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் மட்டும் இல்லாமல் தமிழ் இலக்கியம், பண்பாடு ஆகிய தளங்களில் மிகவும் முக்கியமான ஆளுமையாக விளங்கி வருபவர் கவிப்பேரரசு என அழைக்கப்படும் வைரமுத்து. 1953ஆம் ஆண்டு பிறந்த இவர் இன்று அதாவது ஜூலை 13ஆம் தேதி தனது 71வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு அவரது ரசிகர்கள் திரைப்பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நான்கு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் திரையுலகில் தனது பாடல் வரிகளால் மக்களை மகிழ்வித்து வரும் கலைஞன் ஆக இருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, காலத்துக்கு ஏற்ப தன்னை புதுப்பித்து கொள்ளும் கவிஞன் ஆகவும் ஜொலிக்கிறார்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்தை தனது எக்ஸ் தளபக்கத்தில் தெரிவித்து அதில்
இன்று பிறந்தநாள் கொண்டாடும் மனதிற்கினிய நண்பர், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பல்லாண்டு வாழ மனதார வாழ்த்தி மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார்.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் மனதிற்கினிய நண்பர், கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பல்லாண்டு வாழ மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்.@Vairamuthu
— Kamal Haasan (@ikamalhaasan) July 13, 2024
- தியாகத்தைக் கொண்டாட்டக் குறியீடாகக் கொள்ளும் பக்ரீத் சக மனிதனை நேசிக்கச் சொல்கிறது...
- அண்டை வீட்டாருக்கும் ஏழைகளுக்கும் ஈகைப் பண்பாட்டை போதிக்கிறது.
சென்னை:
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை பக்ரீத் ஆகும். இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்து கவிஞரும், பாடலாசிரியருமான கவிஞர் வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
குடும்பம் நிறுவனம் அரசு
என்ற எந்த அமைப்பும்
யாரோ ஒருவரின்
தியாகத்தை முன்வைத்தே
கட்டமைக்கபடுகிறது
அந்த தியாகத்தைக்
கொண்டாட்டக்
குறியீடாகக் கொள்ளும் பக்ரீத்
சக மனிதனை
நேசிக்கச் சொல்கிறது
அண்டை வீட்டாருக்கும்
ஏழைகளுக்கும்
ஈகைப் பண்பாட்டை
போதிக்கிறது
குறிக்கோள் மிக்க
இந்தக் கொண்டாட்டத்தை
வாழ்த்துவதில்
மகிழ்ச்சி அடைகிறோம்
தருவோர் பெறுவோர்
இருவரும் வாழ்க
இவ்வாறு வைரமுத்து தெரிவித்துள்ளார்.
குடும்பம் நிறுவனம் அரசு
— வைரமுத்து (@Vairamuthu) June 17, 2024
என்ற எந்த அமைப்பும்
யாரோ ஒருவரின்
தியாகத்தை முன்வைத்தே
கட்டமைக்கபடுகிறது
அந்த தியாகத்தைக்
கொண்டாட்டக்
குறியீடாகக் கொள்ளும் பக்ரீத்
சக மனிதனை
நேசிக்கச் சொல்கிறது
அண்டை வீட்டாருக்கும்
ஏழைகளுக்கும்
ஈகைப் பண்பாட்டை
போதிக்கிறது
குறிக்கோள் மிக்க
இந்தக்…
- பதப்படுத்தப்பட்ட துபாயின் கழிவுகளை ஊருக்கு வெளியே கொட்டி மண்ணிட்டு மூடிய குப்பைமேடு.
- துர்நாற்றம் இல்லை; சுகாதாரக் கேடு இல்லை; சுற்றுச்சூழல் மாசு இல்லை;
சென்னை :
கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
துபாயில் இருக்கிறேன்
எனக்குப் பின்னால்
மலைபோல் தெரிவது
மலையல்ல
பதப்படுத்தப்பட்ட
துபாயின் கழிவுகளை
ஊருக்கு வெளியே கொட்டி
மண்ணிட்டு மூடிய
குப்பைமேடு
இதில்
துர்நாற்றம் இல்லை;
சுகாதாரக் கேடு இல்லை;
சுற்றுச்சூழல் மாசு இல்லை;
நாளை மக்கிய பிறகு
தாவர எருவாகும்
சாத்தியங்கள் உண்டு
வெளிநாடு செல்லும்
அமைச்சர்களும்
அதிகாரிகளும்
இதுபோன்ற உருப்படியான
திட்டங்கள் கண்டு
உள்நாட்டில்
செயல்படுத்துங்களப்பா
இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.
துபாயில் இருக்கிறேன்
— வைரமுத்து (@Vairamuthu) June 15, 2024
எனக்குப் பின்னால்
மலைபோல் தெரிவது
மலையல்ல
பதப்படுத்தப்பட்ட
துபாயின் கழிவுகளை
ஊருக்கு வெளியே கொட்டி
மண்ணிட்டு மூடிய
குப்பைமேடு
இதில்
துர்நாற்றம் இல்லை;
சுகாதாரக் கேடு இல்லை;
சுற்றுச்சூழல் மாசு இல்லை;
நாளை மக்கிய பிறகு
தாவர எருவாகும்
சாத்தியங்கள் உண்டு… pic.twitter.com/EBX4sycTjZ
- இறந்த பின்தான் தகனம் செய்வார்கள்; தகனம் செய்து இறப்பைத் தந்திருக்கிறது நெருப்பு...
- உலகம் தோன்றிய நாளிலிருந்து விபத்துகள் புதியனவல்ல...
சென்னை:
குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து, குவைத் தீவிபத்து தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
குவைத்தின் தீ விபத்தில்
மனிதச் சதைகள்
கருகிய வாசம்
உலகக் காற்றில் வீசுகிறது
இறந்த பின்தான்
தகனம் செய்வார்கள்;
தகனம் செய்து
இறப்பைத் தந்திருக்கிறது
நெருப்பு
இதயத்தின்
மெல்லிய தசைகள்
மெழுகாய் உருகுகின்றன
உலகம்
தோன்றிய நாளிலிருந்து
விபத்துகள் புதியனவல்ல
விஞ்ஞானம் வளர்ந்தபின்னும்
அது தொடர்வது
பாதுகாப்பு அளவீடுகளின்
குறைபாடுகளைக் காட்டுகிறது
மனிதத் தவறுகள்
திருந்தவில்லை என்று
வருந்திச் சொல்கிறது
மாண்டவர்களுக்காக
அழுது முடித்த இடத்தில்
அழத் தேவையில்லாத சமூகத்தை
வார்த்தெடுக்க வழி சமைப்போம்
உலகத் தொழிலாளர்களுக்கு
என் இந்தியக் கண்ணீர்
இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.
- கனிமொழியின் பதின் பருவத்தில் கலைஞர்தான் எனக்கு அறிமுகம் செய்தார்.
- காற்றோடு உரையாடும் பூவைப்போன்ற மென்மையும் கல்லுறுதி போன்ற சொல்லுறுதியும் சிங்கத்தின் இருதயமும் கனிமொழியின் தீராத குணங்கள்.
சென்னை:
பாராளுமன்ற தி.மு.க. குழு தலைவராக கனிமொழி எம்.பி. தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் கனிமொழி எம்.பி.க்கு கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஒரு பெரும் பெருமை
வாய்த்திருக்கிறது
கனிமொழி கருணாநிதிக்கு
பாராளுமன்றங்களின்
குழுத் தலைவராய்
தி.மு.க அவரைத் தேர்ந்துள்ளது
கலைஞர் திருமகள்
கவிஞர்
முதலமைச்சரின் தங்கை
பகுத்தறிவாளர் என்ற
பிறவிப் பெருமைகளைத் தாண்டி
மாதர் குலத்துக்கு
மகுடம் என்றுதான்
இந்திய அரசியல் இதைக்
கணக்கிட்டுக் களிக்கும்
கனிமொழியின்
பதின் பருவத்தில்
கலைஞர்தான் எனக்கு
அறிமுகம் செய்தார்
காற்றோடு உரையாடும்
பூவைப்போன்ற மென்மையும்
கல்லுறுதி போன்ற
சொல்லுறுதியும்
சிங்கத்தின் இருதயமும்
கனிமொழியின் தீராத குணங்கள்
கனிமொழியை
அமைச்சராக்கவில்லையா
என்று கலைஞரை
ஒருமுறை கேட்டேன்
'காலம் வரட்டும்' என்றார்
இப்போது ஒருகாலம்
அருகில் வந்து
நழுவியிருக்கிறது
ஐந்தாண்டுகளில் ஆகலாம்
அல்லது
அதற்கு முன்பேகூடக்
காலம் 'கை'சேரலாம்
கனவு மெய்ப்பட
வாழ்த்துகிறேன்
இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
- தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சியையும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் பாராட்டுகிறேன்.
- இந்த வளர்ச்சியால் தமிழ்நாட்டு அரசியலில் அவரைப் பழிப்பது குறையாது ஆனால் இனி -கழிப்பது இயலாது.
சென்னை:
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.19 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இதையடுத்து சீமானுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மக்களவைத் தேர்தலில்
8.19 விழுக்காடு
வாக்குகள் பெற்றுத்
தேர்தல் ஆணையத்தின்
அங்கீகாரம் பெற்ற
நாம் தமிழர் கட்சியையும்
அதன் தலைமை
ஒருங்கிணைப்பாளர்
சீமானையும் பாராட்டுகிறேன்
ஆலின் விதையொன்று
தனித்து நின்று
ஓசையின்றித் துளிர்விடுவதும்
இலைவிடுவதும்போல
சீமானின் வளர்ச்சி
கவனம் பெறுகிறது
இந்த வளர்ச்சியால்
தமிழ்நாட்டு அரசியலில்
அவரைப்
பழிப்பது குறையாது
ஆனால் இனி -
கழிப்பது இயலாது
வாழ்த்துகிறேன்.
இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.
- விஜய் சேதுபதியின் 50 -வது படமாக 'மகாராஜா' படம் உருவாகியுள்ளது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்குகிறார்.
- படம் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்பொழுது படத்தின் முதல் பாடலான 'தாயே தாயே' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதியின் 50 -வது படமாக 'மகாராஜா' படம் உருவாகியுள்ளது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர், சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் இதுவரை கண்டிராத அவதாரத்தில் விஜய் சேதுபதியின் தோற்றம் அமைந்திருந்தது.
சில நாட்களுக்கு முன் படத்தின் டிரைலர் வெளியாகிய மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதி ஒரு சலூன் கடையை வைத்துள்ளார். வீட்டில் உள்ள லட்சுமி காணாமல் போனது என்று போலிஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கிறார். அந்த லட்சுமி யார் என போலிஸ் விசாரிக்கிறது. யார் அந்த லட்சுமி என்பதை மர்மமாகவே வைத்திருக்கின்றனர். டிரைலர் மிகவும் சஸ்பன்சோடு அமைந்திருக்கிறது.
படம் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. தற்பொழுது படத்தின் முதல் பாடலான 'தாயே தாயே' என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இப்பாடலை பிரபல பின்னணி பாடகரான சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். பாடல் வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார். இப்பாடலின் காட்சிகள் தற்பொழுதுசமூக வலைத்தளங்கலில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்த வெற்றி உங்கள் ஆட்சியின் மாட்சிக்குக் கிடைத்த சாட்சி...
- பதற்றமில்லாமல் வெற்றியின் பகட்டு இல்லாமல் இயல்பான புன்னகையோடு இருந்தார்.
சென்னை:
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40-க்கு 40 என்று வெற்றி பெற்றுள்ளது. இது சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க.வுக்கு கிடைத்த முழு வெற்றியாகும். இதற்கு பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நாற்பதுக்கு நாற்பது என்பது
மாயத்தால் நிகழ்ந்ததல்ல
நிர்வாகத் திறம் என்ற
நியாயத்தால் நிகழ்ந்தது
இந்த வெற்றி
உங்கள் ஆட்சியின்
மாட்சிக்குக் கிடைத்த சாட்சி
என்று சொல்லி
முதலமைச்சருக்குப்
பொன்னாடை பூட்டினேன்
பதற்றமில்லாமல்
வெற்றியின் பகட்டு இல்லாமல்
இயல்பான புன்னகையோடு இருந்தார்
வென்றார்க்கு அழகு
தோற்றாரை மதித்தல்
தோற்றார்க்கு அழகு
வென்றாரை வியத்தல்
பதவிக்கு அழகு
உதவிகள் தொடர்தல்
மக்களுக்கு அழகு
மறுவேலை பார்த்தல்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நாற்பதுக்கு நாற்பது என்பது
— வைரமுத்து (@Vairamuthu) June 5, 2024
மாயத்தால் நிகழ்ந்ததல்ல
நிர்வாகத் திறம் என்ற
நியாயத்தால் நிகழ்ந்தது
இந்த வெற்றி
உங்கள் ஆட்சியின்
மாட்சிக்குக் கிடைத்த சாட்சி
என்று சொல்லி
முதலமைச்சருக்குப்
பொன்னாடை பூட்டினேன்
பதற்றமில்லாமல்
வெற்றியின் பகட்டு இல்லாமல்
இயல்பான புன்னகையோடு இருந்தார்… pic.twitter.com/bCcJQKJfDL
- திருப்பாச்சிக்கு முதலில் ஒரு தலைப்பு வைத்தோம்.
- பாடல் வரிகளை மட்டும் கொடுக்கவில்லை தலைப்புகளையும் கொடுத்து வருகிறார்.
ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ் சார்பில் விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி தயாரிப்பில், காளிமுத்து காட்டமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் "வேட்டைக்காரி." புதுமுக நடிகர் ராகுல் நடித்துள்ள இந்த படத்தில் சஞ்சனா சிங் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் இசை, டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பேரரசு, "சில தினங்களுக்கு முன்பு ஒரு இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டேன், அப்போது அந்த பட இயக்குநர் படத்திற்கு தலைப்பு வைத்தவர் வைரமுத்து என்றார், இந்த படத்தின் இயக்குநர் காளிமுத்துவும் இந்த படத்திற்கு வைரமுத்து சார் தான் தலைப்பு வைத்ததாக சொன்னார். எனவே வைரமுத்து சார் பாடல் வரிகளை மட்டும் கொடுக்கவில்லை தலைப்புகளையும் கொடுத்து வருகிறார்."
![](https://media.maalaimalar.com/h-upload/2024/05/31/2417095-vettaikkaran.webp)
"அவர் தமிழ்ப் பட தலைப்புகள் மீது கடும்கோபம் கொண்டிருக்கிறார். அதனால் தான் இப்போது அவரே களத்தில் இறங்கி தலைப்பு வைக்க தொடங்கி விட்டார். இந்த நேரத்தில் நான் ஒரு உண்மையை சொல்ல வேண்டும், திருப்பாச்சி என்ற தலைப்பும் வைரமுத்து சார் தான் கொடுத்தார்."
"திருப்பாச்சிக்கு முதலில் ஒரு தலைப்பு வைத்தோம், அதை விஜய் சார், செளத்ரி சார் ஏற்றுக்கொண்டார்கள். பதிவு செய்யும் போது அந்த தலைப்பு வேறு ஒருவரிடம் இருந்தது, நாங்கள் எவ்வளவு கேட்டும் கொடுக்கவில்லை. புதிய தலைப்பு என்ன வைப்பது என்று தெரியாமல் எங்கள் குழுவே குழப்பமடைந்த நிலையில், தொலைக்காட்சியில் ஒரு பாடல் பார்த்தேன், "திருப்பாச்சி அருவாள தூக்கிக்கிட்டு வாடா...வாடா." என்ற பாடல் அது. அந்த பாடலை கேட்டதும், என் பட நாயகன் அருவா செய்பவர், என்றவுடன் திருப்பாச்சி என்ற தலைப்பு சரியாக இருக்கும் என்று தோன்றியது, உடனே அந்த தலைப்பை வைத்துவிட்டேன். ஆகையால், எனக்கும் தலைப்பு கொடுத்தவர் வைரமுத்து சார் தான்," என்று தெரிவித்தார்.
- இசைஞானி இளையராஜா தனது பாடல்களை அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக்கூடாது என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
- நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் வைரமுத்து, "இசை பெரிதா? மொழி பெரிதா? இசைக்கு நிகரானது மொழி என்று கொள்ளாதவர்கள் அங்ஞானி" என்று பேசி இருந்தார்.
இசைஞானி இளையராஜா தனது பாடல்களை அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக்கூடாது என்று தொடர்ந்து கூறி வருகிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'கூலி' பட அறிமுக டீசரில் தனது பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து இளையராஜாவைச் சுற்றி சர்ச்சைகள் உருவாகத் தொடங்கின.
இதனையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் வைரமுத்து, "இசை பெரிதா? மொழி பெரிதா? இசைக்கு நிகரானது மொழி என்று கொள்ளாதவர்கள் அங்ஞானி" என்று பேசி இருந்தார். இதன்மூலம் இளையராஜாவை மறைமுகமாக அவர் சாடியுள்ளார் என்ற விவாதம் எழுந்தது.
இந்த விவாதத்தை மேலும் வளர்க்கும் வகையில், இளையராஜாவின் சகோதரர் கங்கையமரன், அறிக்கை வெளியிட்டு வைரமுத்துவை சாடினார். இந்த சர்ச்சை சமூக வலைத்தளங்களில் பூதாகரமாக மாறியுள்ள நிலையில் இதுகுறித்து தற்போது இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், "என்னை பற்றி ஏதாவது ஒரு வகையில் தினமும் இது போன்ற வீடியோக்கள் வந்துகொண்டு இருக்கிறது என்று எனக்கு வேண்டியவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் இதில் கவனம் செலுத்துவதில்லை. மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை.
![](https://media.maalaimalar.com/h-upload/2024/05/16/2236036-untitleddesign15.webp)
என் வேலைகளை கவனிப்பது தான் என் வேலை. நான் என் வழியில் ரொம்ப க்ளீனா சுத்தமா போய்கிட்டு இருக்கேன். நீங்கள் என்னை வாழ்த்திக்கொண்டிருக்கும் நேரத்தில் கடந்த ஒரு மாதத்தில், ஒரு சிம்பொனியை எழுதி முடித்துவிட்டேன் என்ற சந்தோஷமான செய்தியை நான் உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இசை பெரிதா? மொழி பெரிதா? என்ற விவாதங்கள் நடந்து வருகின்றன.
- ஒரு படம் தயாராவது கூட்டு முயற்சியால் தான்.
இசையமைப்பாளர் இளையராஜா பாடல் உரிமை தனக்கே சொந்தம் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது முதல் இசை பெரிதா? மொழி பெரிதா? என்ற விவாதங்கள் நடந்து வருகின்றன. இதில் திரையுலக பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகை குஷ்பு இசை பெரிதா? மொழி பெரிதா என்ற கேள்விக்கு பதில் அளித்து கூறும்போது, "சினிமா துறையில் எல்லா விஷயங்களுமே கூட்டு முயற்சியால்தான் நடக்கிறது. எது பெரிது என்ற விஷயத்தை இயக்குனரும், இசையமைப்பாளரும் தான் பேச வேண்டும். இளையராஜாவுக்கும், வைரமுத்துக்கும் இடையே பிரச்சினை இருந்தால் அவர்கள்தான் பேச வேண்டும்'' என்றார்.
தயாரிப்பாளர்கள் இசை எங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறுவது குறித்து ஒரு தயாரிப்பாளரான உங்களின் கருத்து என்ன என்று கேட்டபோது, `மீண்டும் சொல்கிறேன். ஒரு படம் தயாராவது கூட்டு முயற்சியால் தான். இதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை'' என்றார்.
- யாம் நிறைய கற்று விட்டோம் என தன்னைத்தானே பெருமையாக யாரும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம்
- நிறைய படித்தவருக்கு கொஞ்சம் படித்தவர்கள் கூட அச்சாணியாக இருக்கிறார்கள். இல்லையென்றால் வண்டி ஓடாது
மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அளித்த பேட்டியை தனது எக்ஸ் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், "யாம் நிறைய கற்று விட்டோம் என தன்னைத்தானே பெருமையாக யாரும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். அவ்வளவு பெரிய சூரியனை கையில் இருக்கும் குடை காத்து நிழல் கொடுக்கும். அது போல நிறைய படித்தவருக்கு கொஞ்சம் படித்தவர்கள் கூட அச்சாணியாக இருக்கிறார்கள். இல்லையென்றால் வண்டி ஓடாது" என்று மறைந்த நடிகர் குமரிமுத்து நாலடியார் பாடலை சுட்டிக்காட்டி விளக்கம் அளித்திருந்தார்
ஏ.ஆர்.ரகுமானின் இந்த பதிவை சுட்டிக்காட்டிய நெட்டிசன்கள், இளையராஜாவை ஏ.ஆர்.ரகுமான் மறைமுகமாக விமர்சித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இளையராஜா தொடர்பான கவிஞர் வைரமுத்துவின் பேச்சை, கங்கை அமரன் கண்டித்த நிலையில், ஏ.ஆர்.ரகுமானின் பதிவும் தற்போது பேசுபொருளாகி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)