கலை மேகங்கள் கூடிய தருணம்.. கவிஞர் வைரமுத்து பகிர்ந்த வீடியோ..

இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கி வரும் படம் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன'.இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தி தொடங்கியது.
வைரமுத்து
வைரமுத்து
Published on

இயக்குனர் தங்கர் பச்சான் தற்போது இயக்கி வரும் படம் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன'. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, யோகி பாபு, கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் வரிகள் எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

வைரமுத்து

இந்நிலையில் வைரமுத்து, இப்படத்தின் பாடல் உருவாக்கத்தின் போது நடந்த உரையாடல் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், "கருமேகங்கள் ஏன் கலைகின்றன படத்துக்குப் பாட்டமைக்க கலைமேகங்கள் கூடிய தருணம். தங்கர் பச்சான், ஜி.வி.பிரகாஷ், மற்றும் நான். மெட்டுக்குப் பாட்டெழுதினேன். அதில் சில காட்சிகள் உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.     

X

Maalai Malar
www.maalaimalar.com