என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "kovai man"
- ரூ. 3 லட்சத்தை ராஜேஷ் பிரித்வியிடம் கொடுத்ததார்.
- ராஜேஷ் பிரித்வி வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
கோவை,
கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் தியாகி குமரன் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 46).
இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த ராஜேஷ் பிரித்வி (35) என்பவர் அறிமுகமானார். அவர் சுப்பிரமணியிடம் கோவையில் பிரபல கல்லூரியில் சீட் வாங்கி தருகிறேன். யாருக்காவது சீட் வேண்டும் என்றால் சொல்லுங்கள் என கூறினார்.
இதனை நம்பிய சுப்பிரமணி தனது மகனை கல்லூரியில் சேர்க்க வேண்டும் என கூறினார். அதற்கு ராஜேஷ் பிரித்வி கல்லூரியில் சீட் வாங்குவதற்கு பணம் செலவாகும் .
அதற்கு ரூ. 3 லட்சம் வேண்டும் என கூறினார். இதனையடுத்து சுப்பிரமணி தனது மகனின் சீட்டிற்காக ரூ.3 லட்சத்தை ராஜேஷ் பிரித்வியிடம் கொடுத்ததார். ஆனால் பணத்தை பெற்ற பின்னர் கல்லூரியில் சீட் வாங்கி கொடுக்கவில்லை. மேலும் ராஜேஷ் பிரித்வி வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுப்பிரமணி இது குறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் கல்லூரில் சீட் வாங்கித்தருவதாக கூறி ரூ.3 லட்சம் பணத்ஏதை பெற்று ஏமாற்றிய ராஜேஷ் பிரித்வி மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொது இடங்கள் மற்றும் கோவில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு இந்து அமைப்பினரும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
- விதிமுறைகளை மீறி கூடுதல் சிலைகளை வைக்க கூடாது என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
கோவை
கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு தொடர்பாக இன்று இந்து அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் வரும் 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்கள் மற்றும் கோவில்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு இந்து அமைப்பினரும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். விசர்ஜன ஊர்வலத்தின்போது எந்த அசம்பாவித சம்பவங்களும் நடக்காதவாறு செல்ல வேண்டும். விதிமுறைகளை மீறி கூடுதல் சிலைகளை வைக்க கூடாது என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்