என் மலர்
நீங்கள் தேடியது "Ganesha idols"
- அடுத்த மாதம் 27-ந்தேதி கோவில்களில் உழவாரப் பணி நடக்கிறது.
- கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஊட்டி,
இந்து முன்னணி நீலகிரி மாவட்ட செயற்குழு கூட்டம் ஊட்டியில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வேலுச்சாமி முன்னிலை வகித்தார்.
செயற்குழு கூட்டத்தில் நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தியின் போது, மாவட்டம் முழுவதும் 750 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வது, அடுத்த மாதம் 27-ந்தேதி கோவில்களில் உழவாரப் பணி நடத்துவது, நீலகிரி மாவட்டத்தில் நகரம், ஒன்றியம், பஞ்சாயத்து, வார்டுகளில் இந்து முன்னணி கிளைகள் அமைப்பது, ஞாயிற்றுக்கிழமை தோறும் பொறுப்பாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவது ஆகியவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- சதுர்த்தி விழாவிற்காக ஒரு அடி முதல் 10 அடி உயரம் வரை சிலைகள் தயாரிக்கப்படுகிறது.
- ரசாயன பொருட்கள் எதுவும் கலங்காமல் கிழங்கு மாவு கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றது.
திருவாரூர்:
சதுர்த்தி விழாவையொட்டி திருவாரூரில், விற்பனைக்கு விநாயகர் சிலைகள் தயார் நிலையில் உள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்படும் பண்டிகையாக இருந்து வருகிறது.
விழாவையொட்டி இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி, பின்னர் வாகனங்களில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந் தேதி நடக்கிறது.
சதுர்த்தி விழாவிற்காக திருவாரூர் சேந்தமங்கலத்தில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பொம்மை தயாரிக்கும் தொழிலாளர்கள் விநாயகர் சிலைகளை வடிவமைத்து வர்ணம் தீட்டி வருகின்றனர்.
இதற்கான பணிகள் விறு, விறுப்பாக நடந்து வருகிறது.
பல்வேறு வண்ணங்களில் அனைவரும் கவர்ந்து இழுக்கும் வகையில் கிழங்கு மாவினை கொண்டு 10 அடி உயரம் வரையில் விநாயகர் சிலைகள் தயரித்து விற்பனைக்கு தயார் நிலையில் வைத்துள்ளனர்.
இதுகுறித்து ராஜஸ்தான் மாநில தொழிலாளி புறான் கூறுகையில், நான் திருவாரூருக்கு வந்து 18 ஆண்டுகள் ஆகின்றது. சுவாமிகள் உள்பட அனைத்து விதமான பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.
இதில் விநாயகர் சதுர்த்தி என்பது மிக சிறப்புக்குரியது.
சதுர்த்தி விழாவிற்காக ஒரு அடி முதல் 10 அடி உயரம் வரை சிலைகள் தயாரிக்கப்படுகிறது. எளிதில் கரைய கூடிய வகையில் ரசாயன பொருட்கள் எதுவும் கலங்காமல் கிழங்கு மாவு கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றது.
கடந்த 3 மாதங்களாக இந்த பணி மேற்கொண்டு வருகிறோம். கை, கால், உடல், தலை என தனித்தனியாக தயாரித்து, அதனை இணைத்து விநாயகர் சிலை உருவாக்கப்படுகிறது.
ஒவ்வொரு சிலைகளும் ஒவ்வொரு வடிமைப்பில் உருவாக்கியுள்ளோம். நம்பிக்கை திருவாரூர் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து சிலைகளை வாங்கி செல்கின்றனர். கடவுள் சிலைகள் எங்கள் குடும்பத்தினை பாதுகாத்து வருகிறது. இந்த ஆண்டு நிச்சயம் சிறப்பான விற்பனை நடைபெறும் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.
- விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது
- ஊர்வலத்தில் பட்டாசு, வெடிகள் போன்றவைகளை உபயோகிக்கக் கூடாது
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு சிலை நிறுவுதல் மற்றும் விசர்ஜன ஊர்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது:-
விநாயகர் சிலை அமைப்பாளர்கள் நிறுவுவதற்கு மாநகராட்சி பகுதியினை பொறுத்தவரையில் தொடர்புடைய காவல் உதவி ஆணையர்களிடமும், ஊரகப்பகுதிகளில் தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியர்கள் ஆகியோரிடமும் உரிய அனுமதி பெற்று விநாயகர் சிலைகளை நிறுவிட வேண்டும்.சிலைகள் — சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் களிமண்ணால் ஆனதாக இருக்க வேண்டும். சிலைகளுக்கு நீர் நிலைகளை மாசுபடுத்தாத இயற்கை வர்ணங்கள் மட்டுமே பூசப்பட்டிருக்க வேண்டும். ரசாயன வர்ணப்பூச்சு மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்றவற்றால் ஆன சிலைகள் பயன்படுத்தக்கூடாது. பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளின் உயரம் பீடம் மற்றும் மேடையுடன் சேர்த்து அதிகபட்சம் 10 அடிக்கும் மேலாக இருக்ககூடாது.
விநாயகர் சிலை நிறுவப்படும் இடங்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு மேற்கூரை மற்றும் பக்கவாட்டில் தடுப்புகள் அமைக்கக்கூடாது. இதர மத வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் சிலைகளை நிறுவுதல் கூடாது. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக சம்மந்தப்பட்ட அமைப்பினரால் நிறுவப்படும் ஒவ்வொரு சிலைக்கும் 24 மணி நேரமும் சிலையின் பாதுகாப்பிற்கு பொறுப்பு ஏற்கும் வகையில் பொறுப்பாளர்களை நியமித்திட வேண்டும்.
மாநகராட்சி பகுதியினை பொறுத்தவரையில் தொடர்புடைய காவல் உதவிஆணையர்களிடமும் ஊரகப் பகுதிகளில் தொடர்புடைய சார் ஆட்சியர்-வருவாய் கோட்டாட்சியர்கள் ஆகியோரிடமும் அதன் விபரங்களை தெரிவிக்கப்பட வேண்டும். விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்கும் சிலைகள், காவல் துறையினரால் அனுமதியளிக்கப்பட்ட பாதையில் தான் செல்ல வேண்டும். தவறும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊர்வலத்தில் பட்டாசு, வெடிகள் போன்றவைகளை உபயோகிக்கக் கூடாது. ஊர்வலத்தின் போது காவல்துறையின் அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் எக்காரணத்தைக் கொண்டும் ஊர்வலம் செல்லக்கூடாது. ஊர்வலத்தின் போது பிற மதத்தினரை குறிப்பிட்டோ அல்லது மற்றவர்களது மனம் புண்படும்படியோ கோஷமிடல் கூடாது. ஊர்வலம் போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ இடையூறு இல்லாத வகையில் நடைபெற வேண்டும்.
மேலும் பிரதான சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில், சாலையின் இடதுபுறமாக செல்ல வேண்டும். ஊர்வலத்தின் போது எந்த விதமானஅசம்பாவிதமும் ஏற்படாமல் இருப்பதற்கும், அமைதியாக ஊர்வலம் நடத்தி முடிக்கவும், ஊர்வலத்தை நடத்துகிற பொறுப்பாளர்கள் முழு பொறுப்பினையும் ஏற்க வேண்டும்.
மேலும் விநாயகர் சிலை நிறுவப்படும் இடங்களில் போதுமான மின் விளக்கு வசதிகள் செய்யப்படல் வேண்டும். ஊர்வலத்தின் போது போக்குவரத்திற்கோ, பொது சொத்திற்கோ சேதம் விளைவித்தால் அமை ப்பாளர்கள் தான் முழு பொறுப்பாளர் ஆவார்கள்.
நிறுவப்பட்ட அனைத்து விநாயகர் சிலைகளும் வருவாய் கோட்டாட்சியர்கள்-காவல் உதவி ஆணையர், காவல் துணை கண்காணிப்பாளர்களால் வரையறுக்கப்பட்ட கால அளவிற்குள் விசர்ஜனம் செய்யப்பட வேண்டும். நான்கு சக்கர வாகனங்களான மினி லாரி-டிராக்டர் போன்றவற்றில் மட்டுமே சிலைகள் விசர்ஜனத்திற்காக எடுத்துச் செல்லப்பட வேண்டும். மாட்டுவண்டி-3 சக்கர வாகனங்களில் சிலைகளை எடுத்துச் செல்லக்கூடாது. இது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை சம்மந்தப்பட்ட அமைப்புகள் பின்பற்றி நடக்க வேண்டும்.
விநாயகர் சதூர்த்தி திருவிழாவின் போது சட்டம் ஒழுங்கினை பராமரித்திட அனைத்து அமைப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இந்த கலந்தாய்வுக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர் பிரவின்குமார் அபிநபு , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) கிர்திகா எஸ்.விஜயன், துணை காவல் கண்காணிப்பாளர் வனிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விழா அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
- விநாயகர் சதுர்த்தியையொட்டி பாளை சமாதானபுரம், மார்க்கெட் பகுதிகள்உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி இரவு பகலாக மும்மரமாக நடைபெற்று வருகிறது.
- கையில் தூக்கி செல்லும் வகையிலான சிறிய சிலைகள் ரூ.150 முதல் ரூ.500 வரை விற்பனையாகிறது.
நெல்லை:
நாடு முழுவதும் வருகிற 18-ந் தேதி(திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி கோலா கலமாக கொண்டாடப்பட உள்ளது.
நெல்லை
தமிழகத்தில் மாவட்டங்கள் தோறும் வீடுகளிலும், பொதுவான சில இடங்களிலும் விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். பின்னர் அவை மக்கள் புடைசூழ ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
நெல்லை மாவட்டத்திலும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டா டப்படும்.
பா.ஜனதா மற்றும் இந்து முன்னணி, அகில பாரத இந்து மகா சபா, சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பொது இடங்கள், வீடுகள் மற்றும் கோவில்களில் ஆயிரக்கணக்கில் பிரதிஷ்டை செய்யப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும். இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பாளை சமாதானபுரம், கிருபா நகர், மார்க்கெட் பகுதிகள், சீவப்பேரி சாலை உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி இரவு பகலாக மும்மரமாக நடைபெற்று வருகிறது. அங்கு ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் சுமார் 15-க்கும் மேற்பட்ட வடமாநிலத்த வர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து சிலைகள் தயாரித்து வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு 3 அடி உயரம் முதல் 9 அடி உயரம் வரை சிலைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் குறைந்தபட்சமாக விநாயகர் சிலை ரூ.100 முதலும், அதிகபட்சமாக பெரிய சிலைகள் ரூ.25 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படு கின்றன. கையில் தூக்கி செல்லும் வகையிலான சிறிய சிலைகள் ரூ.150 முதல் ரூ.500 வரை விற்பனையாகிறது.
பல்வேறு வடிவங்கள்
அங்கு சிவன், பார்வதியுடன் கூடிய விநாயகர், லெட்சுமி விநாயகர், ராஜ விநாயகர், 3 முகம் கொண்ட விநாயகர், நந்தி விநாயகர், சிவன் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களிலும், வண்ணங்க ளிலும் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணர்- ராதை, வெற்றி விநாயகர், எலி மற்றும் புலியின் மேல் அமர்ந்திருக்கம் விநாயகர், ராஜ விநாயகர், சுயம்பு விநாயகர் என பல வடிவங்களில் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக தயார் செய்யப்படும் சிலைகள் கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும், திண்டுக்கல், திருச்சி, மதுரை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
- விநாயகர் சிலை வைக்க அனுமதி பெற வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்காக
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடும் நபர்கள், அமைப்புகள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆகியோர் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 2 வாரங்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் முன் அனுமதி பெற்று சிலை வைக்க வேண்டும். அதன்படி தாங்கள் சிலை வைக்கும் இடம், சிலை வைக்கும் நாள், சிலை கரைக்கும் இடம் மற்றும் தேதி, ஊர்வலம் செல்லும் பாதை, சிலை பாதுகாப்பிற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் ஆகியவை குறித்து போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவித்து, முறையான முன் அனுமதி பெற்ற பிறகே விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும். இது தொடர்பாக போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடத்தப்படும் கூட்டங்களிலும் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். மேலும் அனுமதி இல்லாமல் சிலைகள் வைத்தல் கூடாது என்று பெரம்பலூர் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.
- இந்து முன்னனி அமைப்பாளர்கள், பி.ஜே.பி கட்சியினர் தனியாக சிலை வைப்போர் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- சுகாதாரத்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோசித்து கேட்ட வசதிகளை ஏற்படுத்தி தருவதாக கூறினர்.
மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், திருப்போரூர் சுற்றுவட்டார பகுதிகளில் வரும் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு வைக்கப்படும் சிலைகள் மற்றும் அதை கடலில் கரைக்கும் இடத்தில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து, இன்று மாமல்லபுரத்தில் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் பகுதி காவல் ஆய்வாளர்கள், இந்து முன்னனி அமைப்பாளர்கள், பி.ஜே.பி கட்சியினர் தனியாக சிலை வைப்போர் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனை கூட்டத்தில் விநாயகர் சிலைகள் வைக்கும் நபர்கள் அதை வாங்க செல்லும்போது ஊர்வலமாக செல்லக்கூடாது, சிலைகளை வைக்கும் பகுதி பாதுகாப்பாக இருக்க வேண்டும், பிற மதத்தினர் பகுதியில் இடையூறு செய்ய கூடாது, உயர்நீதிமன்ற உத்தரவின் படி பதாகைகள் வைக்க கூடாது, பிளாஸ்டிக், ரசாயனம் கலந்த சிலைகள் வைக்க கூடாது, நன்கொடை என்ற பெயரில் அடாவடி செய்யக்கூடாது, சிலைகளை கரைப்பதற்கு கடற்கரை வரும்போது மது அருந்தி விட்டு கோஷங்கள் போடக்கூடாது, போலீசார் கூறும் பாதை வழியாக மட்டுமே சிலைகளை எடுத்து வரவேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.
சிலைகள் வைக்கும் பக்தர்கள் அந்த சிலைகளை கரைக்க மாமல்லபுரம் கடற்கரை வரும்போது தங்களுக்கு குடிநீர், கழிப்பறை, கிரேன், மருத்துவ மையம், ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட வசதிகள் தேவை என போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர்.
போலீசார் அவர்களிடம் வருவாய்துறை, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை உள்ளிட்டோரிடம் ஆலோசித்து கேட்ட வசதிகளை ஏற்படுத்தி தருவதாக கூறினர்.
- ரூ.15 ஆயிரம் வரை விற்பனைக்கு தயாராக உள்ளதாக தகவல்
- 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது
ஜோலார்பேட்டை:
வருகிற 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது.
ஜோலார்பேட்டை ஒன்றியம் கட்டேரி ஊராட்சிக்கு உட்பட்ட கட்டேரியம்மன் கோவில் பின்புறம் திருப்பத்தூர்- நாட்டறம்பள்ளி சாலையில் ஒரு அடி முதல் 10 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளது.
அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை விற்பனைக்கு தயாராக உள்ளதாக தெரிவித்தனர்.
- ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் புதுக்கோட்டைக்கு விற்பனைக்காக விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டுள்ளன
- மரக்கூழ், மரவள்ளிக்கிழங்கினால் செய்யப்பட்டது என்பதால் சுற்றுசூழல் மாசு ஏற்படாது
புதுக்கோட்டை
விநாயகப் பெருமானின் அவதார தினத்தை நாம் விநாயகர் சதுர்த்தியாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம். ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயகப் பெருமான் அவதரித்ததாக புராணங்கள் சொல்கின்றன. விநாயகர் சதுர்த்தி நாளில் வீடுகளில் பல வண்ணங்களில், களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கி வந்து பிரதிஷ்டை செய்து, விநாயகருக்கு விருப்பமான அருகம்புல், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கடலை, பழங்கள் படைத்து வழிபடுவார்கள். விநாயகர் பூஜை முடிந்ததும் 3,5,7 அல்லது 10 வது நாளில் வீடுகளில் வைத்து வழிபடப்பட்ட விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து பூஜை செய்து, ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
வழக்கமாக விநாயகர் சதுர்த்தியானது ஆவணி மாதத்தில் தான் வரும். ஆனால் இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் வருகிறது. பெருமாளுக்குரிய புரட்டாசி மாதம் துவங்கும் நாளிலேயே, முழு முதற்கடவுளான விநாயகருக்கு உரிய விநாயகர் சதுர்த்தியும் இணைந்து வருவதால் இது கூடுதல் சிறப்பு வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி 18ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் விநாயகர் சிலைகள் செய்யும் பணியில் தொழிலாளிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போதே விநாயகர் சிலை விற்பனை தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில் ஆங்காங்கு விநாயகர் சிலை விற்பனை நடைபெற்று வருகிறது.
இதற்காக ஆந்திரா, ராஜஸ்தான், கொல்கொத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து அரை அடி முதல் 10 அடி உயரம் வரையிலான பல வண்ண சிலைகள் புதுக்கோட்டைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளது. குறிப்பாக ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் வண்ண வண்ண விநாயகர் சிலைகள் புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலமாக புதுக்கோட்டை திலகர் திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விநாயகர் சிலைகள் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் பேப்பர் கூல், மரவள்ளி கிழங்கு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது. இதனால் நீர் நிலைகள் மாசு படாமல் பாதுகாக்கப்படும். இந்த சிலைகள் அனைத்தும் 50 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனைக்காக காட்சி படுத்தப்பட்டு உள்ளன.
இந்து முன்னணி சார்பில் ஆந்திராவில் இருந்து 67 விநாயகர் சிலைகள் வருவிக்கப்பட்டு உள்ளது. இதில் 48 விநாயகர் சிலைகள் புதுக்கோட்டை நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி நெருங்கி வருவதை தொடர்ந்து தற்போதே விநாயகர் சிலை விற்பனையானது புதுக்கோட்டையில் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
- நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி விழா. வருகிற 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
- விநாயாகர் சிலைகள் அரை அடி முதல் 15 அடி உயரம் வரை தயாரிக்கப்படுகிறது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி விழா. வருகிற 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
விழாவையொட்டி விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுவையை அடுத்த தமிழக குதியான கூனிமுடக்கு கிராமத்தில் 4 தலைமுறையாக விநாயகர் சிலைகள் உருவாக்கி வருகின்றனர்.
பாரம்பரியமாக விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் உள்ள குடும்பங்கள் ஈடுபட்டு வருகிறது.மரவள்ளி கிழங்கு மாவு மற்றும் காகித கூழ் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த விநாயாகர் சிலைகள் அரை அடி முதல் 15 அடி உயரம் வரை தயாரிக்கப்படுகிறது.
ஜனவரி மாதம் முதல் இந்த சிலை தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் சிலைகள் ரூ 2 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு புதிய வரவாக புல்லட் விநாயகர், பாகுபலி விநாயகர், விவசாய விநாயகர், கருப்பு விநாயகர் ஆகியவை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிகொண்ட விநாயகர் அன்ன விநாயகர், சிவன்பார்வதி விநாயகர், திருமூர்த்தி விநாயாகர், பஞ்ச மூர்த்தி விநாயகர், ஆஞ்சநேய விநாயகர், ராஜ விநாயகர் என 30-க்கும் மேற்பட்ட வகைளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு ரசாயன கலப்பு இல்லாத வண்ணங்கள் பூசப்படுகிறது
வழக்கத்தை விட விலைவாசி இந்த ஆண்டு அதிகரித்துள்ளதால் இந்த முறை சிலைகளின் விலை அதிகரித்துள்ளது.சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு தயாரிக்கப்படும் இந்த சிலைகள் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் உள்ளூரிலும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
- தேனி மாவட்டம் போடி நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் சுமார் 64 இடங்களில் சிலை பிரதி ஷ்டை செய்ய திட்டமிட ப்பட்டள்ளது.
- விநாயாகர் சிலை ஊர்வலம் போலீ சார் வழிகாட்டுதலின் படி குறிப்பிட்ட சாலைகளில் நடைபெற உள்ளது.
மேலசொக்கநாதபுரம்:
நாடு முழுவதும் வருகிற 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல்வேறு இந்து அமைப்பினர் 3 அடி முதல் 12 அடிவரை விநாயகர் சிலை அமைக்க ஏற்பாடு செய்து வருகின்ற னர். தேனி மாவட்டம் போடி நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் சுமார் 64 இடங்களில் சிலை பிரதி ஷ்டை செய்ய திட்டமிட ப்பட்டள்ளது.
இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர். பல்வேறு வகையிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விநாயாகர் சிலை ஊர்வலம் போலீ சார் வழிகாட்டுதலின் படி குறிப்பிட்ட சாலைகளில் நடைபெற உள்ளது.
- 3 அடி முதல் அதிகபட்சமாக 11 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
- இன்று நகர பகுதியில் இருந்து இடம் வாரியாக விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டது.
திருப்பூர்:
விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பூர் மாவட்டம் முழுவதும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். இந்து முன்னணி அமைப்பு சார்பில் விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் அனுப்பி வைக்கும் பணி நேற்று தொடங்கியது. மயில்வாகன விநாயகர், சிவசக்தி விநாயகர், சிம்ம வாகன விநாயகர், குபேர விநாயகர் உள்பட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
3 அடி முதல் அதிகபட்சமாக 11 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். திருப்பூர் மாநகர பகுதியில் 1,000 விநாயகர் சிலைகளும், மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் விநாயகர் சிலைகளும் வருகிற 18-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது என்று இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார் தெரிவித்தார்.
இதற்காக ஒவ்வொரு பகுதியாக விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இன்று நகர பகுதியில் இருந்து இடம் வாரியாக விநாயகர் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டது. நாளை 18-ந் தேதி காலை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
19-ந் தேதி பொங்கலூர், குண்டடம், காங்கயம், ஊத்துக்குளி, குன்னத்தூர் பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட உள்ளது. வருகிற 20-ந் தேதி அவினாசி, உடுமலை, பல்லடம், செஞ்சேரிமலை பகுதியில் உள்ள விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகிறது. 21-ந் தேதி திருப்பூரில் புதிய பஸ் நிலையம், செல்லம் நகர் பிரிவு, தாராபுரம் ரோடு ஆகிய 3 இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் தொடங்கி ஆலாங்காட்டில் இரவு பொதுக்கூட்டம் நடக்கிறது. பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன், சிவலிங்கேஸ்வர சாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்கள்.
அதன்பிறகு விசர்ஜனம் செய்ய சிலைகள் சாமளாபுரம் குளத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
- விநாயகர் சதுர்த்தி விழா நாளை (18-ந்தேதி) சேலம் மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
- போலீசாரிடம் அனுமதி பெற்ற பிறகே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
சேலம்:
விநாயகர் சதுர்த்தி விழா நாளை (18-ந்தேதி) சேலம் மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வைத்து வழிபாடு நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போலீசாரிடம் அனுமதி பெற்ற பிறகே விநாயகர் சிலைகள் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி சிலைகள் வைப்பதற்கான அனுமதியை பெற பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாவட்ட நிர்வாகத்தை நாடினர்.
மேலும் பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதற்காக பந்தல், மின் விளக்குகள் அலங்காரம், ரேடியோ செட் ஆகியவை அமைத்துள்ளனர். பந்தலில் வாழைதார்கள் , பூக்கள் அலங்காரம், ஒவ்வொரு நாளும் பூைஜ செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
1915 ஆயிரம் விநாயகர் சிலைகள்
இந்த நிலையில் சேலம் மாவட்டம் முழுவதும் 1,915 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதில் சேலம் புறநகர் பகுதியில் உள்ள ஆத்தூர், சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், வாழப்பாடி ஆகிய 5 போலீஸ் உட்கோட்டத்தில் மட்டும் 1050 இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் சேலம் மாநகரில் மட்டும் 865 இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு அந்த இடங்கயில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்து வழிபாடு செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதுதவிர இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது.
3,200 போலீசார் குவிப்பு
இதற்காக சேலம் புறநகர் பகுதியில் 2000 போலீசாரும், மாநகர் பகுதியில் 1200 போலீசாரும் என மொத்தம் 3,200 போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிலை வைக்கப்படும் இடங்களில் இன்று காலை முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ரோந்து போலீசாரும் இந்த இடங்களில் அவ்வப்போது வாகனங்களில் சென்று கண்காணித்து வருகின்றனர்.
மேலும் வீதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதற்கு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் அனுமதி பெறாமல் சிலை வைத்துள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
16 இடங்களில் கரைக்க முடிவு
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளை கரைத்திட வேண்டும் என சேலம் கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில் சேலம் மாநகர எல்லைக்குட்பட்டவர்கள் மூக்கனேரியில் விநாயகர் சிலைகளை கரைத்திட வேண்டும். மேலும் சேலம் ஊரக பகுதிகளான சங்ககிரி உட்கோட்டம், தேவூர் போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் கல்வடங்கம் பகுதியிலும், பூலாம்பட்டி போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் சந்தைபேட்டை, பில்லுக்குறிச்சி, கோம்பைக்காடு ஆகிய பகுதிகளிலும், ஆத்தூர் உட்கோட்டம், தம்மம்பட்டி போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் ஜங்கமசமுத்திரம், செந்தாரப்பட்டி ஏரியிலும், ஆத்தூர் ஊரகம் போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் முட்டல் ஏரி மற்றும் ஒட்டம்பாறை ஏரியிலும் சிலைகளை கரைத்திட வேண்டும்.
மேட்டூர் உட்கோட்டம் மேட்டூர் போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் காவேரி பாலம் பகுதியிலும், கொளத்தூர் போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் சென்றாய பெருமாள் கோவில் பகுதியிலும், கருமலைக்கூடல் போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் திப்பம்பட்டியிலும், மேச்சேரி போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் கூனாண்டியூர், கீரைக்காரனூரிலும் விநாயகர் சிலைகளை கரைத்திட வேண்டும்
ஓமலூர் உட்கோட்டம் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் டேனீஷ்பேட்டை ஏரியிலும், வாழப்பாடி உட்கோட்டம, வாழப்பாடி போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் ஆணைமடுவு அணை பகுதியிலும், கருமந்துறை போலீஸ் நிலையத்திற்குட் பட்டவர்கள் மணியார்குண்டம் ஏரியிலும் சிலைகளை கரைத்திட நீர்நிலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தவிர பிற இடங்களில் சிலைகளை கரைப்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.






