search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Collector notice"

    • விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் குறித்து கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது
    • ஊர்வலத்தில் பட்டாசு, வெடிகள் போன்றவைகளை உபயோகிக்கக் கூடாது

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு சிலை நிறுவுதல் மற்றும் விசர்ஜன ஊர்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்ததாவது:-

    விநாயகர் சிலை அமைப்பாளர்கள் நிறுவுவதற்கு மாநகராட்சி பகுதியினை பொறுத்தவரையில் தொடர்புடைய காவல் உதவி ஆணையர்களிடமும், ஊரகப்பகுதிகளில் தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியர்கள் ஆகியோரிடமும் உரிய அனுமதி பெற்று விநாயகர் சிலைகளை நிறுவிட வேண்டும்.சிலைகள் — சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் களிமண்ணால் ஆனதாக இருக்க வேண்டும். சிலைகளுக்கு நீர் நிலைகளை மாசுபடுத்தாத இயற்கை வர்ணங்கள் மட்டுமே பூசப்பட்டிருக்க வேண்டும். ரசாயன வர்ணப்பூச்சு மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்றவற்றால் ஆன சிலைகள் பயன்படுத்தக்கூடாது. பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளின் உயரம் பீடம் மற்றும் மேடையுடன் சேர்த்து அதிகபட்சம் 10 அடிக்கும் மேலாக இருக்ககூடாது.

    விநாயகர் சிலை நிறுவப்படும் இடங்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு மேற்கூரை மற்றும் பக்கவாட்டில் தடுப்புகள் அமைக்கக்கூடாது. இதர மத வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் சிலைகளை நிறுவுதல் கூடாது. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக சம்மந்தப்பட்ட அமைப்பினரால் நிறுவப்படும் ஒவ்வொரு சிலைக்கும் 24 மணி நேரமும் சிலையின் பாதுகாப்பிற்கு பொறுப்பு ஏற்கும் வகையில் பொறுப்பாளர்களை நியமித்திட வேண்டும்.

    மாநகராட்சி பகுதியினை பொறுத்தவரையில் தொடர்புடைய காவல் உதவிஆணையர்களிடமும் ஊரகப் பகுதிகளில் தொடர்புடைய சார் ஆட்சியர்-வருவாய் கோட்டாட்சியர்கள் ஆகியோரிடமும் அதன் விபரங்களை தெரிவிக்கப்பட வேண்டும். விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்கும் சிலைகள், காவல் துறையினரால் அனுமதியளிக்கப்பட்ட பாதையில் தான் செல்ல வேண்டும். தவறும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊர்வலத்தில் பட்டாசு, வெடிகள் போன்றவைகளை உபயோகிக்கக் கூடாது. ஊர்வலத்தின் போது காவல்துறையின் அனுமதி மறுக்கப்பட்ட இடங்களில் எக்காரணத்தைக் கொண்டும் ஊர்வலம் செல்லக்கூடாது. ஊர்வலத்தின் போது பிற மதத்தினரை குறிப்பிட்டோ அல்லது மற்றவர்களது மனம் புண்படும்படியோ கோஷமிடல் கூடாது. ஊர்வலம் போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ இடையூறு இல்லாத வகையில் நடைபெற வேண்டும்.

    மேலும் பிரதான சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில், சாலையின் இடதுபுறமாக செல்ல வேண்டும். ஊர்வலத்தின் போது எந்த விதமானஅசம்பாவிதமும் ஏற்படாமல் இருப்பதற்கும், அமைதியாக ஊர்வலம் நடத்தி முடிக்கவும், ஊர்வலத்தை நடத்துகிற பொறுப்பாளர்கள் முழு பொறுப்பினையும் ஏற்க வேண்டும்.

    மேலும் விநாயகர் சிலை நிறுவப்படும் இடங்களில் போதுமான மின் விளக்கு வசதிகள் செய்யப்படல் வேண்டும். ஊர்வலத்தின் போது போக்குவரத்திற்கோ, பொது சொத்திற்கோ சேதம் விளைவித்தால் அமை ப்பாளர்கள் தான் முழு பொறுப்பாளர் ஆவார்கள்.

    நிறுவப்பட்ட அனைத்து விநாயகர் சிலைகளும் வருவாய் கோட்டாட்சியர்கள்-காவல் உதவி ஆணையர், காவல் துணை கண்காணிப்பாளர்களால் வரையறுக்கப்பட்ட கால அளவிற்குள் விசர்ஜனம் செய்யப்பட வேண்டும். நான்கு சக்கர வாகனங்களான மினி லாரி-டிராக்டர் போன்றவற்றில் மட்டுமே சிலைகள் விசர்ஜனத்திற்காக எடுத்துச் செல்லப்பட வேண்டும். மாட்டுவண்டி-3 சக்கர வாகனங்களில் சிலைகளை எடுத்துச் செல்லக்கூடாது. இது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை சம்மந்தப்பட்ட அமைப்புகள் பின்பற்றி நடக்க வேண்டும்.

    விநாயகர் சதூர்த்தி திருவிழாவின் போது சட்டம் ஒழுங்கினை பராமரித்திட அனைத்து அமைப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த கலந்தாய்வுக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர் பிரவின்குமார் அபிநபு , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) கிர்திகா எஸ்.விஜயன், துணை காவல் கண்காணிப்பாளர் வனிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விழா அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • திருவண்ணாமலை மாவட்டத்தினர்
    • கலெக்டர் முருகேஷ் அறிவிப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 31-ந் தேதி விநாயகர் சதுர்த்தி திருவிழா நடைபெறுகிறது.

    திருவிழாவினை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்படும். பின்னர் சிலைகள் நீர் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படும்.

    இந்த விழாவின்போது அசம்பாவித சம்பவத்தை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக விழா குழுவினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 9.8.2018 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவித்த நிபந்தனைகளின் அடிப்படையில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி அளிக்கப்படும். விநாயகர் சிலை வைக்க உள்ளவர்கள் அரசாணையில் குறிப்பிட்டுள்ள படிவம் 1-ல் சம்பந்தப்பட்ட உதவி கலெக்டரிடம் வருகிற 23-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிப்பதற்கு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் https://Tiruvannamalai.nic.in- என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    உதவி கலெக்டரால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

    வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் கலெக்டர் அறிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்தாண்டுகள் தொடர்ந்து புதுப்பித்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள்(பொது) ரூ.200, (மாற்றுத்திறனாளி) ரூ.600, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் (பொது) ரூ. 300, (மாற்றுத்திறனாளி) ரூ. 600, பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் (பொது) ரூ. 400 (மாற்றுத்திறனாளி) ரூ.750.பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரிகள் (பொது) ரூ. 600, (மாற்றுத்திறனாளி) ரூ. 1000. வயது வரம்பு (உதவித்தொகை பெறும் நாளில்) ஆதி-திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்குள், இதர வகுப்பினர் 40 வயதிற்குள் மாற்றுத்திறனாளிகள் உச்சவயது வரம்பு ஏதும் இல்லை. பதிவு செய்து ஓராண்டு முடிந்திருக்க வேண்டும்.

    மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமானச்சான்று தேவையில்லை. மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரிப்படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசித்தவராக இருக்க வேண்டும். மனுதாரர் முற்றிலுமாக வேலையில்லாதவராக இருக்க வேண்டும்.கல்வி நிறுவனத்திற்கு தினமும் சென்று படிக்கும் மாணவ- மாணவிகளாக இருக்கக்கூடாது. ஆனால் தொலைதூரக்கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம். மனுதாரர் உதவித் தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகப்பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும்.

    மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவினை புதுப்பித்து 5 வருடங்கள் வேலையில்லாமல் காத்திருப்பவர் கீழ்கண்ட இணையதளம் வாயிலாகவும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலும் இப்படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிப்ரவரிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து போட்டித்தேர்விற்கும் இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்வதற்கும், தேர்வு மையங்களுக்கு சென்று வருவதற்காகவும் இத்தொகை வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

    இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் உடனடியாக திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்படிவம் பெற்றுக் கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ×