என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
போடியில் சதுர்த்தியையொட்டி 64 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை
- தேனி மாவட்டம் போடி நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் சுமார் 64 இடங்களில் சிலை பிரதி ஷ்டை செய்ய திட்டமிட ப்பட்டள்ளது.
- விநாயாகர் சிலை ஊர்வலம் போலீ சார் வழிகாட்டுதலின் படி குறிப்பிட்ட சாலைகளில் நடைபெற உள்ளது.
மேலசொக்கநாதபுரம்:
நாடு முழுவதும் வருகிற 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல்வேறு இந்து அமைப்பினர் 3 அடி முதல் 12 அடிவரை விநாயகர் சிலை அமைக்க ஏற்பாடு செய்து வருகின்ற னர். தேனி மாவட்டம் போடி நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் சுமார் 64 இடங்களில் சிலை பிரதி ஷ்டை செய்ய திட்டமிட ப்பட்டள்ளது.
இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர். பல்வேறு வகையிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விநாயாகர் சிலை ஊர்வலம் போலீ சார் வழிகாட்டுதலின் படி குறிப்பிட்ட சாலைகளில் நடைபெற உள்ளது.
Next Story






