search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில்  பிரபல கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி
    X

    கோவையில் பிரபல கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி

    • ரூ. 3 லட்சத்தை ராஜேஷ் பிரித்வியிடம் கொடுத்ததார்.
    • ராஜேஷ் பிரித்வி வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

    கோவை,

    கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் தியாகி குமரன் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 46).

    இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த ராஜேஷ் பிரித்வி (35) என்பவர் அறிமுகமானார். அவர் சுப்பிரமணியிடம் கோவையில் பிரபல கல்லூரியில் சீட் வாங்கி தருகிறேன். யாருக்காவது சீட் வேண்டும் என்றால் சொல்லுங்கள் என கூறினார்.

    இதனை நம்பிய சுப்பிரமணி தனது மகனை கல்லூரியில் சேர்க்க வேண்டும் என கூறினார். அதற்கு ராஜேஷ் பிரித்வி கல்லூரியில் சீட் வாங்குவதற்கு பணம் செலவாகும் .

    அதற்கு ரூ. 3 லட்சம் வேண்டும் என கூறினார். இதனையடுத்து சுப்பிரமணி தனது மகனின் சீட்டிற்காக ரூ.3 லட்சத்தை ராஜேஷ் பிரித்வியிடம் கொடுத்ததார். ஆனால் பணத்தை பெற்ற பின்னர் கல்லூரியில் சீட் வாங்கி கொடுக்கவில்லை. மேலும் ராஜேஷ் பிரித்வி வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுப்பிரமணி இது குறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் கல்லூரில் சீட் வாங்கித்தருவதாக கூறி ரூ.3 லட்சம் பணத்ஏதை பெற்று ஏமாற்றிய ராஜேஷ் பிரித்வி மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×