search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நயன்தாரா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேற்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.
    • பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

    கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது. நேற்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.

    மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் மனைவியான துர்கா ஸ்டாலின் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினர். பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

    நேற்று இரவு நடந்த கல்யாண ரிசப்ஷனில் மொத்த திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஷங்கர் படத்தில் பிரமாண்டத்தை காண்பித்து நாம் பார்த்து இருக்கிறோம்,. ஆனால் நிஜத்தில் ஒரு பிரமாண்டமான கல்யாணத்தை தன் மகளுக்காக நடத்தி இருக்கிறார்.

     

    லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயன், ரன்வீர் சிங், அட்லீ, வெற்றிமாறன், ஏ.ஆர் ரகுமான், மோஹன்லால், நெல்சன் திலிப்குமார், அனிருத், விஜய் சேதுபதி, சிரஞ்சீவி, காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து  ரன்வீர் சிங் பாட்டு டீ.ஜே கவுதமிடம் வாத்தி கம்மிங் பாடலை ஒலிக்க செய்து , மகிழ்ச்சியாக மணமக்களான ஐஷ்வர்யா ஷங்கர் மற்றும் தருண் கார்த்திகேயனுடன் குத்தாட்டம் ஆடினார். இவர்களுடன் அதிதி ஷங்கர் மற்றும் அட்லீ இணைந்து ஆடினர்.

    • கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது.
    • பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

    பிரபல இயக்குநர் ஷங்கருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா. இளைய மகள் அதிதி ஷங்கர் மருத்துவம் படித்து விட்டு, சினிமா ஆசையால் 'விருமன்' படத்தின் மூலம் நடிகையானார். தற்பொழுது முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

    கடந்த பிப்ரவரி மாதம், உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவுக்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்தது. இன்று ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமணம் காலை இனிதே நடைபெற்றது.

    மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரின் மனைவியான துர்கா ஸ்டாலின் மணமக்களை நேரில் சென்று வாழ்த்தினர். பிரபல இயக்குனர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

     

    நடிகர் ரஜினிகாந்த, கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, விக்ரம், நயன்தாரா, விக்னேஷ் சிவன், கீர்த்தி சுரேஷ் அர்ஜூன் மற்றும் பலர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.

     

     

     

    இயக்குனர் பாரதிராஜா, மணிரத்னம், பாக்யராஜ், வாசு, கே.எஸ் ரவிக்குமார், ஹரி ஆகியோர் குடும்பத்துடன் நேரில் சென்று வாழ்த்தினர்.

    மணமக்களை வாழ்த்த வந்தவர்களை இயக்குனர் லிங்குசாமி, இயக்குனர் அட்லி, இயக்குனர் வசந்த பாலன், நடிகர் பரத், மேலாளர் தங்கதுரை ஆகியோர் வரவேற்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நயன்தாரா கேரள பாணியிலான வெள்ளை நிற சுடிதார் ,விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகள் பாரம்பரிய பட்டு வேட்டி - சட்டை அணிந்து இருந்தனர்.
    • மேலும் தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூ தினத்தை யொட்டி ரசிகர்களுக்கு நயன்தாரா வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்

    தமிழ் பட உலகில் நயன்தாரா முன்னணி நடிகையாக திகழ்கிறார். 'லேடி சூப்பர் ஸ்டார்' என ரசிகர்களால் அழைக்கப்பட்டும் வருகிறார். சமீபத்தில் 'அன்னபூரணி' படத்தில் நடித்தார். அந்தப் படம் 75- வது படமாகும்.

    'அன்னபூரணி' படம் எதிர்பார்த்த அளவில் அவருக்கு வெற்றியை தரவில்லை. மேலும் தமிழில் 'மண்ணாங்கட்டி' மலையாளத்தில் 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' படங்களில் தற்போது நடித்து வருகிறார்.



    இந்நிலையில் தமிழ், மற்றும் மலையாள புத்தாண்டு தினத்தை யொட்டி நேற்று நயன்தாரா தனது வீட்டில் குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடி உள்ளார்.

    நயன்தாரா கேரள பாணியிலான வெள்ளை நிற சுடிதார் அணிந்து இருந்தார். விக்னேஷ் சிவன் மற்றும் அவர்களது குழந்தைகள் பாரம்பரிய பட்டு வேட்டி - சட்டை அணிந்து இருந்தனர்.

    தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகள் உயிர் மற்றும் உலகம் ஆகியோருடன் சேர்ந்து புத்தாண்டை உற்சாக மகிழ்ச்சியுடன்கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் நயன்தாரா பகிர்ந்துள்ளார்.




    மேலும் தமிழ் புத்தாண்டு மற்றும் விஷூ தினத்தை யொட்டி ரசிகர்களுக்கு நயன்தாரா வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்நிலையில் நயன்தாரா தற்போது தீவிரமாக சுயதொழில் தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்
    • புதிய ஆபிஸ் தொடர்பான புகைப்படங்களை இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார்

    தமிழ் திரை உலகில் 'லேடி சூப்பர் ஸ்டார்' நடிகையாக திகழ்ந்து வருபவர் நயன்தாரா. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை நயன்தாரா கொச்சியில் ஒரு கடை முன் நள்ளிரவில் சாலையோரமாக நின்றபடி 'ஐஸ்கிரீம்' சாப்பிடும் வீடியோவை சமூக வலைதளத்தில் நயன்தாரா வெளியிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் வியந்து உள்ளனர். ஏராளமான 'லைக்ஸ்', 'கமெண்ட்ஸ்கள்' குவிந்தன.

    இந்நிலையில் நடிகை நயன்தாரா தற்போது நடிப்பு மட்டுமல்லாது, படத் தயாரிப்பு மற்றும் இன்னொரு பக்கம் அழகு சாதன பொருள்கள் விற்பனை நிறுவனம் ஒன்றிலும் பங்குதாரராக அவர் இருக்கிறார்




    இந்நிலையில் நயன்தாரா தற்போது தீவிரமாக சுயதொழில் தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.'9 ஸ்கின்' என்ற பெயரில் 'ஸ்கின் கேர்' ப்ராடக்ட் , நாப்கின்கள் தயாரிப்பது என தொடர் பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறார்.

    இந்நிலையில் தனது வீட்டு மொட்டை மாடியில் புதிய அலுவலகம் ஒன்றை திறக்க உள்ளார். இதனை தனது 'கனவு அலுவலகம்' என்று அவர் கூறியுள்ளார். தற்போது புதிய ஆபிஸ் தொடர்பான புகைப்படங்களை இணைய தளத்தில் பகிர்ந்து உள்ளார்.

    இந்த அலுவலகத்தின் பெரும்பகுதி கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்களை கருப்பு & வெள்ளை நிறத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் ஒன்றில் கனவு அலுவலகம் வடிவமைப்பு பணிகளை நயன்தாரா மேற்பார்வையிடுவது போல் அமைந்து உள்ளது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

    மேலும் இணையதள பதிவில் விரைவில் 'புதிய தொடக்கம்' என்று நயன்தாரா தலைப்பிட்டு இருக்கிறார்.

    "எங்கள் கனவு அலுவலகம் அமைந்தது ஒரு மாயாஜாலம் போன்று இருக்கிறது. சாத்தியமில்லாத ஒன்றை 30 நாளில் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். இதை உருவாக்கியவர்கள் சிறந்த மனிதர்கள்" என நயன் தாரா கூறியுள்ளார்.




    சமூக வலை தளத்தில் இதனை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா புதிய தொழில் தொடங்கப்போகிறாரா ? அப்படி தொடங்கினால் எந்த மாதிரியான தொழிலாக அது இருக்கும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனது தந்தை குரியனின் பிறந்தநாளுக்காக நயன்தாரா குடும்பத்தோடு கொச்சி சென்றுள்ளார்.
    • நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ், குழந்தைகள் ஆகியோரை வீட்டில் விட்டுவிட்டு தனியாக ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளார் .

    தமிழ்த் திரை உலகில் 'லேடி சூப்பர் ஸ்டார்'-ஆக திகழ்ந்து வருபவர் நயன்தாரா. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் கதாநாயகியாக நடித்து வருகிறார். கேரள மாநிலம் கொச்சியில் நயன்தாராவின் பெற்றோர் வசித்து வருகின்றனர்.

    தனது தந்தை குரியனின் பிறந்தநாளுக்காக நயன்தாரா குடும்பத்தோடு கொச்சி சென்றுள்ளார்.




    கடந்த சில நாட்களாக அங்கு தங்கி உள்ளார்.இந்நிலையில் நடிகை நயன்தாரா கொச்சியில் உள்ள எம்.ஜி.ரோட்டில் உள்ள ஒரு கடை முன் நள்ளிரவில் சாலையோரமாக நின்றபடி 'ஐஸ்கிரீம்' சாப்பிடும் வீடியோவை சமூக வலைதளத்தில் நயன்தாரா வெளியிட்டுள்ளார்.

    இதனை பார்த்த ரசிகர்களால் ஏராளமான 'லைக்ஸ்', 'கமெண்ட்ஸ்கள்' குவிந்து வருகின்றன.




    நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ் சிவன், இரட்டை குழந்தைகள் உயிர் மற்றும் உலகா ஆகியோரை வீட்டில் விட்டுவிட்டு தனியாக காரில் வந்து ஒரு கடை முன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளார் நயன்தாரா.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நயன்தாரா தனது தந்தை குரியன் கொடியாட்டின் பிறந்த நாளை கொச்சியில் உள்ள அவரது வீட்டில் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.
    • அடுத்ததாக சஷிகாந்த் இயக்கத்தில் 'டெஸ்ட்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    மீண்டும் டிரெண்டாகும் நயன்தாராவின் புகைப்படங்கள்தமிழ்திரை உலகில் முன்னணி கதாநாயகியான வலம் வரும் நயன்தாரா, திருமணத்திற்கு பிறகும் பிசியாக நடித்து வருகிறார். குறிப்பாக, கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை நயன்தாரா தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்தார். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

    அடுத்ததாக சஷிகாந்த் இயக்கத்தில் 'டெஸ்ட்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில் நயன்தாரா தனது தந்தை குரியன் கொடியாட்டின் பிறந்த நாளை கொச்சியில் உள்ள அவரது வீட்டில் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.

    அங்கு மின் விளக்கில் அலங்காரம் செய்யப்பட்ட மரத்தின் கீழ் இருவரும் இணைந்து நின்றபடி எடுத்த புகைப்படம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து விக்னேஷிவனுடன் கட்டி அணைத்தபடி இருக்கும் புகைப்படத்தை குட் டைம்ஸ் என்று பதிவிட்டு நயன்தாரா தனது சமூக வலைதள பக்கத்தில் பகர்ந்துள்ளார்.

    பிறந்த நாள் நிகழ்ச்சியில், நயன்தாரா குழந்தைகள் கேக் சாப்பிடும் வீடியோவையும் விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    நயன்தாராவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கிருத்தி செட்டி இப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார்.
    • அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்

    தமிழ் சினிமாவில் ஃபீல் குட் மற்றும் காமெடி படங்களை எடுப்பதில் முக்கியமானவர் விக்னேஷ் சிவன். போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். நானும் ரவுடி பட வெற்றிக்குப் பிறகு இவரின் புகழ் உச்சத்திற்கு சென்றது. படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

    பின், சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். 2022ம் ஆண்டு மீண்டும் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கினார். சமந்தா மற்றும் நயன்தாரா இணைந்து நடித்து இருந்தனர். இந்த படத்தில் இவர்களின் ஜோடி மிக அழகாக திரையில் பிரதிபலித்து இருந்தார்.

    இந்நிலையில் அடுத்ததாக லவ் டுடே படத்தை இயக்கி நடித்து மக்கள் மனதை கவர்ந்த பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல் ஐ சி (லவ் இன்ஷூரன்ஸ் கார்பரேஷன்) படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முதலில் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டியது. பிறகு, சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவரால் நடிக்க முடியவில்லை.

    கிருத்தி செட்டி இப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். அனீருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது. கடந்த வாரம் படப்பிடிப்பை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பியதாக விக்னேஷ் சிவன், அவரின் மகனான உயிர் மற்றும் உலகுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

    இப்படத்தின் டீசர் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இதை பார்த்த ரசிகர்கள், நண்பர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்
    • "வாழ்நாள் முழுவதும் திருமண ஜோடிகள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்' என்று தெரிவித்து உள்ளார்.

    நடிகர் சித்தார்த் 'ஆயுத எழுத்து' படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதை தொடர்ந்து பாய்ஸ், அரண்மனை, தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட படங்களில் நடித்து முக்கிய நடிகரானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'சித்தா' படம் ரசிகர்களிட நல்ல வரவேற்பு பெற்றது.

    இந்நிலையில் நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ்வை காதலித்து வந்தார். இவர் செக்க சிவந்த வானம், காற்று வெளியிடை, சைக்கோ போன்ற தமிழ் படங்களில் நடித்து உள்ளார்.

    இந்நிலையில் சித்தார்த்தும், அதிதி ராவும் தெலுங்கானாவில் ஒரு கோவிலில் ரகசிய திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இது திருமணம் அல்ல, நிச்சயதார்த்தம் என்று இருவரும் பதில் அளித்து உள்ளனர். இது வைரலாக பரவியது.

    இதை பார்த்த ரசிகர்கள், நண்பர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாராவும் சித்தார்த்- அதிதி ஜோடிக்கு இணைய தளத்தில் வாழ்த்துக்கள் கூறி உள்ளார். அதில் "வாழ்நாள் முழுவதும் திருமண ஜோடிகள் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்' மனமாற வாழ்த்துக்கள் என்று தெரிவித்து உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • "படப்பிடிப்பு பணிகள் காரணமாக வாரக்கணக்கில் குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து இருக்கிறேன்
    • விரைவில் தனது அன்பு குழந்தைகள், மனைவி நயன்தாராவை அரவணைக்க காத்திருக்கிறேன்

    பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் 'லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இது காதல், நகைச்சுவை திரைப்படமாகும். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன்,கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

    இப்படத்தை 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ' மற்றும் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் மற்றும் விக்னேஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில வாரங்களாக மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் நயன்தாரா 2 மகன்களை கையில் வைத்திருக்கும் புகைப்படங்களையும், நயன்தாரா அவர்களுடன் விளையாடும் புகைப்படங்களையும் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பதிவில் விக்னேஷ் பகிர்ந்துள்ளார். 

    "படப்பிடிப்பு பணிகள் காரணமாக வாரக்கணக்கில் குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து இருக்கிறேன்"தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதை தவறவிட்டேன். விரைவில் தனது அன்பு குழந்தைகள், மனைவி நயன்தாராவை அரவணைக்க காத்திருக்கிறேன்"

    என குடும்பத்தை பிரிந்த ஏக்கத்தில் அவ்வாறு விக்னேஷ் பதிவிட்டு உள்ளார்.

    நயன்தாரா அடுத்ததாக 'டெஸ்ட்' மற்றும் 'மண்ணாங்கட்டி சின்ஸ் 1960' ஆகிய படங்களில் நடிக்கிறார்.அவை தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. அவர் கடைசியாக 'அன்னபூரணி' படத்தில் நடித்தார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நயன்தாராவின் கன்னத்தில் விக்னேஷ் முத்தம் கொடுப்பது,உள்ளிட்ட பல புகைப்படங்களை நயன்தாரா இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்
    • இணையத்தில் ரசிகர்கள் 'அழகான ஜோடி" என்று வர்ணிக்க தொடங்கி உள்ளனர்

    நயன்தாரா - விக்னேஷ்சிவன் கடந்த 2022 ஜூன்-9 ல் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி அக்டோபர் 2022 -ல் வாடகைத் தாய் மூலம் 2 மகன்களை பெற்றுக் கொண்டனர்.

    நயன்தாரா அடிக்கடி தனது கேமராவுக்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கை குறித்த படங்கள், மற்றும் செய்திகளை இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.சமீபத்தில் இணையதளத்தில் கணவரை 'அன்பாலோ' செய்தது பற்றி ரசிகர்கள் பலவித வதந்திகள் பரப்பினர்.

    நயன்தாரா- விக்னேஷ் ஜோடி விவாகரத்து வதந்தி பரவிய நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன் குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருப்பதை அனைவருக்கும் தெரிவிப்பதற்காக ஒரு போட்டோவை இணைய தளத்தில் பகிர்ந்தார்.

    இந்த நிலையில் இன்று விக்னேஷ் சிவனுடன் இருக்கும் அழகான புகைப்படங்களை நயன்தாரா பகிர்ந்துள்ளார்.வெளி நாட்டில்நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடியாக ஒருவரைஒருவர் அன்புடன் பார்ப்பது, நயன்தாராவின் கன்னத்தில் விக்னேஷ் முத்தம் கொடுப்பது,உள்ளிட்ட பல புகைப்படங்களை நயன்தாரா இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

    இதில் நயன்தாராஸ்கின்-பிட் பேண்ட்- கருப்பு நிற கோட் அணிந்து உள்ளார். விக்னேஷ் சாதாரண சிவப்பு டி-சர்ட் மற்றும் கருப்பு பேன்ட் அணிந்து உள்ளார். இந்த படங்கள் இணைய தளத்தில் வெளியானதன் மூலம் விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு நயன்தாரா பெரிய முற்றுப்புள்ளி வைத்து உள்ளார்.

    நயன்தாரா- விக்னேஷ் ஜோடி அழகாக மகிழ்ச்சியாக உள்ள படங்களை இணையத்தில் பார்த்த ரசிகர்கள் 'அழகான ஜோடி" என்று வர்ணிக்க தொடங்கி உள்ளனர்.தற்போது நயன்தாராவும், விக்னஷும் சவுதி அரேபியாவில் விடுமுறைக்கு சென்று உள்ளனர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    • வயசாக வயசாக மெருகேறிக்கொண்டே இருக்கும் இரண்டே விஷயம். என் அழகிய பிடித்தமான தங்க பெண்ணுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்,” என்று தலைப்பிட்டுள்ளார்.

    இந்த வாரம் முழுவதும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஹாட் டாபிக்காக வலை தளங்களில் சுற்றி வந்தனர். நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தன் கணவரை அன்பாலோ செய்துவிட்டார் என்ற தகவல் காட்டு தீ போன்று பரவியது.

    அதற்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கடந்த ஆண்டு திருமண தினத்தில் எடுத்துக் கொண்ட வீடியோவை வெளியிட்டானர். அதில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் மிக நெருக்கமாக இருந்த காட்சிகள் இடம்பெற்று இருந்தது.

    இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன் அவரின் இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நயன்தாரா வைன் கிளாசில் இருப்பது போன்ற புகைப்படத்தை இணைத்துள்ளார்.

    இந்த பதிவிற்கு, "வயசாக வயசாக மெருகேறிக்கொண்டே இருக்கும் இரண்டே விஷயம். என் அழகிய பிடித்தமான தங்க பெண்ணுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்," என்று தலைப்பிட்டுள்ளார்.

    • மகனை இடுப்பில் வைத்து கொண்டு புன்முறுவலுடன் காணப்படும் அழகான புகைப்படங்களை வெளியிட்டார்
    • நயன்தாரா சிவப்பு இதய 'எமோஜி' அடையாளம் எதுவும் தெரிவிக்கவில்லை

    நயன்தாரா - விக்னேஷ் சிவன் கடந்த 2022 ஜூன்-9 ல் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடி அக்டோபர் 2022 -ல் வாடகைத் தாய் மூலம் தங்கள் இரட்டை மகன்களை பெற்றனர். நயன்தாரா அடிக்கடி தனது சினிமாவுக்குப் பின்னால் இருக்கும் வாழ்க்கை குறித்த படங்கள் மற்றும் செய்திகளை இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.

    இந்நிலையில் நேற்று இரவு அதுபோல் இன்ஸ்டாகிராமில் தனது மகனை இடுப்பில் அமரவைத்து கொண்டு மொட்டைமாடி தோட்டத்தில் புன்முறுவலுடன் காணப்படும் அழகான புகைப்படங்களை வெளியிட்டார். தாய்-மகன் இருவரும் தங்கள் மொட்டை மாடியில் செடிகளை கைகளால் தொட்டுக்கொண்டு இருப்பதை காண முடிந்தது.

    அந்த புகைப்படத்தில் நயன்தாரா சிவப்பு இதய 'எமோஜி' அடையாளம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதனை பார்த்த ரசிகர்கள் பலவித கருத்துகளை பதிவு செய்தனர். சமீபத்தில், இணையதளத்தில் கணவரை 'அன்பாலோ' செய்தது பற்றி ரசிகர்கள் பலவித வதந்திகள் பரப்பினர்.இதனிடையே, தனது இன்ஸ்டாகிராமில் U mm..I' m Lost ! என்ற ஒரு ரகசிய குறியீட்டையும் நயன்தாரா பகிர்ந்துள்ளார்.

    நயன்தாரா- விக்னேஷ் ஜோடி குறித்து விவாகரத்து வதந்தி பரவிய நிலையில் தற்போது குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருப்பதை அனைவருக்கும் தெரிவிப்பதற்காக இந்த போட்டோவை நயன்தாரா இணையத்தில் பகிர்ந்துள்ளாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    ×