என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "manifesto"
- நாக்பூர் தொகுதிக்காக தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- நிதின் கட்கரி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அமைச்சரும், நாக்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான நிதின் கட்கரி நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக தனது சொந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். நாக்பூர் தொகுதிக்காக மட்டுமே இந்த தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது.
வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்றால், தனது தொகுதி மக்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதை நிதின் கட்கரி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர கடந்த பத்து ஆண்டுகளில் அவர் செய்த பணி குறித்த தகவல்களையும் அதில் சேர்த்துள்ளார்.
அந்த வகையில், மூன்றாவது முறை வெற்றி பெறும் பட்சத்தில் நாக்பூரை சுத்தமாகவும், அழகாகவும் மாற்றுவது தொடர்பான பணிகளில் ஈடுபடுவதாக அவர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் சுகாதாரம், வளர்ச்சி உள்ளிட்ட பிரிவுகளில் நாக்பூரை முதல் ஐந்து நகரங்களில் ஒன்றாக மாற்றுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவியோடு சேரிகளை ஒழுங்குப்படுத்தி, புதிய வீடுகளை கட்டித் தருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இது தொடர்பான பணிகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் அதிக பூங்காக்கள் அமைக்கப்படும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பூங்காக்கள் புதுப்பிக்கப்படும்.
நாக்பூரில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். 2029 ஆம் ஆண்டிற்குள் விதர்பா பகுதியில் ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். 2070 ஆம் ஆண்டு வரை தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என நிதின் கட்கரி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக குறிப்பிட்டுள்ளார்.
- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
- 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25-ந்தேதி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பிரசாரத்திற்கு இன்றுடன் இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது.
இந்த விழாவில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதசரா, சச்சின் பைலட் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
தேர்தல் அறிக்கையில் "விவசாயிகளுக்கு 2 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும். சுவாமிநாதன் அறிக்கையின்படி குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும். காங்கிரஸ் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அதில் 4 லட்சம் வேலை அரசு செக்டாரில் ஏற்படுத்தப்படும்.
பஞ்சாயத்து அளவிலான ஆள்சேர்ப்பு திட்டம் கொண்டு வரப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
ராஜஸ்தானின் பொருளாதாரம் இந்த ஆண்டு இறுதியில் 15 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். இதனை 2030-க்குள் 30 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதே இலக்கு" உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பிடித்துள்ளனர்.
- உஜ்வாலா பயனாளிகளுக்கு 450 ரூபாய் எரிவாயு மானியம் அளிக்கப்படும்.
- 2.5 லட்சம் அரசு வேலைகள் உருவாக்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் வரும் 25-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் கட்சியான காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்க தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளது. எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க. இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில் முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே, மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
உஜ்வாலா பயனாளிகளுக்கு 450 ரூபாய் எரிவாயு மானியம், 2.5 லட்சம் அரசு வேலைகள் உருவாக்கம் என மக்களைக் கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. பெண்கள், விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்கள் பட்டியல் இடப்பட்டுள்ளன.
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசியதாவது:
ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த பல்வேறு முறைகேடு புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும்.
பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பிற்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். குறிப்பாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் காவல் நிலையம் மற்றும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் மகளிர் புகார்களுக்கான தனிப்பிரிவு அமைக்கப்படும். ஒவ்வொரு நகரத்திலும் ரோமியோ எதிர்ப்புப் படை அமைக்கப்படும்.
பெண் குழந்தை பிறந்தால் குழந்தைகளின் பெயரில் ரூ.2 லட்சம் சேமிப்பு பத்திரம், நிலம் ஏலம் விடப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பாலிசி வழங்கப்படும் என தெரிவித்தார்.
மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அங்கன்வாடி மையங்கள் பகல் நேர குழந்தைகள் காப்பகங்களாக மாற்றப்படும். அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அரசு பள்ளிகளை மூடுவதை தடுப்போம். மூடப்பட்ட அரசு பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுப்போம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணிபாதுகாப்பு வழங்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். பாராளுமன்ற, சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை ஆதரிப்போம். உலர்ந்த இலைகள் மற்றும் குப்பைகளை தீவைத்து எரிக்க தடை விதிக்கப்படும். ஏரிகள் பாதுகாக்கப்படும், ஏரிகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #PrakashRaj
கன்னியாகுமரி தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து இல.கணேசன் எம்.பி. நாகர்கோவிலில் நேற்று பிரசாரம் செய்தார்.
முன்னதாக இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை விவசாயிகள் மற்றும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையிலும், பயங்கரவாதத்தை அழிக்கும் வகையிலும் இருக்கிறது.
ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பயங்கரவாதத்திற்கு இடம் அளிக்கும் வகையில் உள்ளது. கி.வீரமணி இந்து கடவுளை அவதூறாக பேசியதை மூடி மறைக்கும் வகையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பதில் அளிக்கிறார்.
கடந்த தேர்தலிலேயே காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சிக்கான அந்தஸ்தை இழந்து விட்டது. இந்த தேர்தலில் நாடு முழுவதும் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவதே காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும்.
தன்னை கொல்ல சதி நடப்பதாக ராகுல் மலிவான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஸ்டாலினின் பேச்சுக்கள் பண்பில்லாதவை. போலித்தனமாவை. தற்போது கண்ணியம் என்பது பிரசாரத்தில் இல்லாமலே போய் விட்டது. பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கை குறித்த ரஜினியின் கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழகம் மற்றும் புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி 40 தொகுதிகளையும் கைப்பற்றும். தமிழகத்தில் பா.ஜனதா போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #Loksabhaelections2019 #BJP #LaGanesan #Rajinikanth
பாராளுமன்ற தேர்தலையொட்டி பாரதிய ஜனதா வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து வெளியிட்டு இருந்தார்.
இதையடுத்து அ.தி.மு.க. நாளேடான நமது அம்மா ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டு உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-
பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நதிநீர் இணைப்பு திட்டங்களை வரவேற்று இருக்கிறார் ரஜினிகாந்த்.
இதன் மூலம் தனது ஆதரவு பா.ஜனதா - அ.தி.மு.க. கூட்டணிக்கே என்பதை ரஜினிகாந்தின் குரல் உறுதி செய்திருக்கிறது.
125 வருட காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டதும், முல்லைப் பெரியாறு உரிமையில் முதல்கட்ட வெற்றியை ஈட்டியதும், அரை நூற்றாண்டு கனவான அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்றிட ஆணையிட்டதும், தி.மு.க. விரயமாக்கிய பழைய வீராணம் திட்டத்தை புதிய வீராணம் திட்டமாக்கி தலைநகர் சென்னையில் தாகம் தீர்த்ததும் அ.தி.மு.க. ஆட்சியில்தான்.
இதற்கு மேலும் ஊக்கம் அளிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் தேசிய நதிகளை இணைப்பதற்கும், குறிப்பாக கோதாவரி ஆற்றின் உபரி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் விதமாக கோதாவரி-கிருஷ்ணா, காவிரி இணைப்புத் திட்டத்தை ரூ.60 ஆயிரம் கோடியில் நிறைவேற்ற முன் வந்திருப்பதோடு, நீர் மேலாண்மை திட்டங்களுக்கு வெகுவான முன்னுரிமையை பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
ஏற்கனவே ‘காலா’ ஆதரவு கழகத்துக்கே என நமது அம்மா நாளிதழ் வெளியிட்ட செய்தி இப்போது ஊர்ஜிதமாகி இருக்கிறது. ரஜினிகாந்தை வாழ்த்துவோம். வரவேற்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #LoksabhaElections2019 #ADMK #Rajinikanth #NamathuAmma
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு புதிய வாக்குறுதிகள் வழங்கும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க 20 பேர் கொண்ட குழுவை பிரதமர் மோடியும் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும் அமைத்தனர்.
மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழுவில் மத்திய மந்திரிகள் அருண்ஜெட்லி, ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன், பியூஷ்கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி, மத்திய பிரதேச முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் ஆகியோர் முக்கிய இடம் பிடித்திருந்தனர்.
நாட்டின் அனைத்துத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்பதற்காக 15 துணைக் குழுக்கள் அமைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. கடந்த மாதமே பா.ஜனதா தேர்தல் அறிக்கை தயாரிப்புப் பணி நிறைவு பெற்றது.
பா.ஜனதா தேர்தல் அறிக்கைக்கு “சங்கல்ப் பத்ரா” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் இன்று மதியம் நடந்தது.
தேர்தல் அறிக்கையை வெளியிடும் முன்பு பா.ஜனதா தேசியத் தலைவர் அமித்ஷா பேசினார். அவர் கூறியதாவது:-
ஏழை-எளியவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு செய்து கொடுத்தது. இதனால் மத்தியில் பாரதிய ஜனதா அரசு, ஏழைகளின் அரசாக திகழ்ந்தது. சுமார் 50 கோடி இந்தியர்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் மோடி தலைமையிலான ஆட்சியில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் மோடி அரசு 50 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அந்த 50 முக்கிய முடிவுகளும் நாட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றுவதாக அமைந்துள்ளன.
கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகள் மிகப்பெரிய பலன்களை பெற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக பணியாற்ற 6 கோடி பேரிடம் யோசனை பெற்று இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்து இருக்கிறோம்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
இதையடுத்து மதியம் 12 மணி அளவில் 45 பக்க பா.ஜனதா தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
இந்தியா விரைவில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட இருப்பதால், பா.ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் 75 முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* விவசாயம் ஊக்குவிக்கும் திட்டம் மூலம் விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்கு அதிகரிக்க நடவடிக்கை.
* 60 வயதான சிறு-குறு விவசாயிகளுக்கு மாதாந்திர பென்சன் வழங்கப்படும்.
* விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டி இல்லா பயிர் கடன் 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
* விவசாயிகளுக்கு வட்டி இல்லாத கிரிடிட் கார்டு திட்டம் கொண்டு வரப்படும்.
* விவசாய பொருட்கள் இறக்குமதி பெருமளவு குறைக்க நடவடிக்கை.
* இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க திட்டங்கள்.
* விவசாயிகளுக்கு குறைந்தப்பட்ச வருமான உத்தரவாத திட்டம் உருவாக்கப்படும்.
* அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும்.
* சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம் அமல்படுத்தப்படும்.
* உலகில் 3-வது பலம் வாய்ந்த பொருளாதார நாடாக உருவாக்க நடவடிக்கை.
* ராணுவத்தில் தன்னிறைவு அடைய திட்டங்கள்.
* கிராமப்புற வளர்ச்சிக்கு 25 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
* காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ, 370 அரசியல் சாசன சட்டங்கள் ரத்து செய்யப்படும்.
* நதிகள் இணைப்புக்கு தனி வாரியம் அமைக்கப்படும்.
* நாடு முழுவதும் 75 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்படும்.
* பாராளுமன்றம் - சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்படும்.
* 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டி தரப்படும்.
* பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.
* மக்களிடம் கருத்து கேட்டு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மேலும் எளிதாக்கப்படும்.
* மத நம்பிக்கைகளை பாதுகாக்க அரசியல் சட்டம்.
* பொது சிவில் சட்டம் இயற்றப்படும்.
* தூய்மை இந்தியா திட்டத்தில் 100 சதவீதம் தூய்மை எட்டப்படும்.
* குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்படும்.
* அயோத்தியில் சட்டத்துக்கு உட்பட்டு ராமர் கோவில் கட்டப்படும்.
* 50 நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்படும்.
* 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து ரெயில் தடங்களும் மின் மயமாக்கப்படும்.
* ஒவ்வொரு குடும்பத்துக்கும் சிறந்த குடிநீர், கழிவறை வசதிகள் உறுதி செய்யப்படும்.
* நாடு முழுவதும் அனைத்து குடும்பங்களுக்கும் சமையல் கியாஸ் இணைப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்படும்.
* நாட்டின் அடிப்படை கட்டுமான வசதிகளுக்கு ரூ.100 லட்சம் கோடி செலவிடப்படும்.
* மேக் இன் இந்தியா திட்டம் மேலும் தீவிரமாக்கப்படும்.
* நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி விகிதங்கள் மாற்றப்படும்.
* அனைத்து மாநிலங்களிலும் ஒருமித்த கருத்து ஏற்படுத்தி பாராளுமன்றம்- சட்டசபை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தப்படும்.
* பள்ளிகளில் சமஸ்கிருதத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #BJPManifesto
டெல்லியில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:-
ஒவ்வொரு துறையிலும் குழு அமைத்து, விவாதிக்கப்பட்டு பாஜக தேர்தல் அறிக்கை உருவாகி உள்ளது. இந்த தேர்தல் அறிக்கை 130 கோடி மக்களுக்கும் திருப்தி அளிக்கும். புதிய பாரதத்தை நோக்கி பாஜக தேர்தல் அறிக்கை உள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில் 74 சிறப்பு அம்சங்கள் உள்ளன.
பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் வரை மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்கும். தேசப் பாதுகாப்புக்கு மோடி அரசு முன்னுரிமை தரும்.
கிராமப்புற வளர்ச்சிக்கு 25 லட்சம் கோடி ரூபாயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். விவசாய கடனுக்கு வட்டி கிடையாது. 5 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். சிறு விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். அதாவது, கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு 6000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.
நாடு முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும். 2022ம் ஆண்டுக்குள் தேசிய நெடுஞ்சாலைகள் இரு மடங்காக விரிவுபடுத்தப்படும். பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #BJPManifesto
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான களப்பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் அறிக்கைகள் மூலம், மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, பிரசாரம் மேற்கொண்டுள்ளன.
காங்கிரஸ் கட்சி கடந்த வாரம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில், வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு, விவசாய கடன்கள் தள்ளுபடி, ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. காங்கிரசின் தேர்தல் அறிக்கையை மிஞ்சும் அளவுக்கு பாஜகவின் தேர்தல் அறிக்கை இருக்கும் எனவும், நாட்டின் வளர்ச்சி, தேச பாதுகாப்பு, விவசாயிகளின் வருவாய், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, கடந்த 5 ஆண்டுகளாக ஏழைகளின் அரசாக மத்திய பாஜக அரசு செயல்பட்டதாகவும், பல்வேறு சாதனை திட்டங்களை நிறைவேற்றியிருப்பதாகவும் கூறினார். மோடியின் 5 ஆண்டு ஆட்சியில் எவ்வித ஊழல்களும் நடைபெறவில்லை என்றும் கூறினார். #LokSabhaElections2019 #BJPManifesto
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து களம் காண்கிறார்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்கும் வேட்பாளர்களின் நேர்காணல் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் தேர்தல் பணிக்குழுவோடு சமூக செயற்பாட்டாளர்கள், இலக்கியவாதிகள் முன்னிலையில் இந்த நேர்காணல் நடைபெற்றது.
நேர்காணலுக்கு பின்னர் 2 நாட்கள் மனு பரிசீலனை நடைபெற்றது. கமல்ஹாசன் தங்கள் கட்சியின் வேட்பாளர்கள் முழுக்க தகுதியின் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுவார்கள் என்று முன்பே கூறி இருந்தார். அதன்படி வேட்பாளர் தேர்வில் கல்வித்தகுதி, தொகுதி மக்களுக்கு ஆற்றிய பணிகள் ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டன. முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 20-ந்தேதி கமல்ஹாசன் வெளியிட்டார்.
நாளை மாலை 6 மணிக்கு கோவை கொடிசியா வளாகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த பொதுக்கூட்டத்துக்கு வேட்பாளர் அறிமுக விழா மற்றும் மாற்றத்துக்கான துவக்கவிழா என்று கமல் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். முதல் பட்டியலில் 21 வேட்பாளர்கள் தான் இடம்பெற்று இருந்தனர். கமீலா நாசர்(மத்திய சென்னை), முன்னாள் காவல் அதிகாரி மவுரியா (வடசென்னை) இருவரை தவிர வேறு பிரபலங்கள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.
நாளை வேட்பாளர் பட்டியலுடன் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியாக இருக்கிறது. அதனால் தான் மாற்றத்துக்கான துவக்கவிழா என்கிறார்கள். முதல் பட்டியலை வெளியிட்ட போதே கமல்ஹாசன் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளையும் குறை கூறினார்.
புதிதாக ஒன்றுமே இல்லை. இவை எல்லாமே சிறு வயதில் இருந்தே நான் கேட்ட வாக்குறுதிகள் தான். இவற்றை நிறைவேற்றுவதற்கான வழி முறைகளை மக்கள் நீதி மய்யம் முன்னெடுக்கும் என்றார். எனவே கமல் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லப்போகிறார் என்பதை அரசியல் கட்சிகள் எதிர்நோக்கி இருக்கின்றன.
கமல் தனது கட்சிக்காக 100 பேச்சாளர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளார். கட்சி உறுப்பினர்களில் நல்ல பேச்சாற்றல் மிக்கவர்கள், பொது மேடைகளில் பேச விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களிடம் நேர்காணல் நடத்தி, 100 பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சிறந்த பேச்சாளர்கள் மூலம் இவர்களுக்கு 2 நாள் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. பொது மேடைகளில் நாகரிகமாக பேசுவது, மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள், திட்டங்களை மக்கள் மத்தியில் தெளிவாக எடுத்துரைப்பது உள்ளிட்டவை குறித்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு, அவர்கள் தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்கிறார்கள். #LSPolls #MakkalNeedhiMaiam #KamalHaasan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்