search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரகாஷ்ராஜ்"

    • கர்நாடகா மாநிலத்தில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
    • முதல்முறையாக வாக்களிப்பவர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.

    பெங்களூரு:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    அந்தவகையில் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது.

    2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    கர்நாடகா மாநிலத்தில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இந்நிலையில் பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் காத்திருந்து தனது வாக்கை நடிகர் பிரகாஷ்ராஜ் பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

    பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பது முக்கியமான விஷயம். நீங்கள் தேர்ந்தெடுக்கப்போகிறவர்தான் உங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள்.

    ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும் உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய்விடும்.

    முதல்முறையாக வாக்களிப்பவர்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். இது ஒரு அற்புதமான அனுபவம். சந்தோஷம், எழுச்சியை கொடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இதே வார்த்தையை மோடி தமிழ்நாட்டில் இருக்கும் போது பேச மாட்டார். கர்நாடகாவில் பேச மாட்டார். அந்த பருப்பு இங்கே வேகாது.
    • மோடி பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்க வேண்டுமா? திருடனை பற்றிய புகாரை இன்னொரு திருடனுக்கு நீங்கள் கொடுப்பீர்களா?

    ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-

    இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.

    அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.

    முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

    இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    இந்நிலையில் மோடியின் இந்த பேச்சு தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி கொடுத்துள்ளார். அதில்,

    மல்லிப்பூவில் இருந்து எப்படி அதன் மணம் வெளியே வருமோ அதே போல் தான் மன்னரின் (மோடி ) வாயிலிருந்து அவரின் பேச்சிலிருந்து அவரது அசிங்கம் வெளியே வருகிறது.

    10 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமராக இருந்தவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசிய பேச்சை திரித்து அதை முஸ்லிம்கள் என பேசும் போதே மோடியின் அஜெண்டா நமக்கு தெரிகிறது.

    இதே வார்த்தையை மோடி தமிழ்நாட்டில் இருக்கும் போது பேச மாட்டார். கர்நாடகாவில் பேச மாட்டார். அந்த பருப்பு இங்கே வேகாது. ஆனால் உத்தரபிரதேசம் போன்ற வடமாநிலங்களில் அது வேகும்.

    ஒரு நாளைக்கு 5 வேடம் போடுகிற மாதிரி... ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தர்மம் என்று பேசுகிற மன்னருக்கு 2 நாக்குகள் உள்ளன.

    ஒவ்வொரு நாக்கும் ஒவ்வொன்று பேசி கொண்டு இருக்கிறது. இவை எல்லாம் நாம் தலைகுனிய வேண்டிய அசிங்கமான விஷயம். இதற்கு மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

    மோடி பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுக்க வேண்டுமா? திருடனை பற்றிய புகாரை இன்னொரு திருடனுக்கு நீங்கள் கொடுப்பீர்களா? ராமரின் படத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள், சாதியை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றால் அவர்கள் (தேர்தல் ஆணையம்) வாங்கப்பட்டுள்ளார்கள்.

    பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் சொல்வது தான் நடக்கும். எதிர்க்கட்சிகள் இருக்க கூடாது, யாரும் கேள்வி கேட்கக்கூடாது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தர்மம், தேர்தலே கிடையாது" என்று அவர் கூறியுள்ளார்.

    • தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள் - மோடி
    • உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? - மோடி

    ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் மோடி பேசியது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    அவர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஒரு கருத்தை குறிப்பிட்டு பேசும்போது கூறியதாவது:-

    இது நகர்ப்புற நக்சல் மனநிலை. தாய்மார்கள், சகோதரிகள்... அவர்கள் உங்களுடைய மங்களசூத்ராவை (தாலி) கூட விட்டு வைக்கமாட்டார்கள். அவர்கள் அந்த நிலைக்கு கூட போவார்கள்...

    தாய்மார்கள், சகோதரிகள் வைத்துள்ள தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு, தகவல்கள் பெறப்பட்டு, பகிர்ந்து கொடுப்போம் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சொல்கிறது.

    அவர்கள் யாருக்கு பகிர்ந்து அளிப்பார்கள். முந்தைய மன்மோகன் சிங் அரசு, நாட்டின் சொத்துகளில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை எனத் தெரிவித்திருந்தது.

    முன்னதாக, அவர்களுடைய (காங்கிரஸ்) அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டிகள் சொத்துகளில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை எனக் கூறியது. இதன் அர்த்தம் யாருக்கு சொத்து பகிர்ந்தளிக்கப்படும்?. அதிக குழந்தைகளை வைத்திருப்பர்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும். இந்திய நாட்டுக்குள் ஊடுருவியர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களுடைய கடின உழைப்பால் சம்பாதித்த பணம் ஊடுருவியவர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?

    இது உங்களுக்கு ஏற்கத்தக்கதா?. நீங்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த உங்கள் சொத்தை பறிமுதல் செய்ய அரசுகளுக்கு உரிமை உள்ளதா? நம் தாய், சகோதரிகளுடன் இருக்கும் தங்கம் வெளியில் காட்டிக் கொள்வதற்காக அல்ல, அது அவர்களின் சுயமரியாதை சம்பந்தப்பட்டது.

    அவர்களின் மங்களசூத்திரத்தின் (தாலி) மதிப்பு தங்கத்திலோ அல்லது அதன் விலையிலோ இல்லை, வாழ்க்கையில் அவரின் கனவுகளுடன் தொடர்புடையது. அதையும் பறிப்பது பற்றி நீங்கள் பேசுகிறீர்களா?

    இவ்வாறு பிரதமர் மோடி பேசியிருந்தார்.

    மோடியின் இந்த பேச்சிற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் இது தொடர்பாக திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,

    "இந்த மோசமான பேச்சு வரலாற்றில் ஆவணப்படுத்தப்படும். பிரதமருக்கு புத்தி சொல்லி எந்த பயனும் கிடைக்காது. மோடி பதவி வெறியில் உள்ளார். முதல் கட்ட வாக்குப்பதிவு அவரை கலங்கடித்துள்ளது. பொறுமையாக இருங்கள்.. மக்கள் மோடிக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்" என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

    • நடிகர் பிரகாஷ்ராஜ் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
    • என்னை விலைக்கு வாங்கும் அளவுக்கு பா.ஜ.க.விடம் பணம் இல்லை என்றார்.

    பெங்களூரு:

    நடிகர் பிரகாஷ்ராஜ் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

    இதற்கிடையே, நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று பா.ஜ.க.வில் சேருகிறார் என தகவல் வேகமாகப் பரவியது. ஆனால் இந்த தகவலுக்கு பிரகாஷ்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், என்னை விலைக்கு வாங்கும் அளவுக்கு பா.ஜ.க.விடம் பணம் இல்லை என பதிவிட்டுள்ளார்.

    • அனுமதி பெறாமல் வீடு கட்டி வருவதாகவும், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சிமெண்ட் சாலை அமைத்துள்ளதாகவும் புகார் எழுந்தது.
    • தற்போது நடிகர்கள் கட்டி வரும் 2 கட்டிடங்கள் வரைபட அனுமதிக்கு மேல் கட்டியுள்ளது.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பேத்துப்பாறை பாரதி அண்ணாநகர் பகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் அரசு அனுமதி பெறாமல் வீடு கட்டி வருவதாகவும், வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சிமிண்ட் சாலை அமைத்துள்ளதாகவும் புகார் எழுந்தது.

    மேலும் இதேபகுதியில் நடிகர் பாபிசிம்ஹா அரசு அனுமதியின்றி 3 மாடி கட்டிடம் கட்டி வருவதாக குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். கொடைக்கானலில் ஜே.சி.பி உள்ளிட்ட கனரக வாகனங்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை வழங்கியது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர்.

    இதனைதொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர், நிலஅளவையர் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பாபிசிம்ஹா மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோரின் கட்டிடங்கள் மற்றும் இடங்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் வனத்துறையினரும் ஈடுபட்டனர். அளவீடு செய்யப்பட்ட அறிக்கையை திண்டுக்கல் கோட்டாட்சியர் ராஜாவிடம் வழங்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டிகுமார் பிரசாத் தெரிவிக்கையில், கொடைக்கானலில் 2400 சதுரடிக்குமேல் கட்டிடம் கட்ட அனுமதி கிடையாது. ஆனால் தற்போது நடிகர்கள் கட்டி வரும் 2 கட்டிடங்கள் வரைபட அனுமதிக்கு மேல் கட்டியுள்ளது.

    இதுகுறித்து வில்பட்டி ஊராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது. வனத்துறை இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர். நடிகர் பிரகாஷ்ராஜ் கட்டிடம் கட்ட அனுமதி பெறவில்லை. பாபிசிம்ஹா தனது தாயார் பெயரில் உள்ள இடத்தை புதுப்பித்து வீடு கட்டி வருகிறார். ஆனால் அதற்கும் அனுமதி பெற்றுள்ளாரா என தெரியவில்லை.

    2 பேரிடமும் நோட்டீஸ் அளித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றார்.

    • காஞ்சிவரம், இருவர், மேஜர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரகாஷ்ராஜ் தனி கவனம் பெற்றார்.
    • தற்போது முன்னணி நடிகர்களுக்கு இணையாக பிரகாஷ்ராஜ் சம்பளம் கேட்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

    தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் பிரபல வில்லன் நடிகராக இருக்கும் பிரகாஷ்ராஜுக்கு தொடர்ந்து படங்கள் குவிந்து வருகின்றன. இவர் கதாநாயகர்களுக்கு இணையாக சம்பளம் கேட்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதுகுறித்து பிரகாஷ்ராஜ் அளித்துள்ள பேட்டியில், ''ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் நான் நடித்த காஞ்சிவரம், இருவர், மேஜர், பொம்மரில்லு, ஆகாச மந்தா போன்றவற்றில் வாழ்க்கை இருந்தது. நடிப்பு என்பது ஒரு தொழில்.

    பிரகாஷ்ராஜ்

    பிரகாஷ்ராஜ்

    அதில் வாழ்வதற்காக பணம் கிடைக்கிறது. கமர்ஷியல் படங்களுக்கு அதிக சம்பளம் வாங்கிக் கொண்டு எனக்கு பிடித்த படங்களுக்கு குறைத்த சம்பளம் வாங்கிக் கொள்வேன்.நம்மை சுற்றி மாறிக்கொண்டு இருக்கும் உலகத்தை சினிமாவில் காட்ட முடியாமல்தான் பெரிய நடிகர்கள் படங்கள் கூட தியேட்டரைவிட்டு போய் விடுகின்றன.

    பிரகாஷ்ராஜ்

    பிரகாஷ்ராஜ்

    சூர்யா, விஜய் சேதுபதி, பஹத் பாசில், ய்ஷ், சாய் பல்லவி போன்றோருடன் 30 ஆண்டுகள் அனுபவம் உள்ள நடிகர்கள் கூட போட்டியிட வேண்டி இருக்கிறது. நட்சத்திர அந்தஸ்துக்கான அர்த்தம் தற்போது மாறிவிட்டது. வித்தியாசமான கதாபாத்திரங்களால் ரசிகர்களின் பாராட்டை பெறுபவர் தான் நிற்க முடியும். மக்களிடையே சினிமாவைப் பற்றிய நல்ல புரிதல் உள்ளது" என்றார்.

    ×