search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாக்பூர்"

    • நாக்பூர் தொகுதிக்காக தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • நிதின் கட்கரி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    மத்திய அமைச்சரும், நாக்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான நிதின் கட்கரி நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக தனது சொந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். நாக்பூர் தொகுதிக்காக மட்டுமே இந்த தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்றால், தனது தொகுதி மக்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதை நிதின் கட்கரி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர கடந்த பத்து ஆண்டுகளில் அவர் செய்த பணி குறித்த தகவல்களையும் அதில் சேர்த்துள்ளார்.

    அந்த வகையில், மூன்றாவது முறை வெற்றி பெறும் பட்சத்தில் நாக்பூரை சுத்தமாகவும், அழகாகவும் மாற்றுவது தொடர்பான பணிகளில் ஈடுபடுவதாக அவர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் சுகாதாரம், வளர்ச்சி உள்ளிட்ட பிரிவுகளில் நாக்பூரை முதல் ஐந்து நகரங்களில் ஒன்றாக மாற்றுவதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவியோடு சேரிகளை ஒழுங்குப்படுத்தி, புதிய வீடுகளை கட்டித் தருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இது தொடர்பான பணிகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் அதிக பூங்காக்கள் அமைக்கப்படும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பூங்காக்கள் புதுப்பிக்கப்படும்.

    நாக்பூரில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். 2029 ஆம் ஆண்டிற்குள் விதர்பா பகுதியில் ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். 2070 ஆம் ஆண்டு வரை தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என நிதின் கட்கரி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக குறிப்பிட்டுள்ளார். 

    • தனது ராஜினாமாவை இவ்வாறு ஒரு நீதிபதி அறிவிப்பது இது முதல் முறை
    • டிசம்பர் 2025ல் அவர் பணியிலிருந்து ஓய்வடைய இருந்தார்

    மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் பெஞ்சை சேர்ந்த உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி, ரோஹித் தியோ, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இத்தகவலை அவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களும், வழக்காடுபவர்களும் கூடியிருந்த போது, அனைவரும் அறியும்படி அறிவித்தார்.

    ஒரு நீதிபதி இவ்வாறு தனது ராஜினாமாவை அறிவிப்பது இது முதல் முறை என தெரிகிறது.

    நேற்று தனது ராஜினாமா குறித்து அறிவித்த நீதிபதி ரோஹித், சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

    அவர் அப்போது அறிவித்ததாவது:

    நீதிமன்றத்தில் உள்ள உங்கள் ஒவ்வொருவரிடமும் நான் மன்னிப்பு கோருகிறேன். நான் உங்களை கடிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அது நீங்கள் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான்; உங்களை காயப்படுத்த அல்ல. உங்கள் அனைவரையும் என் குடும்ப உறுப்பினர்கள் போல்தான் நான் கருதுகிறேன். என் சுயமரியாதைக்கு எதிராக என்னால் பணி செய்ய முடியாது. நான் என் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். இதை உங்களிடம் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு நீதிபதி ரோஹித் தெரிவித்தார்.

    அவர் தனது ராஜினாமா கடிதத்தை இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவிற்கு அனுப்பி உள்ளார்.

    ஜூன் 2017ல் மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ரோஹித் டிசம்பர் 2025ல் பணியிலிருந்து ஓய்வடைய இருந்தார்.

    உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையின்படி உயர் நீதிமன்ற பதிவுத்துறை, நீதிபதி ரோஹித்தை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆனால், இதற்கும் அவர் ராஜினாமாவிற்கும் சம்பந்தம் இல்லை எனத் தெரிகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 3.14 கி.மீ. தூரம் நெடுஞ்சாலை மேம்பாலம், மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
    • பிரதமர் மோடியின் வாக்குறுதி இதன் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

    நாக்பூர்:

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஒரே நேரத்தில் மிக நீளமான டபுள் டக்கர் மேம்பாலம் உருவாக்கப் பட்டுள்ளது. நெடுஞ்சாலை மேம்பாலமும், அதன் மேல் மெட்ரோ ரெயில் மேம்பாலமும் ஒரே நேரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

    நாட்டிலேயே முதன்முறையாக தேசிய நெடுஞ்சாலை ஆணையமும், மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனமும் இணைந்து இந்த முயற்சியை வெற்றிகரமாக்கி மாற்றி உள்ளது. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு மத்திய நெடுஞ்சாலைகள்துறை மந்திரி நிதின்கட்கரி பாராட்டு தெரிவித்துள்ளார். 


    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 3.14 கி.மீ. தொலைவிலான நெடுஞ்சாலை மேம்பாலம் மற்றும் மெட்ரோ ரயில் மேம்பாலத்தை வடிவமைத்திருப்பதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தையும், மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனத்தையும் பாராட்டியுள்ளார். இந்த மேம்பாலம் மற்றும் மெட்ரோ ரயில் திட்டம் ஏற்கனவே ஆசிய மற்றும் இந்திய புக்ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனைப் புத்தகங்களில் இடம் பெற்றிருப்பதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

    இந்த சாதனையை படைத்த பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் இடைவிடாத பங்களிப்புக்கு தலை வணங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதி இதன் மூலம் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ நவீன வசதிகள் இந்தப் பூங்காவில் இடம் பெற்றிருக்கும்.
    • மாற்று திறனாளி பூங்கா அமைக்க மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் உதவி.

    நாக்பூர்:

    மத்திய சமூக நீதித்துறை அமைச்சகத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்றது. விழாவில் மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, வீரேந்திர குமார் ஆகியோர் பல்வேறு உதவி உபகரணங்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி நிதின் கட்கரி, சமூகத்தில் பின் தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு சேவை செய்வதும், கடைக் கோடியில் இருப்பவர்களும் அரசின் திட்ட பலன்களை பெறுவதை உறுதி செய்வதும் அரசின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.

    பின்னர் பேசிய மத்திய சமூக நீதித்துறை மந்திரி வீரேந்திர குமார், மகாராஷ்டிராவின் முதல் மாற்றுத்திறனாளி பூங்காவை நாக்பூரில் உருவாக்க தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அமைச்சகம் வழங்கி உள்ளதாக தெரிவித்தார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

    இந்த பூங்காவில் உணர்திறன் தோட்டம், நறுமணத் தோட்டம், திறன் பயிற்சி வசதி, விளையாட்டு மற்றும் தகவல் சார்ந்த வசதி உள்பட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் பல நவீன வசதிகள் இடம் பெற்றிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    ×