search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bombay HC"

    • தனது ராஜினாமாவை இவ்வாறு ஒரு நீதிபதி அறிவிப்பது இது முதல் முறை
    • டிசம்பர் 2025ல் அவர் பணியிலிருந்து ஓய்வடைய இருந்தார்

    மகாராஷ்டிரா மாநிலத்தின் நாக்பூர் பெஞ்சை சேர்ந்த உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி, ரோஹித் தியோ, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    இத்தகவலை அவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களும், வழக்காடுபவர்களும் கூடியிருந்த போது, அனைவரும் அறியும்படி அறிவித்தார்.

    ஒரு நீதிபதி இவ்வாறு தனது ராஜினாமாவை அறிவிப்பது இது முதல் முறை என தெரிகிறது.

    நேற்று தனது ராஜினாமா குறித்து அறிவித்த நீதிபதி ரோஹித், சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

    அவர் அப்போது அறிவித்ததாவது:

    நீதிமன்றத்தில் உள்ள உங்கள் ஒவ்வொருவரிடமும் நான் மன்னிப்பு கோருகிறேன். நான் உங்களை கடிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அது நீங்கள் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான்; உங்களை காயப்படுத்த அல்ல. உங்கள் அனைவரையும் என் குடும்ப உறுப்பினர்கள் போல்தான் நான் கருதுகிறேன். என் சுயமரியாதைக்கு எதிராக என்னால் பணி செய்ய முடியாது. நான் என் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். இதை உங்களிடம் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு நீதிபதி ரோஹித் தெரிவித்தார்.

    அவர் தனது ராஜினாமா கடிதத்தை இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவிற்கு அனுப்பி உள்ளார்.

    ஜூன் 2017ல் மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி ரோஹித் டிசம்பர் 2025ல் பணியிலிருந்து ஓய்வடைய இருந்தார்.

    உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையின்படி உயர் நீதிமன்ற பதிவுத்துறை, நீதிபதி ரோஹித்தை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆனால், இதற்கும் அவர் ராஜினாமாவிற்கும் சம்பந்தம் இல்லை எனத் தெரிகிறது.

    மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் கைது விவகாரத்தில் முக்கிய ஆதாரமான கடிதத்தை எப்படி பத்திரிகையாளர்கள் முன் படித்து காட்டி பகிரங்கப்படுத்தலாம் என போலீசாருக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. #BombayHC #MaharashtraPolice
    மும்பை:

    பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் 5 மாவோயிஸ்டு ஆதரவாளர்களை கைது செய்தனர். இதில் மும்பையை சேர்ந்த வெர்னன் கோன்சால்வ்ஸ், அருண் பெரேரா ஆகியோரும் அடங்குவார்.

    இடதுசாரி சிந்தனையாளர்களான இவர்களின் எதிர்ப்பு குரலை ஒடுக்கும் நோக்கில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரம் இருப்பதாக போலீசார் கூறினர்.

    இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை புனேயில் பத்திரிகையாளர் கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பரம்வீர் சிங், புனே மாவட்டம் பீமா-கோரேகாவ் வன்முறையில் கடந்த ஜூன் மாதம் கைதானவர்களும், தற்போது கைதான மாவோயிஸ்டு ஆதரவாளர்களும் தகவல் பரிமாறிக்கொண்ட கடிதத்தை படித்து காட்டினார்.

    இதற்கிடையே புனே போலீசார் இந்த வழக்கை நியாயமற்ற, தீய எண்ணத்துடன் விசாரித்து வருவதாக கூறி சதீஷ் கெய்க்வாட் என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றவேண்டும் என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே மற்றும் மிருதுலா பாத்கர் அடங்கிய அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், வழக்கில் முக்கிய ஆதாரமாக கருதப்படும் கடிதத்தை பத்திரிகையாளர்கள் முன்னால் போலீசார் படித்து காட்டி பகிரங்கப்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

    வழக்கு கோர்ட்டில் விசாரணையில் இருக்கும் நிலையில், போலீசார் எவ்வாறு இப்படி செய்யலாம்? இந்த விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் வழக்கு தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துவது தவறானது என தெரிவித்தனர்.

    பின்னர் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 7-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 
    மகாராஷ்டிரா மாநிலத்தில் வினாயகர் சதுர்த்திக்காக தெர்மோகோல் மீதான தடையை தளர்த்த முடியாது என மும்பை ஐகோர்ட் இன்று தெரிவித்துள்ளது. #BombayHC #thermocolban #Ganeshfestival
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பைகள், ஸ்பூன், பிளேட், பெட் பாட்டில் மற்றும் தெர்மோகோல் ஆகியவற்றின் பயன்பாடு மற்றும் விற்பனைக்கு அம்மாநில அரசு கடந்த மார்ச் மாதம் 23-ம் தேதி தடை விதித்து உத்தரவிட்டது.

    இந்த உத்தரவு வெளியான மூன்று மாதங்களுக்குள் (ஜூன் 23) தங்களிடம் உள்ள தடை விதிக்கப்பட்ட தயாரிப்புகள் அனைத்தையும் உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் அழித்துவிட வேண்டும் எனவும் அந்த உத்தரவில் காலக்கெடு விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், எதிர்வரும் வினாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வினாயகர் சிலைகள் வைக்கப்படும் பந்தல்களில் அலங்கார வேலைப்பாடு செய்வதற்காக சில நாட்களுக்கு மட்டும் தெர்மோகோல் மீதான தடையை தளர்த்த வேண்டும் என பந்தல் அலங்கார வேலைப்பாட்டாளர்கள் சங்கத்தின் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.



    இந்த தடையை தளர்த்தாவிட்டால் தெர்மோகோல் விற்பனை பாதிக்கப்பட்டு, வியாபாரிகள் கடும் பண இழப்பை சந்திக்க நேரிடும். எனவே, தடையை தளர்த்தி அனுமதி அளித்தால் பயன்படுத்தப்படும் தெர்மோகோல் தயாரிப்புகளை நாங்களே பாதுகாப்பாக அகற்றி, அழித்து விடுகிறோம் என அவர்கள் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

    இவ்வழக்கு இன்று நீதிபதிகள் ஏ.எஸ். ஒக்கா, ரியாஸ் சாக்லா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தினந்தோறும் 1200 டன் அளவிலான பிளாஸ்டிக், தெர்மோகோல் கழிவுகள் தூக்கி வீசப்படுகின்றன. இவற்றை அறிவியல்பூர்வமாக அழிக்கவோ, மறுசுழற்சி செய்யவோ வழியில்லை. எனவே, இந்த தடையை நீக்க கூடாது என அம்மாநில அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தடையை தளர்த்த முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

    மாநில அரசு விதித்திருந்த காலக்கெடு முடிந்தும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு என்பது தெரிந்தும் தங்களிடம் உள்ள தடை செய்யப்பட்ட பொருட்களை இருப்பு வைத்துகொண்டு தற்போது தடையை தளர்த்துமாறு வழக்கு தொடர்ந்திருப்பது ஏற்புடையதல்ல என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். #BombayHC #thermocolban #Ganeshfestival

    ×