search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Canada"

    • இந்தியா இடம் பிடித்துள்ள குரூப் ஏ பிரிவில் கனடா இடம் பிடித்துள்ளது.
    • முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் 1-ந்தேதி தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 20 அணிகள் விளையாடுகின்றன.

    இதனால் குட்டி குட்டி அணிகளுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குட்டி அணிகளில் ஒன்று கனடா. குரூப் "ஏ" பிரிவில் கனடா இடம் பிடித்துள்ளது. முதல் போட்டியில் அமெரிக்காவுடன் மோதுகிறது. மேலும் அயர்லாந்து, பாகிஸ்தான், இந்தியாவுடன் விளையாட இருக்கிறது.

    இந்த நிலையில் கனடா அணி டி20 போட்டிக்கான ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளனர். கனடா அணியின் தேசியக்கொடியில் சிகப்பு வண்ணம் காணப்படும். அதை வலியுறுத்தும் வகையில் சிகப்பு நிறத்தில் ஜெர்சி அமைந்துள்ளது.

    • நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பாக 4-வது இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • அமர்தீப் சிங் ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறையின் காவலில் இருந்தார் என்றும் தெரிவித்தனர்.

    ஓட்டாவா:

    கனடாவில் வசித்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    இக்கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். ஆனால் அதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இவ்விவகாரத்தை இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பாக கரன் பிரார் (22) கமல்ப்ரீத் சிங் (22) கரன்ப்ரீத் சிங் (28) ஆகிய 3 இந்தியர்களை சமீபத்தில் கனடா போலீசார் கைது செய்தனர். இவர்கள் ல்பர்ட்டா என்ற பகுதியில் வசித்து வந்தனர். அவர்கள் மீது கொலை மற்றும் சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவர்களுக்கு இந்திய அரசுடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் நிஜ்ஜார் கொலை வழக்கு தொடர்பாக 4-வது இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவின் பிராம்ப்டன், சர்ரே மற்றும் அபோட்ஸ்போர்ட் பகுதிகளில் வசித்த அமர்தீப் சிங் (வயது 22) என்ற இந்தியர், நிஜ்ஜார் கொலையில் பங்கு வகித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக ஒருங்கிணைந்த கொலை விசாரணைக் குழு போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் மீது முதல் நிலை கொலை மற்றும் கொலைக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    அமர்தீப் சிங் ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டு தொடர்பாக பீல் பிராந்திய காவல் துறையின் காவலில் இருந்தார் என்றும் தெரிவித்தனர்.

    ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் பங்கு வகித்தவர்களை பொறுப்பேற்கச் செய்வதற்கான எங்களது விசாரணையின் தன்மையை இந்த கைது காட்டுகிறது என்று அதிகாரி மன்தீப் முகர் தெரிவித்தார்.

    • அனைத்து குடிமக்களையும் பாதுகாக்கும் அடிப்படை உறுதிப்பாடும் பின்பற்றப்படுகிறது.
    • நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

    டொரண்டோ:

    கனடாவில் கடந்த ஆண்டு ஜூன் 18-ந் தேதி காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப்சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், கனடாவில் வசிக்கும் இந்தியர்களான கரண் பிரார், கமல்பிரீத் சிங், கரன்பிரீத் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    இதுபற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது:-

    கனடாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. இங்கு வலிமையான, சுதந்திரமான நீதித்துறை செயல்படுகிறது. அனைத்து குடிமக்களையும் பாதுகாக்கும் அடிப்படை உறுதிப்பாடும் பின்பற்றப்படுகிறது.

    நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணை நடந்து வருகிறது. 3 பேர் கைது விவகாரத்தை தாண்டியும் விசாரணை நடக்கும். நிஜ்ஜார் கொலையை தொடர்ந்து கனடாவில் உள்ள சீக்கியர்கள் பாதுகாப்பில்லாத நிலையை உணர்ந்தனர். இருப்பினும், ஒவ்வொரு கனடா குடிமகனும் பாதுகாப்பாக வாழ அடிப்படை உரிமை இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
    • கொலை வழக்கைத் தவிர, இந்திய அரசாங்கத்துடன் தொடர்புகள் குறித்து தனி விசாரணைகள் நடந்து வருகிறது.

    ஒட்டாவா:

    காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு ஒன்றின் தலைவரான ஹர்திப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு ஜுன் மாதம் கனடா நாட்டில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

    இந்த விவகாரத்தால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையே நிஜ்ஜார் கொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருவதாக கனடா தெரிவித்தது.

    இந்த நிலையில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் ஹிட் ஸ்குவாட் (தாக்குதல் குழு) உறுப்பினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா போலீசார் தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் கரன் ப்ரார், கரன்ப்ரீத் சிங், கமல்ப்ரீத் சிங் ஆகிய இந்தியர்கள் என்றும், சில மாதங்களுக்கு முன்பு சந்தேக நபர்களை புலனாய்வு அதிகாரிகள் அடையாளம் கண்டதாகவும், அவர்களை தீவிர கண்காணிப்பில் வைத்திருந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி டேவிட் டெபூல் கூறும்போது, நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு குற்றம்சாட்டப்பட்டு உள்ளனர். கொலை வழக்கைத் தவிர, இந்திய அரசாங்கத்துடன் தொடர்புகள் குறித்து தனி விசாரணைகள் நடந்து வருகிறது. கொலை வழக்கு மிகவும் தீவிர விசாரணையில் உள்ளது.

    இந்த விவகாரத்தில் தனித்தனியான விசாரணைகள் நடந்து வருகின்றன. கைது செய்யப்பட்ட நபர்களின் ஈடுபாடு மட்டுமல்ல, இந்த முயற்சிகளில் இந்திய அரசாங்கத்துடனான தொடர்புகளை விசாரிப்பதும் அடங்கும் என்றார்.

    கைது செய்யப்பட்டுள்ள 3 பேர் மீது தலா ஒரு முதல் நிலை கொலை மற்றும் நிஜ்ஜாரின் கொலைக்கு சதி செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

    • நிஜ்ஜார் கொலை குறித்த செய்தி, எல்லை மீறிய செயல் என கூறி, எனது விசா நீட்டிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்தது
    • ஜனநாயகத்தின் தாய் என பிரதமர் மோடி அழைக்கும், தேசிய தேர்தலின் முதல் நாள் ஓட்டுப்பதிவு குறித்த செய்திகளை சேகரிக்க முடியவில்லை

    ஏ.பி.சி. எனப்படும் ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனத்தை சேர்ந்த செய்தியாளர் அவனி தியாஸ், கடந்த இரண்டரை ஆண்டுகளாக அந்நிறுவனத்துக்காக டெல்லியில் பணியாற்றி வருகிறார்.

    காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த சர்ச்சைக்குரிய செய்தி ஒன்றை அவனி தியாஸ் சமீபத்தில் வெளியிட்டார்.

    ஏ.பி.சி., நிறுவனத்தின் யுடியூப் சேனலில் வெளியான நிஜ்ஜார் கொலை குறித்த இந்த வீடியோ இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

    இந்நிலையில் இதை எல்லை மீறிய செயல் என கூறி, எனது விசாவை வெளியுறவு அமைச்சகம் ரத்து செய்துள்ளது என்று அவனி தியாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவனி தியாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கடந்த வாரம் நான் திடீரென இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. நிஜ்ஜார் கொலை குறித்த செய்தி, எல்லை மீறிய செயல் என கூறி, விசா நீட்டிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்தது. பாராளுமன்ற தேர்தல் குறித்த செய்தி சேகரிக்கும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

    இதனால், ஜனநாயகத்தின் தாய் என பிரதமர் மோடி அழைக்கும், தேசிய தேர்தலின் முதல் நாள் ஓட்டுப்பதிவு குறித்த செய்திகளை சேகரிக்க முடியவில்லை. பின், ஆஸ்திரேலிய அரசு தலையிட்டதன் காரணமாக, இரண்டு மாதங்களுக்கு விசா நீட்டிக்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார்.

    ஆனால், "ஆஸ்திரேலியாவில் அவருக்கு வேறொரு வேலை கிடைத்தது. அதற்காக தான் அவர் இந்தியாவை விட்டு வெளியேறினார். விசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்தால் அவர் வெளியேறவில்லை, தனிப்பட்ட காரணங்களுக்காக தான் அவர் வெளியேறினார்" என்று பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • காரில் சென்றபோது அவரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
    • சிராஜ் அந்தில் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சி நடந்து வருகிறது.

    ஒட்டாவா:

    அரியானா மாவட்டம் சோனிபட் மாவட்டத்தை சேர்ந்தவர் சிராஜ் அந்தில் (வயது 24). இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு உயர்படிப்புக்காக கனடா நாட்டுக்கு சென்றார். அங்கு அவர் எம்.பி.ஏ. படித்து முடித்த பின் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    சிராஜ் அந்தில் கனடா நாட்டின் வான்கூர் நகரில் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது சொகுசு காரில் வெளியில் சென்றார்.

    இந்த நிலையில் அவர் காருக்குள் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக கனடா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    காரில் சென்றபோது அவரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிராஜ் அந்தில் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சி நடந்து வருகிறது. இதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    சிராஜ் அந்தில் சகோதரர் ரோஹித் கூறும்போது எனது அண்ணனுக்கு யாருடனும் பகை கிடையாது. எல்லோரிடமும் அவர் பாசமாக தான் பழகுவார். அவருடன் நான் தினமும் செல்போனில் பேசுவேன். சம்பவத்தன்று இரவு கூட நான் பேசினேன். அதற்குள் இப்படி நடந்து விட்டது என சோகத்துடன் தெரிவித்தார்.

    • மர்ம நபர் பூட்டா சிங் கில் உள்பட 3 பேரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றார்.
    • பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஒட்டாவா:

    கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கவானாக் நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பூட்டா சிங் கில். கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரான இவர், உள்ளூரில் பிரபல தொழில அதிபராக விளங்கி வந்தார். மேலும் அங்குள்ள பஞ்சாபி சமூகத்தினர் இடையே பெரும் செல்வாக்கு மிக்க நபராக இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கவானாக் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் பூட்டா சிங் கில் தனது நண்பர்கள் 2 பேருடன் இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் பூட்டா சிங் கில் உள்பட 3 பேரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கு பூட்டா சிங் கில்லும், அவரது நண்பரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். மற்றொரு நண்பர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியாத நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • இந்தியா உள்பட பெரும்பாலான ஆசிய நாடுகளில் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியாது.
    • அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் முழு சூரிய கிரகணம் தெரிந்தது.

    வாஷிங்டன்:

    சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டு புள்ளியாக சந்திரன் வரும். அப்போது சூரியனை சந்திரன் மறைப்பதால் கிரகணம் நிகழ்கிறது. இந்த ஆண்டு முதல் சூரிய கிரகணம் என கூறப்படுகிறது.

    இந்தியா உள்பட பெரும்பாலான ஆசிய நாடுகளில் இந்த கிரகணத்தைப் பார்க்கமுடியாது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ மற்றும் வட அமெரிக்க நாடுகளில் சூரிய கிரணக்கத்தை பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், முழு சூரிய கிரகணம் அமெரிக்காவில் தெரிந்தது. இந்த நிகழ்வை டல்லாஸ், இண்டியானாபோலிஸ், கிளீவ்லேண்ட் மற்றும் நியூயார்க்கின் பஃபலோ ஆகிய நகர மக்கள் கண்டு களித்தனர். மேலும் கனடா, மெக்சிகோவிலும் சூரிய கிரகணம் தெரிந்தது. இதுதொடர்பான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் முதலமைச்சரின் 'காலை உணவுத் திட்டம்’ இந்தியா முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது
    • தமிழ்நாட்டை பின்பற்றி தெலுங்கானா மாநிலத்தில் தற்போது 6500000 உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது

    கனடா நாட்டிலும் 'காலை உணவுத் திட்டம்' நடைமுறைக்கு வந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டில் முதலமைச்சரின் 'காலை உணவுத் திட்டம்' இந்தியா முழுவதும் வரவேற்பை பெரும் நிலையில், வெளிநாடுகளிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என திமுக பெருமிதமாக தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக திமுக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

    "மாண்புமிகு தமிழ்நாடு அவர்களின் கனவுத் திட்டமாக முதலமைச்சர் திரு.மு.கூ.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் வெகு சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப் பேரவையில் 7.5.2022 அன்று விதி 110 ன் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனிமேல் காலை சிற்றுண்டி வழங்கப்படும் அறிவித்தார்.

    நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும், பள்ளிக்குச் செல்லக் கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுகிறார்கள். இதனால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்குக் கிடைத்திருக்கிறது என்றும். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்றும் இதனை உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக வழங்குவோம். படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவித்தார்கள்.

    இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான 15.92022 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இத்திட்டத்தினை மதுரையில் தொடங்கி வைத்தார்கள். மேலும், 258.2023 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த திருக்குவளை கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி உணவுத் திட்டத்தினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தினார்கள். அதன் மூலம் 31000 அரசுப் பள்ளிகளில் 17 இலட்சம் குழந்தைகள் நாள்தோறும் காலை உணவு உண்டு வகுப்பறைகளில் சிறப்பாகக் கல்வி பயின்று வருகின்றனர்.

    இத்திட்டத்தின் சிறப்புகளை, தெலுங்கானா மாநில அரசு அறிந்து அதன் அலுவலர்கள் தமிழ்நாட்டிற்கு வருகைபுரிந்து காலை உணவு தயாரிக்கப்படும் இடம், பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பப்படுதல், பள்ளிகளில் குழந்தைகள் சாப்பிடுதல் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. தெலுங்கானா மாநிலத்திலும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறிச் சென்றனர். அவ்வாறே தெலுங்கானா மாநிலத்தில் தற்போது உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தக் காலை உணவுத் திட்டம் இந்தியா முழுவதும் புகழடைந்து வருகின்ற நிலையில், இந்தியாவைக் கடந்து வெளிநாடுகளிலும் நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிமுகப்படுத்திய காலை உணவுத் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் இன்று கனடா நாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப்போகிறோம் எனப் பதிவிட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள காலை உணவுத் திட்டம் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வெற்றியாகும்" என திமுக தெரிவித்துள்ளது.

    • தர்ஷினியின் கணவர் உடல் முழுவதும் ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.
    • ஒரே நேரத்தில் 6 பேர் அதுவும் 4 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் கனடா நாட்டை உலுக்கி உள்ளது.

    ஒட்டாவா:

    கனடா தலைநகர் ஒட்டாவா தென்மேற்கு பகுதியான பார்ஹேவன் பகுதியில் வசித்து வந்தவர் தர்ஷினி (வயது35). இலங்கையை சேர்ந்த இவர் தனது கணவர் மற்றும் 7 வயது மகன், 4 மற்றும் 2 வயதுடைய மகள்கள். 2 மாத கைக்குழந்தையுடன் கனடா சென்றார்.

    இந்த நிலையில் இவர்களது வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். வீட்டுக்குள் நுழைந்து பார்த்த போது அங்கு தர்ஷினி மற்றும் 4 குழந்தைகள், ஒரு ஆண் ஆகிய 6 பேரும் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


    தர்ஷினியின் கணவர் உடல் முழுவதும் ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 19 வயது மாணவர் டி.சொய்டா என்பவரை கைது செய்தனர். அவர் எதற்காக இந்த கொடூர செயலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. இது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கனடா நாட்டை பொறுத்தவரை இது போன்ற கொலைகள் அரிதாக தான் நடக்கும். தற்போது ஒரே நேரத்தில் 6 பேர் அதுவும் 4 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் கனடா நாட்டை உலுக்கி உள்ளது.

    • விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் கனடா நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிகிறது
    • 3 குழந்தைகள் உட்பட 5 பயணிகளும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்

    கடந்த திங்கட்கிழமையன்று, கனடா நாட்டின் ஒன்டாரியோ (Ontario) நகரிலிருந்து சிங்கிள்-எஞ்சின் பொருத்தப்பட்ட ஒரு சிறிய விமானம் புறப்பட்டது. அந்த விமானம் சேர வேண்டிய இடம் மற்றும் பயண திட்டம் குறித்து தற்போது தகவல்கள் இல்லை.

    அந்த சிறிய ரக விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் கனடா நாட்டை சேர்ந்தவர்கள். அவர்களில் 3 பேர் குழந்தைகள்.

    அந்த விமானம் அமெரிக்காவின் டென்னிசி (Tennessee) மாநில நேஷ்வில் (Nashville) நகர்புறத்தில் உள்ள ஜான் டியூன் (John Tune) விமான நிலையத்தில் 2,500 அடி உயரத்தில் வட்டமிட்டு, சிறிது நேரத்தில் அங்கிருந்து பறந்தது.

    அந்த விமானத்தின் விமானி, தரைக்கட்டுப்பாட்டு தளத்தை ரேடியோவில் தொடர்பு கொண்டு விமானம் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறினார்.

    உடனடியாக, ஜான் டியூன் விமான நிலையத்தில் ஓடுதளம் எண். 2ல் (Runway 2) அந்த விமானத்தை இறக்குமாறு  நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானியிடம் கூறினர்.

    ஆனால், சில நொடிகளில் எஞ்சின் முற்றிலும் செயலிழந்து விட்டதாகவும் விமான நிலையத்தில் இறக்குவது கடினம் என்றும் விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் விமானி கூறினார்.


    இதைத் தொடர்ந்து விமான நிலையத்தை தாண்டி சென்ற விமானம், அங்கிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் கீழே விழுந்து நொறுங்கியது.

    இன்டர்ஸ்டேட் 40 நெடுஞ்சாலைக்கு 60 அடிக்கு முன்னர் நேஷ்வில் புறநகர் பகுதியில் மாலை சுமார் 08:00 மணியளவில் இந்த விமான விபத்து நடந்தது. கீழே விழுத்து நொறுங்கிய அந்த விமானம் உடனே தீப்பிடித்து முற்றிலும் எரிந்தது.

    இந்த விபத்தில் இந்த விமானத்தில் பயணித்த 3 குழந்தைகள் உட்பட 5 பேரும் உயிரிழந்தனர்.

    அந்த 5 பயணிகளின் பெயர், வயது, பாலினம் உள்ளிட்ட விவரங்கள் தற்போது வரை வெளியாகவில்லை.

    விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய (National Transport Safety Board) அதிகாரி ஆரோன் மெக்கார்டர் (Aaron McCarter) தெரிவித்தார்.

    விபத்து நடைபெறும் வரை விமானி பதட்டமாகாமல் தொடர்பில் இருந்ததாக விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அந்த விமானம், 10,500 அடி உயரத்தில் நீண்ட நேரமாக எந்த சிக்கலும் இன்றி பயணித்து வந்துள்ளது தரைக்கட்டுப்பாட்டு நிலைய தகவல்களில் இருந்து தெரிய வருகிறது.

    • நண்பரிடமிருந்து ஷேக் முஸமில் அகமது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • உடலை உடனடியாக மீட்டு ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ஷேக் முஸமில் அகமது (வயது 25). இவர் கனடா நாட்டில் ஒன்டாரியோவில் உள்ள கிச்சனர் சிட்டி கோனெஸ்டோகா கல்லூரியில் முதுகலை ஐ.டி. படித்து வந்தார். கடந்த பல நாட்களாக இவர் காய்ச்சலில் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு தற்போது இறந்துவிட்டதாக அவரது நண்பரிடமிருந்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


    இந்தச் செய்தியைக் கேட்டு அவரது பெற்றோர், குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஷேக் முஸம்மில் அகமது உடலை விரைவில் ஹைதராபாத்திற்கு அனுப்புமாறு அவரது மாமாவும், தெலுங்கானா மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரீக் என்ற அரசியல் கட்சி தலைவரான அம்ஜத் உல்லா கான் 'எக்ஸ்' இணையதளத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும் , இந்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கருக்கு ஒரு கோரிக்கையும் விடுத்துள்ளார். அதில் மாணவனின் உடலை உடனடியாக மீட்டு ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ×