search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூரிய கிரகணம்"

    • இந்தியா உள்பட பெரும்பாலான ஆசிய நாடுகளில் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியாது.
    • அமெரிக்கா, மெக்சிக்கோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் முழு சூரிய கிரகணம் தெரிந்தது.

    வாஷிங்டன்:

    சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டு புள்ளியாக சந்திரன் வரும். அப்போது சூரியனை சந்திரன் மறைப்பதால் கிரகணம் நிகழ்கிறது. இந்த ஆண்டு முதல் சூரிய கிரகணம் என கூறப்படுகிறது.

    இந்தியா உள்பட பெரும்பாலான ஆசிய நாடுகளில் இந்த கிரகணத்தைப் பார்க்கமுடியாது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ மற்றும் வட அமெரிக்க நாடுகளில் சூரிய கிரணக்கத்தை பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், முழு சூரிய கிரகணம் அமெரிக்காவில் தெரிந்தது. இந்த நிகழ்வை டல்லாஸ், இண்டியானாபோலிஸ், கிளீவ்லேண்ட் மற்றும் நியூயார்க்கின் பஃபலோ ஆகிய நகர மக்கள் கண்டு களித்தனர். மேலும் கனடா, மெக்சிகோவிலும் சூரிய கிரகணம் தெரிந்தது. இதுதொடர்பான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.

    • 365 நாட்களும் 24 மணி நேரமும் தடையில்லாமல் பார்க்கும் வகையில் சரியான முறையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
    • கிரகணத்தின் காரணமாக செயற்கைகோளின் பார்வையை தடுக்காது என்பதை உறுதிப்படுத்த இந்திய விஞ்ஞானிகள் ஒரு இடத்தை தேர்ந்து எடுத்துள்ளனர்.

    பூமிக்கும், சூரியனுக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டின் முழு சூரிய கிரகணம் இன்று ஏற்படுகிறது. அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் மட்டுமே முழு சூரிய கிரகணத்தை காண முடியும். இந்தியாவில் பார்க்க முடியாது. இந்தியாவின் ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.

    ஆதித்யா எல்-1 விண்கலத்தால் சூரிய கிரகண நிகழ்வை காண முடியாது. இது இஸ்ரோ அமைப்பின் தவறு இல்லை. 365 நாட்களும் 24 மணி நேரமும் தடையில்லாமல் பார்க்கும் வகையில் சரியான முறையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

    கிரகணத்தின் காரணமாக செயற்கைகோளின் பார்வையை தடுக்காது என்பதை உறுதிப்படுத்த இந்திய விஞ்ஞானிகள் ஒரு இடத்தை தேர்ந்து எடுத்துள்ளனர்.

    இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறும்போது, "ஆதித்யா எல்1 விண்கலம் சூரிய கிரகணத்தை பார்க்காது. சந்திரன் விண்கலத்தின் பின்னால் இருப்பதால் லாக்ரேஞ்ச் பாயிண்ட் 1 (எல் 1 புள்ளி) -இல் பூமியில் தெரியும் கிரகணத்துக்கு அந்த இடத்தில் அதிக முக்கியத்துவம் இல்லை" என்றார்.

    • 2024-ம் ஆண்டின் கிரகண நிகழ்வுகள், மார்ச் 25-ந்தேதி ஏற்படும் சந்திர கிரகணத்துடன் தொடங்குகிறது.
    • செப்டம்பர் 18-ந்தேதி காலை நிகழும் பகுதி சந்திர கிரகணம் இந்தியாவில் காணப்படாது.

    இந்தூர்:

    சூரியன்-சந்திரன்-பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது. அதன்படி சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணமும், சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி இருக்கும்போது சந்திர கிரகணமும் ஏற்படுகிறது.

    இந்த நிலையில் நடப்பு ஆண்டில் முழு சூரிய கிரகணம் உள்பட 4 கிரகணங்கள் நிகழும் என்றும், ஆனால் அவை எதையும் இந்தியாவில் இருந்து பார்க்க முடியாது என்றும் மத்தியபிரதேசத்தை சேர்ந்த வானியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

    நடப்பு ஆண்டு கிரகணங்கள் நிகழ்வு குறித்து உஜ்ஜைன் நகரில் உள்ள அரசு ஜிவாஜி ஆய்வகத்தின் மூத்த அதிகாரி ராஜேந்திர பிரகாஷ் குப்தா கூறியதாவது:-

    2024-ம் ஆண்டின் கிரகண நிகழ்வுகள், மார்ச் 25-ந்தேதி ஏற்படும் சந்திர கிரகணத்துடன் தொடங்குகிறது. இந்த கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது.

    அதனை தொடர்ந்து, முழு சூரிய கிரகணம் ஏப்ரல் 8 மற்றும் 9-ந்தேதிக்கு இடைப்பட்ட இரவில் நிகழ உள்ளதால், இந்த கிரகணத்தையும் இந்தியாவில் பார்க்க இயலாது.

    அதேபோல் செப்டம்பர் 18-ந்தேதி காலை நிகழும் பகுதி சந்திர கிரகணமும் இந்தியாவில் காணப்படாது.

    அக்டோபர் 2 மற்றும் 3-ந்தேதிக்கு இடைப்பட்ட இரவில் நிகழவுள்ள வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் புலப்படாது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பூமியை பொறுத்தவரை ஓர் ஆண்டில் 2 முதல் 5 சூரிய கிரகணங்கள் நிகழக்கூடும்.
    • அமெரிக்காவின் வானிலை ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் இணைய தள பக்கத்தில் சூரிய கிரகணம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    வாஷிங்டன்:

    சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த சமயத்தில் சூரியனின் ஒளியை சந்திரன் மறைக்கும். பூமியை பொறுத்தவரை ஓர் ஆண்டில் 2 முதல் 5 சூரிய கிரகணங்கள் நிகழக்கூடும்.

    இந்நிலையில் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நடைபெற உள்ளது. 178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில் இந்த அரிய கிரகணம் நிகழ்கிறது.

    இந்திய நேரப்படி இரவு 8.34 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2.25 மணி வரை சூரிய கிரகணம் நடக்க உள்ளது. இரவு நேரம் என்பதால் இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியாது.

    இந்த சூரிய கிரகணம் அமெரிக்காவில் நன்றாக தெரியும் என்றும் நெருப்பு வளையம் போல காட்சி அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருப்பு வளைய சூரிய கிரகணம் நிலவு பூமியில் இருந்து வழக்கத்தை விட சற்று தொலைவில் இருக்கும் போது நிகழ்கிறது. இது சூரியனை முழுமையாக மறைக்காது. அதற்கு பதிலாக ஒரு மெல்லிய நெருப்பு வளையம் போல் தெரியும்.

    அமெரிக்காவின் வானிலை ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் இணைய தள பக்கத்தில் சூரிய கிரகணம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    பித்ரு அமாவாசை எனப்படும் மகாளய அமாவாசை தினத்தில் கிரகணம் ஏற்படுவது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, 178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில் இந்த அரிய கிரகணம் ஏற்படுவதால் இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது. பல ஆண்டுகாலத்திற்கு புண்ணியத்தையும் முன்னோர்களின் ஆசியையும் கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து வருகிற 28-ந்தேதி பவுர்ணமி நாளில் சந்திர கிரகணமும் ஏற்பட உள்ளது. இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 28- ந்தேதி ஏற்படும் சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இரவு 11.31 மணிக்கு தொடங்கி மறுநாள் 29- ந்தேதி அதிகாலை 3.56 மணி வரை நீடிக்க உள்ளது. இதன் காரணமாக சந்திர கிரகணத்தை இந்தியாவில் மிகவும் தெளிவாக வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்திய நேரப்படி இன்று காலை 7.04 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கியது.
    • அதிகபட்சமாக 1 நிமிடம் 16 வினாடிகள் மட்டுமே முழு சூரிய கிரகணம் இருக்கும்.

    ஆஸ்திரேலியா:

    இயற்கை பேரதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படும் சூரிய கிரகணம் இன்று ஏற்படுகிறது. சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

    அதன்படி இன்று சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளது. இன்று நடக்கும் சூரிய கிரகணம் ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் காணமுடியும்

    இந்திய நேரப்படி இன்று காலை 7.04 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கியது. இந்த கிரகணம் நண்பகல் 12.29 மணி வரை நீடிக்கிறது. 12.29 மணிக்கு முழு சூரிய கிரகணமாக ஏற்படும். ஆசியாவின் கிழக்கு கடல் ஓரம் அண்டார்டிகா, ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை பகுதிகளில் சூரிய கிரகணத்தை தெளிவாக காண முடியும்.

    இந்த சூரிய கிரகணத்தை பகுதி அளவாகவோ, முழுமையாகவோ இந்தியாவின் எந்த பகுதியிலும் பார்க்க முடியாது. அதிகபட்சமாக 1 நிமிடம் 16 வினாடிகள் மட்டுமே முழு சூரிய கிரகணம் இருக்கும்.

    சூரிய கிரகணத்தை 'தென்கிழக்கு ஆசியா, கிழக்கிந்திய தீவுகள், பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் பகுதி அளவாக காண முடியும் எனவும்' என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    • நம் உடலில் இருக்கின்ற நீர் சக்தி மற்றும் வெப்ப சக்தி இயல்பாக இருக்கும் போது கிரகணங்களால் நமக்கு பெரும் பாதிப்பு நேராது.
    • அதே சமயத்தில் உடல் நலம் குன்றியவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்களின் உடலில் வெப்ப சக்தியும் நீர் சக்தியும் இயல்புக்கு மாறாக இயங்கும்.

    சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்ன செய்யும் ?

    நமது உடலுக்கு ஆதார சக்தியாக சூரியனும், இயக்க சக்தியாக சந்திரனும் இருக்கிறார்கள்.

    அறிவியல் உலகம், சூரியனுடைய தன்மையை வெப்ப சக்தி, விட்டமின் டி எனவும், சந்திரனுடைய தன்மையை நீர்சக்தி, நீர்ச்சத்து எனவும் கூறுகிறது.

    வான் வெளியில் இருக்கும் சூரியனும் சந்திரனும் நம் உடலில் வெப்ப சக்தியாக நீர் சக்தியாக இருக்கிறார்கள்.

    இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. நமது உடலை இயக்கிக் கொண்டிருக்கிறது.

    இது மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து ஜீவராசிகளுக்கும் பொருந்தும்.

    வான் வெளியில் சூரிய சந்திர சக்தியின் வெளிப்பாடு மாறும்போது நமது உடலில் அவை எதிரொலிக்கும்.

    நம் உடலில் இருக்கின்ற நீர் சக்தி மற்றும் வெப்ப சக்தி இயல்பாக இருக்கும் போது கிரகணங்களால் நமக்கு பெரும் பாதிப்பு நேராது. அதே சமயத்தில் உடல் நலம் குன்றியவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்களின் உடலில் வெப்ப சக்தியும் நீர் சக்தியும் இயல்புக்கு மாறாக இயங்கும். இவர்களுக்கு கிரகங்களினால் பாதிப்பு நேர்வதற்கு வாய்ப்பு உள்ளது.

    நன்றாக கவனியுங்கள்... நிச்சயம் நேரும் என்பதல்ல நேர்வதற்கு வாய்ப்பு உள்ளது.

    இதற்காகவே கிரகண நேரங்களில் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என நமது பெரியவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

    -சிவ. இராம. கணேசன்

    • சூரிய கிரகணம் நேற்று மாலை 5.17 மணிக்கு தொடங்கி 6.20 மணி வரை நீடித்தது.
    • பகவதி அம்மன் விக்ரக சிலையை சுற்றி தர்ப்பை புல்லால் கட்டி பட்டு துணியால் மூடி வைத்து இருந்தனர்.

    கன்னியாகுமரி:

    சூரிய கிரகணம் நேற்று மாலை 5.17 மணிக்கு தொடங்கி 6.20 மணி வரை நீடித்தது. இந்த கிரகணம் கன்னியாகுமரியில் ஒரு சில நிமிட நேரம் மட்டும் தெரிந்தது.

    இதை கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் சூரிய அஸ்தமன கடற்கரையில் நின்றபடி பைனாகுலர் மூலம் பார்த்தனர். சிலர் தங்களது செல்போன்களில் அதனை புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த சூரிய கிரகண நேரத்தில் கோவில்களில் மூலஸ்தான கருவறையில் கிரகணத்தினால் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக கோவில் நடை அடைக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி சூரிய கிரகணத்தையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நேற்று மாலை 3 மணி நேரம் நடை அடைக்கப்பட்டுஇருந்தது. மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுவதற்கு பதிலாக 3 மணி நேரம் தாமதமாக இரவு 7 மணிக்கு நடை திறக்கப்பட்டது. இந்த 3 மணி நேரமும் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. சூரிய கிரகண நேரத்தில் கிரகணத்தினுடைய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பகவதி அம்மன் விக்ரக சிலையை சுற்றி தர்ப்பை புல்லால் கட்டி பட்டு துணியால் மூடி வைத்து இருந்தனர்.

    சூரிய கிரகணம் முடிந்த பிறகு கோவிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு பகவதி அம்மன் விக்ரக சிலைக்கு அபிஷேகம் நடத்தி கோவில் நடை திறக்கப்பட்டது. அதன் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    • ஐயாறப்பர் கோவில் மூலவர் சுயம்பாக இருப்பதனால் அவை கைலாயத்திற்கு நிகரானவையாக கருதப்படுகிறது.
    • கதவு சாத்தப்படாமல் சூரிய கிரகணம் நடைபெறும்போது சூலப்பாணிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    சூரிய கிரகணத்தையொட்டி கோவில் நடைகள் சாத்தப்பட்டன. கிரகணம் முடிந்தபிறகு கோவில் திறக்கப்பட்டதும் சாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    அந்தவகையில் திருவையாறு அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் கோவில் மூலவர் சுயம்பாக இருப்பதனால் அவை கைலாயத்திற்கு நிகரானவையாக கருதப்படுகிறது. கதவு சாத்தப்படாமல் சூரிய கிரகணம் நடைபெறும்போது புஷ்பமண்டப படித்துறை காவிரி ஆற்றில் சூலப்பாணிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம் போன்ற திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர், சூலப்பாணியை மேளதாளம் முழங்க சன்னதிக்கு கொண்டு சென்று ஐயாறப்பர் மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    • திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி மாத திருவிழா நடந்து வருகிறது.
    • ஒற்றைக் கல் மண்டபத்தில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    குமரி மாவட்ட கோவில் நிர்வாகத்தின் கீழ் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், வேளிமலை குமாரசாமிகோவில் உட்பட 490 கோவில்கள் உள்ளன.

    மேலும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் 644 கோவில்களும், பல்வேறு தனியார் கோவில்களும் இருக்கின்றன. இந்த கோவில்களில் தினமும் அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கபட்டு மதியம் 1மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8:30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சூரிய கிரகணம் நேற்று மாலை 5 மணி 14 நிமிடத்தில் தொடங்கி 5 மணி 44 நிமிடத்துக்கு முடிந்தது.

    இதையொட்டி மதிய வேளையில் கோவில் நடைகள் அடைக்கப்பட்டது. கிரகணத்தின் பார்வை கோவிலில் உள்ள மூலஸ்தான சாமிகள் மீது விழாத வண்ணம் தர்ப்பை புல் கொண்டு மறைக்கப்பட்டிருந்தது பின்னர் மாலை 6.30 மணிக்கு மேல் பரிகார பூஜைகள் செய்யப்பட்டு கோவில் நடைகள் திறக்கப்பட்டன.

    சூரியகிரகணத்தால் நடை அடைக்கப்பட்டதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் காத்திருந்து நடை திறந்ததும் சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் சூரிய கிரகணத்தால் பாதிக்கப்படும் சித்திரை, சுவாதி, விசாகம், திருவாதிரை, சதயம் ஆகிய நட்சத்திரக்காரர்கள் பரிகாரம் செய்யும் வகையில் சூரிய பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபாடும் நடத்தினர்.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி மாத திருவிழா நடந்து வருகிறது. நேற்று காலை முதல் மதியம் வரை வழக்கமான பூஜைகள் நடந்தது. வழக்கமாக மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். நேற்று சூரிய கிரகணம் என்பதால், கிரகணத்துக்குப் பின்னர் கோவில் தண்ணீரால் சுத்தப்படுத்தப்பட்டு இரவு 7 மணி அளவில் திறக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் கருவறையில் இருந்து ஒற்றைக் கல் மண்டபத்துக்கு அர்ச்சனா மூர்த்தி, ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் எடுத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் சாமி சிலைகள் கருவறைக்கு எடுத்துச் செல்லப் பட்டது. அதன்பிறகு ஒற்றைக் கல் மண்டபத்தில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    குமாரகோவில், வேளிமலை முருகன் கோவிலில் வழக்கமாக மாலை 5 மணிக்கு நடை திறந்து இரவு 8மணிக்கு நடை அடைக்கப்படும், நேற்று சூரிய கிரகணத்தையொட்டி மாலையில் 5 மணிக்கு பதில் 6.30 மணிக்கே நடை திறக்கப்பட்டது. பின்னர் பரிகார பூஜை நடத்தப்பட்டு சாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு கந்தசஷ்டி விழாவில் பங்குகொள்ளும் பக்தர்களுக்கு சண்முகநாதர் சன்னதியில் வைத்து காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்,

    • நாட்டின் பெரும்பாலான இடங்களில் பகுதி நேர சூரிய கிரகணத்தை காண முடிந்தது.
    • கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது

    சென்னை:

    சூரியனை நிலவின் நிழல் பகுதியளவு மறைக்கும் பகுதி சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இதுவாகும். உலக அளவில் இன்று மதியம் 2.19 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்காவின் வடகிழக்கு பகுதிகள், மேற்கு ஆசியா, வட அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் வட இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றை உள்ளடக்கிய பிராந்தியத்தில் தெரிந்தது. ரஷியாவின் மத்திய பகுதியில் 80 சதவீதம் வரை சூரிய கிரகணத்தை பார்க்க முடிந்தது.

    இந்தியாவில் வடகிழக்கில் உள்ள ஒரு சில மாநிலங்களைத் தவிர நாட்டின் பெரும்பாலான இடங்களில் பகுதி நேர சூரிய கிரகணத்தை காண முடிந்தது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிறப்பு கண்ணாடி மூலம் சூரியகிரணத்தை கண்டுகளித்தார். இந்தியாவில் சூரியகிரகணம் மாலை 5.11 மணியளவில் தொடங்கியது. தமிழகத்தில் 5.14 மணிக்கு கிரகணம் தெரியத் தொடங்கியது. 5.44 மணி வரை தெரியும் என கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது எனவும், சூரிய வெளிச்சத்தைக் குறைக்கும் தன்மையுடைய சிறப்பு கண்ணாடிகள் அணிந்தும், சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச் செய்தும் பார்க்கலாம் எனவும் அறிவியலாளர்கள் அறிவுறுத்தினர். அதன்படி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கிரகணத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுமக்கள் ஆர்வத்துடன் கிரகணத்தை பார்த்தனர்.

    சூரிய கிரகணம் தொடங்கியதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் கோயில்களின் நடை மூடப்பட்டது. கிரகணம் முடிந்த பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 

    • இரவு 7 மணிக்கு பிறகு பரிகார பூஜைகள் முடிந்து நடை திறக்கப்படுகிறது
    • பகவதி அம்மன் விக்ரக சிலையைசுற்றி தர்ப்பை புல்லால் கட்டி பட்டு துணியால் மூடி வைக்கப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.

    இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல தினமும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று மாலை 5.27 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த சூரிய கிரகண நேரத்தில் கோவில்களில் மூலஸ்தான கருவறையில் கிரகணத்தினால் பாதிப்பு ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக கோவில் நடை அடைக்கப்படுவது வழக்கம். அதன்படி சூரிய கிரகணத்தையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இன்று மாலை 3 மணி நேரம் நடை அடைக்கப்படுகிறது.

    மாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுவதற்கு பதிலாக 3 மணி நேரம் தாமதமாக இரவு 7 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இந்த 3 மணி நேரமும் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். சூரிய கிரகண நேரத்தில் கிரகணத்தினுடைய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பகவதி அம்மன் விக்ரக சிலையைசுற்றி தர்ப்பை புல்லால் கட்டி பட்டு துணியால் மூடி வைக்கப்படுகிறது.

    சூரிய கிரகணம் முடிந்த பிறகு கோவிலில் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு பகவதி அம்மன் விக்ரக சிலைக்கு அபிஷேகம் நடத்தி கோவில் நடை திறக்கப்படுகிறது. அதன் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    • புதுவையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் பகல் 11.30 மணிக்கு நடை மூடப்பட்டது.
    • மாலை 7 மணி அளவில் கோவில் நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    சூரிய கிரகணம் இன்று பிற்பகல் 2.28-க்கு தொடங்கி மாலை 6.30-க்கு முடிவடைகிறது. இதனால் நாடு முழுவதும் கோவில்கள் நடை மூடப்பட்டது.

    புதுவையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் பகல் 11.30 மணிக்கு நடை மூடப்பட்டது. கோவிலுக்குள் இருந்த பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    மற்ற பக்தர்களை மாலையில் வருமாறு அறிவுறுத்தி கோவில் பாதுகாவலர்கள் அனுப்பினர்.

    மாலை 7 மணி அளவில் கோவில் நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேபோல் புதுவையில் உள்ள கோவில்களின் நடை மதியம் 12 மணிக்குள் மூடப்பட்டது.

    ×