search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "businessman killed"

    • மர்ம நபர் பூட்டா சிங் கில் உள்பட 3 பேரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றார்.
    • பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஒட்டாவா:

    கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கவானாக் நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பூட்டா சிங் கில். கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரான இவர், உள்ளூரில் பிரபல தொழில அதிபராக விளங்கி வந்தார். மேலும் அங்குள்ள பஞ்சாபி சமூகத்தினர் இடையே பெரும் செல்வாக்கு மிக்க நபராக இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கவானாக் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் பூட்டா சிங் கில் தனது நண்பர்கள் 2 பேருடன் இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் பூட்டா சிங் கில் உள்பட 3 பேரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கு பூட்டா சிங் கில்லும், அவரது நண்பரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். மற்றொரு நண்பர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியாத நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கார் மோதி மீன் வியாபாரி பலியானார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி மாரியம்மன் கோவிலைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் வீரசெல்வமுத்து (வயது 25), மீன் வியாபாரி.

    சம்பவத்தன்று திருப்பாலைக்குடியில் இருந்து தேவிபட்டிணத்திற்கு மீன் வியாபாரம் செய்ய வீரசெல்வமுத்து மோட்டார் சைக்கிளில் சென்றார். சம்பை பஸ் ஸ்டாப் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வீரசெல்வமுத்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    உயிருக்கு போராடிய அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் வீரசெல்வமுத்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து தேவிபட்டினம் போலீசில் இறந்த வாலிபரின் தந்தை ராதாகிருஷ்ணன் புகார் செய்தார். புகாரின் பேரில் காரை ஒட்டி வந்த தென்காசி ஆலங்குளத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனது வாகனம் மூலம் நெய்வேலிக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
    • டாட்டா ஏசி ஓட்டி வந்த பாரதிராஜா சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

    நெய்வேலி அருகே வடக்குத்து ஊராட்சி தில்லை நகர் புறா தெருவில் வசித்து வருபவர் செந்தில்குமாரன் .அவரது மகன் பாரதிராஜா (வயது 24). இவர் சொந்தமாக டாட்டா ஏசி வேனில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் தனதுடாட்டா ஏசி வேன் மூலம் காரைக்காலுக்கு சென்று காய்கறி வியாபாரம் செய்து வீட்டு மீண்டும் தனது வாகனம் மூலம் நெய்வேலிக்கு திரும்பி கொண்டு இருந்தார்.

    அப்பொழுது வடக்குத்து போலீஸ் நிலையம் சென்னை - தஞ்சாவூர் சாலையில் வடலூர் நோக்கி வந்த அரசு விரைவு பஸ், டாட்டா ஏ.சி. வேன் மீது அதிவேகமாக மோதியது. இதில் டாட்டா ஏசி ஓட்டி வந்த பாரதிராஜா சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து பாரதிராஜா சகோதரர் பிரசாந்த் நெய்வேலி நகர போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் தொழில் அதிபர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் லட்சுமிநாராயணன் (வயது 38). தொழில் அதிபர். இவர் செஞ்சி பகுதியில் உரக்கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று காலை லட்சுமிநாராயணன் மற்றும் வக்கீல்கள் சக்திவேல் (42), ஆதிமூலம் (55), சின்னையா வீரப்பன் (40), சின்னதுரை (40), ஏழுமலை (45) ஆகியோர் ஒரு காரில் இன்று காலை செஞ்சியில் இருந்து ஆந்திராவுக்கு புறப்பட்டனர்.

    காரை செஞ்சியை சேர்ந்த டிரைவர் நிஜாமொய்தீன் (30) ஓட்டினார். அந்த கார் காலை 11 மணி அளவில் செஞ்சி அருகே வளத்தியை அடுத்த தேவனூர் கூட்ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தது.

    இந்த நேரத்தில் அந்த வழியாக சைக்கிளில் வந்த ஒருவர் திடீரென ரோட்டை கடக்க முயன்றார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக காரை டிரைவர் திடீரென்று திருப்பினார்.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் கார் சுக்கு நூறாக நொறுங்கியது. அதில் பயணம் செய்த லட்சுமிநாராயணன், சக்திவேல், கார் டிரைவர் நிஜாமொய்தீன் ஆகிய 3 பேரும் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    சின்னையா வீரப்பன், ஏழுமலை, ஆதிமூலம், சின்னதுரை ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காரில் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    விபத்து குறித்து வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×