search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார் மோதி மீன் வியாபாரி பலி
    X

    கார் மோதி மீன் வியாபாரி பலி

    • கார் மோதி மீன் வியாபாரி பலியானார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி மாரியம்மன் கோவிலைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் வீரசெல்வமுத்து (வயது 25), மீன் வியாபாரி.

    சம்பவத்தன்று திருப்பாலைக்குடியில் இருந்து தேவிபட்டிணத்திற்கு மீன் வியாபாரம் செய்ய வீரசெல்வமுத்து மோட்டார் சைக்கிளில் சென்றார். சம்பை பஸ் ஸ்டாப் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் வீரசெல்வமுத்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    உயிருக்கு போராடிய அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் வீரசெல்வமுத்து சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து தேவிபட்டினம் போலீசில் இறந்த வாலிபரின் தந்தை ராதாகிருஷ்ணன் புகார் செய்தார். புகாரின் பேரில் காரை ஒட்டி வந்த தென்காசி ஆலங்குளத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×