search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tennessee"

    • விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் கனடா நாட்டை சேர்ந்தவர்கள் என தெரிகிறது
    • 3 குழந்தைகள் உட்பட 5 பயணிகளும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்

    கடந்த திங்கட்கிழமையன்று, கனடா நாட்டின் ஒன்டாரியோ (Ontario) நகரிலிருந்து சிங்கிள்-எஞ்சின் பொருத்தப்பட்ட ஒரு சிறிய விமானம் புறப்பட்டது. அந்த விமானம் சேர வேண்டிய இடம் மற்றும் பயண திட்டம் குறித்து தற்போது தகவல்கள் இல்லை.

    அந்த சிறிய ரக விமானத்தில் பயணம் செய்த 5 பேரும் கனடா நாட்டை சேர்ந்தவர்கள். அவர்களில் 3 பேர் குழந்தைகள்.

    அந்த விமானம் அமெரிக்காவின் டென்னிசி (Tennessee) மாநில நேஷ்வில் (Nashville) நகர்புறத்தில் உள்ள ஜான் டியூன் (John Tune) விமான நிலையத்தில் 2,500 அடி உயரத்தில் வட்டமிட்டு, சிறிது நேரத்தில் அங்கிருந்து பறந்தது.

    அந்த விமானத்தின் விமானி, தரைக்கட்டுப்பாட்டு தளத்தை ரேடியோவில் தொடர்பு கொண்டு விமானம் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறினார்.

    உடனடியாக, ஜான் டியூன் விமான நிலையத்தில் ஓடுதளம் எண். 2ல் (Runway 2) அந்த விமானத்தை இறக்குமாறு  நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானியிடம் கூறினர்.

    ஆனால், சில நொடிகளில் எஞ்சின் முற்றிலும் செயலிழந்து விட்டதாகவும் விமான நிலையத்தில் இறக்குவது கடினம் என்றும் விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் விமானி கூறினார்.


    இதைத் தொடர்ந்து விமான நிலையத்தை தாண்டி சென்ற விமானம், அங்கிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் கீழே விழுந்து நொறுங்கியது.

    இன்டர்ஸ்டேட் 40 நெடுஞ்சாலைக்கு 60 அடிக்கு முன்னர் நேஷ்வில் புறநகர் பகுதியில் மாலை சுமார் 08:00 மணியளவில் இந்த விமான விபத்து நடந்தது. கீழே விழுத்து நொறுங்கிய அந்த விமானம் உடனே தீப்பிடித்து முற்றிலும் எரிந்தது.

    இந்த விபத்தில் இந்த விமானத்தில் பயணித்த 3 குழந்தைகள் உட்பட 5 பேரும் உயிரிழந்தனர்.

    அந்த 5 பயணிகளின் பெயர், வயது, பாலினம் உள்ளிட்ட விவரங்கள் தற்போது வரை வெளியாகவில்லை.

    விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரிய (National Transport Safety Board) அதிகாரி ஆரோன் மெக்கார்டர் (Aaron McCarter) தெரிவித்தார்.

    விபத்து நடைபெறும் வரை விமானி பதட்டமாகாமல் தொடர்பில் இருந்ததாக விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அந்த விமானம், 10,500 அடி உயரத்தில் நீண்ட நேரமாக எந்த சிக்கலும் இன்றி பயணித்து வந்துள்ளது தரைக்கட்டுப்பாட்டு நிலைய தகவல்களில் இருந்து தெரிய வருகிறது.

    • அலிஸா மெக்காமன் 2 குழந்தைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது
    • பல குழந்தைகளுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியுள்ளார்

    அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள மாநிலம் டென்னிசி. இதன் தலைநகரம் நாஷ்வில்.

    டென்னிசி மாநில டிப்டன் கவுன்டி பகுதியை சேர்ந்த கோவிங்டன் நகரத்தில் உள்ளது சார்ஜர் அகாடமி எனும் தொடக்கப்பள்ளி. இங்கு 4-வது வரை படிக்கும் குழந்தைகளுக்கு ஆசிரியையாக பணியாற்றியவர் 38 வயதான அலிஸா மெக்காமன் (Alissa McCommon). இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது.

    2021-ல் இவர் தன்னிடம் படித்த ஒரு 12-வயது முன்னாள் மாணவரிடம் தனது வீட்டில் பாலியல் அத்துமீறல் புரிந்தார். இது மட்டுமின்றி பல மாணவர்களிடம் தகாத பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டார்.

    இது தெரிய வந்ததும் அந்த மாணவரின் பெற்றோர் பள்ளியில் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து இவர் பள்ளியில் இருந்து ஊதியமின்றி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

    சில நாட்களுக்கு பிறகு இக்குற்றச்சாட்டு தொடர்பாக காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை விசாரித்த காவல்துறையினர் குற்றச்சாட்டு உண்மை என கண்டறிந்து வழக்கு பதிவு செய்து அலிஸாவை அவரது வீட்டில் கைது செய்தனர். காவல்துறை விசாரணையில் பல மாணவர்களுடன் தகாத பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதை அவர் ஒப்பு கொண்டதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது.

    அந்த ஆசிரியை இவ்வாறு முறைகேடான உரையாடல்களில் ஈடுபட்டதாகவும், பல குழந்தைகளுக்கு ஆபாச புகைப்படங்கள் அனுப்பியதாகவும், முறையற்ற உறவுக்கு அழைப்பு விடுத்ததாகவும் தற்போது பல குழந்தைகள் புகாரளித்துள்ளனர்.

    இதனையடுத்து சுமார் ரூ.20 லட்சம் ($25,000) பிணையில் வெளிவரும் வகையில் காவலில் அடைக்கப்பட்டார். ஆனால் அலிஸா இக்குற்றச்சாட்டுகளை மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களுடன் காவல்துறை பேசி விவரங்களை சேகரித்து வருகிறது.

    அலிஸா பணியிலிருந்து நீக்கப்பட்ட அன்றே பள்ளி நிர்வாகம் அவர் மீது காவல்துறையில் புகாரளித்து அப்போதே அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என சில பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    அக்டோபர் 13 அன்று அலிஸா அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

    ×