search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுக்கூட்டம்"

    • குமரி மண்ணையும் பிரதமர் மோடியையும் பிரிக்க முடியாது.
    • மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமர் ஆவார்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் பா.ஜ.க. பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

    இக்கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    * குமரி மண்ணையும் பிரதமர் மோடியையும் பிரிக்க முடியாது.

    * கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 48 ஆயிரம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்தவர் பிரதமர் மோடி.

    * குமரியில் 1995-ல் ஏக்தா யாத்திரை துவங்கிய போது மோடி முக்கிய பங்கு வகித்துள்ளார்.

    * அடுத்த 25 ஆண்டுகளுக்கான கனவுடன் பிரதமர் மோடி வந்திருக்கிறார்.

    * 400 தொகுதிகள் வெற்றி என்பது வெறும் வார்த்தை அல்ல, இந்திய மக்களின் உணர்வு.

    * 1892-ல் குமரிக்கு வந்த நரேந்திர தத்தா பாறை மீது அமர்ந்து விவேகானந்தராக மாறினார்.

    * தற்போது இங்கு வந்துள்ள பிரதமர் மோடி ஞானியாக மாறியுள்ளார்.

    * மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமர் ஆவார்.

    * 147 கோடி மக்களின் விஸ்வ குருவாக பிரதமர் மோடி திகழ்கிறார் என்றார்.

    இதையடுத்து மகளிர் அணியின் சார்பில் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. கன்னியாகுமரி பா.ஜ.க. சார்பாக பிரதமர் மோடிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.

    முன்னதாக பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி. 40 மக்களவை தொகுதிகளிலும் நாம் நிச்சயம் வெல்வோம் என்றார்.

    • தமிழினத்திற்கு பெருமை சேர்க்கும் மோடியுடன் சேர்ந்து செயல்பட குமரி முனை வந்துள்ளோம்.
    • மோடி, அண்ணாமலையின் ரசிகர்களை பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன்.

    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே தேர்தல் களம் அனைத்து மாநிலங்களிலும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

    பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    தி.மு.க. தன் வழக்கமான கூட்டணி கட்சிகளோடு களம் இறங்க, அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சிகள் கூட்டணி முறிந்து தனித்தனியாக தேர்தலை சந்திக்க உள்ளன. இந்த தேர்தலில் தென் மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என திட்டமிட்டுள்ள பா.ஜனதா அதற்கேற்ப தேர்தல் வியூகங்களை அமைத்து செயலாற்றி வருகிறது.

    குறிப்பாக தமிழகம், கேரளாவில் வலுவாக காலூன்ற பாரதிய ஜனதா முயன்று வருகிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2 மாநிலங்களிலும் அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார்.

    சமீபத்தில் தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை மற்றும் சென்னை பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசி பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டினார். இந்நிலையில் அவர் கேரளா மற்றும் தமிழகத்தில் இன்று மீண்டும் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    இதற்காக கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் சரத்குமார், ராதிகா சரத்குமார், விஜயதாரணி, பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எம்.ஆர்.காந்தி, மாநில செயலாளர் மீனா தேவ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.


    இக்கூட்டத்தில் பேசிய ராதிகா சரத்குமார், பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சியாகவும், எழுச்சியாகவும் உள்ளது. தமிழினத்திற்கு பெருமை சேர்க்கும் மோடியுடன் சேர்ந்து செயல்பட குமரி முனை வந்துள்ளோம் என்றார்.

    இதன்பின்னர் பேசிய சரத்குமார், நாட்டை ஆள்வதற்கான நல்ல தலைவர் மோடி. 3-வது முறையாக பிரதமராக அமர உள்ளார். மோடி, அண்ணாமலையின் ரசிகர்களை பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன். ஊழல் அற்ற, சுயநலம் அற்ற சிறந்த ஆட்சி அமைய வேண்டும் என்றார்.

    • மோடி வருகையடுத்து குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
    • நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் ஆகியோரும் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு செய்தனர்.

    நாகர்கோவில்:

    பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சி தயாராகி வருகிறது. தமிழகம் முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்வதற்காக நாளை மறுநாள் (15-ந்தேதி) கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் தென் மாவட்ட பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அங்கு பிரசாரம் செய்கிறார். மோடி வருகையடுத்து குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. டெல்லியில் இருந்து பாதுகாப்பு படை அதிகாரிகள் குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.

    மேலும் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் ஆகியோரும் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு செய்தனர். இந்த நிலையில் பிரதமர் மோடி பேச உள்ள நிகழ்ச்சிக்கான பந்தல் கால்கோள் நாட்டும் நிகழ்ச்சி இன்று நடந்தது. விழாவில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தர்மராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி, மாநில செயலாளர் மீனாதேவ், மாநில மகளிர் அணி செயலாளர் உமாரதி ராஜன், மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத் தலைவர் தேவ், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பொதுக்கூட்ட இடத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மற்றும் போலீஸ் அதிகாரிகளும் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து மேடை மற்றும் பந்தல் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

    பிரதமர் மோடி பேசவுள்ள மேடை தெற்கு இருந்து வடக்கு பார்த்து அமைக்கப்படுகிறது. மேலும் தொண்டர்கள் அமர்வதற்கு வசதியாக பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்துவதற்கான இடமும் ஜேசிபி எந்திரம் மூலமாக சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    • ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அமரும் வகையில் இருக்கை வசதிகளுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
    • ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாரதிய ஜனதா தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டது.

    3-வது முறையாக பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கும் நிலையில் தமிழகத்தில் இந்த முறை எப்படியாவது சில தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் தேர்தல் பணிக்கான வியூகங்களை வகுத்துள்ளார்கள்.

    இதன்படி பிரதமர் மோடி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.

    கடந்த 2 மாதங்களில் மோடி 4 முறை தமிழகம் வந்துள்ளார். திருச்சி, பல்லடம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்களில் பேசி இருக்கிறார்.

    கடந்த 27 மற்றும் 28-ந்தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அடுத்த 5 நாளில் மீண்டும் இன்று தமிழகம் வருகிறார்.

    தமிழக பாரதிய ஜனதா சார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் அமரும் வகையில் இருக்கை வசதிகளுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.


    மீண்டும் மோடி சர்க்கார் என்ற வாசகத்துடன் மேடை அமைக்கப்பட்டுள்ளது. மேடையின் ஒரு புறத்தில் பிரதமர் மோடி புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தின் செங்கோலை கொண்டு நிறுவிய படம் இடம் பெற்றுள்ளது. மறுபுறத்தில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை மூதாட்டி ஒருவரிடம் ஆசி பெறும் காட்சி இடம் பெற்றுள்ளது.

    மேடையின் பக்கவாட்டில் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் மண்டபத்துக்குள் அங்கவஸ்திரத்துடன் பிரதமர் மோடி நடந்து வருவது போன்ற பிரமாண்டமான கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிராவில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி 2.50 மணிக்கு சென்னை வருகிறார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 3.20 மணிக்கு கல்பாக்கம் அணுமின் நிலையம் செல்கிறார்.

    அங்கு அரசு நிகழ்ச்சியை முடித்து விட்டு மாலை 4.30 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்.

    விமான நிலையத்தில் இருந்து காரில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு மாலை 5 மணிக்கு வருகிறார்.

    5.15 மணி முதல் 6.15 மணி வரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். பின்னர் காரில் விமான நிலையம் திரும்பும் பிரதமர் மோடி விமானத்தில் தெலுங்கானா மாநிலத்துக்கு புறப்பட்டு செல்கிறார்.

    பிரதமர் மோடியின் பிரசார கூட்டத்துக்காக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்கள் குவிகிறார்கள்.

    கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் மைதானத்தில் திரண்டுள்ளார்கள்.

    விமான நிலையத்தில் இருந்து நந்தனம் வரை 10 கிலோ மீட்டர் தூரம் மோடி காரில் பயணிப்பதால் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    • தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் ஒரு பைசா கூட ஒன்றிய அரசு வழங்காமல் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.
    • ஒன்றிய அரசின் தூண்டுதலின் பேரில் தமிழகத்தின் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    விளாத்திகுளம்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் தெருமுனை பிரசாரம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் விளாத்திகுளத்தில் நேற்று மாலை விளாத்திகுளம்-மதுரை சாலையில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமையில் எல்லோருக்கும் எல்லாம் எனும் தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, நிதிநிலை அறிக்கை பொதுக்கூட்டம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    ஒன்றிய அரசு தமிழகத்தின் மக்கள் பணத்தை ஜி.எஸ்.டி. என்ற பெயரில் வசூலித்து கொண்டு சென்று வடமாநிலங்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்துகிறது. மாறாக மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதியை தமிழகத்திற்கு ஒரு தலைப்பட்சமாக வழங்காமல் நிதி நெருக்கடியை உருவாக்க முயற்சி செய்கிறது.

    தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரையில் ஒரு பைசா கூட ஒன்றிய அரசு வழங்காமல் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது.

    பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் கொள்ளை அடித்து இங்கிலாந்தின் வளர்ச்சிக்கு நிதியை பயன்படுத்தியது போன்று பிரதமர் மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசு பல்வேறு மாநிலங்களில் ஜி.எஸ்.டி. வரி வசூல் செய்து பா.ஜ.க. ஆளும் கட்சியாக உள்ள மாநிலங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருகிறது.

    பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனை போன்று பிரதமர் மோடியின் தலைமையிலான மக்கள் விரோத ஒன்றிய அரசை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு எதிர்த்து வருகிறது.

    ஒன்றிய அரசின் தூண்டுதலின் பேரில் தமிழகத்தின் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் இத்தகைய மிரட்டலுக்கு ஒருபோதும் தி.மு.க. அரசு அஞ்சுவதில்லை.

    டெல்லியில் விவசாயிகளின் வேண்டுகோளை காது கொடுத்து கேட்காத ஒன்றிய அரசு தமிழகத்திலும் சென்னை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போதும் மக்களின் வேண்டுகோளை காது கொடுத்து கேட்கவில்லை. வெள்ள நிவாரண நிதியையும் வழங்கவில்லை.

    பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால் தேர்தல் பயத்தில் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறார். அவர் தமிழகத்திலேயே குடியேறினாலும் தமிழக மக்கள் பா.ஜ.க. அரசை ஏற்க மாட்டார்கள். பாரதிய ஜனதாவுக்கு ஓட்டுகள் விழாது. நாடும் நமதே நாற்பதும் நமதே.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்கும் லட்சக்கணக்கில் தொண்டர்களையும், பொதுமக்களையும் திரட்ட ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
    • மோடி தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபடுவதால் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் மக்கள் ஆதரவை பெருக்குவதில் பா.ஜனதா அதிரடி வியூகங்களை வகுத்து செயல்படுகிறது.

    கடந்த 2019 தேர்தலில் தமிழகத்தில் உருவான மோடி எதிர்ப்பு அலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது.

    பிரதமர் மோடி தமிழ், தமிழர் கலாச்சாரம் பற்றி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பெருமையுடன் அடிக்கடி கூறி வருகிறார்.

    காசி தமிழ் சங்கமம், புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழர்களின் பாரம்பரிய செங்கோல் நிறுவியது போன்றவற்றால் எதிர்ப்பு மறைந்து தமிழர்கள் மத்தியிலும் மோடி ஆதரவு வளர தொடங்கியது.

    இந்த நிலையில் வட மாநிலங்களில் இமாலய வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் எம்.பி.க்கள் வெற்றி பெறாதது டெல்லி தலைவர்கள் மத்தியில் பெரும் மனக்குறையாகவே இருந்து வருகிறது.

    எனவே இந்த தேர்தலில் தமிழகத்தில் எப்படியாவது சில தொகுதிகளில் வெற்றி பெற்றே தீருவது என்ற முனைப்புடன் செயல்படுகிறது. ஏற்கனவே ரகசிய சர்வே நடத்தி 10 தொகுதிகளை தேர்வு செய்து வைத்துள்ளார்கள். அதற்கு ஏற்றவாறு வேட்பாளர் தேர்வு பிரசார திட்டங்களையும் வகுத்துள்ளார்கள்.

    தேர்தலில் வெற்றியை அறுவடை செய்ய பிரதமர் மோடியும் தமிழகம் முழுவதும் ரவுண்டு கட்டும் வகையில் பல கட்ட பயண திட்டத்தை வகுத்துள்ளார்.




     வருகிற 27-ந்தேதி பல்லடத்தில் நடைபெறும் 'என் மண் என் மக்கள்' யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்களை திரட்ட பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அன்றைய தினம் மாலை மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். அன்று மதுரையில் தங்கும் மோடி சில முக்கிய தலைவர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.

    மறுநாள் தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் குலசேகரன்பட்டினத்தில் அமையவிருக்கும் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். அன்று மாலையில் திருநெல்வேலியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    இந்த முதற்கட்ட பயணத்தில் தமிழகத்தில் முக்கிய நகரங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். முதற்கட்ட பயணத்தை முடித்த பிறகு மீண்டும் பிரதமர் மோடி தமிழகத்துக்கு அடுத்தடுத்து வருவார் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறினார்.

    இந்த நிலையில் மீண்டும் அடுத்த மாதம் மோடி தமிழகம் வருவது உறுதியாகி இருக்கிறது.

    4-ந் தேதி (திங்கள்) அவர் சென்னை வருகிறார். சென்னையில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

    சென்னையில் நடைபெறும் பிரசார கூட்டத்தையும் மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள். பொதுக் கூட்டத்துக்கான இடம் இன்னும் முடிவாகவில்லை.

    ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடல், பல்லாவரம் ஆகிய இடங்களை பார்த்துள்ளார்கள். பிரதமரின் பாதுகாப்பு குழுவினர் இடத்தை பார்த்து உறுதி செய்த பிறகு, இடம் முடிவாகும் என்றார்கள்.

    சென்னையில் நடைபெறும் கூட்டத்திற்கும் லட்சக்கணக்கில் தொண்டர்களையும், பொதுமக்களையும் திரட்ட ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    அடுத்த மாதம் தேர்தல் தேதி வெளியாக இருக்கும் நிலையில் மோடி தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபடுவதால் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அடுத்தடுத்து தமிழகத்தை குறி வைத்து பா.ஜனதா காய் நகர்த்துவதால் தேர்தல் களம் இப்போதே பரபரப்படைந்துள்ளது.

    • எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும்.
    • வாக்காளர்களை வாக்குறுதிகளால் ஏமாற்றும் இயக்கம் தி.மு.க. என்பதை நிரூபித்துவிட்டது.

    நெல்லை:

    நெல்லையில் நடந்த அ.ம.மு.க. பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-

    தமிழகத்தில் இளைஞர் படை அதிகம் உள்ள கட்சி அ.ம.மு.க. ஜெயலலிதாவின் கொள்கைகளை நூற்றாண்டுகளுக்கு எடுத்துரைப்பதே எங்களின் லட்சியம். தேர்தல் வெற்றி, தோல்வியை கண்டு துவண்டுவிடாமல் கொள்கையை தாங்கி பிடிப்போம். நம்பிக்கை துரோகம் செய்பவர்கள் அதற்கான பலனை அனுபவித்தே தீருவார்கள்.

    எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும். கவர்னரின் தயவினால் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தப்பித்து வருகின்றனர். அவர்களை பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தண்டிப்பார்கள்.

    எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக சீர்கேட்டினாலும், தி.மு.க. திருந்தியிருக்கும் என்றும் நினைத்து கடந்த சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் தி.மு.க.விற்கு வெற்றிக்கனியை தந்தனர். வாக்காளர்களை வாக்குறுதிகளால் ஏமாற்றும் இயக்கம் தி.மு.க. என்பதை நிரூபித்துவிட்டது. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தற்போதைய நிதிநிலை அறிக்கையில் பல்வேறு ஏமாற்று திட்டங்களை தி.மு.க. அறிவித்துள்ளது.

    மகளிர் உரிமை திட்டம் தகுதியான பலருக்கும் கிடைக்கவில்லை. சிறு-குறு தொழில் முனைவோர் கடுமையான மின்கட்டண உயர்வால் திணறி வருகின்றனர். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வந்த மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டம் ரத்தாகி உள்ளது. அரசின் கடன் சுமையை குறைப்போம் என்ற தி.மு.க.வின் வாக்குறுதி மறக்கப்பட்டு கடன் சுமை அதிகரித்துள்ளது.

    கூட்டணி பலத்தால் வெற்றியாளர்களை போல் காட்டி வருகிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் வாக்குகளை விலைக்கு வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில் தி.மு.க. உள்ளது. அதற்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். 2024 பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வின் வெற்றி கணக்கை தொடங்க வேண்டும். வருகிற தேர்தலில் தி.மு.க. மற்றும் எடப்பாடி பழனிசாமியை தோற்கடிப்பதே அ.ம.மு.க. வின் இலக்கு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகள், ஹெலிபேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்வதற்காக ஆயத்தப்பணிகள் வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.
    • அரசியல் மாநாடாக மட்டும் அல்லாது தமிழகத்திற்கு பல்வேறு சலுகைகளை அறிவிக்கின்ற அரசு நிகழ்ச்சியாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது.

    பல்லடம்:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த பாதயாத்திரை இந்த மாதம் நிறைவடைய உள்ளது. என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழாவை பாராளுமன்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டமாக நடத்த பா.ஜனதா கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

    அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலை எதிரே 1000 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு வருகிற 27-ந்தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார். இதையடுத்து கூட்டத்திற்கான ஏற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இது குறித்து பா.ஜனதா மாநில துணை பொதுச்செயலாளரும், பொதுக்கூட்ட பொறுப்பாளருமான ஏ.பி.முருகானந்தம் கூறியதாவது:-

    பல்லடத்தில் 27-ந்தேதி நடைபெறும் என் மண், என் மக்கள் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்வது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கலந்து கொள்ள உள்ள மாநாட்டிற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகள், ஹெலிபேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்வதற்காக ஆயத்தப்பணிகள் வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.

    பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா கட்சியினர் சுமார் 10 லட்சம் பேர், பொதுமக்கள் சுமார் 3 லட்சம் பேர் என 13 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். 400 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானமும், வாகனங்கள் நிறுத்த சுமார் 600 ஏக்கர் என ஆயிரம் ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. மதிய உணவு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளது.

    பெரிய பொம்மைகளை காட்சிப்படுத்தியும், நோட்டீஸ் வழங்கியும் கல்லூரி மாணவிகளுக்கு அழைப்பு விடுத்த பா.ஜ.க.வினர். 

    பெரிய பொம்மைகளை காட்சிப்படுத்தியும், நோட்டீஸ் வழங்கியும் கல்லூரி மாணவிகளுக்கு அழைப்பு விடுத்த பா.ஜ.க.வினர். 

    பல்லடத்தில் பிரதமர் 25-ந் தேதி கலந்து கொள்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினம் பிரதமருக்கு மிகவும் பிடித்த மனதின் குரல் நிகழ்ச்சியில் பேச வேண்டி இருந்ததால் தேதி மாற்றப்பட்டு உள்ளது. மனதின் குரல் நிகழ்ச்சியை குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிகம் பேர் கேட்டு வருகிறார்கள்.

    பா.ஜனதா ஆளும் மாநிலங்களை பின்னுக்குத்தள்ளி தமிழகம் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்பதில் மூன்றாவது இடத்தில் இடம் பிடித்துள்ளது. பல்லடத்தில் நடைபெறுகின்ற மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கின்ற போது வெறும் அரசியல் மாநாடாக மட்டும் அல்லாது தமிழகத்திற்கு பல்வேறு சலுகைகளை அறிவிக்கின்ற அரசு நிகழ்ச்சியாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது. பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பிறகு தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்படும்.

    இந்தியா கூட்டணி தற்போது ஒவ்வொரு எழுத்துக்களாக இழந்து வருகிறது. கடைசியாக ஜம்மு காஷ்மீரில் பரூக் அப்துல்லாவுக்கு இந்தியா கூட்டணி மீது நம்பிக்கை இல்லாததால் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். தமிழகம் மட்டுமே இந்தியா கூட்டணியை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் மூழ்கக் கூடிய கப்பலாக, எப்போது கரை தட்டி நிற்கும் என தெரியாமல் உள்ளது.பிரதமர் மோடியுடன் பா.ஜனதாவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பா.ஜனதா கட்சியின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. பிரதமர் மோடியை ஏற்றுக்கொள்ளும் யார் வேண்டுமானாலும் பா.ஜனதா கூட்டணிக்கு வரலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுத்து திருப்பூர் மாவட்ட பா.ஜ.க.வினர் துண்டு பிரசுரம் வழங்கி அழைப்பு விடுத்து வருகின்றனர். மேலும் பெரிய பொம்மைகளை காட்சிப்படுத்தியும், வேண்டும் மோடி, மீண்டும் மோடி என்ற வாசகத்துடன் ராட்சத பலூன்களை திருப்பூரில் பறக்கவிட்டுள்ளனர். திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வடக்கு, தெற்கு, பல்லடம் ஆகிய தொகுதிகளில் 19 மண்டலங்களில் வாகன பிரசாரம் மூலம் நோட்டீஸ்களை வழங்கி வருகின்றனர். திருப்பூர் குமரன் கல்லூரி மற்றும் ஜெய்வாபாய் பள்ளி அருகே பெரிய பொம்மைகளை காட்சிப்படுத்தி பொதுக்கூட்டம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்களை கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர். 

    • தகுதி உள்ளவர்களில் 85-ல் இருந்து 90 சதவிகித மகளிருக்கு உரிமைத் தொகை சென்றடைந்து உள்ளது.
    • நம் பிரச்சாரம் வெற்றிப் பிரச்சாரமாக அமைந்திட வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தி.மு.க.வின் சார்பில் 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்' என்ற தலைப்பில் பாராளுமன்றத் தொகுதிவாரியாக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்கள் வருகிற 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடை பெற உள்ளன.

    இந்த பொதுக்கூட்டங்களை மிகச்சிறப்பாக நடத்துவது குறித்து பாராளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, அனைத்து மாவட்டக் கழக செயலாளர்கள், மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தியது.

    இந்தக் கூட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும் பாராளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினருமான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இதுவரை ஒரு கோடியே 15 லட்சம் மகளிர் பயனடைந்து இருக்கிறார்கள். அதாவது தகுதி உள்ளவர்களில் 85-ல் இருந்து 90 சதவிகித மகளிருக்கு உரிமைத் தொகை சென்றடைந்து உள்ளது.

    கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையில்தான் இந்த மகளிர் உரிமைத் திட் டம், மகளிருக்குக் கட்டணம் இல்லா பேருந்து வசதி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மகளிருக்குக் கட்டணம் இல்லா பேருந்துத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மகளிரும் மாதந்தோறும் கிட்டத்தட்ட 900 ரூபாய் சேமிக்கிறார்கள்.

    2 லட்சத்து 71 ஆயிரம் மாணவிகள் புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் இந்த இரண்டரை வருடங்களில் பயனடைந்து இருக்கிறார்கள். அதேபோல் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம். இதில் தினமும் 17 லட்சம் குழந் தைகள் பயன்பெற்று வருகிறார்கள். 'நான் முதல்வன்' திட்டம் வாயிலாக இது வரைக்கும் 12 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று இருக்கிறார்கள்.

    இதை மக்களிடம் எடுத்துக் கொண்டு சென்று பேசுங்கள். இதை ஒரு பேசு பொருளாக்குங்கள்.

    ஊழல் ஒழிப்பு பற்றிப் பேசிய ஒன்றிய அரசு ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறது. இதனை நாம் சொல்லவில்லை, சி.ஏ.ஜி அறிக்கையே அம் பலப்படுத்தி இருக்கிறது.

    இன்றைக்கு அ.தி.மு.க. வினர் ஏதோ பா.ஜ.க கூட்டணியை விட்டு வெளியே வந்துவிட்டோம் என்று திடீரென சிறுபான்மையினர் மீது பாசத்தைப் பொழிகிறார்கள்.

    இதை மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை. பத்தாண்டு காலம் பா.ஜ.க தமிழ்நாட்டைச் சீரழித்தது என்றால், நேரடியாக அவர்கள் வந்து செய்யவில்லை. அ.தி.மு.க.வின் உதவியோடுதான் எல்லா வற்றையும் நமக்கு எதிராகச் செய்து முடித்தார்கள்.

    இதையெல்லாம்தான் நாம் மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும். நம் பிரச்சாரம் வெற்றிப் பிரச்சாரமாக அமைந்திட வேண்டும்.

    தென் சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய மூன்று தொகுதிகளுக்கான மிகப்பெரிய, ஒரு பிரமாண்டக் கூட்டம் நம் தலைவரின் பிறந்த நாளான மார்ச் 1 அன்று நடைபெற இருக்கிறது. எனவே, இந்தக் கூட்டங்களை யெல்லாம் மிகப்பெரிய வெற்றி அடையச் செய்ய வேண்டியது நம் கடமை.

    விடியலை நோக்கி தலைவரின் குரலாக நாம் 2021-ல் தமிழ்நாடு எங்கும் எதிரொலித்தோம். தமிழ் நாட்டுக்குப் புதிய விடியல் கிடைத்தது. அதே போல் இப்போது உரிமைகளை மீட்க தலைவரின் குரலாக எதிரொலிப்போம். ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் விடியல் கிடைக்கும் நாள் தூரத்தில் இல்லை. கலைஞர் நூற்றாண்டில் 'பாசிசம் வீழ்ந்தது, இந்தியா வென்றது' என்ற வரலாற்றைப் படைத்திடுவோம் என்று கூறி விடை பெறுகிறேன்."

    இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    • பிறந்த நாளை மக்கள் பயன்பெறும் வகையிலும் ஏழை எளியோருக்கு உதவிடும் வகையிலும் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
    • திருப்போரூர் மற்றும் குன்றத்தூர் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது.

    சென்னை:

    மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மார்ச்-1 முதல் மார்ச் 25-ந் தேதி வரை தொடர்ந்து பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மார்ச்-1 வருகிறது. அவரது பிறந்த நாளைமக்கள் பயன்பெறும் வகையிலும் ஏழை எளியோருக்கு உதவிடும் வகையிலும் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

    மார்ச்-1 முதல் மார்ச் 25 வரை மாவட்டம் முழுவதும் தொடர் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. 1-ந் தேதி காலை அனைத்து கிளைக் கழகங்களிலும் கொடியேற்றி இனிப்பு வழங்கப்படும். அன்று பகல் 12 மணிக்கு மாவட்டத்தில் உள்ள 37 ஆதரவற்றோர் இல்லங்களிலும் அறுசுவை உணவு வழங்கப்பட உள்ளது. பரனூர் தொழு நோயாளிகளுக்கு உணவு, உடை வழங்கப்பட உள்ளது.

    மார்ச்-1 அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் காலை 10 மணிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும், பல்லாவரம் வடக்கு பகுதி தி.மு.க. சார்பில் பகல் 12 மணிக்கு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் திருப்போரூர் மற்றும் குன்றத்தூர் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது. மார்ச் -2ந் தேதி திண்டுக்கல் லியோனி பொதுக்கூட்டம் பல்லாவரம் வடக்கு பகுதி, 3-ந் தேதி கம்பம் செல்வேந்திரன் கந்திரி கரிகாலன், செங்கல்பட்டு நகரம், 4-ந் தேதி நாஞ்சில் சம்பத், செங்கை தாமஸ்-ஆலந்தூர் தெற்கு பகுதி.

    5-ந் தேதி சுப.வீர பாண்டியன், வெ.அன்புவாணன்-குன்றத்தூர் தெற்கு ஒன்றியம், 6-ந் தேதி புதுக்கோட்டை விஜயா ஆரணி மாலா- ஸ்ரீபெரும்புதூர், 7-ந் தேதி கோவி செழியன், மலர் மன்னன், பம்மல் தெற்கு பகுதி, 8-ந் தேதி நெல்லிக் குப்பம் புகழேந்தி, பிரபாகரன்- திருப்போரூர் தெற்கு ஒன்றியம், 9-ந் தேதி சபாபதி மோகன், ஒப்பிலா மணி- செம்பாக்கம் வடக்கு, 10-ந் தேதி ஈரோடு இறைவன் தேவபாலன்-செம்பாக்கம் தெற்கு.

    11-ந் தேதி சைதை சாதிக், அரங்கநாதன்-மறைமலை நகர், 12-ந் தேதி தமிழன் பிரசன்னா, செங்கை சந்தானம்-பல்லாவரம் தெற்கு, 13-ந் தேதி ராஜீவ் காந்தி, பரிதி இளம் சுருதி- ஆலந்தூர் வடக்கு, 14-ந் தேதி மதிவதனி, கவிஞர் நன்மாறன்-குன்றத்தூர் 15ந் தேதி குத்தாலம் கல்யாணம், போடிகாமராஜ்-திருக்கழுக்குன்றம், 16-ந் தேதி கரூர் முரளி, சிவா, - காட்டாங்குளத்தூர், 17-ந் தேதி சேலம் சுஜாதா, நாகம்மை- தாம்பரம் கிழக்கு, 18-ந் தேதி காரமடை நாக நந்தினி, குடியாத்தம் புவியரசி-கண்டோன் மென்ட். 19-ந் தேதி கவிஞர் தமிழ்தாசன், தமிழ் சாதிக்- பம்மல் வடக்கு 20-ந் தேதி சைதை சாதிக், எழும்பூர் கோபி-குன்றத்தூர் நகரம். 21-ந்தேதி ஈரோடு இறைவன், காம்ராஜ்- ஸ்ரீபெரும்புதூர், 22-ந் தேதி ராஜீவ் காந்தி, முரசொலி மூரத்தி-மாங்காடு 23-ந் தேதி தமிழன் பிரசன்னா- திருவொற்றியூர் கருணா நிதி-காட்டாங்குளத்தூர், 24-ந் தேதி கான்ஸ்டைன் ரவீந்திரன், தாம்பரம் ஜின்னா ஸ்ரீபெரும் புதூர், 25-ந் தேதி கோவி செழியன், வண்ணை புகாரி-புனித தோமையார் மலை ஒன்றியம்.

    பொதுக்கூட்ட மேடைகளில் ஆங்காங்கு உள்ள ஏழை எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகளும் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறி உள்ளார்.

    • அனைத்து கட்சிகளையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரவணைத்து தான் செல்கிறார்.
    • தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம்.

    மதுரை:

    மதுரையில் தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு மனுக்களை பெற்ற கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரையில் இன்று நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் சிறு, குறு தொழி ல்களை ஊக்கப்படுத்த வேண்டும் என அதிகளவில் மனு வழங்கியுள்ளனர். பிரதமர் மோடி 3 முறை தமிழகம் வருகை தந்தும் சென்னை மற்றும் தென் மாவட்ட வெள்ள சேதங்களுக்காக நிவாரண நிதி 1 ரூபாய் கூட தரவில்லை. முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்தே பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட போதிலும் எந்தவித பாரபட்சமும் காட்டப்படவில்லை. அனைத்து கட்சிகளையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரவணைத்து தான் செல்கிறார்.

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள அறிவிப்புகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்புடையது அல்ல. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் நிதியை ஒவ்வொரு ஆண்டும் குறைத்துக்கொண்டே வருகிறது. குறிப்பாக ரெயில்வே திட்டங்களுக்கான நிதியை ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களுக்காக, மொழிக்காக தி.மு.க. பல்வேறு போராட்டங்களை சந்தித்துள்ளது.
    • தி.மு.க. ஆட்சியில் தான் அதிக கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கீழப்பாவூரில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள வருகை புரிந்த தூத்துக்குடி எம்.பி.யும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான கனிமொழிக்கு தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் பாவூர்சத்திரத்தில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து கூட்டத்தில் கலந்துக்கொண்ட கனிமொழி எம்.பி. தென்காசி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 400 குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்களாக பாய், போர்வை, சேலை, அரிசி, பாத்திரம் உள்ளிட்ட பொருட்களையும், பொதுக்கூட்ட மைதானத்தில் மகளிரணியுடன் இணைந்து 100 கொடிக்கம்பத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் திட்டங்கள் தாங்கிய கட்சி கொடிகளை ஏற்றி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    மக்களுக்காக, மொழிக்காக தி.மு.க. பல்வேறு போரா ட்டங்களை சந்தித்துள்ளது. இந்தி மொழியை திணிக்க கூடாது. மொழி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்கள் மீது திடீரென அக்கறை உள்ளது போல பா.ஜ.க.வினர் திருக்குறள் பற்றி பேசுகின்றனர். கவர்னர் தத்துவம் சொல்கிறார்.

    சென்னை, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டன. பாதிப்பு பகுதியை மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்கள். மத்திய அரசு ஒரு பைசா நிதி கூட தமிழகத்திற்கு தரவில்லை.

    கோவிலை வைத்து அரசியல் செய்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் தான் அதிக கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜனதா அரசை மக்கள் மாற்ற வேண்டும். அப்போதுதான் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கும். தமிழக உரிமைகள், மொழி பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் தி.மு.க. அனைத்து அணி நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    ×