search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிறந்தநாள்"

    • இதுவரை சுமார் 48 ஆயிரம் பாடல்களை பாடியுள்ள எஸ்.ஜானகி 4 தேசிய விருதுகள், 33 மாநில அரசு விருதுகளை வாங்கியுள்ளார்.
    • இதுவரை 500 இசைக் கச்சேரிகளில் பாடல்களை பாடியுள்ளார்.

    தென் இந்தியாவின் நைட்டிங்கேள் என்று அழைக்கப்படுபவர் பாடகி எஸ்.ஜானகி. "அன்னக்கிளி உன்னை தேடுதே", "மச்சானை பார்த்தீங்களா", "கண்மணியே காதல் என்பது" உள்பட பல பாடல்களை இளையராஜா இசையிலும், எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரகுமான், அனிருத் ஆகியோரின் இசையிலும் பாடி இன்று வரை தனது மெல்லிய குரலால் மனதை மயக்கி வருபவர் எஸ்.ஜானகி.

    இதுவரை சுமார் 48 ஆயிரம் பாடல்களை பாடியுள்ள அவர் 4 தேசிய விருதுகள், 33 மாநில அரசு விருதுகளை வாங்கியுள்ளார். இதுவரை 500 இசைக் கச்சேரிகளில் பாடல்களை பாடியுள்ளார். இளமையும், மழலையும் நிறைந்த குரலுக்கு சொந்தக்காரரான பாடகி எஸ்.ஜானகி இன்று தனது 86-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

    அவருக்கு பாடகி சித்ரா, சுஜாதா உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    • 'பிளாஷ்பேக்' ல் ஒரு கெட்டப்பிலும், கரண்டில் ஒரு கெட்டப்பிலும் விக்ரம் தோன்றுகிறார்.
    • 'பிளாஷ்பேக்' -ல் விக்ரம் 'செம மாஸான' ஒரு ரோலில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    பிரபல நடிகர் விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் மாளவிகா மோகனன் ,பார்வதி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பசுபதி வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்து உள்ளார்.




    தங்கலான் படத்தில் 'கங்கம்மா' எனும் வேடத்தில் பார்வதி நடித்துள்ளார். 'தங்கலான்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளிவர உள்ளது

    நடிகை பார்வதி கடந்த சில நாட்களுக்கு முன் தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு 'தங்கலான்' படக்குழு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தது. மேலும் 'தங்கலான்' படத்தின் 'பர்ஸ்ட் லுக் போஸ்டர்' ஒன்றையும் படக்குழு வெளியிட்டு பிறந்த நாள் பரிசு' அளித்தது.




     


    இந்நிலையில் நடிகர் விக்ரம் நேற்று தனது 58- வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்த தினத்தை கவுரவிக்கும் வகையில் 'தங்கலான்' படத்தின் சிறப்பு 'டீசர்' இணையதளத்தில் தயாரிப்பு குழு வெளியிட்டது.

    இந்த 'டீசர்' இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் விக்ரம் நடித்த அதிரடி சண்டை காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ரசிகர்கள் விக்ரமை பாராட்டி வருகின்றனர்.

    இப்படத்தை தொடர்ந்து 'சித்தா' படம் புகழ் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் சியான்-62 புதிய படத்தில் விக்ரம் நடிக்க உள்ளார்.

    இப்படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். ஜி. வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் 'டைட்டில்' விக்ரம் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டது. இந்த புதிய படத்துக்கு 'வீர தீர சூரன்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

    இப்படத்தில் விக்ரம் கிராமிய தோற்றத்தை வெளிப்படுத்தும் ஒரு டீஸரும் வெளியிடப்பட்டது. அவர் காளி என்ற கேங்ஸ்டராக நடிக்க உள்ளார். ' வீர தீர சூரன் ' ஒரு அதிரடி திரைப்படமாக விரைவில் உருவாக உள்ளது.




    இப்படத்தில் விக்ரம் நீண்ட 'தாடி' கெட்டப்பில் காட்சியளிக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இதுதவிர மேலும் ஒரு கெட்டப்பிலும் விக்ரம் நடிக்க உள்ளார். இப்படத்தில் விக்ரம் 2 வேடங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது.

    'பிளாஷ்பேக்' ல் ஒரு கெட்டப்பிலும், கரண்டில் ஒரு கெட்டப்பிலும் விக்ரம் தோன்றுகிறார். 'பிளாஷ்பேக்' போர்ஷனில் விக்ரம் 'செம மாஸான' ஒரு ரோலில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இதில் விக்ரமை அடித்து, மிதித்து சித்ரவதை செய்யும் காட்சிகள் இடம்பெற்று உள்ளது
    • தன் உடலை வறுத்திக் கொண்டு நடிகர் விக்ரம் நடித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் வியந்துள்ளனர்.


    பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் 'தங்கலான்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் மாளவிகா மோகனன் ,பார்வதி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். பசுபதி வில்லன் வேடத்தில் நடித்துள்ளார்.




    இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா இப்படத்தை தயாரித்து உள்ளார்.




    தங்கலான் படத்தில் 'கங்கம்மா' எனும் வேடத்தில் பார்வதி நடித்துள்ளார். 'தங்கலான்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் விரைவில் திரையரங்குகளில் வெளிவர உள்ளது

    நடிகை பார்வதி கடந்த சில நாட்களுக்கு முன் தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு 'தங்கலான்' படக்குழு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தது. மேலும் 'தங்கலான்' படத்தின் 'பர்ஸ்ட் லுக் போஸ்டர்' ஒன்றையும் படக்குழு வெளியிட்டு பிறந்த நாள் பரிசாக 'இன்பஅதிர்ச்சி' கொடுத்தது.




    இந்நிலையில் நடிகர் விக்ரம் இன்று தனது 58- வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். மேலும் அவரது பிறந்த நாளை கவுரவிக்கும் வகையில் 'தங்கலான்' படத்தின் சிறப்பு 'டீசர்' இணையதளத்தில் தயாரிப்பு குழு இன்று வெளியிட்டது.

    இந்த 'டீசர்' இணைய தளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் விக்ரம் நடித்த அதிரடி சண்டை காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ரசிகர்கள் விக்ரமை பாராட்டி வருகின்றனர்.




    இதில் விக்ரமை அடித்து, மிதித்து சித்ரவதை செய்யும் காட்சிகள் இடம்பெற்று உள்ளது. தன் உடலை வறுத்திக் கொண்டு நடிகர் விக்ரம் நடித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் வியந்துள்ளனர்.

    :தங்கலான்' படத்திற்காக விக்ரமுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் இப்படத்தில் கடினமாக விக்ரம் உழைத்துள்ளார். படம் ரிலீசுக்கு பின் விக்ரமுக்கு பாராட்டு, மற்றும் விருதுகள் குவியும் என ரசிகர்கள் இணைய தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியாவை சர்வாதிகாரம் கொண்ட அதிபர் ஆட்சி முறைக்குக் கொண்டு செல்வதே அவர்களின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தின் அடிப்படையாகும்.
    • சதித்திட்டத்தை முறியடித்து இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதும், நாடாளுமன்ற சனநாயக முறையைப் பாதுகாப்பதும் நமது முதன்மையான கடமைகளாகும்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    புரட்சியாளர் அம்பேத்கர் இயற்றித் தந்த அரசமைப்புச் சட்டத்தை ஒழிப்பதையே மோடி அரசு தனது இலக்காக வைத்துள்ளது. இந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றி மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றுவிட்டால் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையான அம்சங்களில் ஒன்றான 'மதச்சார்பற்ற நாடு' என்பதை மாற்றி இந்தியாவை 'மதம் சார்ந்த நாடு' என அறிவிப்பதற்கும், மீண்டும் மனு நூலின் அடிப்படையில் வருண வேற்றுமையை சட்ட பூர்வமாக ஆக்குவதற்கும் திட்டமிட்டுள்ளது.

    அவர்களது நோக்கம் நிறைவேறிவிட்டால், அதாவது மீண்டும் பா.ஜ.க. பாசிசக் கும்பல் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிட்டால் இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயக முறையே இருக்காது. இந்தியாவை சர்வாதிகாரம் கொண்ட அதிபர் ஆட்சி முறைக்குக் கொண்டு செல்வதே அவர்களின் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற திட்டத்தின் அடிப்படையாகும்.

    அரசமைப்புச் சட்டம் தான் சமத்துவத்தையும் சமூக நீதியையும் பாதுகாக்கிறது. அது இல்லாவிட்டால் இட ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த உரிமையும் இருக்காது. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களைக் கல்வி பெற விடாமல் தடுத்து மீண்டும் அடிமை நிலைக்குக் கொண்டு செல்வதுதான் ஆர்.எஸ்.எஸ், மற்றும் பாஜகவின் திட்டமாகும். அதற்காகவே அவர்கள் தேர்தல் அரசியலை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். எனவே, அவர்களது சதித்திட்டத்தை முறியடித்து இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதும், நாடாளுமன்ற சனநாயக முறையைப் பாதுகாப்பதும் நமது முதன்மையான கடமைகளாகும். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் இந்தக் கடமைகளை நிறைவேற்ற உறுதி ஏற்போம்.

    புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளின் போது அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து'நாட்டை மீட்போம்! அரசமைப்புச் சட்டம் காப்போம்' என்ற உறுதி மொழியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 'தங்கலான்' படத்தின் 'பர்ஸ்ட் லுக் போஸ்டர்' ஒன்றையும் படக்குழு வெளியிட்டு பிறந்த நாள் பரிசாக ' கொடுத்து உள்ளது.
    • வருகிற மே, அல்லது ஜூன் மாதம் 'தங்கலான்' படத்தை 'ரிலீஸ்' செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது.

    பிரபல மலையாள நடிகை பார்வதி. 2006- ம் ஆண்டு 'அவுட் ஆப் தி சிலபஸ்' எனும் படத்தில் நடிகையாக அறிமுகமானார். மலையாள முன்னணி நடிகையான பார்வதி 2008- ல் தமிழில் 'பூ' படத்தில் நடித்தார்.

    மேலும் 'சென்னையில் ஒரு நாள்', மரியான், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்கள உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ' தங்கலான்' படத்தில் பார்வதி நடித்து வருகிறார். 

    இப்படத்தை பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கி வருகிறார்.இந்த படத்தில் பிரபல நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். தங்கலான் படத்தில் 'கங்கம்மா' எனும் வேடத்தில் பார்வதி நடித்துள்ளார்.




    சொந்த ஊரான கோழிக்கோடுவில் நடிகை பார்வதி இன்று தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு 'தங்கலான்' படக்குழு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தது.

    இதை யொட்டி மேலும் 'தங்கலான்' படத்தின் 'பர்ஸ்ட் லுக் போஸ்டர்' ஒன்றையும் படக்குழு வெளியிட்டு பிறந்த நாள் பரிசாக 'இன்பஅதிர்ச்சி' கொடுத்து உள்ளது.

    மேலும் நடிகை பார்வதி பிறந்தநாளை யொட்டி ஏராளமான ரசிகர்கள் இணைய தளத்தில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். வருகிற மே, அல்லது ஜூன் மாதம் 'தங்கலான்' படத்தை 'ரிலீஸ்' செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எம்.பி.க்கள், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து.
    • பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி.

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி!

    பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே…. தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஏவுதளம் அமைப்பது தொடர்பாக சீன ராக்கெட் உடன் தி.மு.க. அமைச்சர் விளம்பரம் வெளியிட்டனர்.
    • இதை கிண்டலடிக்கும் விதமாக தமிழக பா.ஜ.க முதல்வர் ஸ்டாலினுக்கு சீன மொழியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது.

    சென்னை:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் அடிக்கல் நாட்டினார்.

    இதுதொடர்பாக தி.மு.க. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டிருந்தார். அதில், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலினின் பின்னணியில் சீன நாட்டின் கொடி பொறிக்கப்பட்ட ராக்கெட் படம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    திருநெல்வேலியில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, திமுக.வின் தேசப்பற்று இதுதான் என விமர்சனம் செய்தார்.

    இதற்கிடையே, முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். அவருக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்பட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சீனாவின் ஆட்சி மொழியான மாண்டரின் மொழியில் வாழ்த்து தெரிவித்து தமிழக பா.ஜ.க. கிண்டலாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், தங்களின் விருப்பமான மொழியில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும், அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

    • பிறந்த நாளை மக்கள் பயன்பெறும் வகையிலும் ஏழை எளியோருக்கு உதவிடும் வகையிலும் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
    • திருப்போரூர் மற்றும் குன்றத்தூர் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது.

    சென்னை:

    மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மார்ச்-1 முதல் மார்ச் 25-ந் தேதி வரை தொடர்ந்து பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று மாவட்டச் செயலாளர் அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் மார்ச்-1 வருகிறது. அவரது பிறந்த நாளைமக்கள் பயன்பெறும் வகையிலும் ஏழை எளியோருக்கு உதவிடும் வகையிலும் நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.

    மார்ச்-1 முதல் மார்ச் 25 வரை மாவட்டம் முழுவதும் தொடர் பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. 1-ந் தேதி காலை அனைத்து கிளைக் கழகங்களிலும் கொடியேற்றி இனிப்பு வழங்கப்படும். அன்று பகல் 12 மணிக்கு மாவட்டத்தில் உள்ள 37 ஆதரவற்றோர் இல்லங்களிலும் அறுசுவை உணவு வழங்கப்பட உள்ளது. பரனூர் தொழு நோயாளிகளுக்கு உணவு, உடை வழங்கப்பட உள்ளது.

    மார்ச்-1 அன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் காலை 10 மணிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும், பல்லாவரம் வடக்கு பகுதி தி.மு.க. சார்பில் பகல் 12 மணிக்கு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் திருப்போரூர் மற்றும் குன்றத்தூர் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் அணிவிக்கப்படுகிறது. மார்ச் -2ந் தேதி திண்டுக்கல் லியோனி பொதுக்கூட்டம் பல்லாவரம் வடக்கு பகுதி, 3-ந் தேதி கம்பம் செல்வேந்திரன் கந்திரி கரிகாலன், செங்கல்பட்டு நகரம், 4-ந் தேதி நாஞ்சில் சம்பத், செங்கை தாமஸ்-ஆலந்தூர் தெற்கு பகுதி.

    5-ந் தேதி சுப.வீர பாண்டியன், வெ.அன்புவாணன்-குன்றத்தூர் தெற்கு ஒன்றியம், 6-ந் தேதி புதுக்கோட்டை விஜயா ஆரணி மாலா- ஸ்ரீபெரும்புதூர், 7-ந் தேதி கோவி செழியன், மலர் மன்னன், பம்மல் தெற்கு பகுதி, 8-ந் தேதி நெல்லிக் குப்பம் புகழேந்தி, பிரபாகரன்- திருப்போரூர் தெற்கு ஒன்றியம், 9-ந் தேதி சபாபதி மோகன், ஒப்பிலா மணி- செம்பாக்கம் வடக்கு, 10-ந் தேதி ஈரோடு இறைவன் தேவபாலன்-செம்பாக்கம் தெற்கு.

    11-ந் தேதி சைதை சாதிக், அரங்கநாதன்-மறைமலை நகர், 12-ந் தேதி தமிழன் பிரசன்னா, செங்கை சந்தானம்-பல்லாவரம் தெற்கு, 13-ந் தேதி ராஜீவ் காந்தி, பரிதி இளம் சுருதி- ஆலந்தூர் வடக்கு, 14-ந் தேதி மதிவதனி, கவிஞர் நன்மாறன்-குன்றத்தூர் 15ந் தேதி குத்தாலம் கல்யாணம், போடிகாமராஜ்-திருக்கழுக்குன்றம், 16-ந் தேதி கரூர் முரளி, சிவா, - காட்டாங்குளத்தூர், 17-ந் தேதி சேலம் சுஜாதா, நாகம்மை- தாம்பரம் கிழக்கு, 18-ந் தேதி காரமடை நாக நந்தினி, குடியாத்தம் புவியரசி-கண்டோன் மென்ட். 19-ந் தேதி கவிஞர் தமிழ்தாசன், தமிழ் சாதிக்- பம்மல் வடக்கு 20-ந் தேதி சைதை சாதிக், எழும்பூர் கோபி-குன்றத்தூர் நகரம். 21-ந்தேதி ஈரோடு இறைவன், காம்ராஜ்- ஸ்ரீபெரும்புதூர், 22-ந் தேதி ராஜீவ் காந்தி, முரசொலி மூரத்தி-மாங்காடு 23-ந் தேதி தமிழன் பிரசன்னா- திருவொற்றியூர் கருணா நிதி-காட்டாங்குளத்தூர், 24-ந் தேதி கான்ஸ்டைன் ரவீந்திரன், தாம்பரம் ஜின்னா ஸ்ரீபெரும் புதூர், 25-ந் தேதி கோவி செழியன், வண்ணை புகாரி-புனித தோமையார் மலை ஒன்றியம்.

    பொதுக்கூட்ட மேடைகளில் ஆங்காங்கு உள்ள ஏழை எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகளும் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறி உள்ளார்.

    • நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிய பயன்படுத்தப்பட்ட கருவிகளை இயக்கியவர்.
    • ஹெலன் மேரி ஹார்வத்தை விமானத்தில் அழைத்து வந்தனர்.

    இரண்டாம் உலக போரில் பங்கேற்ற பெண்ணின் 102-வது பிறந்தநாளை கொண்டாடிய ஏர்லைன்ஸ் அமெரிக்காவில் உள்ள வெர்ஜினியா பகுதியை சேர்ந்தவர் ஹெலன்மேரி ஹார்வத். இவர் 2-ம் உலக போரில் பங்கேற்றவர். தனது 21 வயதில் வெர்ஜினியாவில், உலக போர் நடைபெற்ற கால கட்டத்தில் அங்கு நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிய பயன்படுத்தப்பட்ட கருவிகளை இயக்கியவர்.

    இந்நிலையில் அவரது 102-வது பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் ஹெலனுக்கு எதிர்பாராத பரிசளிக்க அவரது மகன் முடிவு செய்தார். அவர் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் தனது தாயின் பிறந்தநாள் குறித்து சக ஊழியர்களிடம் தெரிவித்ததும் அந்த விமான நிறுவனம் உலக போரில் பங்கேற்ற ஹெலன்மேரி ஹார்வத்தின் 102-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தது.

    அதன்படி ஹெலன் மேரி ஹார்வத்தை விமானத்தில் அழைத்து வந்தனர். செயின்ட் லூயிசில் அவர் இறங்கியதும் ஹெலனை ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பின்னர் அமெரிக்க கொடிகளை அசைத்து ஹெலனின் தலையில் கிரீடம் அணிவித்தனர். மேலும் ஏராளமானோர் ஆரவாரம் செய்து ஹெலனின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடினர். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.
    • எந்தவிதமான காய்ச்சல் பாதித்துள்ளது என்று டாக்டர்கள் பரிசோதித்து வருகிறார்கள்.

    சென்னை:

    முன்னாள் காங்கிரஸ் தலைவரும் ஈரோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு இன்று பிறந்தநாள். வழக்கமாக அவரது பிறந்த நாளை காங்கிரசார் உற்சாகமாக கொண்டாடுவார்கள். ஆனால் அவரது மகன் மறைவுக்கு பிறகு பிறந்தநாள் கொண்டாடுவதை தவிர்த்துவிட்டார். வீட்டுக்கு செல்லும் நிர்வாகிகளை மட்டும் சந்திப்பார்.

    இருப்பினும் நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் ஈரோட்டில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்துவிட்டு இரவில் வீடு திரும்பினார். அப்போது அவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது.

    இதையடுத்து நேற்று இரவே போரூரில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் சேர்ந்தார். எந்தவிதமான காய்ச்சல் பாதித்துள்ளது என்று டாக்டர்கள் பரிசோதித்து வருகிறார்கள்.

    இளங்கோவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்தனர். சிலர் அவர் பூரண நலம் பெற வேண்டி கோவில்களில் வழிபாடுகள் நடத்தினார்கள்.

    • பிரபா ராமகிருஷ்ணன் அறிக்கை
    • நிகழ்ச்சிகளில் நிர்வாகிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும்.

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும், அறங்காவலர் குழு தலைவரும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் தலைவருமான பிரபா ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நாளை (27-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து நாளை காலை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் அச்சன்குளத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் இல்லத்தில் உள்ள வர்களுக்கு காலை உணவு மற்றும் புத்தா டைகள் வழங்கப்படு கிறது. மேலும் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவி ல்களில் உதயநிதி ஸ்டாலின் பேரில் சிறப்பு பூஜைகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் நிர்வாகிகள் திரளாக கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மேலூரில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • முகமது யாசின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் நகர் தெற்குப் பட்டியில் அமைச்சர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, மேலூர் நகர் தி.மு.க. 25-வது வட்டக் கழகத்தின் சார்பாக மாட்டு வண்டி பந்தயம் திருவாதவூர் ரோட்டில் இன்று காலை நடைபெற்றது. பெரிய மாடு மற்றும் சிறிய 2 பிரிவுகளாக நடைபெற்றது.

    இதில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 10 மாடுகளும், சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 26 மாடுகளும் என மொத்தம் 36 மாட்டு வண்டிகள் பந்தயத்தில் பங்கேற்றது. இந்த மாட்டு வண்டி போட்டியினை மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் மேலூர் தெற்குப்பட்டி மதன் வண்டி முதல்பரிசும், ராமநாதபுரம் கடுகுசந்தை தவம் 2-ம் பரிசும், மதுரை மாவட்டம் சத்திரபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாலகிருஷ்ணன் 3-ம் பரிசும், சிவகங்கை மாவட் டம், காளக்கண்மாய் வீர பாலா, சாந்தமடை சுந்தரம் ஆகியோரது மாட்டு வண்டி 4-ம் பரிசும் பெற்றனர்.

    சிறிய மாட்டுவண்டியில் 26 ஜோடிகள் கலந்து கொண்டன. 2 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. முதல் சுற்றில் 13 ஜோடி மாட்டு வண்டியில் முதல் பரிசு சத்திரப் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாலகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன் வண்டியும், 2-ம் பரிசு மதுரை மாவட்டம் பாண்டி கோவில் பாண்டிச்சாமி மாட்டு வண்டியும், 3-ம் பரிசு மதுரை மாவட்டம் மேலூர் சித்திக் மற்றும் சோனைமுத்து சேர்வை மாட்டு வண்டியும், 4-ம் பரிசு தேனி மாவட்டம், தேவராம் முத்துபெருமாள் வெற்றி பெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் அழகு பாண்டி, வட்ட செயலாளர் குமார், துணை வட்டச் செயலாளர் மணிமாறன், நகர் மன்ற உறுப்பினர் மனோகரன், அவைத் தலைவர் மகேந்திரன், தி.மு.க. இளைஞரணி வசந்த ராஜன் மற்றும் ஏராளமான கலந்து கொண்டனர். தலைவர் முகமது யாசின் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

    ×