search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "railway employees"

    • எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேர் கைது செய்யப்பட்டனர்.

    போரூர்:

    சென்னை ஐ.சி.எப்., மற்றும் தெற்கு ரெயில்வேயில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள தலைமை தேர்தல் அலுவலகம் அருகே திரண்டனர். நீண்டகாலமாக பணி நிரந்தரம் செய்யாமல் வடமாநில தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணி வழங்குவதாகவும், இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் அவர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கவும், பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கும் விதமாக தங்களது வாக்காளர் அட்டைகளையும் திரும்ப ஒப்படைக்க உள்ளதாகவும் கூறி தலைமை தேர்தல் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கோயம்பேடு பஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 75 பேர் கைது செய்யப்பட்டனர்.

    • ஓய்வு பெறும்போது கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் என்று மாற்ற வேண்டும்.
    • மக்களுக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும்.

    சென்னை:

    தென்னக ரெயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில், பொது மகா சபைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச் செயலாளராக என்.கண்ணையா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    தலைவராக சி.ஏ.ராஜா ஸ்ரீதர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதுதவிர, கோட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.கண்ணையா கூறியதாவது:-

    ரெயில்களில் பாமர மக்கள் பயணிக்கும் பொது பெட்டிகளை ஏ.சி. பெட்டிகளாக மாற்ற திட்டமிட்டு உள்ளனர். இதனால் பாமர, ஏழைமக்கள் பாதிக்கப்படுவார்கள். இதை எதிர்க்கிறோம்.

    மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டம் கடந்த 2001-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் தேசிய பென்சன் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டாலும் பயனற்றதாக உள்ளது. புதிய பென்சன் திட்டத்தை மாற்றி, முன்பு இருந்ததுபோல், ஓய்வு பெறும்போது கடைசிமாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் என்று மாற்ற வேண்டும்.

    தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள அரசு, தாங்கள் பதவிக்கு வந்தால், ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பை தருவோம் என்று உறுதி கூறினர். ஆனால், இன்றோ ஆட்குறைப்பு, தனியார் மயமாக்கம் ஆகியவற்றின் மூலமாக தற்போது இருக்கும் பணியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. தற்போது, ரெயில்வேயில் காலியாக உள்ள 90,000 இடங்களுக்கு 2.80 கோடி பேர் விண்ணப்பிக்கின்றனர். வேலை இல்லாத நிலை எந்த அளவுக்கு உள்ளதை இதன்மூலம் புரிந்து கொள்ள வேண்டும். ஐ.சி.எப்.யில் ஒரு வந்தே பாரத் ரெயில் தயாரிக்க ரூ.98 கோடி செலவிடப்பட்டது. தற்போது, ரஷியா கம்பெனிக்கும், மற்ற கம்பெனிகளுக்கு ரூ.139 கோடியில் ஒரு வந்தே பாரத் ரெயில் தயாரித்து கொடுக்க உள்ளார்கள். இதனால், வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை உள்ளது. மக்களுக்கு இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும்.

    பொது பெட்டிகளை ஏ.சி. பெட்டியாக மாற்றக்கூடாது. நல்ல நிலையில் இயங்கும் கம்பெனிகளை வெளிநபர்களுக்கு கொடுக்கக்கூடாது. இவற்றை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்வது தொடர்பாக அகில இந்திய அளவில் வருகிற 21, 22-ந் தேதி மத்திய அரசு ஊழியர்கள், ரெயில்வே ஊழியர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உள்ளோம்.

    இதன் பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 78 நாட்களுக்கான ஊதியத்தை தீபாவளி போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    • இந்த அறிவிப்பு ரெயில்வே போலீசார், ரெயில்வே சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு பொருந்தாது

    புதுடெல்லி:

    ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பின்போது அறிவித்தார்.

    மொத்தம் ரூ.1,832 கோடி போனஸ் வழங்கப்படும் என்றும், இதன்மூலம் 11.27 லட்சம் ரெயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

    ரெயில்வே போலீஸ், ரெயில்வே பாதுகாப்பு சிறப்பு படையினர் தவிர்த்து, அரசிதழ் பதிவு பெறாத ரெயில்வே ஊழியர்களுக்கு இந்த போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான ரெயில்வே ஊழியருக்கு அதிகபட்சமாக ரூ.17,951 போனஸ் கிடைக்கும்.

    கோவில் பூட்டை உடைத்து உண்டியல்களை கொள்ளையடித்த மர்ம மனிதர்கள், ரெயில்வே ஊழியர் வீடு உள்பட 2 வீடுகளிலும் புகுந்து கை வரிசை காட்டியுள்ளனர்.

    மதுரை:

    மதுரை திருநகர் மருது பாண்டி நகரை சேர்ந்தவர் ராமநாதன். இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சாந்தா. வீட்டை பூட்டிவிட்டு மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நேற்று இரவு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இதேபோல பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் பாஸ்கரன். இவர் குடும்பத்துடன் திருச்சி சென்று விட்டார். இவரது வீட்டின் பூட்டை உடைத்தும் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அக்கம் பக்கத்தினர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    திருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்பினால் தான் எவ்வளவு நகை போனது என்பது தெரியவரும்.

    இதற்கிடையில் அந்தப் பகுதியில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலிலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

    அங்கிருந்த 2 உண்டியல்களை எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் உள்ளே இருந்த பணத்தை எடுத்து விட்டு பின்பக்கமாக உண்டியலை போட்டு சென்றுள்ளனர்.

    மேலும் கோவில் கருவறையில் இருந்த வெள்ளி கவசம், உற்சவர் சிலைகள் தப்பின. இச்சம்பவம் குறித்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு , கை ரேகைகளை சேகரித்தனர். திருட்டு குறித்து திருநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

    ஒரே பகுதியில் வீடுகள் மற்றும் கோவில்களில் கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ரெயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்கள் சலுகையை மோடி அரசு பறித்துவிட்டது என்று ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். #gkvasan #railwayemployees pmmodi

    சென்னை:

    தென்மண்டல எஸ்.சி., எஸ்.டி. பிரிவு ரெயில்வே தொழிலாளர்கள் மகாசபை கூட்டம் பெரம்பூரில் இன்று நடந்தது. பொதுச்செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    ரெயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல சலுகைகளை மோடி அரசு பறித்து இருக்கிறது. தொழிலாளர்களின் சலுகைகளை அரசு மீண்டும் வழங்க வேண்டும்.

    அதேபோல் ரெயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்தது தவறு. இந்த துறையை தனியார் மயமாக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும்.

    இடஒதுக்கீடையும் குறைக்க கூடாது. தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைக்கு த.மா.கா. என்றும் துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் த.மா.கா. துணைத் தலைவர் கோவை.தங்கம், தொழிலாளர் யூனியனின் அகில இந்திய நிர்வாகிகள் பைரவா, அர்னோட்டியா, த.மா.கா. நிர்வாகிகள் ஜவகர்பாபு, விடியல் சேகர், டி.என்.அசோகன், டி.எம்.பிரபாகர், விக்டரிமோகன், சி.ஆர்.வெங்கடேஷ், பிஜு சாக்கோ, பி.எம். பாலா சைதை மனோகரன், கல்யாணி, குமாரராஜ், தொழிற்சங்க நிர்வாகிகள் ஜேம்ஸ், ராமகிருஷ்ணன், ராயபுரம் பி.எம்.பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர். gkvasan #railwayemployees pmmodi

    தீபாவளி பண்டிகைக்கு ரெயில்வே ஊழியர்களுக்கு இந்த ஆண்டும் 78 நாள் சம்பளத்தை போனசாக வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. #Diwalibonus #RailwayEmployees
    புதுடெல்லி:

    தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். கடந்த 6 ஆண்டுகளாக ரெயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தியின் அடிப்படையில் 78 நாள் சம்பளம் போனசாக வழங்கப்பட்டு வந்தது.
     
    இந்த ஆண்டும்  78 நாள் சம்பளத்தை போனசாக வழங்க மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.



    ரெயில்வே துறையில் பணியாற்றும் 12.26 லட்சம் ஊழியர்களுக்கு இந்த போனஸ் தொகை வழங்கப்பட உள்ளது. இதனால் ரெயில்வே துறைக்கு ரூ.2000 கோடி செலவாகும் என தெரியவந்துள்ளது. #Diwalibonus #RailwayEmployees
     
    தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில்வே ஊழியர்கள் இந்த ஆண்டும் 78 நாள் சம்பளத்தை போனசாக வழங்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. #Diwalibonus #RailwayEmployees
    புதுடெல்லி:

    தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். கடந்த 6 ஆண்டுகளாக ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனசாக வழங்கப்பட்டு வந்தது.

    இந்த ஆண்டும் அதே போன்று 78 நாள் சம்பளத்தை போனசாக வழங்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. ரெயில்வே சங்கங்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இது தொடர்பான முன் மொழிவுக்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் வழங்கும் என்றும் ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.


    இது தொடர்பாக இந்திய ரெயில்வே ஊழியர்கள் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் எம்.ராகவய்யா கூறுகையில், ‘‘கடந்த ஆண்டில் ரெயில்வே ரூ.16 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மேலும் 1,161 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்தது. எனவே 80 நாள் சம்பளத்தை போனசாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனாலும் 78 நாள் சம்பளத்தை போனசாக பெறுவதற்கு ஒப்புக்கொண்டோம்’’ என்றார்.

    ரெயில்வே துறையில் 12.26 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட உள்ளது. இதனால் அரசுக்கு ரூ.2000 கோடி செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது. #Diwalibonus #RailwayEmployees
    பரங்கிமலை ரெயில் விபத்து தொடர்பாக 25-க்கும் மேற்பட்டவர்களிடம் ரெயில்வே ஊழியர்களிடம் பாதுகாப்பு கமிஷனர் விசாரணை நடத்தினார். #TrainAccident #chennai #StThomasMount
    சென்னை:

    சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் சென்ற மின்சார ரெயில் பரங்கிமலை ரெயில் நிலையத்திற்குள் நுழையும் போது ரெயில் படிக்கட்டில் பயணம் செய்த 4 பேர் பக்கவாட்டு சுவரில் மோதி பலியானார்கள்.

    கடந்த 24-ந்தேதி நடந்த இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 2 கால்களை இழந்த மற்றொரு வாலிபரும் உயிரிழந்தார். இதையடுத்து இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

    சம்பவ இடத்தை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் ரெயில் விபத்து குறித்து 30-ந்தேதி விசாரணை நடத்தப்படும் என்றும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் தகவலை தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தார். அதன் அடிப்படையில் விசாரணை இன்று நடைபெற்றது.

    சென்னை ரெயில்வே அலுவலகம் 5-வது தளத்தில் உள்ள கோட்ட மேலாளர் கருத்தரங்க அறையில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் தலைமையில் விசாரணை நடந்தது. தலைமை பாதுகாப்பு அதிகாரி மேதா உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணையின் போது இருந்தனர்.

    ரெயில் விபத்தை பார்த்தவர்கள், அந்த ரெயிலில் பயணம் செய்தவர்கள் என 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தகவல்களை கூற வந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரித்தார்கள்.

    இதுதவிர ரெயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ரெயில் டிரைவர், கார்டு, நிலைய மேலாளர், பொறியாளர் என 25-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றது.

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் உள்ள தடுப்பு சுவர்தான் விபத்திற்கு காரணம். அதனை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    நிலையத்திற்கு ரெயில் வந்த வேகத்தின் அளவு என்ன? பக்கவாட்டு சுவருக்கும்-ரெயில் பெட்டிக்கும் உள்ள இடைவெளி என்ன என்பது குறித்தெல்லாம் ஏற்கனவே பாதுகாப்பு ஆணையர் தகவல்களை திரட்டியுள்ளனர்.

    இன்று மாலை வரை நடைபெறும் விசாரணையை தொடர்ந்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா? பக்கவாட்டு சுவர் அகற்றப்படுமா என்பது தெரியவரும். #TrainAccident #chennai #StThomasMount

    ×