search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple money robbery"

    கோவில் பூட்டை உடைத்து உண்டியல்களை கொள்ளையடித்த மர்ம மனிதர்கள், ரெயில்வே ஊழியர் வீடு உள்பட 2 வீடுகளிலும் புகுந்து கை வரிசை காட்டியுள்ளனர்.

    மதுரை:

    மதுரை திருநகர் மருது பாண்டி நகரை சேர்ந்தவர் ராமநாதன். இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சாந்தா. வீட்டை பூட்டிவிட்டு மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நேற்று இரவு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இதேபோல பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் பாஸ்கரன். இவர் குடும்பத்துடன் திருச்சி சென்று விட்டார். இவரது வீட்டின் பூட்டை உடைத்தும் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அக்கம் பக்கத்தினர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    திருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்பினால் தான் எவ்வளவு நகை போனது என்பது தெரியவரும்.

    இதற்கிடையில் அந்தப் பகுதியில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோவிலிலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

    அங்கிருந்த 2 உண்டியல்களை எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர் உள்ளே இருந்த பணத்தை எடுத்து விட்டு பின்பக்கமாக உண்டியலை போட்டு சென்றுள்ளனர்.

    மேலும் கோவில் கருவறையில் இருந்த வெள்ளி கவசம், உற்சவர் சிலைகள் தப்பின. இச்சம்பவம் குறித்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு , கை ரேகைகளை சேகரித்தனர். திருட்டு குறித்து திருநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

    ஒரே பகுதியில் வீடுகள் மற்றும் கோவில்களில் கொள்ளையர்கள் கொள்ளையடித்த சம்பவம் இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவள்ளூர் அருகே கோவில் கதவை உடைத்து உண்டியல் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தை அடுத்த இருளஞ்சேரி கிராமத்தில் கலிங்க நாதேஸ்வரர் கோவில் உள்ளது. 1,100 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் இதுவாகும்.

    இக்கோவிலில் நேற்று பைரவர் ஜெயந்தி விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகள் முடிந்த பிறகு இரவு கோவிலை பூசாரிகள் பூட்டிச் சென்றனர்.

    இன்று காலை கோவிலை திறக்க வந்த போது கதவு உடைக்கப்பட்டு தனியாக கழற்றி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளை போயிருந்தது.

    இது குறித்து மப்பேடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். உண்டியலில் இருந்து ரூ.20 ஆயிரம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    இக்கோவிலில் பஞ்சலோக சிலைகள் இருந்தன. இங்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் பஞ்சலோக சிலைகள் திருப்பாச்சூரில் உள்ள வசிஸ்வரர் கோவிலில் இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பஞ்சலோக சிலைகள் கொள்ளையர்களிடம் சிக்காமல் தப்பியது.

    கடந்த ஆண்டு இக்கோவிலில் கலசம் திருடு போயிருந்தது. தற்போது கோவில் கதவை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை போயிருப்பது கிராம மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொள்ளை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகிறார்கள்.

    திருநாவலூர் அருகே பராசக்தி கோவில் உண்டியல்களை உடைத்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருநாவலூர்:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கெடிலம் கூட்ரோட்டில் விழுப்புரம் சாலையில் பராசக்தி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2 உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த உண்டியல்களில் காணிக்கைகளை செலுத்துவார்கள். நேற்று இரவு பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டி விட்டு பூசாரி வீட்டுக்கு சென்று விட்டார்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம மனிதர்கள் கோவில் முன்பு இருந்த கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் அங்கிருந்த 2 உண்டியல்களையும் அவர்கள் கடப்பாரையால் உடைத்தனர். அதில் இருந்த பணத்தை ஒரு பையில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கோவிலின் உண்டியல்கள் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கோவில் நிர்வாகி சூரியமூர்த்தி திருநாவலூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர்கள் பரணிதரன், நந்தகோபால் ஆகியோர் அங்கு விரைந்து சென்று கொள்ளை போன கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். உண்டியல்களில் ஆயிரக்கணக்கான ரூபாய் இருந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது.

    உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    அரியாங்குப்பத்தில் கோவில் உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றம் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாகூர்:

    அரியாங்குப்பம் காளான்தோட்டம் பகுதியில் குடியிருப்புகள் மத்தியில் பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சமீபத்தில் சூர‌ஷம்சாரவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை பணத்தை செலுத்தினர்.

    இந்த நிலையில் நேற்று மாலை பூஜை முடிந்ததும் அர்ச்சகர் கோவிலை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை வழக்கம்போல் அர்ச்சகர் கோவிலுக்கு பூஜை செய்ய வந்தார். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவில் உண்டியலில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சீர்காழி அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கோவில் உண்டியலில் பணம் திருடிய 2 வாலிபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் திருவெண்காடு அடுத்த சிறுவாலி பகுதியில் இன்ஸ் பெக்டர் வேலுதேவி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசார் சந்தேகமடைந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் 2 பேரும் சிறுவாலி பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் மற்றும் பாம்புளியம்மன் கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடியது தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் அதே பகுதியை சேர்ந்த முரளி (வயது 32), மற்றும் அன்புத்தம்பி (23) என தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், மற்றும் 2500 ரொக்க பணம் ஆகியவை பறிமுதல் செய்தனர்.

    கொருக்குப்பேட்டையில் கோவில் ஊழியர்களை கட்டிப்போட்டு ரூ.1½ லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase

    ராயபுரம்:

    கொருக்குப்பேட்டை பசுவன் தெருவில், ராமலிங்க சவுடேஸ்வரி தேவி கோவில் உள்ளது.

    இந்த கோவிலை புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பொது மக்களிடமும், முக்கிய பிரமுகர்களிடமும் நன்கொடை வசூலிக்கப்பட்டது.

    இதுவரை கிடைத்த பணத்தை கோவில் கேஷியர்கள் சத்திரபதி, கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் நேற்று இரவு 7.30 மணி அளவில் எண்ணி சரி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஹெல்மெட் அணிந்த 2 பேர் அங்கு வந்தனர்.

    திடீர் என்று அவர்கள் 2 பேரும் கத்தியை காட்டி, கோவில் கேஷியர்களிடம் இருந்த பணம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்தை பறித்துக் கொண்டனர். பின்னர் அவர்களை கட்டிப் போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கோவிலுக்கு சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். கொள்ளையர்களின் கைரேகைகளையும் பதிவு செய்தனர்.

    பணத்தை பறிகொடுத்த கோவில் கேஷியர்கள் சந்திரபதி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். தெரிந்தவர்களே இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.

    தப்பி ஓடிய கொள்ளையர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

    ×