என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்கெடுப்பு"

    • ரகசிய வாக்கெடுப்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை வெற்றிப்பெற செய்ய வேண்டும்.
    • தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தனிப்பெரும் சங்கமாக வரவேண்டியது காலத்தின் கட்டாயம்.

    என்எல்சியில் நடக்கும் வாக்கெடுப்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் எண் 6க்கு வாக்களித்து தனிப்பெரும் சங்கமாக உருவாக்குங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் நடக்க உள்ள ரகசிய வாக்கெடுப்பில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை வெற்றிப்பெற செய்ய வேண்டும்.

    தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை எண் 6ல் வாக்களித்து தனிப்பெரும் சங்கமாக உருவாக்கி தர வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மேலும், அவர், "முக்கிய கோரிக்கைகளை வென்றெடுக்க தொழிலாளர் முன்னேற்ற சங்கம் தனிப்பெரும் சங்கமாக வரவேண்டியது காலத்தின் கட்டாயம்.

    தொழிலாளர் வாரிசுகள், நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை போன்றவை உறுதி செய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்றும்" அவர் கூறினார்.

    • ஓய்வு பெறும்போது கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் என்று மாற்ற வேண்டும்.
    • மக்களுக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும்.

    சென்னை:

    தென்னக ரெயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில், பொது மகா சபைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யூ. பொதுச் செயலாளராக என்.கண்ணையா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    தலைவராக சி.ஏ.ராஜா ஸ்ரீதர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதுதவிர, கோட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    கூட்டத்தில் பொதுச்செயலாளர் என்.கண்ணையா கூறியதாவது:-

    ரெயில்களில் பாமர மக்கள் பயணிக்கும் பொது பெட்டிகளை ஏ.சி. பெட்டிகளாக மாற்ற திட்டமிட்டு உள்ளனர். இதனால் பாமர, ஏழைமக்கள் பாதிக்கப்படுவார்கள். இதை எதிர்க்கிறோம்.

    மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ரெயில்வே ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டம் கடந்த 2001-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் தேசிய பென்சன் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டாலும் பயனற்றதாக உள்ளது. புதிய பென்சன் திட்டத்தை மாற்றி, முன்பு இருந்ததுபோல், ஓய்வு பெறும்போது கடைசிமாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியம் என்று மாற்ற வேண்டும்.

    தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள அரசு, தாங்கள் பதவிக்கு வந்தால், ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பை தருவோம் என்று உறுதி கூறினர். ஆனால், இன்றோ ஆட்குறைப்பு, தனியார் மயமாக்கம் ஆகியவற்றின் மூலமாக தற்போது இருக்கும் பணியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. தற்போது, ரெயில்வேயில் காலியாக உள்ள 90,000 இடங்களுக்கு 2.80 கோடி பேர் விண்ணப்பிக்கின்றனர். வேலை இல்லாத நிலை எந்த அளவுக்கு உள்ளதை இதன்மூலம் புரிந்து கொள்ள வேண்டும். ஐ.சி.எப்.யில் ஒரு வந்தே பாரத் ரெயில் தயாரிக்க ரூ.98 கோடி செலவிடப்பட்டது. தற்போது, ரஷியா கம்பெனிக்கும், மற்ற கம்பெனிகளுக்கு ரூ.139 கோடியில் ஒரு வந்தே பாரத் ரெயில் தயாரித்து கொடுக்க உள்ளார்கள். இதனால், வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை உள்ளது. மக்களுக்கு இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும்.

    பொது பெட்டிகளை ஏ.சி. பெட்டியாக மாற்றக்கூடாது. நல்ல நிலையில் இயங்கும் கம்பெனிகளை வெளிநபர்களுக்கு கொடுக்கக்கூடாது. இவற்றை முன்வைத்து வேலைநிறுத்தம் செய்வது தொடர்பாக அகில இந்திய அளவில் வருகிற 21, 22-ந் தேதி மத்திய அரசு ஊழியர்கள், ரெயில்வே ஊழியர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உள்ளோம்.

    இதன் பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×