search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gkvasan"

    • பா.ஜ.க. கூட்டணியில் சேருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்திருக்கிறார்.
    • இவர் எடுத்த முடிவின் காரணமாக ஜி.கே. மூப்பனாரின் ஆத்மா இவரை மன்னிக்காது

    தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவர்களை சந்தித்து பா.ஜ.க. கூட்டணியில் சேருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்திருக்கிறார். இவர் எடுத்த முடிவின் காரணமாக ஜி.கே. மூப்பனாரின் ஆத்மா இவரை மன்னிக்காது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க முன் வராத நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் முதல் கட்சியாக பா.ஜ.க.வுடன் இணைந்திருக்கிறது. தமிழக மக்களால் தொடர்ந்து வெறுக்கப்பட்டு வருகிற பா.ஜ.க.வுடன் த.மா.கா. கூட்டு சேர்ந்திருக்கிறது.

    மறைந்த மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் காங்கிரசை விட்டு வெளியேறி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கி முதல் தேர்தலில் 1996 இல் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 20 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றார்.

    அவர் வெற்றி பெற்றவுடன் தலைநகர் தில்லிக்கு த.மா.கா.வில் வெற்றி பெற்ற 20 மக்களவை உறுப்பினர்களை தம்முடன் அழைத்துச் சென்று அன்னை சோனியா காந்தியை நேரில் சந்தித்து அவரது வாழ்த்துகளை பெற்றார்.

    ஏப்ரல் 1999 இல் அன்று பிரதமராக இருந்த அடல்பிகாரி வாஜ்பாய் அரசு மீது காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அன்று தமிழ் மாநில காங்கிரசில் திரு. ப. சிதம்பரம் உள்ளிட்ட மூன்று பேர் மக்களவை உறுப்பினர்களாக இருந்தார்கள்.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்தி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த மறைந்த திரு. ஜி.கே. மூப்பனார் அவர்களை அழைத்து நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    அந்த கோரிக்கையை ஏற்று தமிழ் மாநில காங்கிரசை சேர்ந்த மூன்று மக்களவை உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் வாஜ்பாய் தலைமையிலான அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    அன்று வகுப்புவாத பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதற்கு காரணமாக இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் எண்ணத்திற்கு எதிராக இன்று அவரது மகன் திரு. ஜி.கே. வாசன் அவர்கள் வகுப்புவாத பா.ஜ.க.வில் அரசியல் சுயநலத்தோடு கொள்கையை துறந்து கூட்டணியில் தம்மை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

    காங்கிரஸ் இயக்கத்தில் மக்கள் தலைவர் மூப்பனார் மகன் என்ற ஒரே காரணத்திற்காக 11 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கேபினட் அந்தஸ்துள்ள கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என பல பதவிகளை காங்கிரஸ் கட்சித் தலைவர் அன்னை சோனியா காந்தி வழங்கியிருக்கிறார்.

    இன்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எடுத்துள்ள முடிவை தமிழ் மாநில காங்கிரசில் இருக்கிற உண்மையான தொண்டர்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவர் எடுத்த முடிவின் காரணமாக ஜி.கே. மூப்பனாரின் ஆத்மா இவரை மன்னிக்காது" என அவர் தெரிவித்துள்ளார். 

    • ஜி.கே.வாசன் பிறந்தநாளையொட்டி கோவிலில் த.மா.கா.வினர் வழிபாடு செய்தனர்
    • வாகை ஜெயராஜ் ஏற்பாட்டில் கொடியேற்றி முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    மதுரை

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்எம்.பி.யின் 58-வது பிறந்தநாள் விழா மதுரை மாநகர் மாவட்ட தலைவர் ராஜாங்கம் தலைமையில் இன்று கொண்டாடப்பட்டது.இதையொட்டி மதுரை மாநகர் மாவட்ட த.மா.கா. சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

    மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் சிறப்பு அர்ச்சனையும், மகபூப்பாளையத்தில் மாநில சிறப்பு அழைப்பாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் கொடியேற்றி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

    தெற்கு வாசல் மொய்தீன் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகையும், 47-வது வார்டு தலைவர் லியாகத் அலி, நகர சிறுபான்மை பிரிவு தலைவர் ஆபீக், உசேன் ஏற்பாட்டில் கொடியேற்றியும் இனிப்பு வழங்கப்பட்டது.

    தூய மரியன்னை தேவாலயத்தில் மதுரை மாவட்ட துணை தலைவர் சூசை ஏற்பாட்டில் சிறப்பு பிராத்தனை நடந்தது. மாநில இணை செயலாளர் பிரேம் குமார் ஏற்பாட்டில் காமராஜர் சாலையில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

    மதுரை ஆவின் பால்பண்னை பாட்ஷா, சேகர், மாரிச்சாமி ஏற்பாட்டில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

    புதூரில் 11-வது சர்க்கிள் தலைவர் மாணிக்கவாசகர், 14-வது வார்டு தலைவர் புதூர் பாண்டி ஏற்பாட்டில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. பெத்தானியாபுரம் மேட்டுத்தெரு 64-வது வார்டு தலைவர் செல்வம், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் இடும்பன் பாலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வாகை ஜெயராஜ் ஏற்பாட்டில் கொடியேற்றி முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஜி.கே.வாசன் பிறந்தநாளையொட்டி இன்று மாலை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொள்கை பரப்பு செயலாளர் சிவசுந்தரம் ஏற்பாட்டில் தங்கத்தேர் இழுக்கப்படுகிறது.

    பிறந்த நாள் நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.கே.ராஜேந்திரன், நிர்வாகிகள் பைரவ மூர்த்தி, மைதீன்பாட்ஷா, நடராஜன், மணி, சீனிவாசன், பிரேம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விளை நிலங்களை நாசமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை தொகுதி அ.தி.மு.க.,முன்னாள் எம்.பி., ராஜா பரமசிவம் மரணமடைந்தார். ஆலங்குடியில் நடைபெற்ற அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜா பரமசிவம் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து அ.தி.மு.க.வில் எம்.பி.யாக, மாவட்டச் செயலாளராக சிறப்பாக பணியாற்றினார். அவரது மரணம் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு இழப்பாக உள்ளது. 

    மேலும் ஹைட்ரோ கார்பன் போன்ற விளை நிலங்களை நாசமாக்கும், விவசாயிகளை அழிக்கும், குடிதண்ணீரை மாசுபடுத்தும் எந்த திட்டத்தையும் விவசாயிகளிடையே திணிக்கக்கூடாது. இது போன்ற நாசகார திட்டங்களை அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவோம் என்றார். தொடர்ந்து கமலின் பேச்சு குறித்தும், தமிழிசை பேச்சு குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, மதுரை இடைத்தேர்தல் தொகுதிக்கு செல்கிறேன். அங்கு இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன் என்று கூறி விட்டு புறப்பட்டு சென்றார்.
    பா.ஜனதா வெளியிட்டு உள்ள தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஜிகே வாசன் பேசியுள்ளார். #gkvasan #bjpmanifesto

    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தமிழக மக்கள் விரும்பும் வெற்றி கூட்டணி ஆகும். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கருத்துடைய கட்சிகள் கூட்டணியாக இருந்தால், மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் உறுதியாக கிடைக்கும்.

    தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய மந்திரியாக இருந்தபோது சுகாதார துறையில் பல்வேறு நல்ல திட்டங்களை நாட்டு மக்களுக்கு கொண்டு வந்தார்.

    பா.ஜனதா வெளியிட்டு உள்ள தேர்தல் அறிக்கையில் 60 வயது பூர்த்தி அடையும் விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பா.ஜனதா தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #gkvasan #bjpmanifesto

    தஞ்சையில் போட்டியிடும் த.மா.கா. வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுகிறார் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். #gkvasan #parliamentelection

    ஈரோடு:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அதிமுக கூட்டணி தொகுதிகள் தற்போது அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர். அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசுக்கு தஞ்சாவூர் தொகுதி அதிகாரபூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

    அதிமுக கூட்டணி என்பது ஏழை எளிய நடுத்தர மக்கள் முன்னேற்றம் அடையும், தமிழக வளர்ச்சிக்கான கூட்டணியாக உள்ளது மக்கள் நம்பிக்கை உடைய கூட்டணியாக நாங்கள் உள்ளோம்.

    எனவே பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    வளமான தமிழகம் வலிமையான பாரதம் என்ற அடிப்படையில் நாங்கள் கூட்டணி அமைத்து உள்ளோம். இதன் அடிப்படையிலேயே எங்கள் தேர்தல் அறிக்கையும் இருக்கும். தமாகா சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார். வேட்பாளர் தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர் ஆக இருப்பார்.

    எண்ணிக்கை அடிப்படையில் கூட்டணி அமைக்காமல் நல்ல எண்ணத்தின் அடிப்படையில் கூட்டணி அமைத்து உள்ளோம். தஞ்சாவூர் தொகுதி வெற்றிக்காக நாங்கள் பாடுபடுவோம். அதுபோக 38 தொகுதி வேட்பாளர்கள் வெற்றி பெற எங்கள் கட்சி கூட்டணி தலைவர்கள் பாடுபடுவார்கள்.

    த.மா.கா கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் நீதிமன்றத்தை அணுகி முதற்கட்டமாக சைக்கிள் சின்னத்தை பெறுவதில் வெற்றி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை நாங்கள் அணுகி சைக்கிள் சின்னம் பெற வலியுறுத்துவோம். இந்த வி‌ஷயத்தில் தேர்தல் ஆணையம் நல்ல முடிவு எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அப்படி சைக்கிள் சின்னம் கிடைக்காத பட்சத்தில் தஞ்சாவூர் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெறும்.

    திமுக-காங்கிரஸ் கூட்டணி பற்றி தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும் கண்மூடித்தனமாக குறைகளையும் ஆட்சியாளர்கள் பற்றிய தவறான தகவலைக் கூறி வருகிறார்கள் மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை அதிமுக சாமானியர்களுக்கு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது முதல்வரும் துணை முதல்வரும் சாமானிய மக்களின் தலைவராக உள்ளனர்.

    காஷ்மீரின் புல்வாமா தாக்குதல் கண்டிக்கத்தக்கது மிகவும் வருந்தத்தக்கது. இந்த வி‌ஷயத்தில் மத்திய அரசு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது. இதனை சிலர் அரசியலாக்குவது மக்கள் நம்ப மாட்டார்கள் அதேபோன்று பொள்ளாச்சி சம்பவம் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு ஏன் இந்தியாவில் எங்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கு தற்போது சிபிஐ க்கு மாற்றப்பட்டு உள்ளது நல்ல வி‌ஷயமாகும் என்னை பொருத்தவரை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தான் வழங்க வேண்டும். என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #gkvasan #parliamentelection

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்தார். #AIADMKAlliance #GKVasan #TMC #Thanjavur
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர்.காங்கிரஸ் (புதுச்சேரி), த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7, பா.ஜ.க.வுக்கு 5, தே.மு.தி.க.வுக்கு 4, மற்ற கட்சிகளுக்கு தலா ஒரு இடம் என்று தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தேசிய நலனில் அக்கறை கொண்ட மாநில கட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்பது தான் த.மா.கா.வின் நிலைப்பாடு.

    பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளடக்கிய கூட்டணி வெற்றி கூட்டணி. எங்களது கூட்டணி குறித்து காங்கிரஸ் - தி.மு.க. ஆகியவை ஜீரணிக்க முடியாமல் பேசி வருகிறார்கள்.

    தேர்தல் கூட்டணி என்பது வேறு, இயக்கத்தில் கொள்கை என்பது வேறு. எண்ணிக்கை என்பதை விட, எண்ணத்தின் அடிப்படையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மக்களுடைய நலன் கருதி எங்கள் கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்களுடைய செயல்பாட்டை மதிக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளோம். 

    கேட்ட தொகுதியை அ.தி.மு.க. கொடுத்துள்ளது. தஞ்சாவூர் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது என தெரிவித்துள்ளார். #AIADMKAlliance #GKVasan #TMC #Thanjavur
    எல்லா கட்சிகளும் கூட்டணி அறிவிக்கும்போது, நாங்களும் அப்போது அறிவிப்போம் என்று ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். #gkvasan

    பாகூர்:

    கிருமாம்பாக்கத்தை அடுத்துள்ள பிள்ளையார் குப்பம் மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் த.மா.கா. நிர்வாகியை அக்கட்சி தலைவர் ஜி.கே. வாசன் சந்தித்து நலம் விசாரித்தார்.

    அப்போது, அமைச்சர் கந்தசாமி, ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., மாநில இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் விக்னேஷ் மருத்துவ கண்காணிப்பாளர் நிர்மல்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஏம்பலம் தொகுதியில் வளர்ச்சி பணிகள் முறையாக நடந்து வருகிறது. வளர்ந்து வரும் தொகுதியாக ஏம்பலம் உள்ளது. புதுவை மாநில அரசுக்கு எனது பாரட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். கஜா புயல் சோகமான நிகழ்வு, அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, விவசாயிகளுக்கு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

    புதுவையில் முதல்- அமைச்சரும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஒத்த கருத்தோடு இணைந்து நிவாரண பணிகளை மேற்கொண்டனர். அதனடிப்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வுக்கான நம்பிக்கையை அளித்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. இது போன்ற நல்ல பணிகளை, புதுவை அரசு பல தரப்பட்ட மக்களுக்கும் தொடர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    புதுவை மாநில மக்களின் நம்பிக்கையை பெற்று உணர்வுகளை புரிந்து கொண்டு, ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு ஏற்றவாறு தடைகளை எல்லாம் தாண்டி மக்கள் பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்.

    மத்திய ஆளும் கட்சிக்கு எதிராக அகில இந்திய அளவில் மெகா கூட்டணி உருவாகும் சூழல் வெளிப்படையாக தெரிகிறது. இது மேலும், பலமடையும் என்பது எனது கருத்து. அதிகாரப்பூர்வமாக எல்லா கட்சிகளும் கூட்டணி அறிவிக்கும்போது, நாங்களும் அப்போது அறிவிப்போம்.

    அமைச்சர் கந்தசாமி, நான் இங்கு வருவது அறிந்து மரியாதை நிமிர்த்தமாக என்னை சந்தித்தார். இதில், கட்சியும் இல்லை, அரசியலும் இல்லை. ஒரு குடும்ப நட்பு தான் வேறு ஒன்றும் இல்லை. இடைத்தேர்தல் நிலைபாடு குறித்து எல்லா கட்சிகளும் தங்களின் நிலைபாடுகளை அறிவிக்கும் போது, எங்களின் முடிவு குறித்து அறிப்போம்.

    இவ்வாறு ஜி.கே. வாசன் கூறினார். #gkvasan

    ரெயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்கள் சலுகையை மோடி அரசு பறித்துவிட்டது என்று ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். #gkvasan #railwayemployees pmmodi

    சென்னை:

    தென்மண்டல எஸ்.சி., எஸ்.டி. பிரிவு ரெயில்வே தொழிலாளர்கள் மகாசபை கூட்டம் பெரம்பூரில் இன்று நடந்தது. பொதுச்செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    ரெயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல சலுகைகளை மோடி அரசு பறித்து இருக்கிறது. தொழிலாளர்களின் சலுகைகளை அரசு மீண்டும் வழங்க வேண்டும்.

    அதேபோல் ரெயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்தது தவறு. இந்த துறையை தனியார் மயமாக்கும் எண்ணத்தை கைவிட வேண்டும்.

    இடஒதுக்கீடையும் குறைக்க கூடாது. தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைக்கு த.மா.கா. என்றும் துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் த.மா.கா. துணைத் தலைவர் கோவை.தங்கம், தொழிலாளர் யூனியனின் அகில இந்திய நிர்வாகிகள் பைரவா, அர்னோட்டியா, த.மா.கா. நிர்வாகிகள் ஜவகர்பாபு, விடியல் சேகர், டி.என்.அசோகன், டி.எம்.பிரபாகர், விக்டரிமோகன், சி.ஆர்.வெங்கடேஷ், பிஜு சாக்கோ, பி.எம். பாலா சைதை மனோகரன், கல்யாணி, குமாரராஜ், தொழிற்சங்க நிர்வாகிகள் ஜேம்ஸ், ராமகிருஷ்ணன், ராயபுரம் பி.எம்.பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர். gkvasan #railwayemployees pmmodi

    மத்திய பாஜக மற்றும் மாநில அரசுகளுக்கு மக்கள் மீது அக்கறையில்லை என்று த.மா.கா. 5-ம் ஆண்டு தொடக்க விழாவில் ஜி.கே.வாசன் பேசினார். #gkvasan #tngovt #centralgovernment #tamilmaanilacongress

    அரியலூர்:

    அரியலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 5-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் த.மா.கா. கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:-

    த.மா.கா. ஆரம்பிக்கப்பட்ட போது இருந்த ஆர்வம் இன்றும் மக்களிடம் உள்ளதை காண முடிகிறது. லட்சியத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி த.மா.கா. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு இதுவரை நிவாரணம் வழங்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது. ஏற்கனவே 2,3 புயல் தாக்கிய போதும் மத்திய அரசு முறையாக நிவாரணம் வழங்கவில்லை. ரூ.1000 கோடி நிவாரணம் என்பது போதுமானதல்ல. கூடுதலாக நிதியை அரசு வழங்க வேண்டும்.

    வீடுகளை இழந்தவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிதர வேண்டும். மத்தியில் உள்ள பா.ஜ.க. மதவாத கட்சியாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் போது அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக உள்ளது. மத்திய பா.ஜ.க. மற்றும் மாநில அ.தி.மு.க. அரசுகளின் மீது மக்களுக்குள்ள நம்பிக்கை குறைந்து வருவது தெரிகின்றது.

    மாநில அரசை பொருத்த மட்டில் விவசாயிகள், அரசு ஊழியர்கள் மற்றும் நெசவாளர்களின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்கும் அரசாக இல்லை. மக்கள் விரும்பாத எதிர்க்கின்ற திட்டங்களை செயலாக்கும் அரசாக மத்திய மாநில அரசுகள் உள்ளது. மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு மறைமுகமாக ஆதரவு தருவதாக தெரிகிறது. அதனை கண்டித்து வரும் 8-ந்தேதி கிருஷ்ணகிரியில் த.மா.கா. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.


    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு மாற்று நிலைபாட்டில் ஈடுபட கூடாது. அங்கு பணியில் இருந்தவர்களுக்கு அரசு மாற்று வேலையை வழங்க வேண்டும்.

    தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும். மக்களின் எதிர்ப்பை மீறி தமிழகத்தில் எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வருவதற்கு தமிழக அரசு அனுமதியளிக்க கூடாது. பெட்ரோல், டீசல், ஜி.எஸ்.டி உள்ளிட்ட பிரச்சினைகளில் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    ஆட்சிக்கு வந்தவுடன் 1 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவதாக கூறிய மோடி இதுவரை தர வில்லை. மேலும், கருப்பு பணத்தை இதுவரை மீட்கவில்லை. பா.ஜ.க., அ.தி.மு.க.வுக்கு மக்களின் மீது அக்கறையில்லை. புயல் நிவாரணத்துக்கு மாநில அரசு கோரிய நிதியை மத்திய அரசு உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கஜா புயலால் ஏற்பட்டுள்ள பெரிய பாதிப்பை பிரதமர் பார்க்காதது கண்டனத் திற்குரியது. த.மா.கா.எந்த பலமும் இல்லாமல் மக்கள் பலத்தை மட்டுமே நம்பி இயங்கும் கட்சி. தேர்தல் நேரத்தில் ஒருமித்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி அமைக்கும். அக்கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அரியலூர் மாவட்ட த.மா.கா. சார்பில் ஜி.கே.வாசனுக்கு வீரவாள் வழங்கப்பட்டது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்ட த.மா.கா. சார்பில் ரூ.1லட்சும் நிவாரணத்துக்கான காசோலை ஜி.கே.வாசனிடம் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் மாநில துணை தலைவர் ஞான தேசிகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆர்.மூப்பனார், சுரேஷ் மூப்பனார், மாநில பொதுச் செயலாளர் கோவை தங்கம், நிர்வாகிகள் சித்தன், விடியல் சேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள்,தொண்டர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    மத்தியில் பா.ஜ.க.வை வீழ்த்த வியூகம் வகுக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். #gkvasan #bjp

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆத்தூரில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதனை சரி செய்து அதிக அளவு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    சேலம்- உளுந்தூர் பேட்டை நான்கு வழிச்சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெறவில்லை. இதனால் அதிக விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. சர்வீஸ் சாலைகள் துண்டு, துண்டாக உள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைத்தால் ஆட்சியாளர்கள் கூறுவதுபோல 3½ மணி நேரத்தில் சேலத்தில் இருந்து சென்னைக்கு செல்லலாம்.

    தலைவாய்பட்டி கிராமத்தில் சாமுவேல் என்பவரது மகள் ராஜலட்சுமி கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கி உதவிட வேண்டும். மேலும் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கிட வேண்டும்.

    பசுமை வழி திட்டத்தை அரசு கைவிட வேண்டும். அதற்காக போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறவேண்டும். 20 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல்களிலும் தேர்தல் நடத்திட தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். மத்தியில் பா.ஜ.க.வை வீழ்த்த வியூகம் வகுக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார். #gkvasan #bjp

    எச்.ராஜா- கருணாஸ் பொது இடங்களில் பேசும்போது வரம்பை கடைபிடிக்க வேண்டும் என்று ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். #gkvasan #hraja #karunas
    திருச்சி:

    திருச்சியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் திருச்சி வந்தார். அவரை திருச்சி விமான நிலையத்தில் மாவட்ட தலைவர்கள் நந்தா செந்தில்வேல், ரவீந்திரன் குணா, மற்றும் மாவட்ட பொருளாளர் கே.டி.தனபால் த.மா.நிர்வாகிகள் அய்யப்பன் மற்றும் பலர் வரவேற்றனர். அதன் பிறகு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது :-

    தேர்தல் நேரத்தின் போது பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தால் பணம் பட்டு வாடாவை தடுக்க முடியாது என்றால் தேர்தல் ஆணையத்தை விட அதிகாரம் படைத்த ஒரு அமைப்பை உருவாக்கி பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கலாம். 

    தமிழக அமைச்சர்கள் மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டை அமைச்சர்கள் சந்தித்து அதில் நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிருபிக்க வேண்டும். இல்லையென்றால் அமைச்சர்கள் தவறு செய்தது போல் ஆகிவிடும். 

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 


    தொடர்ந்து ஜி.கே.வாசனிடம் எஸ்.வி.சேகர், எச்.ராஜாவை தொடர்ந்து கருணாஸ் எம்.எல்.ஏ. பேசிய பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே என நிருபர்கள் கேட்டனர். அதற்கு ஜி.கே.வாசன் கருத்து தெரிவிப்பவர்கள், பேசுபவர்கள் யாராக இருந்தாலும் பொது இடங்களில் பேசும் போது வரம்பை மீறி பேசக்கூடாது.

    இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார். #gkvasan #hraja #karunas
    குட்கா சோதனையின் உண்மை நிலையை சி.பி.ஐ.யும், மத்திய அரசும் வெளிப்படுத்த வேண்டும் என்று ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். #gkvasan #Gudka #cbi #centralgovernment

    திருப்பூர்:

    ஆசியா விளையாட்டு போட்டியில் 2 வெள்ளிப்பதக்கம் வென்ற தருணுக்கு திருப்பூரில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் ஜி.கே வாசன் கலந்து கொண்டு பரிசு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குட்கா சோதனையின் உண்மை நிலையை சி.பி.ஐ.யும், மத்திய அரசும் வெளிப்படுத்த வேண்டும். தமிழக அரசும், அதன் செயல்பாடும் கேள்விக்குறியாகி வருகிறது. தமிழக அரசும், போலீசாரும் தமிழகத்தில் நடக்கும் குற்றச்செயல்களை தடுக்க தனி கவனம் செலுத்த வேண்டும்.

    தமிழகத்தில் மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். 

    விழாவில் த.மா.கா. மாநில பொதுச்செயலாளர் மோகன் கார்த்திக், மாநில செயலாளர் சேதுபதி, மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்கம், உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #gkvasan #Gudka #cbi #centralgovernment

    ×