search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    த.மா.கா. வேட்பாளர் நாளை அறிவிப்பு- ஜி.கே.வாசன் பேட்டி
    X

    த.மா.கா. வேட்பாளர் நாளை அறிவிப்பு- ஜி.கே.வாசன் பேட்டி

    தஞ்சையில் போட்டியிடும் த.மா.கா. வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுகிறார் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். #gkvasan #parliamentelection

    ஈரோடு:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அதிமுக கூட்டணி தொகுதிகள் தற்போது அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர். அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசுக்கு தஞ்சாவூர் தொகுதி அதிகாரபூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

    அதிமுக கூட்டணி என்பது ஏழை எளிய நடுத்தர மக்கள் முன்னேற்றம் அடையும், தமிழக வளர்ச்சிக்கான கூட்டணியாக உள்ளது மக்கள் நம்பிக்கை உடைய கூட்டணியாக நாங்கள் உள்ளோம்.

    எனவே பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்.

    வளமான தமிழகம் வலிமையான பாரதம் என்ற அடிப்படையில் நாங்கள் கூட்டணி அமைத்து உள்ளோம். இதன் அடிப்படையிலேயே எங்கள் தேர்தல் அறிக்கையும் இருக்கும். தமாகா சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார். வேட்பாளர் தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர் ஆக இருப்பார்.

    எண்ணிக்கை அடிப்படையில் கூட்டணி அமைக்காமல் நல்ல எண்ணத்தின் அடிப்படையில் கூட்டணி அமைத்து உள்ளோம். தஞ்சாவூர் தொகுதி வெற்றிக்காக நாங்கள் பாடுபடுவோம். அதுபோக 38 தொகுதி வேட்பாளர்கள் வெற்றி பெற எங்கள் கட்சி கூட்டணி தலைவர்கள் பாடுபடுவார்கள்.

    த.மா.கா கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் நீதிமன்றத்தை அணுகி முதற்கட்டமாக சைக்கிள் சின்னத்தை பெறுவதில் வெற்றி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை நாங்கள் அணுகி சைக்கிள் சின்னம் பெற வலியுறுத்துவோம். இந்த வி‌ஷயத்தில் தேர்தல் ஆணையம் நல்ல முடிவு எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அப்படி சைக்கிள் சின்னம் கிடைக்காத பட்சத்தில் தஞ்சாவூர் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெறும்.

    திமுக-காங்கிரஸ் கூட்டணி பற்றி தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும் கண்மூடித்தனமாக குறைகளையும் ஆட்சியாளர்கள் பற்றிய தவறான தகவலைக் கூறி வருகிறார்கள் மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை அதிமுக சாமானியர்களுக்கு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது முதல்வரும் துணை முதல்வரும் சாமானிய மக்களின் தலைவராக உள்ளனர்.

    காஷ்மீரின் புல்வாமா தாக்குதல் கண்டிக்கத்தக்கது மிகவும் வருந்தத்தக்கது. இந்த வி‌ஷயத்தில் மத்திய அரசு தகுந்த பதிலடி கொடுத்துள்ளது மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது. இதனை சிலர் அரசியலாக்குவது மக்கள் நம்ப மாட்டார்கள் அதேபோன்று பொள்ளாச்சி சம்பவம் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு ஏன் இந்தியாவில் எங்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கு தற்போது சிபிஐ க்கு மாற்றப்பட்டு உள்ளது நல்ல வி‌ஷயமாகும் என்னை பொருத்தவரை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தான் வழங்க வேண்டும். என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #gkvasan #parliamentelection

    Next Story
    ×