என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொது இடங்களில் பேசுபவர்கள் வரம்பை கடைபிடிக்க வேண்டும்- ஜிகே வாசன் பேட்டி
    X

    பொது இடங்களில் பேசுபவர்கள் வரம்பை கடைபிடிக்க வேண்டும்- ஜிகே வாசன் பேட்டி

    எச்.ராஜா- கருணாஸ் பொது இடங்களில் பேசும்போது வரம்பை கடைபிடிக்க வேண்டும் என்று ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். #gkvasan #hraja #karunas
    திருச்சி:

    திருச்சியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் திருச்சி வந்தார். அவரை திருச்சி விமான நிலையத்தில் மாவட்ட தலைவர்கள் நந்தா செந்தில்வேல், ரவீந்திரன் குணா, மற்றும் மாவட்ட பொருளாளர் கே.டி.தனபால் த.மா.நிர்வாகிகள் அய்யப்பன் மற்றும் பலர் வரவேற்றனர். அதன் பிறகு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது :-

    தேர்தல் நேரத்தின் போது பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. தேர்தல் ஆணையத்தால் பணம் பட்டு வாடாவை தடுக்க முடியாது என்றால் தேர்தல் ஆணையத்தை விட அதிகாரம் படைத்த ஒரு அமைப்பை உருவாக்கி பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கலாம். 

    தமிழக அமைச்சர்கள் மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டை அமைச்சர்கள் சந்தித்து அதில் நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிருபிக்க வேண்டும். இல்லையென்றால் அமைச்சர்கள் தவறு செய்தது போல் ஆகிவிடும். 

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 


    தொடர்ந்து ஜி.கே.வாசனிடம் எஸ்.வி.சேகர், எச்.ராஜாவை தொடர்ந்து கருணாஸ் எம்.எல்.ஏ. பேசிய பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே என நிருபர்கள் கேட்டனர். அதற்கு ஜி.கே.வாசன் கருத்து தெரிவிப்பவர்கள், பேசுபவர்கள் யாராக இருந்தாலும் பொது இடங்களில் பேசும் போது வரம்பை மீறி பேசக்கூடாது.

    இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார். #gkvasan #hraja #karunas
    Next Story
    ×