என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது- ஜி.கே.வாசன் பேட்டி
Byமாலை மலர்16 May 2019 4:42 PM GMT (Updated: 16 May 2019 4:42 PM GMT)
விளை நிலங்களை நாசமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை தொகுதி அ.தி.மு.க.,முன்னாள் எம்.பி., ராஜா பரமசிவம் மரணமடைந்தார். ஆலங்குடியில் நடைபெற்ற அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ராஜா பரமசிவம் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து அ.தி.மு.க.வில் எம்.பி.யாக, மாவட்டச் செயலாளராக சிறப்பாக பணியாற்றினார். அவரது மரணம் புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு இழப்பாக உள்ளது.
மேலும் ஹைட்ரோ கார்பன் போன்ற விளை நிலங்களை நாசமாக்கும், விவசாயிகளை அழிக்கும், குடிதண்ணீரை மாசுபடுத்தும் எந்த திட்டத்தையும் விவசாயிகளிடையே திணிக்கக்கூடாது. இது போன்ற நாசகார திட்டங்களை அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவோம் என்றார். தொடர்ந்து கமலின் பேச்சு குறித்தும், தமிழிசை பேச்சு குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, மதுரை இடைத்தேர்தல் தொகுதிக்கு செல்கிறேன். அங்கு இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன் என்று கூறி விட்டு புறப்பட்டு சென்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X