என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அகஸ்தீஸ்வரத்தில் பிரதமர் மோடி பேசும் பொதுக்கூட்டம் நடக்கும் மைதானத்தில் பந்தக்கால் நாட்டுவிழா
- மோடி வருகையடுத்து குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
- நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் ஆகியோரும் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு செய்தனர்.
நாகர்கோவில்:
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சி தயாராகி வருகிறது. தமிழகம் முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்வதற்காக நாளை மறுநாள் (15-ந்தேதி) கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில் தென் மாவட்ட பாரதிய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அங்கு பிரசாரம் செய்கிறார். மோடி வருகையடுத்து குமரி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. டெல்லியில் இருந்து பாதுகாப்பு படை அதிகாரிகள் குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.
மேலும் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் ஆகியோரும் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு செய்தனர். இந்த நிலையில் பிரதமர் மோடி பேச உள்ள நிகழ்ச்சிக்கான பந்தல் கால்கோள் நாட்டும் நிகழ்ச்சி இன்று நடந்தது. விழாவில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தர்மராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி, மாநில செயலாளர் மீனாதேவ், மாநில மகளிர் அணி செயலாளர் உமாரதி ராஜன், மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத் தலைவர் தேவ், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பொதுக்கூட்ட இடத்தில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மற்றும் போலீஸ் அதிகாரிகளும் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து மேடை மற்றும் பந்தல் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
பிரதமர் மோடி பேசவுள்ள மேடை தெற்கு இருந்து வடக்கு பார்த்து அமைக்கப்படுகிறது. மேலும் தொண்டர்கள் அமர்வதற்கு வசதியாக பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்துவதற்கான இடமும் ஜேசிபி எந்திரம் மூலமாக சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்