என் மலர்

    நீங்கள் தேடியது "L Murugan"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ‘வந்தே பாரத்’ ரெயிலானது முற்றிலும் உள்நாட்டிலேயே அதாவது சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு உள்ளது.
    • ‘வந்தே பாரத்’ ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை-சென்னை 'வந்தே பாரத்' ரெயில் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் ரெயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நெல்லையில் இருந்து சென்னை செல்ல வேண்டுமானால் ஒரு நாளாகி விடும். அந்த நிலை இப்போது மாறியுள்ளது.

    'வந்தே பாரத்' ரெயிலானது முற்றிலும் உள்நாட்டிலேயே அதாவது சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி ரெயில்வே துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

    கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டு வரையிலும் ரெயில்வே துறையில் தமிழகத்திற்கு ரூ.800 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஆனால் தமிழகத்திற்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இது தவிர ராமேசுவரம், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, சென்னை ரெயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இந்த ஆண்டு 9 புதிய ரெயில் தடங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தமிழக மேம்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

    'வந்தே பாரத்' ரெயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி வந்து சேரும். அது தொடர்பாக ஆய்வு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வழக்கை ரத்து செய்யக்கோரி எல்.முருகன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.
    • வழக்கின் விசாரணையை 3 மாதங்களில் முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவு.

    கடந்த 2019-ம் ஆண்டில் வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக பா.ஜ.கவில் அப்போதைய தலைவர் எல்.முருகன் பஞ்சமி நிலம் குறித்து பேசியதாக முரசொலி அறக்கட்டளை சார்பில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி, தற்போது மத்திய இணை அமைச்சராக இருக்கும் எல்.முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணையின் போது இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    மேலும் வழக்கை ரத்து செய்யக்கோரி எல்.முருகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி வழக்கின் விசாரணையை 3 மாதங்களில் முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாசி வளர்ப்பு பூங்கா அமைக்க மத்திய மந்திரி எல்.முருகன் ஆய்வு செய்தார்.
    • நிர்மலாதேவி, தீபா உட்பட பலர் கலந்து கொன்டனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள கடலோர கிராமமான திருப் பாலைக்குடியில் மீன்துறை மூலம் பாசி–வளர்ப்பு பூங்கா ரூ.11 கோடிமதிப்பில் துவங் கப்பட உள்ளது.

    இந்த இடத்தை மத்திய மீன்வளத்துறை அமைச்சர் எல்.முருகன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தார். அப்போது பாசி வளர்ப்பு பூங்கா பணிகள் விரைவில் தொடங்கி முடி–வ–டையும் வகையில் மேற் கொள்ள அதிகாரிக–ளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதா–கவும் அவர் தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது, மீன்துறை இணை இயக்குநர் பிரபாவதி, துணை இயக்கு–நர் கோபிநாத், ஆய்வாளர் அபுதாஹிர், மீனவ கூட் டுறவு சங்கத்தலை–வர்கள் பசுருல்ஹக், சுல்த்தான் செய்யது இபுராமுசா, மீன் துறை அலுவலர்கள் முரு–கேசன், ஷகிலாபானு, நிர் மலாதேவி, தீபா உட்பட பலர் கலந்துகொன்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தேயிலைக்கு உரிய நிலையான விலை நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
    • ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம் என்ற கோட்பாட்டுடன் இந்தியா பயணிக்கிறது.

    ஊட்டி:

    மத்திய கால்நடை, மீன்வளத் துறை இணை மந்திரி எல்.முருகன் 2 நாள் பயணமாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

    இதன் ஒரு பகுதியாக அவர் எல்லநள்ளி பகுதியில் உள்ள சற்குரு ஆசிரமத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு ஊர்மக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு பொதுமக்கள் மற்றும் ஊர் தலைவர்களுடன் ஒன்றாக உட்கார்ந்து காலை உணவு சாப்பிட்டார். அப்போது அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கபட்டன. குறிப்பாக நீலகிரி தேயிலைக்கு உரிய நிலையான விலை நிர்ணயிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், இது குறித்து ஏற்கனவே மத்திய மந்திரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மத்தியஅரசு வெகுவிரைவில் சிறப்பான முடிவை அறிவிக்கும் என உறுதியளித்தார். அதன்பிறகு அவர்களுக்கு மத்திய அரசின் சாதனை விளக்க கையேடு வழங்கப்பட்டது.

    அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் பாரதிய மஸ்தூா் சங்க (பி.எம்.எஸ்.) ஆலோசனை கூட்டத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டாா். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம் என்ற கோட்பாட்டுடன் இந்தியா பயணிக்கிறது. ஜி-20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றிருப்பது பெருமைக்குரிய நிகழ்வு. இதன் மூலம் நாடுகளுக்கு இடையேயான கலாசாரம், கல்வி, பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வழிவகை ஏற்பட்டு உள்ளது. ஜி 20 மாநாடுகள் மூலம் நாடுகளுக்கு இடையே தொழில்நுட்ப பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது பாராளுமன்ற தோ்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவீா்களா என நிருபர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த எல்.முருகன், நான் எங்கு போட்டியிடுவேன் என்பது குறித்து கட்சித் தலைமை தான் முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • யுனெஸ்கோ அந்தஸ்து பெற்று 18 ஆண்டுகள் நிறைவு பெற்று தற்போது 19-ம் ஆண்டில் இந்த நீலகிரி மலை ரெயில் காலடி எடுத்து வைத்துள்ளது.
    • ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரெயில் கூடுதல் பெட்டிகளுடன் இன்று இயக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2005-ம் ஆண்டு ஜூலை 15-ந் தேதி தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள டர்பனில் நடைபெற்ற வேர்ல்ட் ஹெரிடேஜ் கமிட்டி இந்தியாவில் புகழ்பெற்ற மலை ரெயில்களில் ஒன்றான நீலகிரி மலை ரெயிலுக்கு யுனெஸ்கோ அந்தஸ்து வழங்கியது.

    யுனெஸ்கோ அந்தஸ்து பெற்று 18 ஆண்டுகள் நிறைவு பெற்று தற்போது 19-ம் ஆண்டில் இந்த நீலகிரி மலை ரெயில் காலடி எடுத்து வைத்துள்ளது.

    மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகளின் கோரிக்கையினை ஏற்று கடந்த ஏப்ரல் மாதம் முதல் இயக்கப்பட்டு வரும் சிறப்பு மலைரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரெயில் கூடுதல் பெட்டிகளுடன் இன்று இயக்கப்பட்டது. இதனை மத்திய மந்திரி எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    முன்னதாக யுனோஸ்கோ அந்தஸ்து பெற்று 18 ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் வகையில் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மேலும், ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன பயணச்சீட்டு மைய கட்டிடத்தையும் மத்திய மந்திரி எல்.முருகன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த 9 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சியில் ரெயில்வே வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த 25 ஆண்டுக்கு பின் ரெயில்வே நிர்வாகம் அசுர வளர்ச்சி பெறும்.

    கடந்த தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் ரூ.800 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. தற்போது பா.ஜ.க ஆட்சியில் 6 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேலும் தமிழகத்திற்கு 9 புதிய ரெயில் திட்டங்கள் மற்றும் வழித்தடங்களை கொண்டு வந்துள்ளோம். அம்ருத் திட்டம் மூலம் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்பில் ரெயில்வே மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக ரெயில் நிலையத்தில் எக்ஸ்லேட்டரும் அமைக்கப்பட உள்ளது. மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே ரூ.50 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.

    மேட்டுப்பாளையம்-கோவை இடையே தற்போது 8 பெட்டிகளுடன் பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் கூடுதலாக பெட்டிகள் இணைத்து 12 பெட்டிகளுடன் ரெயிலை இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

    இதில் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., ஏ.கே.செல்வராஜ், சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா, சேலம் கோட்ட உதவி மேலாளர் சிவலிங்கம், வணிக மேலாளர் பூபதி ராஜ், முதுநிலை கோட்ட எந்திரவியல் பொறியாளர் பரிமளக்குமார், பாஜக மாவட்ட தலைவர் சங்கீதா, துணைத்தலைவர் விக்னேஷ், மேட்டுப்பாளையம் முன்னாள் நகர் மன்ற தலைவர் சதீஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மத்திய மந்திரி எல்.முருகன் இதுவரை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.
    • வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

    மத்திய மந்திரி எல்.முருகன் இதுவரை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. 2011 சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியிலும், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் தொகுதியிலும் போட்டியிட்டார். எம்.பி. தேர்தலில் இதுவரை அவர் போட்டியிடவில்லை.

    வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் அதை கட்சி தலைமை தான் அறிவிக்க வேண்டும். தலைமை எந்த முடிவை அறிவித்தாலும் ஏற்றுக்கொள்வேன் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் அட்டைகளை வழங்கினர்.
    • மத்திய அரசு நமக்கு எவ்வளவு திட்டங்களை வழங்குகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மத்திய, மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டை வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது.

    விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மீன்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் அட்டைகளை வழங்கினர்.

    மீனவ மக்கள் கேட்ட அத்தனை திட்டங்களையும் அரசு வழங்கி வருகிறது. மத்திய அரசு நமக்கு எவ்வளவு திட்டங்களை வழங்குகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

    நேரடி வங்கி பரிமாற்றத்தால் அவர்கள் வழங்குகின்ற நிறைய திட்டங்கள் நமக்கு தெரிவதில்லை. திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடைய வேண்டும் என்பதே நமது எண்ணம். நாங்கள் எதிர்பார்த்த நிதியை விட கூடுதல் நிதி மத்திய அரசிடம் இருந்து கிடைத்து, அதன் மூலம் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    காலாப்பட்டு பகுதியில் கடல் அரிப்பினால் பல வீடுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. கற்கள் கொட்ட வேண்டும் என்றுகேட்கின்றனர். இதை ஆய்வு செய்யும் பணி ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை மூலம் விரைவில் கடல் அரிப்பை தடுக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுச்சேரி, காரைக்காலில் மீன்பிடி துறைமுகம் வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். மாகியில் மீன்பிடித் துறைமுகப் பணி முடிக்கப்படாமல் உள்ளது. அதனை முடிக்கவும், ஏனாம் பகுதி மீனவ மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.

    கடல் அரிப்பை தடுப்பதற்கான நிதி உள்பட அனைத்து நிதியும் நமக்கு கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்தியாவை காக்க வந்த தெய்வமாக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார்.
    • காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு ரூபாய்க்கு திட்டம் போட்டால் அது மக்களிடத்தில் போய் சேர்வது வெறும் 15 பைசா மட்டுமே.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    2014 ம் ஆண்டிற்கு முன் தினமும் ஊழல் ஊழல் என மிகப்பெரிய ஊழல் ஆட்சி நடந்தது. ஆ.ராசா எம்.பி., செய்த ஊழல் நமக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.

    ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்தியாவை காக்க வந்த தெய்வமாக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். அவர் ஆட்சியில் போலி கியாஸ் இணைப்பை ஒழித்ததில் மட்டும் ரூ. 3 லட்சம் கோடி நம் நாட்டுக்கு மீதமானது. அந்தப் பணம் முழுவதும் உள்கட்டமைப்புக்காக செலவு செய்யப்பட்டு வருகிறது.

    ஏழை எளிய மக்களின் நலம், நல்ல அரசாங்கம், சேவை இந்த மூன்றையும் தாரக மந்திரமாக கொண்டு 9 ஆண்டுகளாக சிறந்த ஆட்சி நடந்து வருகிறது.

    ஏழை எளிய மக்கள் 2014 ம் ஆண்டுக்கு முன் வங்கி என்றால் என்னவென்று தெரியாமல் இருந்தனர். மிகப்பெரிய தொழில் அதிபர்கள், மிகப்பெரிய படிப்பு படித்தவர்கள் போகும் இடமாக இருந்த நிலையை மாற்றி அனைவருக்கும் இலவச வங்கிக் கணக்கை தொடங்கி கொடுத்தவர் நரேந்திர மோடி.

    அத்துடன் அரசு திட்டம் மானியங்கள், பயன்கள் நேரடியாக வங்கிக் கணக்கில் சேர்ப்பதற்கான ஏற்பாட்டை செய்துள்ளார். கொரோனா சமயத்தில் ஏப்ரல், மே, ஜூன் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.500 வீதம் வங்கி கணக்கில் செலுத்தினார்.

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒரு ரூபாய்க்கு திட்டம் போட்டால் அது மக்களிடத்தில் போய் சேர்வது வெறும் 15 பைசா மட்டுமே. இன்று பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் ஒரு ரூபாய்க்கு திட்டம் போட்டால் அந்த ஒரு ரூபாய் முழுவதுமாக நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு செல்கிறது.

    2 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் காது கொடுத்து கேட்க முடியாத ஊழல் நடந்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். அவரை இன்னும் அமைச்சரவையில் இருந்து நீக்காமல் இருப்பது தமிழருக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. எனவே ஊழல் அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் பாஜக., அரசு நிறைவேற்றி வருகிறது.

    அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கூடிய சீக்கிரமே நாம் அயோத்தியில் தரிசனம் செய்ய இருக்கிறோம். பாஜக., அமைச்சர்கள் இந்த 9 ஆண்டுகளில் நியாயமான நேர்மையான அமைச்சர்களாக பணியாற்றி வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

    காஷ்மீர், அருணாசலப் பிரதேசம், அந்தமான் உள்ளிட்ட அனைத்து கடைகோடி மக்களுக்கும் அரசாங்க திட்டம் நேரடியாக போய் சேர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். வருகிற ஒரு வருடத்திற்குள் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் மத்திய அரசால் நிரப்பப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அனைத்துக்கட்ட பரிசோதனைகளும் நிறைவடைந்த நிலையில் இன்றுமுதல் போடிக்கு ரெயில் சேவை தொடங்குகிறது.
    • சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை ரெயில் எண் (20602) இன்று இரவு 8.30 மணிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைக்கிறார்.

    போடி:

    மதுரை-போடி வழித்தடத்தை அகல ரெயில்பாதையாக மாற்றுவதற்காக 2010-ம் ஆண்டு டிசம்பருடன் மீட்டர்கேஜ் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில் கடந்த ஆண்டு மே 27-ந்தேதி முதல் மதுரையில் இருந்து தேனி வரை தினசரி ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்றுமுதல் போடி வரை இந்த ரெயில் நீட்டிக்கப்பட உள்ளது. இதற்காக ஓ.எம்.எஸ் எனப்படும் சிறப்பு ஆய்வு ரெயில் மூலம் நேற்று சோதனை நடைபெற்றது. தண்டவாளங்களின் அதிர்வு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அனைத்துக்கட்ட பரிசோதனைகளும் நிறைவடைந்த நிலையில் இன்றுமுதல் போடிக்கு ரெயில் சேவை தொடங்குகிறது. மதுரையில் இருந்து தினசரி ரெயில்(06701) காலை 8.20-க்கு புறப்பட்டு 10.30 மணிக்குப்போடியை வந்தடைகிறது. மீண்டும் 5.50-க்கு புறப்படும் இந்த ரெயில் (06702) இரவு 7.50 மணிக்கு மதுரையைச் சென்றடைகிறது.

    இதேபோல் சென்னை சென்ட்ரலில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் போடிக்கு ரெயில் (20601) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரவு 7.15 மணிக்குப்புறப்பட்டு மறுநாள் காலை 9.35 மணிக்கு போடியை வந்தடைகிறது.

    மறுமார்க்கமாக போடியில் இருந்து செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை சென்ட்ரலுக்கு ரெயில் (20602) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இரவு 8.30 மணிக்குப்புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு சென்னையை சென்றடைகிறது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்த ரெயிலில் 2 முன்பதிவில்லா பெட்டிகள், படுக்கை வசதி, முன்பதிவு பெட்டிகள் 4, 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிகள் 2, முதல்வகுப்பு குளிர்சாதன பெட்டி 1 என 14 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

    சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை ரெயில் எண் (20602) இன்று இரவு 8.30 மணிக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் எம்.பி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். முதல் ஸ்லீப்பர் கோச்சுக்கு ரூ.390, 3-ம் வகுப்பு ஏ.சி பெட்டிக்கு ரூ.1025, 2-ம் வகுப்பு ஏசிக்கு ரூ.1445, முதல் வகுப்பு ஏசி பெட்டிக்கு ரூ.2415 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டத்திற்கு கடந்த பல ஆண்டுகளாக ரெயில் போக்குவரத்து தொடங்கப்படாத நிலையில் தற்போது போடியில் இருந்து சென்னை வரை ரெயில்சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன்மூலம் சென்னைக்கு கல்வி கற்க செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் விளைபொருட்களை கொண்டுசெல்லும் வியாபாரிகள் பெரிதும் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலக பொருளாதாரம் தொய்வு அடைந்துள்ள நிலையில் இந்தியா உலகில் 5-வது மிகப்பெரிய வளர்ந்து வரும் பொருளாதார நாடாக முன்னேறியுள்ளது.
    • ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது மக்கள் திட்டத்துக்கு ரூ.100 ஒதுக்கினால் ரூ.15 மட்டுமே சென்று சேர்வதாக கூறியிருந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை கம்பன் கலையரங்கில் பா.ஜனதா சார்பில் நடந்த பிரதமரின் 9 ஆண்டுகால சாதனை விளக்க மாநாட்டில் மத்திய மந்திரி எல்.முருகன் பேசியதாவது:-

    2014-க்கு முன் நாட்டை ஆண்டவர்கள், ஊழலை பிரத்யேகமாக கொண்டு ஆட்சி செய்தனர். மக்கள் விடிவுக்காக காத்திருந்தபோது பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தார். ஏழைகளின் நலன், மக்கள் சேவை ஆகியவற்றை தாரக மந்திரமாக கொண்டு ஆட்சி செய்து வருகிறார். அரசின் மானியம் மக்களை நேரடியாக சென்றடைய மக்களுக்கு இலவச வங்கி கணக்கு தொடங்கினார்.

    ஏழை மக்கள் வீடு கட்டும் திட்டம், சுகாதாரமான குடிநீர் வழங்க ஜல்ஜீவன் திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், உஜ்வாலா திட்டத்தில் கியாஸ் இணைப்பு, விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை உட்பட பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். உலக நாடுகளின் பார்வை இந்தியா மீது அதிகளவில் உள்ளதற்கு பிரதமர் மோடிதான் காரணம்.

    உலக பொருளாதாரம் தொய்வு அடைந்துள்ள நிலையில் இந்தியா உலகில் 5-வது மிகப்பெரிய வளர்ந்து வரும் பொருளாதார நாடாக முன்னேறியுள்ளது. ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது மக்கள் திட்டத்துக்கு ரூ.100 ஒதுக்கினால் ரூ.15 மட்டுமே சென்று சேர்வதாக கூறியிருந்தார். தற்போது பிரதமர் மோடி ஆட்சியில் 100 சதவீதமும் மக்களை நேரடியாக சென்றடைகிறது.

    சமூகநீதி பற்றி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாராயணசாமி ஆகியோர் பேசுகின்றனர். உண்மையில் சமூகநீதிக்கு உதாரணம் பிரதமர் மோடிதான். புதுவையில் பா.ஜனதா அமைச்சர் வசம் உள்ள உள்துறை மூலம் 700 போலீசார் எந்த முறைகேடும் இன்றி பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    புதுவைக்கு ரூ.ஆயிரத்து 500 கோடி சிறப்பு நிதி வழங்கியுள்ளோம். பிரதமர் கூறியபடி பெஸ்ட் புதுவையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் கோவிலுக்குக்கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இளைஞர்களை திருமாவளவன் திசை திருப்புவதாக சிலர் கூறுகின்றனர். இளைஞர்கள் வளர்ச்சிப்பாதையை நோக்கி திரும்ப வேண்டும்.

    வரும் 2047-ல் இந்தியா வல்லரசாக மாற பாடுபடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து நிருபர்கள் கேட்டபோது, அமலாக்கத்துறை என்பது ஒரு தனி அதிகாரம் கொண்ட விசாரணை அமைப்பு. அதை யாரும் ஏவிவிடவில்லை. அமலாக்கத்துறையினர் தங்களுக்கு வந்த புகார்கள், ஆதாரங்களின் அடிப்படையில் அவர்களின் கடமையை செய்கின்றனர் என்றார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print