search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்து மாநிலங்களே முடிவு செய்யலாம்- மத்திய இணை மந்திரி பேட்டி
    X

    மத்திய இணை மந்திரி எல்.முருகன்

    ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்து மாநிலங்களே முடிவு செய்யலாம்- மத்திய இணை மந்திரி பேட்டி

    • ஆன்லைன் சூதாட்டத்தை தடை விதிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    • ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் விவகாரம், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    காரைக்கால்:

    புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்த மத்திய தகவல் ஒலிபரப்புப்புத்துறை இணை மந்திரி எல். முருகன் நலம் விசாரித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும், இது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். ஆன்லைன் சூதாட்ட விவகாரம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அதை தடை செய்வது குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார்.

    தொடர்ந்து, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை ஆய்வு செய்த மத்திய இணை மந்திரி, மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அவர், மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

    Next Story
    ×