search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீடுகளில் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடுங்கள்- பொதுமக்களுக்கு எல்.முருகன் வேண்டுகோள்
    X

    வீடுகளில் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடுங்கள்- பொதுமக்களுக்கு எல்.முருகன் வேண்டுகோள்

    • 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் வ.உ.சி.யின் 150-வது பிறந்த தினம் வருவது மேலும் சிறப்பு வாய்ந்தது.
    • பிரதமர் விடுத்த அழைப்பின்படி, வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும்.

    சென்னை:

    சென்னை தனியார் கல்லூரியில் நடந்த ஒரு விழாவில், தென் இந்திய ஆய்வு கல்வி மையம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 'ஓலம்' காணொலியை மத்திய இணை மந்திரி எல்.முருகன் நேற்று வெளியிட்டார். இதனை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பெற்றுக்கொண்டார்.

    விழாவில் எல்.முருகன் பேசியதாவது:-

    கடந்த 8 ஆண்டுகளில் நம்நாடு அடைந்துள்ள வளர்ச்சியை அனைவரும் கண்கூடாக காண முடியும். ஆங்கிலேயர்களுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுதேசி கப்பலை இயக்கிவர் வ.உ.சி. அவரின் தற்சார்பு கனவை இன்று பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றிகொண்டு இருக்கிறார்.

    75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் வ.உ.சி.யின் 150-வது பிறந்த தினம் வருவது மேலும் சிறப்பு வாய்ந்தது. பிரதமர் விடுத்த அழைப்பின்படி, வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×